September 24, 2018

திருக்குறள்-பதிவு-24


                     திருக்குறள்-பதிவு-24

தசாவதாரத்தில்
முதல் மூன்று
நிலைகளும்
பரிணாமத்தில்
விலங்கின் நிலையைக்
குறிக்கிறது அதாவது
மச்ச அவதாரம்,
கூர்ம அவதாரம்,
வராக அவதாரம்,
என்பவை விலங்கின்
நிலையைக் குறிக்கிறது.

ஐந்தாவது நிலை முதல்
பத்தாவது நிலை வரை
பரிணாமத்தில் மனிதனின்
நிலையைக் குறிக்கிறது
அதாவது
வாமன அவதாரம்,
பரசுராம அவதாரம்,
இராமர் அவதாரம்,
பலராமர் அவதாரம்,
கிருஷ்ண அவதாரம்,
கல்கி அவதாரம்,
ஆகியவை மனிதனின்
நிலையைக் குறிக்கிறது

மனிதனால் பரிணாமத்தில்
ஒன்று முதல் மூன்று
நிலைவரை உள்ள
விலங்கு நிலையைக்
கண்டுபிடிக்க முடியும்
மனிதனால் பரிணாமத்தில்
ஐந்தாவது நிலைமுதல்
பத்தாவது நிலை வரை
உள்ள மனிதனின்
நிலையைக் கண்டு
பிடிக்க முடியும் ஆனால்
மனிதனால்
நான்காவது நிலையான
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையைக்
கண்டு பிடிக்க
முடியாது என்று
நம் முன்னோர்கள்
உணர்ந்து இருந்தார்கள்

மனிதனுடைய
வாழ்க்கையை
எடுத்துக் கொண்டால்
இளமை முடிந்து
முதுமை வருகிறது.
இளமை எங்கே
முடிகிறது என்பதையும்,
முதுமை எங்கே
ஆரம்பிக்கிறது என்பதையும்,
மனிதனால் கண்டுபிடிக்க
முடியாது

இளமையும், முதுமையும்
ஒரு புள்ளியில் சந்திக்கிறது
இளமையும், முதுமையும்
சந்திக்கும் அந்த புள்ளியில்
தான் மாற்றம் என்பது
நிகழ்கிறது அதாவது
இளமை என்பது முடிந்து
முதுமை என்பது
ஆரம்பிக்கிறது
இளமை எது என்பதையும்
முதுமை எது என்பதையும்
கண்டுபிடிக்க முடிந்த
மனிதனால் இளமை
எங்கே முடிகிறது
என்பதையும் முதுமை
எங்கே ஆரம்பிக்கிறது
என்பதையும் மனிதனால்
கண்டு பிடிக்க
முடிவதில்லை

பூ காயாக மாறுகிறது
காய் கனியாக மாறுகிறது

பூ எந்த இடத்தில்
முடிகிறது
காய் எந்த இடத்தில்
ஆரம்பிக்கிறது
என்பதை மனிதனால்
கண்டுபிடிக்க முடியாது
ஏனென்றால்
பூவும், காயும்
ஒரு புள்ளியில்
சந்திக்கிறது
அதைப்போலத் தான்
காய் கனியாக
மாறும் நிலையும்
காய் எந்த இடத்தில்
முடிகிறது
கனி எந்த  இடத்தில்
ஆரம்பிக்கிறது
என்பதையும் மனிதனால்
கண்டுபிடிக்க முடியாது
ஏனென்றால்
இரண்டும் ஒரு
புள்ளியில் சந்திக்கிறது

இரண்டு செயல்கள்
ஒரு புள்ளியில் சந்தித்து
மாற்றம் நிகழும்போது
அந்த மாற்றத்தை
விஞ்ஞானத்தால்
கண்டுபிடிக்க முடியாது

உலகில் நடைபெறும்
எந்த ஒரு மாற்றத்தை
எடுத்துக் கொண்டாலும்
ஒன்று எங்கே
முடிகிறது என்பதையும்,
இரண்டு எங்கே
ஆரம்பிக்கிறது
என்பதையும்,
மாற்றம் எந்த
இடத்தில் நிகழ்கிறது
என்பதையும்,
மனிதனால்
கண்டுபிடிக்க முடியாது
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்

மனிதன் தனக்குள்
நடைபெறும்
மாற்றத்தையும்
கண்டுபிடிக்க முடியாது
இயற்கையில் நடைபெறும்
மாற்றத்தையும்
கண்டுபிடிக்க முடியாது
என்பதை உணர்ந்து
வைத்திருந்தனர்
நம் முன்னோர்கள்

மனிதனால் தனக்குள்ளே
ஏற்படக்கூடிய
மாற்றத்தையே
கண்டு பிடிக்க முடியாமல்
இருக்கும் போது,
இயற்கையில் நடைபெறும்
மாற்றத்தையும்
கண்டுபிடிக்க முடியாமல்
இருக்கும் போது,
எப்படி மனிதனால்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையைக்
கண்டுபிடிக்க முடியும்

பிற்காலத்தில் மனிதன்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையைக்
கண்டு பிடிக்க மாட்டான்
மனிதனால் கண்டுபிடிக்க
முடியாது என்று
அன்றே உணர்ந்து
ஒன்று முதல் மூன்று
நிலை வரை உள்ள
விலங்கு நிலையையும்
ஐந்தாவது நிலை முதல்
பத்தாவது நிலை வரை
உள்ள மனிதன்
நிலையையும்
சிற்பங்களாக செதுக்குவதற்கு
முக்கியத்துவம்
கொடுக்காமல்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த சிற்பத்திற்கு
முக்கியத்துவம் கொடுத்து
அதை செதுக்கி
வைத்து விட்டு சென்றனர்
நம் முன்னோர்கள்

--------- இன்னும் வரும்
---------- 24-09-2018
/////////////////////////////////////////////