January 10, 2020

பரம்பொருள்-பதிவு-114


            பரம்பொருள்-பதிவு-114

“அது மட்டுமல்ல
தன்னுடைய உயிரை
களப்பலியாக
கொடுக்கிறேன் என்று
சொன்ன அரவானின்
வார்த்தைகளைக் கேட்ட
துரியோதனன் சற்று
திகைத்துத் தான் நின்றான் ;
உயிரைப் பற்றி
கவலைப்படாத
அரவான் என்ற
மாவீரன் தனக்கு
எதிராக நின்று
கொண்டிருப்பதைக் கண்டு
துரியோதனன்
அதிர்ச்சியில் தான் நின்றான் ;
வீரத்தின் உருவாக
நின்று கொண்டிருந்த
அரவானைக் கண்டு
துரியோதனன்
மலைத்துத் தான் நின்றான் ;
துரியோதனனால்
எதுவுமே பேச முடியாமல்
வார்த்தையின்றித்
தான் நின்றான் ; “

“ஆனால்
எந்தவிதமான
கலக்கமும் இல்லாமல்
கொஞ்சம் கூட
வார்த்தையில் நடுக்கம்
என்ற ஒன்று
இல்லாமல் அரவான்
தொடர்ந்து பேசினான்”

அரவான் :
“பெரியவர்கள் கேட்டு
இந்த சிறியவன்
இல்லை என்று
சொல்ல முடியுமா ?
பெரிய தந்தையே !
அதுவும் பெரிய தந்தை
மகனிடம் யாசகமாக
உயிரையே கேட்கும் போது
உயிரைத் தரமுடியாது
என்று சொல்ல முடியுமா ?
அப்படி நீங்கள்
கேட்டு நான் இல்லை
என்று சொன்னால்
பெரியவர்கள் சொல்லை
தட்டியவன் ஆவேன் ;
பெரியவர்களுடைய
வார்த்தைக்கு மரியாதை
கொடுக்காதவனாவேன் ;
பெரிய தந்தையை
மதிக்காதவனாவேன் ;
நாளை இந்த உலகம்
என்னைப் பார்த்து
அரவான் பெரியவர்களை
மதிக்கவில்லை ;
பெரியவர்கள் சொல்லை
கேட்கவில்லை ;
பெரியவர்கள்  கேட்டதை
அளிக்கவில்லை; - என்று
வசைபாடும் இழிவான
சொற்களுக்கு இலக்காக
நான் விரும்பவில்லை ;”

“யாசகமாக நீங்கள்
கேட்கும் என்னுடைய
உயிரை களப்பலியாக
கொடுப்பதற்கு சம்மதிக்கிறேன்
பெரிய தந்தையே ! “

“என்னுடைய உயிரை
களப்பலியாக கொடுப்பதற்கு
இப்போதே நான்
தயாராக இருக்கிறேன் ;
என்னுடைய உயிரை
தங்களுக்கு களப்பலியாக
தருகிறேன் என்று
வாளை எடுத்தான் அரவான் ; “

துரியோதனன் :
“நிறுத்து அரவான்
நிறுத்து !
களப்பலி கொடுப்பதற்கு
இன்றைய நாள்
தகுந்த நாள் கிடையாது ;
வருகின்ற அமாவாசையே
களப்பலி கொடுப்பதற்கு
தகுந்த நாள் ;
அன்றைய நாளில் தான்
நான் களப்பலி கொடுப்பதற்கு
முடிவு செய்திருக்கிறேன் ;
வருகின்ற அமாவாசை
தினத்தன்று காளியின்
முன்பு உன்னுடைய
உயிரை களப்பலியாக
கொடுத்தால் போதும் “

அரவான்  :
.”ஒன்றே ஒன்றை மட்டும்
நான் சொல்லிக் கொள்ள
கடமைப்பட்டிருக்கிறேன்
பெரிய தந்தையே !
நாளை என்ன
நடக்கும் என்பது
யாருக்கும் தெரியாது ;
காலம் என்ன
நினைக்கிறது என்பதும்
யாருக்கும் தெரியாது ;
வருகின்ற அமாவாசை
வரை நான்
உயிரோடு இருந்தால் ;  
என்னுடைய உடல்
பின்னமாகாமல் இருந்தால் ;
நான் கொடுத்த
வாக்குறுதியின்படி
உங்களுக்காக
வருகின்ற அமாவாசை
தினத்தன்று காளியின்
முன்பு களப்பலியாகிறேன்
பெரிய தந்தையே ! “

துரியோதனன் :
“அப்படியே ஆகட்டும்
அரவான் உன்னுடைய
சொல் எனக்கு மிகுந்த
மகிழ்ச்சியை அளிக்கிறது. ;
நீ செய்யப்போகும் இந்த
தியாகச் செயலுக்காக
வருகின்ற அமாவாசையை
எதிர்நோக்கி நான் காத்துக்
கொண்டிருப்பேன் ;”

அரவான் ;
“அப்படியே ஆகட்டும்
பெரிய தந்தையே ! “

(துரியோதனன் அரவானிடம்
விடைபெற்றுச் செல்கிறான்)

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------10-01-2020
//////////////////////////////////////////