September 25, 2019

பரம்பொருள்-பதிவு-66


            பரம்பொருள்-பதிவு-66

"கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
கடவுள் சக்தியானது
சுற்றிக் கொண்டே
இருப்பதால்
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
சக்தி வட்டமானது
உருவாக்கப்படுகிறது "

"கோயிலுக்குள்
உருவாக்கப்படும் இந்த
சக்தி வட்டமானது
கோயிலுக்கு வரும்
பக்தர்களுடைய
தேவையை
பூர்த்தி செய்யும்
வேலையை
செய்வதோடு
மட்டுமல்லாமல் ;
வெளியில் உள்ள
எந்த ஒரு எதிர்ப்பு
சக்தியையும் கோயிலுக்கு
உள்ளே விடாமல்
தடுத்து நிறுத்தும்
மிகப்பெரிய
வேலையையும் செய்து
கொண்டிருக்கின்றன ;"

சடவாயு :

"குழந்தையை
கருப்பையிலிருந்து
வெளியே தள்ளும்
வாயுவிற்கு சடவாயு
என்று பெயர்"

"சடவாயு ஒவ்வொரு
மனிதனுக்கும் மாறுபட்ட
தன்மையைக்
கொண்டதாக இருக்கும் ;
மனிதன்
போகும் இடங்கள் ;
தொட்ட இடங்கள் ;
ஆகிய அனைத்திலும்
சடவாயுவானது உண்டு ;
இறக்கும் வரை இந்த
சடவாயுவானது
கூடவே இருக்கும் ;
பிணம் அழுகிய
பின்பு தான் இந்த
சடவாயுவானது
வெளியேறும் ;"

"மனிதர்களால்
சடவாயுவை
உணர்ந்து கொள்ள
முடியாது; - ஆனால்
நாய், நரி, ஓநாய்,
ஆகியவற்றால்
சடவாயுவை உணர்ந்து
கொள்ள முடியும் ;
நாய் மோப்பம்
பிடிப்பது
மனிதர்களுடைய
சடவாயுவைத் தான் ;"

"மனிதனுடைய
நகம், முடி, எச்சில்,
வியர்வை
ஆகியவற்றில்
மனிதனுடைய
சடவாயு இருக்கும் ;
ஒருவரிடம் இருக்கும்
சடவாயு நிரம்பியுள்ள
பொருட்களைப்
பயன்படுத்தித் தான்
ஏவல், பில்லிசூன்யம்
ஆகியவை ஒருவருக்கு
செய்யப்படுகிறது ;
நாம் யாருடைய
சடவாயுவைப்
பயன்படுத்தி
ஒருவரை பாதிக்கும்
வகையில் செயலைச்
செய்தோமோ?
அந்த சடவாயுவை
உடைய மனிதனை
மட்டுமே செய்யப்பட்ட
கெடுதலானது
பாதிப்பை உண்டாக்கும் ;"

"நாய் மூத்திரம்
பெய்து குறிப்பிட்ட
தூரத்தைக் கொண்ட
ஒரு எல்லையை
உருவாக்கும் ;
அந்த எல்லைக்குள்
யாராவது வந்தால்
சடவாயுவை
மோப்பம் பிடித்து
ஓடிப்போய் குலைக்கும் ;
அதாவது தன்னுடைய
எல்லைக்கு உட்பட்ட
சக்திக்குள்
எந்தவிதமான
எதிர்ப்பு சக்தியையும்
நாய் உள்ளே விடாது ;"

"அதைப்போலத்தான்
கோயிலுக்குள்
உருவாக்கப்படும்
சக்தி வட்டமானது
வெளியில் உள்ள
எந்த ஒரு எதிர்ப்பு
சக்தியையும் ;
கோயிலுக்கு உள்ளே
விடாமல் தடுத்து
நிறுத்துகிறது ;'"

"உலகம் முழுவதும்
உள்ள இந்துமதக்
கோயில்களில்
நடைபெறும்
மூன்று முக்கியமான
வேலைகளில்
கோயிலுக்குள்
சக்தியை
உற்பத்தி செய்தல்
என்ற வேலை
எப்படி நடைபெறுகிறது
என்பதையும் ;

"கோயிலுக்குள்
சக்தியை
குவித்து வைத்தல்
என்ற வேலை
எப்படி நடைபெறுகிறது
என்பதையும் ;
தெரிந்து கொண்டோம்; "

"கோயிலுக்குள்
சக்தியை
பரிமாற்றம் செய்தல்
என்ற வேலை
எப்படி நடைபெறுகிறது
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டாமா?"

"அதற்கு முன்…………………?"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 25-09-2019
//////////////////////////////////////////////////////////