June 30, 2020

அறிய வேண்டியவை-பதிவு-75


              ஜபம்-பதிவு-567
         (அறிய வேண்டியவை-75)

துரியோதனன் :
“ஏன் அவ்வாறு
சொல்கிறாய்
எனது
அருமை கர்ணா”

கர்ணன் :
“ஏன்
அர்ஜுனனைக்
கொல்லவில்லை
ஏன்
அர்ஜுனனைக்
கொல்லவில்லை
என்று நீ
பலமுறை
கேட்கும்
போதே
தெரியவில்லையா ?

“நீ என்னை
சந்தேகப்படுகிறாய்
என்று
என்னுடைய
நட்பின் மீது
களங்கம்
கற்பிக்க
முயற்சி
செய்கிறாய்
என்று””

“சொல்ல
முடியாத
துக்கங்களையும் ;
தாங்க
முடியாத
வேதனைகளையும் ;
அள்ளித்
தந்திருக்கும்
வாக்குறுதிகளையும் ;
பெற்று வந்த
சாபங்களையும் ;
தாங்கிக்
கொண்டு
நான் எப்படி
போரிட்டுக்
கொண்டிருக்கிறேன்
என்று
வார்த்தைகளால்
சொன்னால்
உனக்கு
புரியாது
என் அருமை
நண்பா”

“நான் ஒன்றை
மட்டும்
உனக்கு
சொல்லிக்
கொள்ள
ஆசைப்படுகிறேன்”

“நாளை எனக்கும்
அர்ஜுனக்கும்
நடக்கும்
போரில்
அர்ஜுனன்
இறந்து
நான் உயிரோடு
இருந்தாலும்
நான் உன் மேல்
வைத்து
அன்பு
எவ்வளவு
உண்மையானது
என்ற
உண்மையும்
கர்ணனாகிய
நான்
இறந்து அர்ஜுனன்
உயிரோடு
இருந்தாலும்
நான் உன் மேல்
வைத்த அன்பு
எவ்வளவு
உண்மையானது
என்பதையும் நீ
தெரிந்து
கொள்வாய்”

“எங்கள்
இருவரில்
யார்
இறந்தாலும்
நான் உன்
மேல்
கொண்ட நட்பு
எவ்வளவு
உண்மையானது
என்பது
உனக்குப் புரியும்”

“நாளை
சூரிய அஸ்தமனம்
வரை காத்திரு
கர்ணன் யார்
என்பதை
புரிந்து
கொள்வாய்
நட்பு என்றால்
என்ன
என்பதைப்
புரிந்து கொள்வாய்
நட்பு என்றால்
கர்ணன்
என்பதைப்
புரிந்து
கொள்வாய்”

(துரியோதனன்
விடை
பெற்றுச்
செல்கிறான்
கர்ணன்
துரியோதனன்
செல்வதையே
பார்த்துக்
கொண்டிருக்கிறான்)

அறிய
வேண்டியவை :
“பிறந்த
குலத்தை வைத்து
ஒருவருடைய
திறமையை
மதிப்பீடு
செய்யக்
கூடாது
என்பதையும்;
திறமை
என்பது
ஒருவருக்கு
பிறந்த
குலத்தால்
ஏற்படுவது
இல்லை
என்பதையும்
இந்தக்
கதையிலிருந்து
அறிய
வேண்டிய
உண்மை ஆகும் “


----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment