Showing posts with label Ullabi. Show all posts
Showing posts with label Ullabi. Show all posts

March 04, 2020

பரம்பொருள்-பதிவு-147


             பரம்பொருள்-பதிவு-147

உலூபி  :
“வேண்டும் !”

“அரவான்
களப்பலியாகத்
தான் வேண்டும் ! “

“பாண்டவர்கள்
சார்பாக அரவான்
களப்பலியாகத்
தான் வேண்டும் ! “

“ஒப்புதல் அளிக்கிறேன் ! “

“பாண்டவர்கள் சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல் அளிக்கிறேன் ! “

(என்று கண்ணீர்
விட்டு அழுது
கொண்டே ஒப்புதல்
அளித்தாள் உலூபி ;
நிற்க முடியாமல்
தரையில் படுத்த
உலூபியினுடைய
தலையை தரையில்
அமர்ந்து தன்னுடைய
மடியில் வைத்துத்
தாங்கிக் கொண்டாள்
திரௌபதி ;
உலூபியின் கூந்தலை
வருடிக் கொண்டே
இருந்தாள் திரௌபதி ;
திரௌபதியின் மடியில்
தலை சாய்த்தபடி
அழுத வண்ணம்
இருந்தாள் உலூபி ;)

கிருஷ்ணன் :
“அழு உலூபி அழு
நன்றாக அழு “

“உன்னுடைய கண்களில்
உள்ள தண்ணீர்
தீரும் வரை
நன்றாக அழு “

“நீ வடிக்கும்
கண்ணீரில் தான்
நாளைய உலகம்
பூப்பூக்கப் போகிறது “

“நீ வடிக்கும் கண்ணீரிலும்
அரவான் சிந்தப் போகும்
இரத்தத்தினாலும் தான்
நாளைய உலகம்
விடியப் போகிறது “

“வருங்கால உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
நிம்மதியாக வாழ
வேண்டும் என்பதற்காக ;
நல்லவர்கள்
அமைதியாக வாழ
வேண்டும் என்பதற்காக ;
பெண்கள் மானத்தோடு
வாழ வேண்டும்
என்பதற்காக ;
தர்மம் அழியாமல்
நிலைத்து இருக்க
வேண்டும் என்பதற்காக ;
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு நீ
ஒப்புதல் அளித்த
விஷயம்
மிகப்பெரிய விஷயம் “

“இந்த உலகத்தில்
எந்தத் தாயும் செய்ய
முடியாத மிகப் பெரிய
விஷயத்தைத் தான்
நீ இப்போது
செய்து இருக்கிறாய் “

“இந்த உலகம் அரவானுக்கு
மட்டுமல்ல உனக்கும்
தான் நன்றிக்
கடன் பட்டிருக்கிறது “

“உன்னுடைய மகனுக்காக
நீ மட்டும் தான்
அழுது கொண்டிருக்கிறாய்
என்று நினைத்து விடாதே
நாளைய உலகமே
அரவான் செய்யப்போகும்
தியாகத்தை நினைத்து
கண்ணீர் விடப்போகிறது
என்பதை மட்டும்
மறந்து விடாதே “

“அரவான் செய்யப்போகும்
தியாகத்திற்காக இந்த
உலகம் அரவானைத்
தெய்வமாக வழிபட்டாலும்  ;
அந்தத் தெய்வமகனை
பெற்றெடுத்த
தெய்வத் தாயாக
நீ என்றும் திகழ்ந்து
கொண்டிருப்பாய் ;
என்பது சத்தியம் உலூபி “

“அரவானின் பெயர்
இந்த உலகத்தில்
இருக்கும் வரைக்கும்  ;
அரவானின் தாயான
உன்னுடைய பெயரும்
இந்த உலகத்தில்
இருக்கும் என்பது
நிச்சயிக்கப்பட்ட
உண்மை உலூபி ; “

“காலங்கள் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
கொண்ட கோலங்கள்
மாறினாலும்
இந்த உலகம்
இருக்கும் வரை
இந்த உலகத்தில்
அழியாமல்
இருக்கப்போவது
அரவானின் பெயரும்
உன்னுடைய பெயரும்
மட்டும் தான் உலூபி “

“அழு உன்னுடைய
வேதனைகளின்
பாரம் குறையும் வரை
நன்றாக அழு உலூபி
நன்றாக அழு
நன்றாக அழு
உலூபி
நன்றாக அழு”

 (என்று கிருஷ்ணன்
சைகை காட்ட
அந்த அவையில்
இருந்தவர்களில்
ஒவ்வொருவராக
வெளியேறினர் ;
திரௌபதியின்
மடியில் தலை
சாய்த்து படுத்துக்
கொண்டிருந்த உலூபி
அழுது கொண்டு
இருந்தாள் ;
அவளுடைய அழுகுரல்
மட்டுமே - அந்த
அறையில் எதிரொலித்துக்
கொண்டே இருந்தது)

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 04-03-2020
//////////////////////////////////////////



March 02, 2020

பரம்பொருள்-பதிவு-144


          பரம்பொருள்-பதிவு-144

உலூபி :
(அர்ஜுனன் அருகில்
போய் நின்றாள் உலூபி ;

உலூபி தன்னுடைய
பேச்சைத்
தொடங்குவதற்குள்
அர்ஜுனன் தன்னுடைய
பேச்சைத் தொடங்கினான்)

அர்ஜுனன் :  
“உலூபி! நீ என்னிடம்
என்ன கேட்கப்
போகிறாய் என்பது
எனக்குத் தெரியும் ? “

“பெற்ற மகனை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
பெற்ற தந்தையான
நீங்கள் எப்படி
ஒப்புதல் அளித்தீர்கள்
என்று தானே
கேட்கப் போகிறாய் ? “

“நீ கேட்க நினைக்கும்  
இந்த கேள்விக்கு பதில்
சொல்ல என்னிடம்
வார்த்தைகள் இல்லை  

"நான் எந்த வார்த்தையைப்
பயன்படுத்தினாலும்
அது உன் கேள்விக்கு
பதிலாக இருக்காது"

"உன்னுடைய வேதனைகளைப்
போக்குவதற்கு - நான்
எத்தகைய வார்த்தைகளைப்
பயன்படுத்த வேண்டும்
என்று எனக்குத்
தெரியவில்லை "

"பெற்ற மகனை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு பெற்ற
தந்தையே ஒப்புதல்
அளித்து விட்டார்
என்ற வார்த்தைகளைக்
கேட்ட போது பெற்ற
தாயான உன்னுடைய
மனம் எவ்வளவு
வேதனைப்பட்டிருக்கும்
என்பது எனக்குத் தெரியும் "

"உனக்கு ஆறுதல்
சொல்வதற்கு என்னிடம்
வார்த்தைகள் இல்லாத
காரணத்தினால் தான்
நான் பேச முடியாமல்
வார்த்தைகளின்றி
தவித்துக் கொண்டிருக்கிறேன் "

"அப்படியே முயற்சி
செய்து நான்
வார்த்தைகளைப்
பயன்படுத்தினாலும்-அது
உன் வேதனையைப்
போக்காது என்பது
எனக்குத் தெரியும் "

"நான் எந்த ஒரு
வார்த்தையைப்
பயன்படுத்தினாலும்
அந்த வார்த்தை
நான் செய்த செயலை
நியாயப் படுத்துவதாகத்
தான் இருக்குமே தவிர
எது உண்மை என்பதை
உனக்கு உணர
வைப்பதற்காக நான்
பேசிய வார்த்தைகளாக
இருக்காது "

"பெற்ற தாயின்
கண்ணிலிருந்து வடியும்
கண்ணீரைத் துடைப்பதற்கு
பெற்ற தந்தையான
என்னிடம் எந்த ஒரு
வார்த்தையும் இல்லை "

"நம்முடைய காதல்
ஜோதியில் காதல்
சின்னமாகப் பிறந்தவன்
தான் அரவான் "

"நம்முடைய காதலுக்கு
சின்னமாக இருக்கும்
அரவானையே நான்
களப்பலியாகக் கொடுக்க
ஒப்புதல் அளித்து
இருக்கிறேன் என்றால்
அதற்கு பின்னால்
இருக்கும் உண்மையை
நீ உணர்ந்து
கொள்ள வேண்டாமா?"

"ஒரு தந்தையாக இருந்து
இந்த உலகத்திற்கும்
இந்த உலகத்தில் உள்ள
மக்களுக்கும் நான் என்ன
செய்ய வேண்டுமோ
அதை செய்து
முடித்து விட்டேன் "

"ஆமாம் வருங்கால
உலகம் நிம்மதியாக
இருக்க வேண்டும்
என்பதற்காக
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுக்க ஒப்புதல்
அளித்து விட்டேன் "

"ஒரு தாயாக இருந்து
இந்த உலகத்திற்கும்
இந்த உலகத்தில் உள்ள
மக்களுக்கும் நீ என்ன
செய்ய வேண்டுமோ அதை
செய்வாய் என்று
எதிர்பார்க்கிறேன் "

"ஆமாம் வருங்கால
உலகத்தின்
நன்மைக்காக நீயும்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக்
களப்பலியாகக் கொடுக்க
ஒப்புதல் அளிப்பாய்
என்று நம்புகிறேன் "

"பாண்டவர்கள் சார்பாக
அரவானைக்
களப்பலியாக கொடுப்பதற்கு
உன்னுடைய முடிவே
இறுதியானது என்ற
காரணத்தினால்
தான் கேட்கிறேன் "

"பாண்டவர்கள் சார்பாக
அரவானைக்
களப்பலியாகக் கொடுக்க
ஒப்புதல் அளிப்பாயா "

( கணவனின் பேச்சுக்கு
மறு பேச்சு
பேசாத பத்தினி
தெய்வமான உலூபி ;
கணவனிடம் எந்த
கேள்வியையும்
கேட்காமல்
அமைதியாக
இருந்த உலூபி ;
திரௌபதி அருகில்
சென்றாள் )

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 02-03-2020
//////////////////////////////////////////

February 26, 2020

பரம்பொருள்-பதிவு-140


             பரம்பொருள்-பதிவு-140

சகாதேவன் :
“என்னால்
ஏற்பட்டதல்ல
காலத்தால்
ஏற்பட்டது”

உலூபி :
“தவறை நீங்கள்
செய்து விட்டு
பழியை ஏன்
காலத்தின் மேல்
போடுகிறீர்கள் ? ”

சகாதேவன் :
“இந்த உலகத்தில்
நடைபெறும் எந்த
ஒரு செயலும்
காலத்திற்கு
உட்பட்டது தான் ;
காலத்தை மீறி
எந்த ஒரு செயலும்
நடைபெறாது ; “

“நேற்று நடைபெற்றது ;
இன்று நடைபெற்றுக்
கொண்டிருப்பது ;
நாளை
நடைபெறப்போவது ;
அனைத்தும்
காலத்திற்கு
உட்பட்டது தான் ;  

“காலத்தை மீறி
எதுவும் நடைபெறாது”

உலூபி :
“அரவானின்
பெயரை
சொல்லாமல்
நீங்கள்
மறைத்திருக்கலாமே ?”

சகாதேவன் :
“அரவானின் பெயரை
மறைப்பதால்
ஒரு பயனும்
ஏற்படப்
போவதில்லை”

“நான்
சொல்லாவிட்டாலும்
அரவானின் பெயரை
அனைவரும்
தெரிந்து
கொள்ளத்தான்
போகிறார்கள் ”

உலூபி :
“அப்படி என்றால்
சோதிட
சாஸ்திரத்தைப்
பயன்படுத்தி
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்கப்போவதை
தடுத்திருக்கலாம்
அல்லவா?“

சகாதேவன் :
“சோதிட
சாஸ்திரத்தின்படி
இந்த உலகத்தில்
நடைபெறும் எந்த
ஒரு செயலையும்
தடுத்து நிறுத்த
முடியாது - அந்த
செயலை
மாற்றியமைக்கத்
தான் முடியும் “

“பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
செய்யப்படும்
செயல்கள்
அனைத்தும்
நடக்கவிருக்கும்
செயலை மாற்றி
அமைப்பதற்கு
செய்யப்படும்
முயற்சிகள் தான்”

“அதனால் தான்
நான் ஒப்புதல்
அளித்தேன்”

உலூபி :
“களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அரவானைத் தவிர
வேறு யாரும்
இந்த உலகத்தில்
இல்லையா?

சகாதேவன் :
“இரண்டு பேர்
இருக்கிறார்கள்”

உலூபி :
“கெளரவர்கள் ஏன்
அவர்களுடைய
சம்மதத்தை பெற
முயற்சிக்கவில்லை?”

சகாதேவன் :
“அவர்களை
நெருங்க
முடியாது
என்பதால்”

உலூபி :
“அப்படியென்றால்
பாண்டவர்கள் ஏன்
அவர்களுடைய
சம்மதத்தைப் பெற
முயற்சிக்கவில்லை?”

சகாதேவன் :
“அவர்கள்
நெருக்கமானவர்கள்
என்பதால்”

உலூபி :
“யார் அவர்கள்”

சகாதேவன் :
“சில கேள்விக்குரிய
விடையை
தெரிந்து கொள்ள
முயற்சி
செய்யக் கூடாது” .

“சில விஷயங்களை
தெரிந்து
கொள்ளாமல்
இருப்பதே நல்லது”  .

“நீங்கள் கேட்ட
கேள்விக்கு நான்
பதிலை சொன்னால்
உங்களுடைய
காதுகளை நீங்கள்
மூடிக் கொள்வீர்கள்”.

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-02-2020
//////////////////////////////////////////