June 30, 2020

அறிய வேண்டியவை-பதிவு-75


              ஜபம்-பதிவு-567
         (அறிய வேண்டியவை-75)

துரியோதனன் :
“ஏன் அவ்வாறு
சொல்கிறாய்
எனது
அருமை கர்ணா”

கர்ணன் :
“ஏன்
அர்ஜுனனைக்
கொல்லவில்லை
ஏன்
அர்ஜுனனைக்
கொல்லவில்லை
என்று நீ
பலமுறை
கேட்கும்
போதே
தெரியவில்லையா ?

“நீ என்னை
சந்தேகப்படுகிறாய்
என்று
என்னுடைய
நட்பின் மீது
களங்கம்
கற்பிக்க
முயற்சி
செய்கிறாய்
என்று””

“சொல்ல
முடியாத
துக்கங்களையும் ;
தாங்க
முடியாத
வேதனைகளையும் ;
அள்ளித்
தந்திருக்கும்
வாக்குறுதிகளையும் ;
பெற்று வந்த
சாபங்களையும் ;
தாங்கிக்
கொண்டு
நான் எப்படி
போரிட்டுக்
கொண்டிருக்கிறேன்
என்று
வார்த்தைகளால்
சொன்னால்
உனக்கு
புரியாது
என் அருமை
நண்பா”

“நான் ஒன்றை
மட்டும்
உனக்கு
சொல்லிக்
கொள்ள
ஆசைப்படுகிறேன்”

“நாளை எனக்கும்
அர்ஜுனக்கும்
நடக்கும்
போரில்
அர்ஜுனன்
இறந்து
நான் உயிரோடு
இருந்தாலும்
நான் உன் மேல்
வைத்து
அன்பு
எவ்வளவு
உண்மையானது
என்ற
உண்மையும்
கர்ணனாகிய
நான்
இறந்து அர்ஜுனன்
உயிரோடு
இருந்தாலும்
நான் உன் மேல்
வைத்த அன்பு
எவ்வளவு
உண்மையானது
என்பதையும் நீ
தெரிந்து
கொள்வாய்”

“எங்கள்
இருவரில்
யார்
இறந்தாலும்
நான் உன்
மேல்
கொண்ட நட்பு
எவ்வளவு
உண்மையானது
என்பது
உனக்குப் புரியும்”

“நாளை
சூரிய அஸ்தமனம்
வரை காத்திரு
கர்ணன் யார்
என்பதை
புரிந்து
கொள்வாய்
நட்பு என்றால்
என்ன
என்பதைப்
புரிந்து கொள்வாய்
நட்பு என்றால்
கர்ணன்
என்பதைப்
புரிந்து
கொள்வாய்”

(துரியோதனன்
விடை
பெற்றுச்
செல்கிறான்
கர்ணன்
துரியோதனன்
செல்வதையே
பார்த்துக்
கொண்டிருக்கிறான்)

அறிய
வேண்டியவை :
“பிறந்த
குலத்தை வைத்து
ஒருவருடைய
திறமையை
மதிப்பீடு
செய்யக்
கூடாது
என்பதையும்;
திறமை
என்பது
ஒருவருக்கு
பிறந்த
குலத்தால்
ஏற்படுவது
இல்லை
என்பதையும்
இந்தக்
கதையிலிருந்து
அறிய
வேண்டிய
உண்மை ஆகும் “


----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-74


                  ஜபம்-பதிவு-566
           (அறிய வேண்டியவை-74)

துரியோதனன் :
“அப்படி என்றால் நீ
அதர்மச் செயலை
புரியவே இல்லையா”

“பாண்டவர்களை
வாரணாவதத்தில்
அவர்கள் தங்கி
இருந்த மாளிகையை
நெருப்புக்கு
இரையாக்கியபோது
அந்த செயலுக்கு நீ
துணையாகத்தானே
இருந்தாய்
இது அதர்மம் இல்லையா?”

கர்ணன் :
“அப்போது நீ
எனக்குத் தலைவனாக
இருந்தாய் நான்
உன் கட்டளைகளை
கேட்டு நடக்கும்
அடிமையாக இருந்தேன்”

துரியோதனன் :
“கௌரவர்கள் அவையில்
திரௌபதியை துகில்
உரித்த போது நடந்த
செயலை தடுக்காமல்
நீ எங்களுடன்
சேர்ந்து தானே இருந்தாய்
எங்களுடன் சேர்ந்துதானே
நீ திரௌபதியை
இழிவு தரும்
வார்த்தைகளைக்
கொண்டு பேசினாய்
அது அதர்மம் இல்லையா?”

கர்ணன் :
“அப்போதும் நீ
எனக்கு தலைவனாக
இருந்தாய் நான்
உனக்கு அடிமையாக
இருந்தேன்”

துரியோதனன் :
“கௌரவப் படையைச்
சேர்ந்தவர்கள் அனைவரும்
ஒன்றாகச் சேர்ந்து
அபிமன்யுவைக்
கொன்றபோது நீயும்
தான் உடனிருந்து
அபிமன்யுவைக்
கொல்ல உதவி
புரிந்தாய்
அது அதர்மம் இல்லையா?”

கர்ணன் :
“அப்போது தலைவனாக
இருக்கும் உன்னுடைய
கட்டளையை ஏற்று
நடக்கக் கூடிய
சேனாதிபதியாக
துரோணர் இருந்தாரே
அதைப்போல
தலைவனாக இருந்த
உனக்கு நான்
அடிமையாக இருந்தேன்”

“நீ எப்போது எல்லாம்
தலைவனாக இருந்து
எனக்கு கட்டளை
பிறப்பித்தாயோ
அப்போது எல்லாம்
நான் உனக்கு
அடிமையாக இருந்து
நீ சொன்னவைகளைச்
செய்தேன்
உன்னுடைய
சொல்லுக்குக்
கட்டுப்பட்டேன்
உனக்கு அடிமையாக
இருந்தேன்”

“நீ கட்டளை இடும்
தலைவன் இடத்தில்
இருந்தாய் நான் அதை
ஏற்று நடத்தும்
அடிமையாக  இருந்தேன்”
 
“நீ தலைவனாக
இருந்து
கட்டளை இடும்
இடத்தில்
இருந்த போது
எல்லாம்
உன்னுடைய
அதர்மச் செயலை
என்னால்
தடுக்க முடியவில்லை
நீ நண்பனாக
என்னுடன் இருக்கும்
போது நீ செய்த
அதர்மச் செயலை
தடுக்க முயற்சி
செய்தேன்
முடியவில்லை “

“நண்பா! நீ
எத்தகைய செயலைச்
செய்தாலும் உன்னை
காப்பாற்றுவதற்கு இந்த
உலகத்தில் ஆயிரம்
பேர் வருவார்கள்
ஏனென்றால் நீ
உயர்ந்த குலத்தில்
பிறந்தவன் என்பதால்
என்னைக்
காப்பாற்றுவதற்கு
யாரும் வர
மாட்டார்கள்
நான் தாழ்ந்த
குலத்தில்
பிறந்தவன் என்று
இந்த உலகம்
என்னை நம்பிக்
கொண்டிருப்பதால்”

“அதனால் தான்
துரியோதனா நான்
அர்ஜுனன் மேல்
அம்பு செலுத்தவில்லை”

துரியோதனன் :
“துரோணர் உன்னை
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் அர்ஜுனனுடன்
மோதக் கூடாது
என்று தடுத்தாரே
அப்போது
உன்னுடைய
மானத்தைக்
காப்பாற்றியது நான்
என்பதை
மறந்து விட்டாயா?”

கர்ணன் :
“நான் மறக்கவில்லை
நீ செய்த உதவியை
நான் மறக்கவில்லை
நீ செய்த உதவியை
நான் என்றும்
மறக்க மாட்டேன்
அன்று நீ செய்த
அந்த ஒரு
செயலுக்காகத் தான்
நான் இன்று வரை
நான் உன் மேல்
உண்மையாக நட்பு
கொண்டிருக்கிறேன் நண்பா”

“உனக்காக உயிரையும்
கொடுக்கக் காத்துக்
கொண்டிருக்கிறேன்
என்னுடைய உயிர்
உனக்குத் தான் என்று
அன்று நான் சொன்ன
வார்த்தைகள்
சத்தியமான வார்த்தைகள்
இன்றும் சொல்கிறேன்
என்னுடைய
அருமை நண்பா
என்னுடைய உயிர்
உனக்குத் தான்”

“உன் மேல் நான்
கொண்ட நட்பு அன்று
முதல் இன்று வரை
மாறவேயில்லை
நீ தான் மாறி
விட்டாய் நண்பா”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-73


               ஜபம்-பதிவு-565
         (அறிய வேண்டியவை-73)

துரியோதனன் :
“இந்த குருஷேத்திரப்
போரில் தர்மங்கள்
எவ்வளவோ
மீறப்பட்டு இருக்கிறது
அதர்மச் செயல்
செயல்
படுத்தப்பட்டிருக்கிறது
நீயும் அதர்மத்தை
பின்பற்றி அர்ஜுனனைக்
கொன்றிருக்கலாமே
ஏன் கொல்லவில்லை
என்ன காரணம்”

கர்ணன் :
“ஏனென்றால் இப்போது
நான் கௌரவர்களின்
சேனாதிபதியாக
இருப்பதால் தான்”

துரியோதனன் :
“துரோணர்
கௌரவர்களின்
சேனாதிபதியாக
இருக்கும் போது தான்
போர் விதிமுறைகள்
மீறப்பட்டன
ஒருவருடன் ஒருவர்
தான் நேருக்கு
நேர் நின்று
போர் புரிய வேண்டும்
என்ற போர்
விதிமுறைகளை மீறி
பலபேர் ஒன்றாகச் சேர்ந்து
அபிமன்யுவைக்
கொல்லவில்லையா?”

“இவைகள் அனைத்தும்
துரோணர் கௌரவர்களின்
சேனாதிபதியாக
இருக்கும் போது
தானே நடந்தது
அங்கே தர்மம்
எங்கே
கடைபிடிக்கப்பட்டது
அதர்மத்தின் வழி
நின்று தானே
அபின்யு
கொல்லப்பட்டான்”

“இப்போது
கௌரவர்களின்
சேனாதிபதியாக
இருக்கும் நீ
அதே அதர்மத்தை
கடைபிடித்து
அர்ஜுனனைக் கொன்று
இருக்கலாமே ஏன்
செய்யவில்லை”

கர்ணன் :
“ஏனென்றால் நான்
துரோணர்
இல்லை என்ற
காரணத்தினால் தான்”

“துரோணர்
சேனாதிபதியாக
இருக்கும் போது போர்
விதிமுறைகள்
மீறப்பட்டு
பலபேர் ஒன்றாகச்
சேர்ந்து
அபிமன்யுவைக்
கொன்றார்கள்
பல பேரிடம்
தன்னந்தனியாக
போரிட்டு அபிமன்யு
வீரமரணம்
அடைந்தான் என்று
இந்த உலகம்
அபிமன்யுவின்
வீரத்தைப் புகழ்ந்தது”

“ஆனால் இந்த
உலகத்தில் உள்ள
யாரும் துரோணர்
சேனாதிபதியாக
இருக்கும் போது
போர் விதிமுறைகள்
மீறப்பட்டன
துரோணர் தர்மத்தை
கடைபிடிக்கவில்லை
துரோணர் அதர்மத்தை
பின்பற்றினார்
துரோணர் செய்த
செயல் தவறு என்று
யாரும் சொல்லவில்லை”

“இதுவே நான்
சேனாதிபதியாக
இருக்கும் போது
இத்தகைய ஒரு நிகழ்வு
நடைபெற்று இருந்தால்
கர்ணன் கௌரவர்களின்
சேனாதிபதியாக
இருந்ததால் தான்
இத்தகைய ஒரு
அதர்மச் செயல்
நடந்தது என்றும்
கர்ணன் கௌரவர்களின்
சேனாதிபதியாக
இல்லாமல்
இருந்திருந்தால்
இத்தகைய ஒரு
அதர்மச் செயலே
நடந்து இருக்காது
என்றும்
என்னைத் தான்
சொல்வார்களே தவிர
அபிமன்யுவின்
வீரத்தைப் பற்றி யாரும்
பேச மாட்டார்கள்”

“துரோணர் உயர்ந்த
குலத்தில் பிறந்தார்
என்ற காரணத்தினால்
துரோணர் செய்த
தவறுகள் அனைத்தும்
மறைக்கப்பட்டு
அபிமன்யுவின் வீரத்தை
எடுத்துக் கொண்டு
இந்த உலகம்
போற்றுகிறது “

“கர்ணனாகிய நான்
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் என்று
இந்த உலகம்
என்னை நினைத்துக்
கொண்டிருக்கின்ற
காரணத்தினால்
அபிமன்யுவின் வீரம்
அனைத்தும்
மறைக்கப்பட்டு
கர்ணனாகிய
என்னுடைய தவறை
எடுத்துக் கொண்டு
இந்த உலகம்
என்னை வசைபாடும்”

“உயர்ந்த குலத்தில்
பிறந்தவர்கள் பெரிய
தவறுகள் செய்தாலும்
அது சிறியதாக
எடுத்துக் கொள்ளப்படும்
அதுவே தாழ்ந்த குலத்தில்
பிறந்தவனாக இருந்தால்
அவன் சிறிய தவறு
செய்தாலும் மிகப்பெரிய
தவறாக எடுத்துக்
கொள்ளப்படும்”

“உயர்ந்த குலத்தில்
பிறந்ததால் துரோணர்
செய்த தவறுகள்
மறைக்கப்பட்டது
தாழ்ந்த குலத்தில்
பிறந்ததால் என்னுடைய
தவறுகள் பெரியதாக
இந்த உலகம்
எடுத்துக் கொள்ளும்
என்ற காரணத்தினால்
தான் நான்
பாணங்களை
அர்ஜுனன் மேல்
செலுத்தவில்லை”

“தர்மத்தின்
வழி நடந்தேன்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////