March 12, 2020

பரம்பொருள்-பதிவு-154


               ஜபம்-பதிவு-402
             (பரம்பொருள்-154)

(தன்னுடைய தாயான
உலூபியின் அறைக்குள்
நுழைகிறான் அரவான் ;
அரவானைக் கண்டதும்
உலூபி பேசத்
தொடங்குகிறாள் ; )

உலூபி  :
“ஏன் வந்தாய் ? - நான்
உயிரோடு இருக்கிறேனா
என்பதை பார்த்து விட்டு
போகலாம் என்று வந்தாயா ? “

அரவான்  :
“ஐயோ! அம்மா ஏன்
இவ்வாறு பேசுகிறீர்கள் ? “

உலூபி  :
“வேறு எவ்வாறு பேச
வேண்டும் என்கிறாய் ? “

“என் மேல் உனக்கு
உண்மையான
அன்பு இல்லை  

“என் மேல்
உண்மையான அன்பை
நீ வைத்திருந்தால்
உன்னுடைய பெரிய
தந்தை துரியோதனன்
அவர்கள் உன்னை நேரில்
சந்தித்து அவருக்காக - நீ
களப்பலியாக வேண்டும்
என்று உன்னை வந்து
கேட்ட போது நீ
என்ன சொல்லி
இருக்க வேண்டும்
என்னுடைய அம்மாவிடம்
கலந்து ஆலோசித்து
பிறகு முடிவு
சொல்கிறேன் என்று
அல்லவா நீ சொல்லி
இருக்க வேண்டும் “

“அவ்வாறு நீ சொல்லி
இருந்தால் என் மேல்
நீ உண்மையான அன்பு
வைத்திருக்கிறாய் என்று
எடுத்துக் கொள்ளலாம்”

“ஆனால் நீ அவ்வாறு
சொல்லவில்லை”

“நீ அவ்வாறு
சொல்லாமல் வருகின்ற
அமாவாசை தினத்தன்று
உன்னுடைய பெரிய தந்தை
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக
வாக்கு கொடுத்திருக்கிறாய் “

“இதை எப்படி நீ
என் மேல் அன்பு
வைத்திருக்கிறாய் என்று
எடுத்துக் கொள்ள முடியும்”

“நீ செய்த செயல் - நீ
என் மேல் வைத்த
அன்பையா
காட்டுகிறது இல்லையே “

அரவான்  :
“ஆமாம் அம்மா
ஆமாம் “

“நான் செய்த செயல்
நான் உங்கள் மேல்
வைத்த அன்பைத்
தான் காட்டுகிறது “

“பணக்காரராக இருந்தாலும்
ஏழையாக இருந்தாலும்
யாராக இருந்தாலும்
கையேந்தி யாசகம்
என்று கேட்டு விட்டால்
யாருடைய சம்மதமும்
பெற வேண்டிய
அவசியம் இல்லை ;
நம்மிடம் என்ன
இருக்கிறதோ அதை
யாசகமாக கேட்பவருக்கு
எந்தவிதமான
யோசனையும்
செய்யாமல் உடனே
கொடுத்து விட வேண்டும்
என்று நீங்கள் தானே
எனக்கு சொல்லிக்
கொடுத்து இருக்கிறீர்கள்”

“அதனால் தான் நாட்டை
ஆளும் மன்னனின்
மகனான பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
என்னை நேரில்
சந்தித்து களப்பலியாக
என்னுடைய உயிரை
யாசகமாக கேட்டபோது
எந்த விதமான மறுப்பும்
சொல்லாமல்
பெரிய தந்தை
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக உடனே
வாக்கு கொடுத்தேன் “

“நான்  உங்கள் மேல்
வைத்த அன்பின்
காரணமாகத் தான்
இந்த செயலைச்
செய்திருக்கிறேன் “

“நீங்கள் எனக்கு என்ன
சொல்லிக் கொடுத்தீர்களோ
அதைத் தானே
செய்திருக்கிறேன் “

“நீங்கள் எனக்கு காட்டிய
தர்மத்தின் பாதையில்
தானே நடந்திருக்கிறேன் “

“இதிலிருந்து
தெரியவில்லையா அம்மா
நான் உங்கள் மேல்
எவ்வளவு அன்பு
வைத்திருக்கிறேன் என்று “

“நான் செய்த செயலை
எதற்காக செய்திருக்கிறேன்
என்று நீங்கள் புரிந்து
கொண்டால் நான் உங்கள்
மேல் வைத்த அன்பின்
மதிப்பு தெரியும் அம்மா “

உலூபி  :
“உ,ன்னுடைய செயலை
நியாயப்படுத்துவதற்கு
நீ எத்தகைய
காரணங்களைச்
சொன்னாலும் அதை என்
மனம் ஏற்றுக் கொள்ளும்
நிலையில் இல்லை ;
உன்னை களப்பலியாகக்
கொடுக்காமல் இருப்பதற்கு
ஒரே ஒரு வழி
தான் இருந்தது அந்த
வழியையும் நீ சரியாகப்
பயன்படுத்தவில்லை ; “

“அந்த வழியை நீ
சரியாகப் பயன்படுத்தி
இருந்தால் இத்தகைய
ஒரு நிலை உனக்கு
ஏற்பட்டிருக்காது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 12-03-2020
//////////////////////////////////////////