June 08, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-20


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-20
  
அரிச்சந்திரன் கதையில்
அரிச்சந்திரன் மனைவியான
சந்திரமதியை பத்தினியாகப்
பார்க்கத் தவறி விட்டோம்

அரிச்சந்திரன் விசுவாமித்திரருக்கு
கொடுத்த வாக்குறுதியின்படி
நாட்டை அவரிடம்
ஒப்படைத்து விட்டு
ஊரை விட்டு சென்றபோது
அரசியாக வாழ்ந்த
அவருடைய மனைவி
சந்திரமதி எந்த கேள்வியையும்
கேட்காமல் அவர்
பின்னால் சென்றார்

அரிச்சந்திரன் தான்
பட்ட கடனை
அடைப்பதற்காக
தன் மனைவி சந்திரமதியையே
பொன்னிற்காக விற்கும்
நிலை வந்த போது கூட
சந்திரமதி கணவனுக்காக
தன்னை அடிமையாக விற்பதற்கும்
தான் அடிமையாக இருப்பதற்கும்
சம்மதித்தாள்  

அடிமையாக வேலை செய்தாள்
அவ்வளவு கஷ்டத்திலும்
கணவன் சொல்லை தட்டாமல்
கவலையுடன் வாழ்ந்தாலும்
கற்புநெறி தவறாத
பத்தினியாக வாழ்ந்தாள்

சந்திரமதியின் மகன்
லோகிதாஸ் இறந்துவிட்ட
காரணத்தினால்
சுடுகாட்டில் எரிப்பதற்காகச்
சென்ற போது
எரிப்பதற்கு பணம் இல்லாத
காரணத்தினால்
மிகவும் வேதனை அடைந்தாள்
அங்கே பிணம் எரிப்பவராக
அரிச்சந்திரனே இருந்தார்

அரிச்சந்திரனுக்கு தெரியாது
அவள் தன் மனைவி
சந்திரமதி என்று

சந்திரமதிக்கு தெரியாது
அவர் தன் கணவன்
அரிச்சந்திரன் என்று

அதனால் அரிச்சந்திரன்
சந்திரமதியைப் பார்த்து
மயானக் கடனை
செலுத்தி விட்டு மகனை
எரிக்கலாம் என்கிறார்.
சந்திரமதி
பணம் இல்லை என்றாள்.

அரிச்சந்திரன் பணம் இல்லை
என்றால் என்ன
உன் கழுத்தில்
இருக்கும் தாலியை
விற்று பணம்
கொண்டு வா என்கிறார்.
பிணம் எரிக்கும் வேலையில்
இருந்த அரிச்சந்திரன்

அப்பொழுது தான்
சந்திரமதி சொல்கிறாள்
தேவருக்கும், மூவருக்கும்
தெரியாத தாலி
பிறக்கும் போதே தன்னுடன்
பிறந்த தாலி
தன்னுடைய கணவனைத்
தவிர வேறு யாருடைய
கண்ணிற்கும் தெரியாத தாலி
உன் கண்ணுக்கு எப்படி
தெரிந்தது என்கிறாள்.


அரிச்சந்திரன்
மனைவி சந்திரமதியின் தாலி
அரிச்சந்திரனுக்கு மட்டுமே
தெரியும் வேறு யாருடைய
கண்ணிற்கும் தெரியாது

அதனால் சந்திரமதி
தன்னுடைய பத்தினி தன்மைக்கு
களங்கம் ஏற்பட்டு விட்டதா
என்று வருத்தப்பட்டாள்
அப்புறம் தான்
அரிச்சந்திரன் தெரிந்து
கொண்டான் வந்திருப்பது
தன் மனைவி
சந்திரமதி என்று

சந்திரமதி
பத்தினி தெய்வமாக
வாழ்ந்திருக்கிறாள்,

இறுதியில் அரிச்சந்திரன்
மனைவி சந்திரமதி
கொலைகாரி என்று
குற்றம் சாட்டப்பட்டு
தலையை துண்டிக்க
வேண்டும் என்று
அரிச்சந்திரனுக்கே
உத்தரவு வந்த போது
தன் கடமையை நிறைவேற்ற
அரிச்சந்திரன்
சந்திரமதியின் தலையை
துண்டிக்க சென்றான்

கணவன்
சொல்லை தட்டாமல்
தன் தலையை
அரிச்சந்திரன் வெட்டுவதற்கு
தயார் நிலையில்
இருந்தாள் சந்திரமதி

இறுதியில் வந்த கடவுள்
அரிச்சந்திரா உன் சத்தியத்தை
மெச்சினேன் நீயே
சத்தியவான்
உன்னை சத்தியவான்
என்று உலகமே புகழும்
சத்தியம் இருக்கும் வரை
உன் புகழும் இருக்கும்
என்று பட்டம் கொடுத்து
பாராட்டி விட்டு
சென்ற இறைவன்

கணவனுக்காககவே வாழ்ந்து
கணவன் சொல்
தட்டாமல் நடந்து
கணவனுக்காகவே
உயிர் விடத் துணிந்த
பத்தினியான சந்திரமதியை
பத்தினி என்று
அறிவிக்காமல்
இறைவன்
மறந்து விட்டு
சென்று விட்டார்

கடவுள் பத்தினி
என்று அறிவிக்கத் தவறிய
சந்திரமதியை நாம்
பத்தினியாக ஏற்றுக்
கொள்வோம்


--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////