July 19, 2015

இயேசு கிறிஸ்து-அகஸ்தியர்-பாரப்பா-பதிவு-72




                இயேசு கிறிஸ்து-அகஸ்தியர்-பாரப்பா-பதிவு-72 

“””””பதிவு எழுபத்துஇரண்டை விரித்துச் சொல்ல
                 ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””””

இயேசு கிறிஸ்து:

“”“அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.”””
                         -----------மத்தேயு - 9 : 1

“”“அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு,
திமிர்வாதக்காரனை நோக்கிமகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு  மன்னிக்கப்பட்டது என்றார்.”””
                        -----------மத்தேயு - 9 : 2


“”“அப்பொழுது, வேதபாரகரில் சிலர்இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக் கொண்டார்கள்.”””
                         -----------மத்தேயு - 9 : 3


“”“இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்துநீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?”””
                        -----------மத்தேயு - 9 : 4


“”“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து
நடவென்று சொல்வதோ, எது எளிது?”””
                        -----------மத்தேயு - 9 : 5


“”“பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம்
உண்டென்பதை நீங்கள்அறிய வேண்டும் என்று சொல்லி,
திமிர்வாதக்காரனை நோக்கிநீ எழுந்து, உன் படுக்கையை
எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.”””
                       -----------மத்தேயு - 9 : 6



“”“”“உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.”””
                       -----------மத்தேயு - 9 : 7


“”“ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட
அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்
படுத்தினார்கள்.”””
                     -----------மத்தேயு - 9 : 8


“”“இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில்
உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டுஎனக்குப்
பின் சென்று வா: என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.”””
                    -----------மத்தேயு - 9 : 9


“”“பின்பு அவர் வீட்டிலே போஜன பந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் 
சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்”””
                     ----------மத்தேயு - 9 : 10


“”“பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கிஉங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று  கேட்டார்கள்”””
                   -----------மத்தேயு - 9 : 11


“”“இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.”””
                  -----------மத்தேயு - 9 : 12


“”“பலியையல்ல, இரக்கத்தையே விரும்பிகிறேன் என்பதின் கருத்து
இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்நீதிமான்களையல்ல,
பாவிகளையே மனந் திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்”””
                -----------மத்தேயு - 9 : 13


“”“அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவர்டத்தில் வந்து:
நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமேஉம்முடைய
சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.”””
               -----------மத்தேயு - 9 : 14



“”“அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தொழர் துயரப்படுவார்களாமணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.”””
              -----------மத்தேயு - 9 : 15


சமுதாயம் எதனை மதிக்க வேண்டுமோ
அதை மதிப்பதில்லை ;
சமுதாயம் எதை மதிக்கக் கூடாதோ 
அதை மதிக்கிறது ;

மதிக்க வேண்டியவைகளை
மதிக்காமல் விட்டதால் ,
மதிக்கப்பட வேண்டியவைகள்
மதிக்காமல் விடப்பட்டன.

மதிக்கக் கூடாதவைகள்,
மதிக்கப்பட வேண்டாதவைகள்,
மதிக்கப்படுவதால்,
மதிப்புக்கு உட்படுத்தப்படுவதால்,
மதிப்புக்கு உரியதாக கருதப்படுவதால்,
மதிப்புக்கு உரியதாக கருத வைக்கப்பட்டு விட்டதால்,
மதிப்புக்கு வேண்டப்படாதவைகள்
மதிப்புக்கு உரியதாக கருதப்படுகின்றன;
மதிப்புக்குரியதாக மாற்றப்பட்டு விட்டன;
மதிப்புக்குரியவைகள் தேவையற்றதாகவும்
மதிப்புக்கு உரியவையாக இல்லாதவை தேவையுள்ளதாகவும்
சமுதாயத்தில் மாற்றப்பட்டுள்ளது.

எது மதிப்புக்குரியதோ
அது சமுதாயத்தில் தேவையற்றதாகவும்
எது மதிப்பு அற்றதோ
அது சமுதாயத்தில் தேவையுள்ளதாகவும்
சமுதாயத்தில் உருவாக்கப்பட்டு விட்டது.

எது மதிப்பு உடையது என்றும்
எது மதிப்பு அற்றது என்றும்
சமுதாயத்தில் சிலருக்கு தெரியும்;
சமுதாயத்தில் தெரிந்த சிலர்
தெரியாத சிலரை
தங்களுக்கு அடிமையாக வைத்துக் கொண்டு
மதிப்பு வாய்ந்ததை தேவையற்றது என்றும்
மதிப்பு அற்றதை தேவையுள்ளது என்றும்
நம்ப வைத்து விட்டனர்.

தெரிந்தவர்கள் ,
சுய நலம் மிக்கவர்கள்,
தான் வாழ வேண்டும்
தன் குடும்பம் மட்டும் வாழ வேண்டும் -என்ற
சுயநலம் எண்ணம் கொண்டவர்கள்,
தனக்கு ஆதாயம் இருப்பதை
உணர்ந்தவர்கள்,
இதனால் தனக்கு
வருமானம் உண்டு;
உயர்வுகள் உண்டு;
பொருளாதார ஏற்றங்கள் உண்டு;
வாழ்வில் உயர்வுகள் உண்டு;
என்பதை உணர்ந்தவர்கள்
மதிப்பு உள்ளதை
சமுதாயத்திற்கு தேவையற்றது - என்று
நம்ப வைக்கப் பாடுபடுகின்றனர்.

மதிப்பு உடையதை
தேவையுள்ளது என்று
சமுதாயத்திற்கு கூறி உணர்த்த
மறுத்து விட்டனர்.
இதனால் உண்மை மறந்து
பொய் வளர ஆரம்பித்து விட்டது.

சமுதாயத்தில்
மதிப்புடையது எது என்றும்
மதிப்பற்றது எது என்றும்
தெரியாத காரணத்தினால்
தேவையுடையது எது என்றும்
தேவையற்றது எது என்றும்
சமுதாயத்திற்கு உணர்த்தப்படாததால்
தேவையுடையது மதிப்பில்லாமலும்
தேவையற்றது மதிப்புடையதாகவும்
மாறி விட்டது.

எது நமக்கு தேவை என்பதை
அறிந்து கொண்டால்
அது மதிப்பு மிக்கது என்றும்
எது நமக்கு தேவையில்லை
என்பதை அறிந்து கொண்டால்
அது மதிப்பு அற்றது
என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஆனால் நாம்
நமக்கு எது தேவை
நமக்கு எது தேவையில்லை என்பது
தெரியாத காரணத்தினால்
மதிப்பு மிக்கதை
மதிப்பு அற்றதாகவும்
மதிப்பு அற்றதை
மதிப்பு மிக்கதாகவும்
நினைக்கத் தொடங்கி விட்டோம்.
மதிப்பு மிக்கது எது என்றும்,
மதிப்பு அற்றது எது என்றும்,
சமுதாயத்திற்கு தெரியாத காரணத்தினால்,
சமுதாயத்திற்கு புரியாத காரணத்தினால்,
சமுதாயம் அறியாத காரணத்தினால்,
சமுதாயம் உணராத காரணத்தினால்,
தேவையற்றதை மதிப்பதும்
தேவையுள்ளதை மதிக்காமல் விடுவதும்
தேவையற்றது உயர்ந்து போவதற்கும்
தேவையுள்ளது அழிந்து போவதற்கும்
தேவைற்றது வாழ்ந்து கொண்டிருப்பதற்கும்
தேவையுள்ளது மறைந்து கொண்டிருப்பதற்கும்
சமுதாயத்தில் அறியாதவர்கள்
இருக்கின்ற காரத்தினால்
இந்த நிலை ஏற்படுகிறது.

அறிந்த சிலர் ;
சூழ்ச்சியை புரிந்த சிலர்;
தன் தேவையை பெற முயற்சிக்கும் சிலர்;
சூதில் சுகம் காண்பவர்;
சூழ்ச்சியில் மகிழ்ச்சி காண்பவர்;
தன்னலத்தில் உயர்வு காண்பவர்;
சுயநலத்தில் சந்தோஷம் காண்பவர்;
ஆகியோர்
சமுதாயத்தின் அறியாமையை
தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்வதால்
மதிப்பு அற்றது தேவையுள்ளதாகவும்
மதிப்பு உடையது தேவையற்றதாகவும்
சித்தரிக்கப்பட்டு
சமுதாயத்தை சிந்திக்க விடாமல்
சுயநலமிக்கவர்கள் சமுதாயத்தை தன்
ஆளுகைக்குள் கொண்டு வந்து விட்டனர்.

சமுதாயத்தில் மதிப்பு உடையது
தேவை உடையது விவசாயம் - ஆனால்
அது சமுதாயத்தில் மதிப்பு அற்றதாக
மாற்றி வைக்கப்பட்டு விட்டது;
தேவையற்றதாக யோசிக்க வைத்துவிட்டது;

சமுதாயத்தில் மதிப்பு உடையதாக
இருக்க வேண்டிய
விவசாய நிலங்கள்;
விளை நிலங்கள்;
நஞ்சை நிலங்கள்;
வீடுகட்டும் நிலங்களாக மாற்றப்பட்டு விட்டன.
வீடு கட்டுவதற்காக என்று தனியாக இருக்கின்ற
வீட்டு நிலங்களை வீடு கட்டாமல்
விவசாய நிலங்களை வீடு கட்டும் நிலங்களாக மாற்றுவது
தேவையற்றது
ஆனால் அது தான்
சமுதாயத்தில் தேவையுள்ள ஒன்றாக
மாற்றப்பட்டு விட்டது;
முக்கியமான ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது;
அத்தியாவசியமான ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது;

தேவையற்றது
ஆனால் அது தான்
சமுதாயத்தில் தேவையுள்ளதாகவும்
மதிப்பு உடையதாகவும் இருக்கிறது.

விவசாய நாடு
விவசாய பூமி - என்று
இந்தியாவை சொல்கிறோம் - ஆனால்
விவசாயத்திற்கு உரிய மரியாதையை நாம் அளிக்கவில்லை.

விவசாயம் உயர்ந்தது;
விவசாயம் அத்தியாவசியமானது;
விவசாயம் உன்னதமானது;
விவசாயம் மேன்மையானது;
விவசாயம் மதிப்பு மிக்கது;
விவசாயம் வாழ்வளிப்பது;
விவசாயம் தலை சிறந்தது;
விவசாயம் சிறப்பு மிக்கது;
விவசாயம் அனைத்திற்கும் அடிப்படையானது;
விவசாயம் அனைவருக்கும் தேவையானது;
விவசாம் வாழ்வை உயர்த்தக் கூடியது;
விவசாயம் நாட்டை உயர்த்தக் கூடியது;
விவசாயம் எதிர்காலத்தை பாதுகாக்கக் கூடியது;
விவசாயம் அடுத்த தலைமுறைகளை
வாழ வைக்கக் கூடியது;
விவசாயம் நம் தலைமுறைகளை பாதுகாத்து
அடுத்த தலைமுறைக்கு நம்மை
கொண்டு போய் சேர்ப்பது;
என்பதை
இந்த சமுதாயம் உணர வேண்டும்.

இந்த சமுதாயத்தை உணர வைக்க வேண்டும்;
இந்த சமுதாயத்தை புரியவைக்க வேண்டும்;
இந்த சமுதாயத்தை அறியாமையில் இருந்து
விழிப்புணர்வுக்கு கொண்டு வர வேண்டும்;
அப்படி கொண்டு வரும் போது தான்
அப்படி கொண்டு வந்தால் தான்
விவசாயத்தின் உண்மை உரு அனைவருக்கும் தெரியும்
விவசாயத்தின் மேன்மை அனைவருக்கும் புரியும்
விவசாயத்தின் அத்தியாவசியம்

பலருக்கும் தெரியாத காரணத்தினால்
விவசாயம் சமுதாயத்தில் மதிப்பிழந்து நிற்கிறது.

சமுதாயம்
விவசாயம் ; விவசாயி ; விவசாய நிலங்கள்
ஆகிய மூன்று முக்கியமானவைகளை
மதிப்பதில்லை.

நாம் புனிதமான ஒன்றை மதிக்கத் தவறி விட்டால்
புனிதமான ஒன்றின் மகத்துவம் புரியாவிட்டால்
புனிதமானது  இந்த
சமுதாயத்தில்
எதிர்காலத்தில்
யாருக்கும் பலனில்லாமல் போகும்.

விவசாயத்தை இந்த சமுதாயம்
ஏற்றுக் கொள்ளும் வகையிலும்
மதிக்கத்தக்க வகையிலும் மாற்றப்பட்டால்
நாளைய சமுதாயத்திற்கு உணவு கிடைக்கும்;
விவசாயத்தை நாம் மதிக்காமல்
ஒதுக்கி விட்டால்
விவசாயம் யாருக்கும் பயன்படாமல்
எதிர்காலத்தில் பட்டினிச் சாவுகள்
நிகழ வாய்ப்பு ஏற்படும்.
விவசாயம் மதித்தால்
நாளை இச்சமுதாயம் வாழும்;
விவசாயத்தை மதிக்காமல் விட்டால்
நாளை இச் சமுதாயம் வாழாது;

விவசாயத்தை
இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் வகையில்
செயல்களைச் செய்தாலொழிய
விவசாயத்தை வாழ வைக்க முடியாது.
விவசாய படிப்பை ஊக்குவிக்க வேண்டும்

மருத்துவ படிப்பும்,
பொறியியல் படிப்பும்,
உயர்வாக கருதப்படுவதும்;
லட்சக்கணக்கில் பணத்தை
செலவழித்து இடம் வாங்குவதும்;
லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து படிப்பதும்;
சமுதாயம் இவைகளையும்
இவைகளை படிப்பவர்களை மதிப்பதும்;
அவர்கள் சமுதாயத்தில் உயர்வாக
கருதப்படுவதும்;
இந்த சமுதாயத்தில் தொடர்ந்து
நடந்து வரும்  ஒரு  நிகழ்வு;

முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள
இவைகள் மாற்றப்பட வேண்டும்;
இவைகளை விட உயர்வான ஒன்று
இந்த சமுதாயத்தில் இருக்கிறது என்பதை
இந்த சமுதாயம்
உணரும் படிச் செய்ய வேண்டும்;
விவசாயம் முதன்மையாகவும்
மருத்துவ படிப்பும்;
பொறியியல் படிப்பும்;
அடுத்த அடுத்த நிலைக்கும்
மாற்றப்பட வேண்டும்;
அதாவது சமுதாயத்தில்
விவசாயம் என்பது முதலாவதாகவும்
மருத்துவ படிப்பும்,
பொறியியல் படிப்பும்,
அடுத்த அடுத்த நிலைக்கும்
மாற்றப்பட வேண்டும்;

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில்
விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும்.

விவசாய நிலங்களை
வீடு கட்ட நிலங்களாக,
மாற்றுபவர்கள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும்;
விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் என்ற பெயரில்
வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும்;
டாக்டர், இஞ்சினியர் - என்று
இந்த சமுதாயத்தில் சொல்லும்போது
எவ்வளவு மரியாதையை
இந்த சமுதாயம் அளிக்கிறதோ
அதே அளவு மரியாதையை
விவசாயத்திற்கும்,
விவசாயிக்கும் அளிக்க வேண்டும்;
அளிக்கக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும்;

தமிழை வளர்க்கிறோம் என்று
சொல்வதால் ஒரு பயனும் இல்லை;
தாய் மொழியாக
முதல் மொழியாக
தனது கல்வியில்
ஆரம்பக்கல்வி முதல்
உயர் கல்வி வரை
மட்டுமல்லாது
கல்லூரிக் கல்வியையும்
தமிழில் 
படிப்பவர்களுக்கே
அரசாங்க வேலை அளிக்கப்படும் - என்று
உத்தரவு பிரகனப்படுத்தப்பட்டால்
எத்தனை பேர் தமிழ் படிப்பார்கள்

தமிழ் படித்தவர்களுக்கே
தமிழ் நாட்டு வேலையில்
முன்னுரிமை தரப்படும் என்று
சட்டம் கொண்டு வரப்பட்டால்
தமிழை எத்தனை பேர் ஓடி ஓடி படிப்பார்கள்.

அதைப் போலத்தான்
விவசாய படிப்பிற்கும்
விவசாயிக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும்போது
விவசாயம் வளரும்.

மதிப்பு மிக்க தேவையுள்ள
விவசாயம் வளர வேண்டுமானால்
இந்த சமுதாயம்
விவசாயத்தை போற்ற வேண்டும்;
இல்லையென்றால்
தேவையுள்ள விவசாய நிலங்களை
வீட்டுமனைகளாக மாற்றி விற்பவர்கள்;
வளர்வார்கள்;

விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழும்போது
எதிர் காலத்தில் சாப்பாடு இல்லாமல் தான்
இருக்க முடியும்;
விவசாயம் அழிக்கப்பட்டால்,
விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டால்,
விவசாயி அழிக்கப்பட்டால்,
நாளைய தலைமுறை
உணவில்லாமல் இறக்க வேண்டியதுதான்.

ஆகவே ஒவ்வொருவரும்
எது தேவை உடையது என்றும்,
புனிதமானது என்றும் ,
எது தேவையற்றது என்றும்,
புனிதமற்றது என்றும்,
புரிந்து கொள்ள வேண்டும்.

படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை
இயேசுவினிடத்தில் கொண்டு வந்தார்கள்
இயேசு அவனை நோக்கி திடங்கொள்
உன் பாவங்கள்
மன்னிக்கப்பட்டது என்றார்.

வேத பாரகரில் சிலர்
தங்கள் உங்களில் இவன்
தேவதூஷணம் சொல்கிறான் என்று
தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்
கொண்டார்கள்.

அவர்கள் மனதில் நினைத்ததை
இயேசு அறிந்து
நீங்கள் உங்கள் உள்ளங்களில்
தவறானவைகளைச் ஏன் சிந்திக்கிறீர்கள்.

உன்னுடைய பாவங்கள்
மன்னிக்கப்பட்டது என்று சொல்வது எளிதா?
எழுந்து நடவென்று சொல்வது எளிதா?
எது எளிது?

பூமியில் பாவங்களை
மன்னிக்கக்கூடிய அதிகாரம்
மனுஷகுமாரனுக்கு
உண்டு என்பதை
நீங்கள் அறிய வேண்டும் - என்று
இயேசு திமிர்வாதக்காரனை நோக்கி
எழுந்து
உன் படுக்கையை எடுத்துக் கொண்டு
உன் வீட்டுக்குப் போ என்றார்.

உடனே அவன் எழுந்து வீட்டுக்குப் போனான்

பாவங்களை நம்மால் தீர்க்க முடியாது;
பாவங்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்;
பாவத்தினால் உண்டாகும் விளைவுகளை
நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்;
பாவத்தின் விளைவுகளிலிருந்து நாம் நாம் தப்ப முடியாது;
பாவத்தின் விளைவுகளிலிருந்து நாம் தப்பி ஓடி விட முடியாது;
எங்கே போய் நாம் ஓடி ஒளிந்து கொண்டாலும் ,
மறைவான இடத்தில் மறைந்து கொண்டாலும்,
மறைவான பிரதேசத்தில் ஓடி ஒளிந்து கொண்டாலும்,
பாவச்செயலை யாருக்கும் தெரியாமல் செய்தோம்
நாம் செய்த பாவச்செயலை யாரும் பார்க்கவில்லை
என்று நினைத்தாலோ
அது அறிவற்ற தனம்.

ஒரு பாவத்தை செய்து விட்டு
அதன் விளைவிலிருந்து
தப்ப முடியாது - ஆனால்
நாம் செய்தது பாவம் என்று உணர்ந்து
ஆண்டவரிடம் சரணடைந்தால்,
ஆண்டவருடன் இணைந்தால்,
ஆண்டவரை விசுவாசித்தால்,
ஆண்டவரிடம் தன்னை ஒப்படைத்தால்,
உண்மையாக ஆண்டவரை நம்பினால்,
இயேசுவை உண்மையான தேவன்
என்று விசுவாசித்தால்,
இயேசுவிடம் முழுமையாக தன்னை ஒப்படைத்தால்,
ஆண்டவர் நம் பாவத்தை தான் ஏற்றுக் கொண்டு
நமக்காக மரித்தவர்;
நமக்காக இரத்தம் சிந்தியவர்;
நம் பாவத்தை ஏற்றுக் கொள்வார்;
நம் பாவத்தை தீர்ப்பார்;
நம் கவலைகளை குறைப்பார்;
நம் வருத்தங்களை களைவார்;
நம் குறைகளை நீக்குவார்;
நம் இயலாமையை போக்குவார்;
நம் ஏழ்மையை மாற்றுவார்;
நம் வாழ்வை உயர்த்துவார்;
மதிப்பு மிக்கது எது என்றும்
தேவையானது எது என்றும்
உணர்ந்தவனால மட்டுமே
ஆண்டவரை உணர முடியும்.

மதிப்பு மிக்க ஆண்டவருடன்
தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம்
தங்கள் பாவங்கள் நீங்க சுகம் பெறலாம்;
என்று உணர்ந்தவர்களால் மட்டுமே
மதிப்பு மிக்க ஆண்டவரை நாடுவதன் மூலம்
பாவத்தை நீக்கி உயர் வாழ்வை அடைய முடியும்;

அதனால் இயேசு,
பாவங்கள் மன்னிக்கப் பட்டது
என்று சொல்வது எளிதா?
எழுந்து நடவென்று சொல்வது
எளிதாஎன்றார்

பாவங்கள் மன்னிக்கப்பட்டது
என்று சொல்வதற்கும்
எழுந்து நட என்று சொல்வதற்கும்
வேறுபாடு இருக்கிறது.

பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றால்,
பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று பொருள்
அடுத்த செயல்
எப்பொழுது நடக்கும் என்று தெரியாது ;
ஆனால்
எழுந்து நட என்று சொல்லும் போது
அங்கே இரண்டு செயல்கள் நடை பெறுகிறது
ஒன்று பாவங்கள் மன்னிக்கப்பட்டது
இரண்டு எழுந்து நடந்து செல்வது;

பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்லும் போது
ஒரு செயல் மட்டுமே நடக்கிறது;
அது பாவங்கள் மன்னிக்கப்பட்டது
இங்கு எழுந்து நடக்கும் செயல் என்பது இல்லை.

பாவங்கள் மன்னிக்கப் பட்டது என்பதில்
இரண்டு செயல்கள் நடைபெறுகிறது;
பாவங்கள் மன்னிக்கப் பட்டது என்ற செயலும்
எழுந்து நட என்ற வார்த்தையில்
பாவங்கள் மன்னிக்கப்பட்டன எழுந்து நட என்று
இரண்டு செயல்களும் நடைபெறுகிறது.

அதனால் தான் இயேசு
பாவங்கள் மன்னிக்கப்பட்டன
என்று சொல்வது எளிதா?
எழுந்துநட என்று சொல்வது எளிதா?
என்கிறார்.

வார்த்தையில் உள்ள அர்த்தத்தின்
ஆழத்தினை புரிந்து கொள்ளாதவர்
மனம் குழப்பத்தில் இருந்ததால்
இயேசு.
பாவங்களை மன்னிக்க
மனுஷகுமாரனுக்கு
அதிகாரம் உண்டென்பதை
உணர வேண்டும் என்கிறார்.

பரிசுத்தமான உண்மையான
தேவகுமாரனால் மட்டுமே பாவத்தை போக்க முடியும்
என்பதை மக்கள் உணர வேண்டும்
என்ற எண்ணத்தாலேயே
இயேசு
எனக்கு பாவங்களை போக்கும்
அதிகாரம் இருக்கிறது
அதாவது
என்னால் பாவங்களை போக்க முடியும்
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்றார்.

திமிர்வாதக்காரனை நோக்கி
நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு
உன் வீட்டுக்குப்போ என்றார் இயேசு.
அவன் எழுந்து வீட்டுக்குப் போனான்.

இயேசு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது - என்று
சொல்லவில்லை
நீ எழுந்து
உன் படுக்கையை எடுத்துக் கொண்டு போ
என்கிறார்.
நீ படுக்கையை எடுத்துக் கொண்டு போ என்றால்
உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது
எழுந்து நட என்ற அர்த்தம்.

இயேசு பாவங்கள் மன்னிக்கப்பட்டது
என்று சொல்லவில்லை
எழுந்து நட என்று சொல்கிறார்.
பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றால்
பாவங்கள் மன்னிக்கப்படும்
எழுந்து நடப்பான் என்று சொல்ல முடியாது;
ஆனால்,
எழுந்து நட என்றால்
பாவங்கள் மன்னிக்கப்பட்டு எழுந்து நடப்பது
என்று பொருள்;
அதனால் தான் இயேசு
எழுந்து நட என்றார்.

ஜனங்கள் அதைக் கண்டு
அவரை மகிமைப் படுத்தினார்கள்
பின்பு அவர் வீட்டிலேயே
போஜன பந்தியிருக்கையில்
அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து
இயேசுவோடும் அவர் சீஷரோடும் கூடப் பந்தியிருந்தார்கள்.

பரிசேயர் அதைக் கண்டு
அவருடைய சீஷர்களை நோக்கி
உங்கள் இயேசு
ஆயக்காரரோடும் பாவிகளோடும்
போஜனம் பண்ணுகிறதென்ன
என்று கேட்டார்கள்.

நாம் நல்லவர்களாக இருந்தால்
நல்லவர்கள் கூடத் தான்
இருக்க வேண்டும்;
கெட்டவர்களாக இருந்தால்
கெட்டவர்களுடன் தான் இருக்க வேண்டும்;
என்ற எழுதப்படாத விதி இருக்கிறது.

நல்லவர்கள் கெட்டவர்களுடன்
நட்பு கொண்டிருந்தால்
கெட்டவர்களுடன் பேசிக் கொண்டிருந்தால்
இந்த சமுதாயம் நல்லவர்களை
சந்தேகக் கண் கொண்டு பார்க்கும்.

நல்லவர்கள் கெட்டவர்களுடன்
உறவு கொள்வதை
இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை.

அதனால் தான் பரிசேயர்
சந்தேகக்கண் கொண்டு
புனிதமான உங்கள் போதகர்
தவறானவர்களுடன் உறவு கொண்டு இருக்கிறார்களே
இது தவறில்லையா என்று கேட்டார்கள்.

அதற்கு இயேசு
உடல் நலக் குறைவு உடையவனுக்கே
வைத்தியன் தேவை;
உடல்நலக் குறைவு இல்லாதவனுக்கு
வைத்தியன் தேவை இல்லை;

நான் பாவிகளைத் தான்
மனம் திருந்தி வாழ வைக்க வந்தேன்;
பாவத்தால் பாதிக்கப்பட்டு
வாழ்வில் துவண்டவர்களுக்கே
பாவத்தை நீக்கி நல்வாழ்வு அளிக்க வந்தேன்;
பாவத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
என்னை உணர்ந்து கொண்டால்,
என்னை ஏற்றுக்கொண்டால்,
என்னை விசுவாசித்தால்,
என்னுடன் இரண்டறக் கலந்தால்,


அவர்களுடைய பாவங்களை நீக்கி
பாவங்களிலிருந்து விடுபட்டு
மனம் திருந்தி வாழ்வதற்கு
உயர்வு அளிப்பேன்.
பாவம் செய்ததை நினைத்து
வருந்தி இருப்பவர்களுக்கே
பாவத்தை நீக்க வேண்டும்.

பாவிகளற்றவர் யார்;
பாவியாக இல்லாதவர் யார்;
பாவம் செய்யாதவர் யார்;
பாவம் இல்லாத இடத்தில்,
பாவம் இல்லாத உலகத்திற்கு,
பாவத்தை நீக்க ,
நான் வர வேண்டிய அவசியமில்லை.

பாவத்தால் இவ்வுலகம்
நிரம்பி வழிந்து கொண்டிருப்பதும்;
பாவிகளால் இவ்வுலகம்
தவறான வழி நோக்கி சென்று கொண்டிருப்பதும்;
பாவங்களை மனிதர்கள்
பயமில்லாமல் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதும்;
பாவத்தின் பலன் நம்மை பாதிக்கும்
என்று  தெரிந்தும்
பாவங்களை தொடர்ந்து
செய்து கொண்டிருப்பதும்;
இத்தகைய நிலையில் உள்ள
பாவத்தால் சூழப்பட்ட இவ்வுலகத்தை
பாவத்தால் நிரப்பப்பட்ட மனிதர்களை மீட்கவே
பாவத்திலிருந்து மனிதர்களை மீட்டு இரட்சிக்கவே 
நான் வந்தேன்.

உடல் நலக்குறைவு உள்ளவனுக்கே
வைத்தியன் தேவை;
உடல் நலக்குறைவு இல்லாதவனுக்கு
வைத்தியன் தேவை இல்லை;

அதனால் தான்
நான்
உடல் நலக்குறைவை தீர்க்கும் வைத்தியனாக
பாவங்களை போக்குபவனாக வந்தேன் என்றார்.

தான் செல்லும் வழி
தவறான வழி என்று உணராமலேயே
தவறான வழியில் செல்பவர்களை மாற்றி
நேர்வழியில் செல்லத்தக்க
முறைகளை உருவாக்கி

இதுவல்ல வாழ்க்கை;
இது தான் வாழ்க்கை;
இதுதான் உண்மை;
என்பதை உணர வைத்து
பாவத்தின் பலனை அறியவைத்து;
பாவத்தின் விளைவை புரிய வைத்து;
பாவத்திலிருந்து பாவிகளை
மனந்திரும்ப அழைக்க வந்தேன் என்றார்.

யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து
நாங்களும் பரிசேயரும்
அநேகந்தரம் உபவாசிக்கிறோம்
உம்முடைய சீஷர்கள்
உபவாசியாமல் இருக்கிறது
என்னவென்று கேட்டார்கள்.

உபவாசம் என்பது,
ஆண்டவருடன் இணைவதற்கான ஒரு வழி;
ஆண்டவருடன் நம்மை,
இணைப்பதற்கான ஒரு பாலம்;
உபவாசம் என்பது,
ஆண்டவரை அறிந்து கொள்வதற்கும்;
ஆண்டவரை புரிந்து கொள்வதற்கும்;
ஒரு பாதை.
இத்தகைய ஆண்டவர்
நம்முடன் இருக்கும் போது - ஏன்
நாம் உபவாசிக்க வேண்டும்.
ஆண்டவர் நம்முடன் இருக்கும்போது
நாம் உபவாசிக்க வேண்டிய அவசியமில்லை.
ஆண்டவர் நம்முடன்
இல்லாத போது தான் நாம்
உபவாசிக்க வேண்டும்

இயேசு சீடர்களுடன்
இருக்கின்ற காரணத்தினால்
அவருடைய சீஷர்கள்
உபவாசிக்க வேண்டிய அவசியமில்லை.

இயேசு அவர்களுடன் இல்லாத பட்சத்தில்
இயேசு அவர்களுடன் இல்லாத நிலையில் தான்
இயேசுவின் சீடர்கள் உபவாகிக்க வேண்டும்.

இயேசு சீடர்களுடன் இருக்கின்ற காரணத்தினால்
இயேசுவின் சீடர்கள் உபவாசிக்க
வேண்டிய அவசியமில்லை.

அதனால் தான் இயேசு,
மணவாளன் தங்களுடன் இருக்கையில்
மணவாளனுடைய தோழர்கள்
துயரப்பட மாட்டார்கள்.

மணவாளன் தங்களுடன்
இல்லாத நிலையில் தான்
மணவாளனுடைய தோழர்கள் வருத்தப்பட வேண்டும்.

நான் அவர்களுடன் இருப்பதால்
என்னுடைய சீடர்கள்
உபவாசம் இருக்க வேண்டிய அவசியமில்லை,
நான் அவர்களை விட்டு
விலகிச் சென்ற பிறகு
அவர்கள் உபவாசம் இருப்பார்கள்
என்றார் இயேசு.

இவ்வுலகத்தை ஆண்டு கொண்டிருப்பவரும்;
இவ்வுலகத்தை காத்து கொண்டிருப்பவரும்;
இவ்வுலகத்தின் அனைத்து உயிர்களையும்
காப்பாற்றி வருபவரும்;
கடவுள் இயேசு என்பதை,
உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே
நம்முடைய பாவங்களை
ஆண்டவராகிய இயேசு
நீக்குவதன் மூலமே
இன்பம் பெற்று வாழ முடியும்-என்று
உணர்ந்தவர்களால் மட்டுமே
கருணை கொண்ட இயேசுவை அணுகி
பாவத்தை நீக்கி இன்பம் பெறக்கூடிய
உயர்நிலையை அடையமுடியும்;
பயனுள்ள தேவையை நிறைவு செய்ய முடியும்;
என்கிறது பைபிள்.


எழுந்து நட என்று கூறுவதன் மூலம்
பாவத்தை நீக்கி இன்பம் அளித்தார்;
ஒன்றாக அமர்ந்து போஜனம் பண்ணுகையில்
நாம் பாவத்தை நீக்கவே
வந்தேன் என்றார்;
தன்னுடன் இருக்கும் வரை
தன்னுடன் இணைந்து இருக்கும் வரை
பாவங்களால் ஏற்படும் விளைவு அணுகாது என்றார்;

தன்னை நம்புகிறவர்களின்
பாவங்களை நீக்க வந்தேன்
தன்னுடன் இணைந்து இருக்கும் வரை
பாவத்தினால் ஏற்படக்கூடிய விளைவு அண்டாது
என்று கூறுவதன் மூலம்

இந்த உலகத்தை பாவத்திலிருந்து மீட்கவே
இவ்வுலகம் வந்தேன்
என்று தெளிவு படக்கூறுகிறார்.
தன்னுடன் இருக்கும் வரை
எந்நாளும் துன்பமில்லை என்கிறார்.

மதிப்பு மிக்கதை உணருங்கள்
உங்களுக்கு தேவையானது
உங்களைத் தேடி வரும்
என்கிறது பைபிள்.
மதிப்பு மிக்கதை உணராமல்
மதிப்பற்றதை உணர்ந்தால்
தேவையுள்ளது வராமல்
தேவையற்றது தான்
நம்மைத் தேடி வரும்
என்கிறது பைபிள்.








அகஸ்தியர் :

               “”“”””பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
படைப்புகளோ பலவிதமாய் கோடா கோடி
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி
வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான்
ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும்
குணவியவா னானக்காற் சத்திய மாமே””””””
---------- அகஸ்தியர்
----------அகஸ்தியர் ஞானம்-9
பெரிய ஞானக்கோவை

உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்
செயல்பட்டுக் கொண்டிருக்கும்
எந்த பொருளை எடுத்துக் கொண்டாலும்
அதில் மூன்று நிலைகள் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்
அந்த மூன்று நிலைகளும்
பிரபஞ்ச ரகசியங்களை
தன்னுள் வைத்திருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்
தன்னுள் வைத்திருப்பதை மறைத்து வைத்திருப்பதை
தெரிந்து கொள்ளலாம்.

வெளிப்படையான விஷயமாக இருந்தாலும்
உணர்ந்து கொள்ளக்கூடிய விஷயமாக இருந்தாலும்
அது மறைபொருளாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதை
அறிந்து கொள்ளலாம்.

பெரும்பாலானவர்களுக்கு
ஒவ்வொரு விஷயத்திலும்
மூன்று நிலைகள் இருப்பதையே?
அந்த மூன்று விஷயங்களில் உள்ள
மூன்று நிலைகள் தான்
பிரபஞ்ச ரகசியங்களை தன்னுள்
கொண்டிருக்கிறது என்பதையோ ?
இந்த சமுதாயம் அறியாமல் இருக்கிறது.

வெளிப்படையாக இருக்கும் ஒன்று;
தன்னை வெளிப்படுத்திய ஒன்று;
தானே தன்னை வெளிப்படுத்திய ஒன்று;
தானே தானாக மாற்றமடைந்த ஒன்று;
ஒன்றே பலவாறாக பரிணமித்த ஒன்று;
ஒன்றே மற்றொன்றாக மாறிய ஒன்று;
ஒன்றே பலவாறாக உருமாறிய ஒன்று;
ஒன்றினுள் பலவாறாக தோன்றிய ஒன்று;
ஒன்றிலிருந்து ஒவ்வொன்றாக பரிணமித்த ஒன்று;

அந்த ஒன்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டபோது
தன் ரகசியங்களை,
தன் மறைபொருளை,
தன் ஆதிநிலைகளை,
தன் சூட்சுமங்களை ,
தான் வெளிப்படுத்திய
தான் உருமாறிய
தானே தானாக மாறிய
பல்வேறு விஷயங்களிலும்,
இயக்க நிலையில் உள்ளவைகளிலும்,
இயக்கமற்ற நிலைகளில் உள்ளவைகளிலும்,
தன்னை வெளிப்படுத்தி வைத்திருந்தாலும்
உணர முடியாத நிலையில்
மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

ஆதி
சக்தியாகி
சக்தி பஞ்ச பூதங்களாகிய
இந்த மூன்று நிலைகளும்
பிரபஞ்சம் முழுவதும் இருக்கிறது.

ஆதிநிலையை - காரண உடல் என்றும்
சக்தி நிலை¬யை - இயக்க ஆற்றல், சூட்சும உடல் என்றும்
பஞ்சபூதங்களின் கூட்டுநிலையைதூல உடல் என்றும்
எடுத்துக் கொள்ளலாம்,

நமது உடலில்
தூல உடல் - சூக்கும உடல் - காரண உடல்
ஆகிய முக்கியமான
மூன்று நிலைகள் இருக்கிறது.

தூல உடல் பஞ்ச பூதங்களின் கூட்டு
சூக்கும உடல் சக்தி நிலை
காரண உடல் ஆதி நிலை
என்ற ரகசியங்களை தாங்கி
மனித உடல் இருக்கிறது.

தூல உடல்- சூக்கும உடல்- காரண உடல்
என்ற மூன்று நிலைகளை
மனித உடல் கொண்டு இருக்கிறது.

தூல உடலைப் பார்க்க முடியும்;
சூக்கும உடலை பார்க்க முடியாது
ஆனால்,
சூக்கும உடலை உணந்தவர்களால் மட்டுமே
சூக்கும உடலை பார்க்கவும்;
உணரவும் முடியும்;

காரண உடலை அவ்வளவு
எளிதில் உணர முடியாது;
அப்படி உணரும் நிலை வந்து விட்டால்,
உணரும் பேறு கிடைத்து விட்டால்,
உணரக்கூடிய தகுதி வந்து விட்டால்,
உணரக்கூடிய காலம் வந்து விட்டால்,
காரண உடலை உணரலாம்.

இந்த மூன்று நிலைகளும்
மனித உடலில் ரகசியங்களாக
மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

தன்னை உணரும்போது
தன்னை படைத்தவனை உணரலாம்;
தன்னை உணர முடியவில்லை என்றால்
தன்னை படைத்தவனை உணர முடியாது;
முதலில் தன்னை உணர வேண்டும்
தன்னை உணரும் தகுதி வந்து விட்டால்
இறைவனை அறியும் வாய்ப்பு தன்னால் கிடைத்து விடும்.

தன்னை ஒருவன் அறியவில்லை எனில்,
தன்னை ஒருவன் அறிய முற்படவில்லை எனில்,
தன்னை ஒருவன் அறிய முயற்சிகளை
மேற்கொள்ளவில்லை எனில்,
தன்னை ஒருவன் அறிந்துகொள்ள விரும்பவில்லை எனில்,
தன்னை அறிய ஒருவன் சிந்திக்கவில்லை எனில்,
தன்னை படைத்தவனை அறிய முடியாது.

தன்னை உணர்ந்தவனால் மட்மே
தன்னை படைத்தவனை உணர முடியும்
தன்னை உணராதவனால்
தன்னை படைத்தவனை
உணர முடியாது.

தன்னை படைத்தவனை
உணர வேண்டுமென்றால்
தன்னை முதலில்
உணர வேண்டும்;
தன்னை உணராமல்
தன்னை படைத்தவனை
உணர முடியாது;

தன்னை படைத்தவன்
எங்கிருக்கிறான் என்பதைத்
தேடுவதை நிறுத்துங்கள்;
நாம் எப்படி படைக்கப் பட்டோம்;
நாம் எதற்காகப் படைக்கப்பட்டோம்;
நாம் எந்த காரணத்திற்காகப் படைக்கப்பட்டோம்;
என்று ஆராயும் போது
என்று ஆராய முற்படும் போது
என்று ஆராய்ச்சியில் இறங்கும் போது
முயற்சி, பயிற்சி மற்றும் முன்வினை
ஆகியவற்றின் மூலம்
அவனே நானாக இருப்பதை
அறிந்து கொள்ளலாம்.

படைத்தவனுள் நாமும்
நம்முள் படைத்தவனும் இருப்பதை
உணர்ந்து கொள்ளலாம்.

அவனே நாமாக மாறி இருப்பதையும்
நம்முள் அவனே இருப்பதையும்
உணர்ந்து கொள்ளலாம்.

அண்டத்தில் உள்ள அனைத்தும்
இந்த பிண்டத்தில் உள்ளதையும்
இந்த பிண்டத்தில் உள்ளதே
அண்டத்தில் உள்ளது
என்பதையும்
தெரிந்து கொள்ளலாம்,


அனைத்திலும் அவன் இருப்பதையும்
அவனுள் நாம் இருப்பதையும்
நம்முள் அவன் இருப்பதையும்
அவனே நாமாக இருப்பதையும்
உணர்ந்து கொள்ளலாம்.

அனைத்தினுள்ளும்
அவன் இருப்பதை
உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால்
நம்முள் அவன் இருப்பதை
முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நம்முள் அவன் பரிணாமத்தின் ரகசியங்கள்
அனைத்தையும் வைத்திருக்கிறான்
ஆதிநிலை முதல்
பிரபஞ்ச பரிணாம தோற்றங்கள் வரை
அனைத்தையும் நம்முள் வைத்து இருக்கிறான்.

அதைத் தான்
மனித உடலில்
மூன்று நிலைகளாக
தூல உடல், சூக்கும உடல், காரண உடல்
என்ற மூன்று உடல்களாக வைத்திருக்கிறான்.

இந்த மூன்று உடல்களைப் பற்றித் தெரிந்துகொண்டால்
ஆதிநிலை ,
அதிலிருந்து பின்னமாகிய உயிரின் நிலை,
உயிரிலே அடங்கிய புலன்கள் மூலம் வெளிப்படும்
பஞ்ச பூத கூட்டான தூல உடல் மூலம் வெளிப்படும்
மனத்தால் உணரத்தக்க மலர்ச்சிகளை அறிந்து கொள்ளலாம்.

இந்த மூன்று நிலைகளும்
உடலில் எவ்வாறு உள்ளதோ
அவ்வாறே பிரபஞ்ச பொருட்களிலும்
உள்ளது.

எந்த ஒரு சக்தி வெளிப்பட வேண்டும் என்றாலும்
அதற்கு ஒரு பொருள் தேவை;
பொருள் இல்லை என்றால்
எந்த ஒரு சக்தியும் தன்னை வெளிப்படுத்த முடியாது;

ஒரு சக்தி வெளிப்படும் போது
ஒரு பொருளின் மூலம்
வெளிப்படும் போது
இந்த மூன்றையும் வெளிப்படுத்தும்;

இந்த மூன்றும்
அதில் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
மின்சாரம் பல்பின் வழியாக
வெளிப்படும்போது ஒளியாகிறது;
மின்சாரம் மின்விசிறி வழியாக
வெளிப்படும்போது காற்றாகிறது;
மின்சாரம் மின்அடுப்பு வழியாக
வெளிப்படும்போது நெருப்பாகிறது;

அதாவது
ஒன்று மற்றொன்றாக மாற்றம் அடைகிறது
ஒன்று மற்றொன்றாக மாற்றம் அடைந்தாலும்
அந்த ஒன்றே தன்னை
வேறு ஒன்றாக வெளிப்படுத்திக் கொள்கிறது.

ஒன்று வேறொன்றாக மாறுகிறது
ஒன்றே மற்றொன்றாக மாற்றம் அடைகிறது.

ஒன்று மற்றொன்றாக
மாற்றம் அடையும்போது
மாறறத்தை பார்த்தால்
மாற்றத்திற்கு காரணமானது எது என்றும்,
மாற்றத்திற்கு மூலமானது எது என்றும்,
மாற்றத்திற்கு அடிப்படையானது எது என்றும்,
தெரிந்து கொள்ளலாம்.


மாற்றத்தைப் பார்த்தால்
மாற்றத்திற்கு காரணமான
மூலத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இது தான் அனைத்திற்கும் ஆதி நிலையா என்றும்,
இது தான் அனைத்திற்கும் மூல நிலையா என்றும்,
இது தான் அனைத்திற்கும் அடிப்படையானதா என்றும்,
இது தான் அனைத்திற்கும் ஆதாரமானதா என்றும்,
இது தான் அனைத்தையும்
தன்னுள் வைத்திருக்கிறதா என்றும்,
இது தான் அனைத்தையும்
கட்டிக் காப்பாற்றி வருகிறதா என்பதையும்,
இது தான் அனைத்தையும்
வழி நடத்திச் செல்கிறதா என்பதையும்,
அறிந்து கொள்ளலாம்.

எனவே,
மூலத்தை முதலில் தெரிந்து கொள்ள
முயற்சி எடுக்காமல்
மாற்றத்தை தெரிந்து கொண்டு
மாற்றத்திற்கு காரணமான
மூலத்தை தெரிந்து கொள்ள
முற்பட  வேண்டும்.
மாற்றத்திலிருந்து மூலத்திற்கு வருவது
சற்று சிரமம் குறைவு
உணர்வது எளிது
கண்டு பிடிக்க முயற்சிப்பது எளிது
மூலத்திலிருந்து மாற்றத்திற்கு வருவது சற்று கடினம்
மாற்றத்திலிருந்து மூலத்திற்கு வர வேண்டும்;
மூலத்திலிருந்து மாற்றத்திற்கு வர வேண்டும்;

எனவே மாற்றத்திலிருந்து மூலத்திற்கு வர வேண்டும்
மூலத்திலிருந்து மாற்றத்திற்கு வர
முயற்சி செய்வது
விடையை பெறுவதில்
கடின நிலையை உருவாக்கி விடும்.

ஒரு பல்ப் எரிவதைப் பார்த்தால்
அதில் மூன்று நிலைகளும்
இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு பல்ப்
இது பஞ்ச பூதங்களின் கூட்டு
பொருள் நிலையில் உள்ளது - பார்க்கலாம்;

மின்சாரம்
சக்திநிலை - இயக்க நிலையில் உள்ளது -
உணர முடியும் பார்க்க முடியாது

மின்சாரம் தோன்றுவதற்கு காரணமாக இருக்கும்
மின்சாரம் உருவாகக் காரணமாக இருக்கும்
மூலம்
அனைத்திற்கும் மூலமாக உள்ள
ஆதிநிலை
அதை உணர முடியும்;
பார்க்க முடியாது;

பல்ப் பார்க்க முடியும்;
மின்சாரம், ஆதிநிலை
இரண்டையும் உணர முடியும்;

மின்சாரம் என்ற சக்தி வெளிப்பட
பல்ப் என்ற
ஒரு பொருள் தேவை
எந்த சக்தியும் தன்னை வெளிப்படுத்த
ஒரு பொருள் தேவை.

ஒரு சக்தி தன்னை
வெளிப்படுத்த வேண்டுமென்றால்
அதற்கு
ஒரு பொருள் தேவை.
ஒரு பொருள் இல்லை என்றால்
எந்த சக்தியும் தன்னை
வெளிப்படுத்த முடியாது.

பல்ப் என்பது தூல உடல்
மின்சாரம் என்பது சூட்சும உடல்
ஆதி நிலை என்பது காரண உடல்.

இதில் பல்ப், மின்சாரம்
தூல உடல், சூட்சும உடல் இரண்டையும்
ஓரளவு அறிந்துகொள்ளலாம்;
ஆனால் காரண உடலை
அறிந்து கொள்வது சற்று கடினம்;

முதல் நிலை அதாவது மூலநிலையை
ஆதிநிலை என்கிறோம்;
ஆதியிலிருந்து பின்னமாகிய
உயிரியின் நிலையை சக்தி நிலை என்கிறோம்;
சக்திகள் இணைந்து உருவான
பஞ்சபூத கூட்டை தூல நிலை என்கிறோம்;

ஆதி நிலையை காரண உடல் என்றும்;
சக்தி நிலையை சூட்சும உடல் என்றும்;
பஞ்சபூத கூட்டை தூல உடல் என்றும்;
அழைக்கிறோம்
இந்த நிலையில் தான்
நம் உடல் இருக்கிறது;
இந்த மூன்று விஷயத்தையும்
தன்னுள் கொண்டு தான்
இந்த உடல் இயங்குகிறது;

உயிர் என்ற சூட்சும உடல்
அதாவது சக்தி நிலை
தன்னை வெளிப்படுத்திக்கொள்ள
தூல உடல் என்ற பொருள் தேவை;
உயிர் இயங்க மெய் தேவை;
மெய் இல்லையென்றால் உயிர் இயங்க முடியாது;

சூட்சும உடல் இயங்க தூல உடல் தேவை;
உயிர் என்ற சக்தி
தூல உடல் என்ற பொருளின் மூலம்
தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது;

சூட்சும உடல், தூல உடலின் மூலம்
தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும்
சூட்சும உடல் மற்றும் தூல உடலுக்கு
மூலம் காரண உடல்          
காரண உடல் தான் இந்த இரண்டுக்கும் மூலம்
ஆதிநிலை
ஆதிநிலையான
காரண உடலுடன்
சூக்கும உடலும், தூல உடலும் பின்னப்பட்டிருக்கிறது.
இணைந்து இருக்கிறது
கலந்து இருக்கிறது

தூல உடலை உணரும்போது
சூக்கும உடலை உணர்ந்து கொள்ளலாம்;
சூக்கும உடலை உணரும்போது
காரண உடலை உணர்ந்து கொள்ளலாம்;
இதுதான் மாற்றத்திலிருந்து
மூலத்திற்கு செல்லும் வழி

இயக்கமற்றது
இயக்கமாகி தன்னை பொருளின் மூலம்
வெளிப்படுத்தும்போது
வெளிப்படுத்தப்பட்ட பொருளிலிருந்து
வெளிப்படுத்திய
வெளிப்படுத்துவதற்கு காரணமான மூலத்தை அடைவது
மூலத்தை அறிந்து கொள்ள வழி வகுக்கும்.

மின்சாரம் எப்படி
பல்ப் மூலமாக வெளிப்படுகிறதோ
அவ்வாறே உயிரானது உடல்மூலம் வெளிப்படுகிறது
மின்சாரம் பல்ப் மூலம் வெளிப்படும் போது ஒளியாகிறது;
மின்சாரம் மின் விசிறி மூலம் வெளிப்படும்போது காற்றாகிறது;
மின்சாரம் மின் அடுப்பின் மூலம் வெளிப்படும்போது வெப்பமாகிறது;

அதைப்போல உயிரானது
உயிரில் கலந்துள்ள காந்த ஆற்றலால்
பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய
நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்
ஆகியவற்றில் நிறைந்து இருக்கக்கூடிய
காந்த ஆற்றல்
அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் ஆகிய
பஞ்சதன் மாத்திரைகளாக மாற்றம் அடைகிறது.

இந்த பஞ்ச தன் மாத்திரைகள்
புலன்கள் மூலமாக
தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
மெய் வழியாக அழுத்தமாகவும் ;
வாய் வழியாக சுவையாகவும்;
கண் வழியாக ஒளியாகவும்;
செவி வழியாக ஒலியாகவும்;
மூக்கு வழியாக மணமாகவும்;
தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

ஒரு சூட்சும விஷயம்
ஒரு சூட்சும நிலை
தன்னை
ஒரு பொருள் மூலம் வெளிப்படுத்திக்கொள்கிறது
அதாவது ஒரு சக்தி தன்னை
ஒரு பொருளின் மூலம் வெளிப்படுத்திக் கொள்கிறது.

சூட்சும உடல்,
தூல உடலின் மூலம்  வெளிப்பட்டிருக்கிறது
மின்சாரம் பல்பின் மூலம்
வெளிப்படுவதைப் போல
சூட்சும உடல்
தூல உடலின் மூலம் வெளிப்படுகிறது.

பல்ப் எரிவதை பார்த்து
மின்சாரத்தால் இயங்குகிறது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்
அதைப் போல,
உடல் இயங்குவதை வைத்து
உயிர் இருக்கிறது
என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆனால் இரண்டுக்கும் மூலமானது
ஆதிநிலை
அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்
அனைத்தும்
உருவாக காரணம் எது என்றும்
காரண உடல் எது என்றும்
தெரிந்து கொள்ள வேண்டும்.

தூல உடல், சூக்கும உடல், காரண உடல்
என்ற நிலையில்
மூல நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

காரண உடல், சூக்கும உடல், தூல உடல்
என்ற வரிசையில்
மூல நிலையைத் தெரிந்து கொள்வது கடினம்.

நாம் பிறக்கும் போது
சூக்கும உடலும், தூல உடலும்
ஆதி நிலை அதாவது
காரண உடலுடன் இணைக்கப்பட்டிருந்தது.

ஆதி நிலை தான்
இந்த இரண்டையும் உருவாக்கியது;
ஆதி நிலை தான்
இந்த இரண்டையும் இயக்கியது;

ஆதி நிலை இந்த இரண்டை
நேரிடையாக இயக்கும்போது
கர்ம வினைகள் இல்லை.

ஆதி நிலை
இந்த இரண்டை
விட்டு விலகி இருக்கும் போது,
இந்த இரண்டு
அந்த ஒன்றை உணராத போது,
இந்த இரண்டு
அந்த ஒன்றிலிருந்து பிரிந்து இருக்கும் போது,
கர்ம வினைகள் உருவாகிறது.

மூன்று வயது வரை
ஆதி நிலை
தூல உடலுடனும்
சூக்கும உடலுடனும்
இணைந்து இருக்கிறது
இணைக்கப்பட்டிருக்கிறது.

மூன்று வயதுக்கு மேல்
ஆதி நிலையான காரண உடல்
தூல உடலில் இருந்தும்
சூக்கும உடலில் இருந்தும்
விலகி இருக்கிறது
அதனால் கர்ம வினைகள்
உருவாகிறது.

ஆதிநிலையான காரண உடல்
சூக்கும உடலுடனும்
காரண உடலுடனும்
இணைந்து இருக்கும் போது
கர்ம வினைகள் உருவாவது இல்லை.

ஆதி நிலையான காரண உடல்
சூக்கும உடலுடனும்
தூல உடலுடனும்
பிரிந்து இருக்கும் போது கர்ம வினைகள்
உருவாகிறது.

அதனால் தான்
 மூன்று வயதுக்கு கீழ்
நாம் செய்த செயல்கள்
நாம் நினைவு படுத்தினால்
நமக்கு நினைவுக்கு வருவதில்லை.
3 வயதுக்கு கீழ்
நாம் செய்த செயல்கள்
எவ்வளவு முயற்சி செய்து பார்த்தாலும்
நமக்கு நினைவுக்கு வராது.

தூல உடல், சூக்கும உடல், காரண உடல்
ஆகியவற்றின் ரகசியத்தை
உணர்ந்து கொள்ளும் போது
இயக்கமற்ற நிலை,
இயக்கம் வெளிப்படும் நிலை,
ஆகியவற்றை
அதாவது
சிவநிலை என்கிற ஆதிநிலை
சக்தி நிலை என்கிற உயிர் நிலை
பஞ்சபூத கூட்டு நிலையில்
உயிர் வெளிப்படும் பொருள்
ஆகியவற்றை உணர்ந்து கொள்ளலாம்.

அதாவது தூல உடல், சூக்கும உடல், காரண உடல்
ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்;
ஒன்று மற்றொன்றாக
மாறிக் கொண்டே இருக்கும் நிலையில்,
ஒன்றிலிருந்து மற்றொன்று
உருவாகிக் கொண்டே இருக்கும் நிலையில்,
ஒன்று மற்றொன்றாக
பரிணமிக்கும் நிலையில்,

மாற்றத்தை புரிந்துகொண்டால்
மாறுவதற்கு காரணமாக
இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நன்றாக உற்றுக் கவனித்தோமானால்
உலகத்தில் உள்ள படைப்புகள்
எண்ணிக்கையில் கோடானு கோடி
கோடானு கோடி படைப்புகள்
இந்த பிரபஞ்த்தில் படைக்கப் பட்டிருக்கிறது.

ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள
கோடானு கோடி படைப்புகள்
கண்ணில் அடங்காத படைப்புகள்
கோடானு கோடி உயிர்கள்
படைக்கப்பட்டிருக்கிறது
நன்றாக உற்றுக் கவனித்தோமேயாகில்
உலகில் உள்ள
ஒரு பொருள் மற்றொன்றாக
இருக்கவே முடியாது.

ஒரு கல் எடுத்துக் கொண்டால்
ஒரு கல்லைப் போல
வேறு ஒரு கல் இருக்கவே முடியாது.

ஒரு மண் என்ற
ஒன்றை எடுத்துக் கொண்டாலும்
ஒன்று மற்றொன்றைப் போல
இருக்கவே முடியாது.

மண்ணே வேறு பட்டு இருக்கும் போது
பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களில்
ஒரு பொருள் மற்றொரு பொருளாக
எப்படி இருக்க முடியும்.

பிரபஞ்சத்தில் ஒரு பொருள்
மற்றொன்றைப் போல இல்லவே இல்லை
ஒரு உயிர் மற்றொன்றைப் போல இல்லவே இல்லை
எல்லாமே தனித்த நிலையிலும்
தனிப்பட்ட குணங்களை
தன்னுள் கொண்டும் இருக்கிறது.

ஒரு மனிதன்
மற்றொரு மனிதனைப் போல இருப்பதே இல்லை
இரட்டைப் பிறவி என்று சொன்னாலும்
ஒருவர் மற்றொருவரைப் போல இருப்பது இல்லை
ஒன்று மற்றொன்றைப் போல இல்லை
வேறுபாடுகள் இருக்கத் தான் செய்யும்.

இதையெல்லாம் நன்றாக உற்றுப்பார்த்தால்
பிரபஞ்சத்தில் உள்ள
அனைத்தையும் உற்றுப்பார்த்தால்
ஒன்று மற்றொன்றிலிருந்து
வேறுபட்டு இருப்பதைக் காணலாம்.

அவ்வளவு துல்லியமாக நுணுக்கமாக
இயக்க ஒழுங்கு மாறாமல் படைக்கப்பட்டு
இயங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

அமாவாசை, பௌர்ணமி
சந்திர கிரகணம், சூரிய கிரகணம்
அண்டத்தில் நடக்கிறது
அதாவது,
அண்ட வெளியில் நடப்பதைப் பார்க்கிறோம்.
இவைகள் அனைத்தும்
நம்முள்ளும் நடக்கிறது
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சோதிடத்தில் ஒரு கட்டத்தில்
சூரியனும், சந்திரனும் சேரும்போது
சில விதிமுறைகளையும் தன்னுள் கொண்டிருக்கும் போது
அமாவாசையில் பிறந்தவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

சூரியனும், சந்திரனும் பிரிந்து இருக்கும் போது
அதாவது சூரியனிலிருந்து சந்திரன் நேர் எதிராக
180 டிகிரி தூரத்தில் இருக்கும் போது
பௌர்ணமியில் பிறந்தவர் என்பதைத்
தெரிந்து கொள்ளலாம் .

சூரியனிலிருந்து ஒவ்வொரு நாளும்
சந்திரன் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார்
என்பதைக் குறிப்பதே திதி.

ஒரு திதி என்பது 12 பாகை
தேய்பிறை திதிகள் - 14
வளர்பிறை திதிகள் - 14
அமாவாசை - 1
பௌர்ணமி - 1
ஆக மொத்தம் 30 திதிகள்

ஒவ்வொரு திதிக்கும் ஒரு பலன் உண்டு
சூரியனிலிருந்து சந்திரன் படிப்படியாக
விலகும்போது தனிப்பட்ட பலன்கள்
அதனால் தான் ஒவ்வொரு திதியிலும்
இதைத் தான்
செய்ய வேண்டும்

வளர்பிறை திதி
தேய்பிறை திதி
அஷ்டமி
நவமி
என்று பிரித்து வைத்திருக்கிறார்கள்

நம் உடலில்
சூரியனும், சந்திரனும் சேர்ந்து
இருக்கும் போது இருண்ட நிலை உண்டாகும்.
அது தான் நம் உடலில் அமாவாசை
அதை கண்டு பிடித்து விட்டோமேயாகில்
நம் உடலில் உண்டாகும்
அமாவாசையைக் கண்டு பிடித்துவிட்டால்
ஒவ்வொரு திதியென்றும்
நம் உடலில் ஏற்படக் கூடிய
மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம்.
உடலுக்குள் நடக்கும் மாற்றங்களை
புரிந்துகொள்ளலாம்

அண்டத்தில் அமாவாசை,பௌர்ணமி
ஆகியவை என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ
அந்த மாற்றங்கள் உடலுக்குள்ளும் ஏற்படுகிறது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அண்டத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்
பிண்டத்திலும் ஏற்படுகிறது
என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
பிண்டத்தில் நடப்பது தான்
அண்டத்திலும் நடக்கிறது
என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

நமது உடலில் அதாவது பிண்டத்தில்
தூல உடல் , சூக்கும உடல், காரண உடல்
உடலாக இருப்பது
பிரபஞ்சத்தில் அதாவது அண்டத்தில்
ஆதிநிலை, உயிர் நிலை, உயிர் வெளிப்படும் பொருள்
இயக்கமற்ற நிலை
இயக்க நிலை
இயக்கம் வெளிப்படும் பொருள்
ஆகிய நிலைகளில் இருக்கின்றது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும்
பிண்டத்தில் உள்ளது தான்
அண்டத்திலும் இருக்கிறது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


பிரபஞ்சத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
இயக்கமற்ற நிலை
இயக்கம் நிலை
இயக்கம் வெளிப்படும் பொருள்
அனைத்தும்
நம்முள்ளும் இருக்கிறது
என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு புழுக்கூடுக்குள்
புழு எப்படி இருக்குமோ
அப்படி இருக்கிறது பிரபஞ்சம்
கூட்டுக்குள் புழு இருக்கும் போது
இயக்கமற்ற நிலை
கூட்டுக்குள் இருந்து
புழு வெளியே வரும் போது
இயக்க நிலை.

ஆதி நிலை
இயக்கம் பெறும் போது
சக்தி நிலை
அனைத்தும்
இருக்கும் போது
இயக்கமற்ற நிலை


இருப்பது இருப்பதிலிருந்து
மாற்றம் அடையும் போது
இயக்க நிலை.

ஒன்று மற்றொன்றாக மாறினாலும்
ஒன்றே மற்றொன்றாக இருக்கிறது;
ஒன்றை மற்றொன்றிலிருந்து
வேறுபடுத்திக் காட்ட
வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது;

மாறிக் கொண்டே இருந்தாலும்
மாற்றத்திற்கான அடிப்படைப் பொருள் ஒன்று தான்
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அண்டத்தில் நடந்து கொண்டிருப்பதும்
நடத்திக் கொண்டிருப்பவனும்
நடப்பதற்கு காரணமாக இருப்பவனும்
நடப்பதற்கு மூலமாக இருப்பவனும்
பிண்டத்தை நடத்துகிறான் என்பதையும்
அண்டத்தில் உள்ளதே
பிண்டத்திலும் இருக்கிறது
பிண்டத்தில் இருப்பதே
அண்டத்திலும் இருக்கிறது
என்பதை உணரும் போது
மனம் தெளிவு பெறுகிறான்
என்கிறார் அகஸ்தியர்.


இயேசு கிறிஸ்து - அகஸ்தியர்

பைபிள்,
ஆணடவரிடம் இணையும் போது மட்டுமே
நம்முடைய பாவங்கள் கழியும்
ஆண்டவரிடம் இணையாவிட்டால் நம்முடைய
பாவங்கள் கழியாது என்கிறது.

அவ்வாறே
அகஸ்தியரும்,
இயக்க நிலையில் உள்ளவைகள்
இறைவனிடம் இணைவதின் மூலமே
கர்மவினைகளைக் கழிக்க முடியும்
இறைவனுடன் இணையாவிட்டால்
கர்மவினைகளைக் கழிக்க முடியாது
என்கிறார்


”””போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
               போற்றினேன் பதிவுஎழுபத்துஇரண்டு ந்தான்முற்றே””””