November 21, 2011

ஐயப்பன்- ஐம்புலன்கள்-பதிவு-1

                                        

                                   ஐயப்பன் - பதிவு-1
“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன்-ஐம்புலன்கள் :
  +    அப்பன் ----------ஐயப்பன்
ஐ என்றால் ஐந்து என்று பொருள்
அப்பன் என்றால் தலைவன் என்று பொருள்
ஐயப்பன் என்றால் ஐந்து புலன்களின் தலைவன் என்று பொருள்

ஐந்து புலன்கள் எனப்படுபவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஆகும் ஐந்து புலன்கள் வழியாகச் செயல்படுவது பஞ்ச தன் மாத்திரைகள் எனப்படும் பஞ்ச தன் மாத்திரைகள் எனப்படுபவை அழுத்தம் ,ஒலி, ஒளி ,சுவை ,மணம் ஆகியவை ஆகும்
பஞ்சதன் மாத்திரைகள் ஐம்புலன்கள் வழியாக வெளியே செயல்படும் பொழுது மனிதனுக்கு ஆறு விதமான குணங்கள் ஏற்படுகிறது ஆறுவிதமான குணங்கள் எனப்படுபவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம். மாச்சரியம் எனப்படும்
தமிழில் இதை பேராசை, சினம் ,கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை ,வஞ்சம் என்கின்றனர்

இந்த ஆறு வகை குணங்கள் ஒரு மனிதனுக்கு உருவாகி விட்டால் மனிதன் பஞ்சமா பாதகங்களைச் செய்கிறான் பஞ்சமா பாதகங்கள் எனப்படுபவை பொய், சூது ,கொலை ,கொள்ளை ,கற்புநெறி பிறழ்தல் ஆகியவை ஆகும்
பஞ்சமா பாதகங்களை ஒரு மனிதன் செய்யும் பொழுது அவன் இருவிதமான கர்ம வினைகளில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் மாட்டிக் கொள்கிறான்

வட எழுத்தாளர்கள்  வினைகளை மூன்றாகப் பிரித்தார்கள் அவை சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம் ,ஆகாம்ய கர்மம் ஆகியவை ஆகும்
தமிழில் வினைகளை இரண்டாகப் பிரித்தார்கள் அவை பழவினை ,புகுவினை  ஆகியவை ஆகும்
வட எழுத்தாளர்கள் சொல்லும் மூன்று வினைகளும் தமிழில் சொல்லப்படும் இரு வினைகளும் ஒரு பொருளைத் தான் குறிக்கிறது வார்த்தை தான் வேறுபடுகிறதே தவிர அதில் சொல்லப் படும் கருத்து ஒன்றைத் தான் அவை குறிப்பதும் ஒரே பொருளைத் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

பழவினை :
தமிழ்ச் சான்றோர்கள் சஞ்சித கர்மம் ,பிராரப்த கர்மம் ஆகிய இரண்டு வினைகளைச் சேர்த்து பழவினை என்று குறிப்பிடுகின்றனர்
சஞ்சித கர்மம்
சஞ்சித கர்மம் என்பது ஈரறிவு உயிர்  முதல் பிறப்பதற்கு முன் வரை நீண்ட காலம் கருத்தொடராக பல பிறவிகளில் பெற்ற வினைப் பதிவுகள் அதாவது முன் பிறவிகளின் தொடராக வந்த வினைப்பதிவுகள் சஞ்சித கர்மம் என்று அழைக்கப் படுகிறது

பிராரப்த கர்மம்
நாம் பிறந்தது முதல் இன்று வரை செய்த கர்ம வினைகள் பிராரப்த கர்மம் என்று அழைக்கப் படுகிறது
நாம் பிறந்து வாழும் காலத்தில் செய்யும் செயல்களின் விளைவுப் பதிவு தொழிலால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் ஆகியவை நம் ஆன்மாவில் பதிந்து திரும்ப திரும்ப ஆன்மாவுக்கு நினைவு ஊட்டி செயலுக்கு மாற்றும் விதியை பிராரப்த கர்மம் என்று கூறுகிறோம்

புகுவினை :
தமிழ்ச் சான்றோர்கள் ஆகாம்ய கர்மத்தை புகுவினை என்று குறிப்பிடுகின்றனர்
ஆகாம்ய கர்மம்
ஆ என்றால் ஆன்மா காம்யம் என்றால் இச்சை ஆன்மாவுக்கு இச்சையை ஊட்டி செயலைச் செய்ய வைப்பது ஆகாம்ய கர்மம் எனப்படும்
சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம் ஆகிய இரண்டு வினைகளிலிருந்து வரக்கூடிய செயல்களின் பதிவுகளால் இனி என்ன செய்ய வேண்டும் என்று துhண்டப்படும் எண்ணங்களும் செயல்களும் ஆகாம்ய கர்மம் எனப்படும்

மனிதன் மேலே கூறப் பட்ட இருவினைகளில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் அவதிப் பட்டு துன்பப் படுவதற்குக் காரணம் ஐம்புலன்கள் வழியாக பஞ்சதன் மாத்திரைகளை வெளியே விட்டது தான் காரணம்

ஐம்புலன்கள் வழியாக பஞ்சதன் மாத்திரைகளை வெளியே விடாமல் உள்ளே திருப்பினால் அதாவது அகத்தில் திருப்பினால் ஜோதிரூபமாக இருக்கும் இறைவனை தரிசிக்கலாம் என்பதை விளக்குவதே ஐயப்பனை  வழிபடும் முறையில் உள்ள சடங்குகள் மற்றும் விரதங்கள் ஆகும்

ஐயப்பனை பற்றி நடைமுறையில் உள்ள சொற்கள் விரத முறைகள் சடங்குகள் ஆகியவற்றில் உள்ள ரகசியங்கள் மற்றும் அதில் உள்ள தத்துவங்கள ஆகியவற்றைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்

                        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”