கிளியோபாட்ரா
பதிவு-14-வினைவலியும்-
திருக்குறள்-
அவரது தம்பியான
தாலமியை கடலுக்குள்
ஓட விட்டு உப்பு
தண்ணீரைக் குடித்து
வயிறு வீங்கி
செத்துப் போகச்
செய்தார்
தங்கை அர்சினோவை
கைது செய்து
சிறையில் அடைத்தார்
கிளியோபாட்ராவின்
எதிரிகள் அனைவரையும்
அழித்து விட்டு
கிளியோபாட்ராவை
எகிப்து நாட்டின்
அரசியாக்கினார்
கிளியோபாட்ரா
தன்னுடைய திறமை
என்ன என்பதைத்
தெரிந்து கொண்டார்
தனக்கு எதிரிகள்
யார் என்பதைத்
தெரிந்து கொண்டார்
தன்னுடைய எதிரிகளை
அழிக்கக் கூடியவர்
ஜுலியஸ் சீசர்
தான் என்பதைத்
தெரிந்து கொண்டார்
நல்ல நாள் அந்த
நல்ல நாளில்
நல்ல நேரம்
ஆகியவற்றைப்
பார்க்காமல்
ஜுலியஸ் சீசரைச்
சந்தித்தார்
அவரை தனக்கு
துணையாக
வைத்துக் கொண்டார்
அவரைக் கொண்டு
தன்னுடைய
எதிரிகளை அழித்தார்
எகிப்து நாட்டின்
அரசியானார்
கிளியோபாட்ரா
கிளியோபாட்ரர
நல்ல நாள் அந்த
நல்ல நாளில்
நல்ல நேரம் பார்த்து
ஜுலியஸ் சீசரை
சந்திக்கவில்லை
ஆனாலும்
வெற்றி பெற்றார்
நல்ல நாள்
அந்த நல்ல நாளில்
நல்ல நேரம்
பார்க்காமல் செய்தாலும்
செயலில் வெற்றி
பெற முடியுமா என்ற
கேள்வி எழுகிறது
கர்மவினையின்
விளைவால்
நாம் தொடங்கப்
போகும் செயல்
வெற்றியில் தான்
முடியும்
என்று இருந்தால்
நல்ல நாள்
அந்த நல்ல நாளில்
நல்ல நேரம்
பார்க்காமல்
தொடங்கினாலும்
அந்தச் செயல்
வெற்றியில் தான்
முடியும்
தோல்வியில்
முடியாது
கர்மவினையின்
விளைவால்
நாம் தொடங்கப்
போகும் செயல்
தோல்வியில்
தான் முடியும்
என்றால்
நல்ல நாள்
அந்த நல்ல நாளில்
நல்ல நேரம்
பார்க்காமல்
தொடங்கினால்
அந்தச் செயல்
தோல்வியில் தான்
முடியும்
வெற்றியில்
முடியாது
""""ஒரு
செயலைச்
செய்யத்
தொடங்குவதற்கு
முன்னர்
தன்னுடைய
வலிமை
எதிரியினுடைய
வலிமை
எதிரிக்கு
துணையாக
இருப்பவர்களுடைய
வலிமை
நமக்கு
துணையாக
இருப்பவர்களுடைய
வலிமை
ஆகியவற்றை
ஆராய்ந்த
பிறகு
கர்மவினையினால்
ஏற்படக்கூடிய
விளைவினைக்
கண்டறிந்து
நல்ல
நாள்
அந்த
நல்ல நாளில்
நல்ல
நேரம்
ஆகியவற்றைக்
கணித்து
செயலைச்
செய்தால்
மட்டுமே
செய்யத்
தொடங்கும்
வேலையில்
வெற்றி
பெற
முடியும்""""
என்பதைத் தான்
திருவள்ளுவர்
வினைவலியும்
தன்வலியும்
மாற்றான் வலியும்
துணைவலியும்
தூக்கிச் செயல்
என்ற
திருக்குறளின்
மூலம்
தெளிவுபடுத்துகிறார்
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------22-01-2022
-------சனிக்கிழமை
--------சுபம்
//////////////////////////////////////////////
பதிவு-13-வினைவலியும்-
திருக்குறள்-
அழகாக இருப்பவர்
நாவிலிருந்து
எவ்வளவு தைரியமான
வார்த்தைகள்
வெளிவருகிறது என்று
கிளியோபாட்ராவின்
அழகு, தைரியம்
ஆகியவற்றைக்
கண்டு வியந்தார்
ஜுலியஸ் சீசர்
கை கொடுத்த
சீசரின் கையைப்
பிடித்து எழுந்த
கிளியோபாட்ரா
கால் தடுமாறி
கீழே விழப்போன
கிளியோபாட்ராவை
ஜுலியஸ் சீசர்
தாங்கிப் பிடித்தார்
தடுமாறி விழப்போன
என்னை தாங்கிப்
பிடித்தீர்களே
தடம் மாறிப்போன
இதயங்களைக் கொண்ட
என்னுடைய
எதிரிகளிடமிருந்து
என்னுடைய
நாட்டை மீட்டு
என்னிடம்
ஒப்படைப்பீர்களா என்ற
கிளியோபாட்ராவின்
வீரம் நிறைந்த
சாதுர்யமான
வார்த்தைகளைக்
கேட்டு மதி
மயங்கினார்
ஜுலியஸ் சீசர்
ஜுலியஸ் சீசர்
தன்னுடைய
வாழ்க்கையில்
எத்தனையோ
பெண்களிடம் உறவு
வைத்து இருக்கிறார்
அவர்கள் அனைவரும்
அழகாக மட்டும் தான்
இருந்திருக்கிறார்கள்
முதன் முறையாக
அழகு தைரியம் வீரம்
ஆகியவற்றைக்
கொண்ட அழகிய
பெண்ணான
கிளியோபாட்ராவைப்
பார்த்தார்
கிளியோபாட்ராவின்
பார்வை
ஜுலியஸ் சீசரின்
இதயத்தைத் துளைத்து
இயங்க விடாமல்
செய்தது
கிளியோபாட்ராவின்
பார்வை
ஜுலியஸ் சீசரின்
நுரையீரலுக்குள்
புகுந்து மூச்சு
விடாமல் செய்தது
சிந்தை தடுமாறினார்
ஜுலியஸ் சீசர்
கிளியோபாட்ரா
ஜுலியஸ் சீசரை
காதலினால்
வீழ்த்தினார்
கண்கள் கலந்தன
மனங்கள் கலந்தன
உணர்வுகள் கலந்தன
உயிர்கள் கலந்தன
ஜுலியஸ் சீசரினுள்
காதல் எழுந்து
விட்டதால் அவர்
கிளியோபாட்ராவின்
நினைவிலேயே
இருந்தார்
கிளியோபாட்ராவுக்காக
எதையும் செய்யத்
துணிந்தார்
கிளியோபாட்ராவின்
காலடியில்
வீழ்ந்து கிடந்தார்
ஜுலியஸ் சீசர்
கிளியோபாட்ராவின்
காலடியில்
வீழ்ந்து கிடந்தார்
என்று எழுதாமல்
ரோமபுரி நாட்டின்
வரலாற்று ஆசிரியர்கள்
கிளியோபாட்ரா
ஜுலியஸ் சீசரை
மயக்கினார் என்று
எழுதி ஒரு சிறந்த
அறிவாளியான
திறமையான
ராஜ தந்திரியான
பல்வேறு
சிறப்புகளைப் பெற்ற
கிளியோபாட்ராவை
தவறாக சித்தரித்து
எழுதி விட்டார்கள்
கிளியோபாட்ராவின்
காதலால் காலடியில்
வீழ்ந்து கிடந்த
ஜுலியஸ் சீசர்
கிளியோபாட்ராவின்
கட்டளைக்கு அடிபணிந்து
கிளியோபாட்ராவின்
எதிரியான
பொதினேஸைக்
கொன்றார்
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------22-01-2022
-------சனிக்கிழமை
//////////////////////////////////////////////
பதிவு-12-வினைவலியும்-
திருக்குறள்-
படகானது
அலெக்சாண்டிரியா
கரையை
அடைந்தவுடன்
அப்போலோடோரஸ்
(APPOLLODORUS)
கயிற்றால் கட்டி
சுருட்டி
வைக்கப்பட்டிருந்த
ஒரு கம்பளத்தை
கைகளில் ஏந்தியபடி
ஜுலியஸ் சீசர்
தங்கியிருந்த
மாளிகையை நோக்கி
நடந்து அதனை
அடைந்தார்
ரோமபுரி வீரர்கள்
அவரை தடுத்து
நிறுத்தி
எங்கிருந்து
வந்திருக்கிறாய்
என்ன கொண்டு
வந்திருக்கிறாய்
கம்பளத்தில் என்ன
இருக்கிறது
என்று கேட்டனர்
அதற்கு
அப்போலோடோரஸ்
(APPOLLODORUS)
எகிப்து மகாராணி
கிளியோபாட்ரா
உங்கள் மாமன்னர்
ஜுலியஸ் சீசருக்கு
பரிசு அனுப்பி
வைத்திருக்கிறார்
அதை அவரிடம்
ஒப்படைக்க வேண்டும்
அதுவும் தனிமையில்
ஒப்படைக்க வேண்டும்
அதுவும் ரகசியமாக
ஒப்படைக்க வேண்டும்
என்றார்
எகிப்து மகாராணி
கிளியோபாட்ரா
பெயரைக் கேட்டவுடன்
ரோமபுரி வீரர்கள்
விலகி வழி
விட்டனர்
கிளியோபாட்ரா
பெயரைச் சொல்லி
யார் வந்தாலும்
அவர்களுக்கு
தொந்தரவு
கொடுக்காமல்
சோதனை எதுவும்
செய்யாமல்
அனுமதிக்க
வேண்டும் என்பது
ஜுலியஸ் சீசரின்
கட்டளை
அதனால்
ரோமபுரி வீரர்கள்
அப்போலோடோரஸ்
(APPOLLODORUS)
அவர்களை
எந்தவிதமான
சோதனையும்
செய்யாமல்
அவரை
அனுமதித்தனர்
ஜுலியஸ் சீசர்
அறைக்குள் சென்றவன்
மாமன்னர் அவர்களே
எங்கள் மகாராணி
கிளியோபாட்ரா
அவர்கள்
தங்களிடம்
இந்தப் பரிசை
ஒப்படைக்கச்
சொன்னார் என்று
சொல்லி விட்டு
சுருட்டி வைக்கப்பட்டு
கயிற்றால்
கட்டப்பட்டிருந்த
கம்பளத்தை
மெதுவாக தரையில்
வைத்து விட்டு
சென்று விட்டார்
கம்பளத்தை கட்டி
வைத்திருந்த கயிற்றை
தன்னுடைய வாளால்
அறுத்து அதன் ஒரு
முனையைப் பிடித்து
மேல்நோக்கி இழுத்தார்
ஜுலியஸ் சீசர்
கம்பளத்துக்குள் இருந்து
தரையில் உருண்டு
ஜுலியஸ் சீசரின்
காலடியில் வந்து
படுத்த நிலையில்
கிடந்தார்
கிளியோபாட்ரா
கிளியோபாட்ராவின்
அழகில் மயங்கி
தன்னை மறந்த
நிலையில் நின்று
கொண்டிருந்த
ஜுலியஸ் சீசரைப்
பார்த்து படுத்துக்
கிடப்பவர்களை
தூக்கி விட
வேண்டும் என்ற
எண்ணம் உங்களுக்கு
இல்லையா
படுத்து கிடப்பவர்களை
அப்படியே விட்டு
விடுவீர்களா
தூக்கி விட
மாட்டீர்களா என்றார்
கிளியோபாட்ரா
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------22-01-2022
-------சனிக்கிழமை
//////////////////////////////////////////////
பதிவு-11-வினைவலியும்-
திருக்குறள்-
ஜுலியஸ் சீசரைப்
பற்றி
ஆய்வு செய்ததில்
ஜுலியஸ் சீசரிடம்
உள்ள குறை எது
என்பதைக் கண்டு
பிடித்து விட்டார்
கிளியோபாட்ரா
ஜுலியஸ் சீசர்
ஒரு பெண் பித்தர்
என்பதையும்,
பெண் என்றால்
பேயாய் அலைபவர்
என்பதையும்,
பல பெண்களுடன்
தொடர்பில்
இருப்பவர்
என்பதையும்
பல பெண்களை
சுவைத்தவர்
என்பதையும்
தெரிந்து கொண்டாள்
கிளியோபாட்ரா
காமத்தை பல
வழிகளில் சுவைத்தவர்
ஜுலியஸ் சீசர்
என்ற காரணத்தினால்
ஜுலியஸ் சீசரை
காமத்தால் வீழ்த்த
முடியாது என்று
தெரிந்து கொண்டாள்
கிளியோபாட்ரா
காமத்தால்
ஒருவரை
வீழ்த்துவது எளிது
காமத்தால்
வீழ்த்தப்பட்டவர்
நம்முடன்
நீண்ட நாட்கள்
இருக்க மாட்டார்
காமம்
எழும் போது
நம் நினைவு வரும்
காமம்
தீரும் போது
நம் நினைவு
மறந்து விடும்
காதலால் வீழ்த்தினால்
உடலில்
உயிர் இருக்கும்
வரை அவர்
நம்மை விட்டு
பிரிய மாட்டார்
காதலால்
வீழ்த்தப்பட்டவருக்கு
நம்முடைய சிந்தனை
எப்போதும் இருக்கும்
மறக்க மாட்டார்
காதலுக்கும்
காமத்துக்கும்
உள்ள வேறுபாட்டை
புரிந்து கொண்ட
கிளியோபாட்ரா
ஜுலியஸ் சீசரை
காதலால்
வீழ்த்த முடிவு
எடுத்தார்
அதற்காக
தெளிவான திட்டம்
ஒன்றைத் தீட்டினார்
நான் உங்களைத்
தனிமையில்
சந்திக்க வேண்டும்
நம்முடைய
சந்திப்பு ரகசியமாக
இருக்க வேண்டும்
யாருக்கும்
தெரியக் கூடாது
என்று
ஜுலியஸ் சீசருக்கு
ரகசியத் தூதன்
மூலம் செய்தி
அனுப்பினார்
அதற்கு
ஜுலியஸ் சீசர்
பதில் அனுப்பினார்
நீங்கள் எப்போது
வேண்டுமானாலும்
வரலாம்
நீங்கள் வருவதும்
போவதும் யாருக்கும்
தெரியாமல்
ரகசியமாக
வைக்கப்படும்
நீங்கள் வந்து
செல்வது ரகசியமாக
வைக்கப்படும்
ஜுலியஸ் சீசரிடமிருந்து
பதில் பெற்ற
கிளியோபாட்ரா
ஜுலியஸ் சீசரை
சந்திக்க தரைவழி
சென்றால் தனக்கு
பாதுகாப்பில்லை
தன்னுடைய எதிரிகளால்
தன்னுடைய
உயிருக்கு ஆபத்து
எனவே
கடல்வழியாகத் தான்
செல்ல வேண்டும்
என்று முடிவு எடுத்து
தன்னுடைய முழு
நம்பிக்கைக்குரிய
பாதுகாவலன்
அப்போலோடோரஸ்
(APPOLLODORUS)
அழைத்துக் கொண்டு
கடல் வழியில்
படகில் பயணம்
மேற்கொண்டார்
கிளியோபாட்ரா
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------22-01-2022
-------சனிக்கிழமை
//////////////////////////////////////////////