August 08, 2019

பரம்பொருள்-பதிவு-52


                 பரம்பொருள்-பதிவு-52

" இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்புவதற்காக
திருஞான சம்பந்தர்
தாம் வாழ்ந்த காலத்தில்
மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் குடி
கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
மாதந்தோறும்
மக்களால் சிறப்பாகக்
கொண்டாடப்படும்
பல்வேறு விதமான
விழாக்களை
மாதம் வாரியாக
புரட்டாசி; ஐப்பசி;
கார்த்திகை; மார்கழி;
தை; மாசி; பங்குனி;
சித்திரை; வைகாசி;
ஆனி; ஆடி; ஆவணி;
என்று வரிசைப்படுத்தி
திருஞான சம்பந்தர்
பத்து பதிகங்கள்
பாடினார் "

"திருஞான சம்பந்தர் முதல்
பதிகத்தை பாடி முடித்தபின்
பூம்பாவை உருவம் பெற்றாள் ;
எட்டாவது பாடல் பாடியதும்
பன்னிரண்டு ஆண்டுகள்
வளர்ந்த அளவினை எய்தினாள் ;
கும்பாபிஷேகத்தை காணாமல்
போனாயோ? பூம்பாவை என்று
திருஞான சம்பந்தர் பத்தாவது
பதிகத்தை பாடி முடித்தபின்
பூம்பாவை உயிர்
பெற்று வந்தாள்;"

" 7 வயது பெண்ணாக
இறந்த பூம்பாவை
12 வயது நிரம்பிய அழகு
பதுமையாக பூம்பாவை
உயிர் பெற்று வந்தாள் ; "

" உயிரற்று எலும்பும்,
சாம்பலுமாக இருந்த பூம்பாவை
உயிர்ப்பெற்று எலும்பும்,
சதையும் கொண்ட
பெண்ணாக பூம்பாவை
உயிர் பெற்று வந்தாள் ;"

" ஊர்வசி ; ரம்பை ;மேனகை ;
திலோத்தம்மை ;போன்ற
தேவ மாதர்களே கண்டு
பொறாமைப்படும் படியான
அழகுடன் அழகு
தேவதையாக பூம்பாவை
உயிர் பெற்று வந்தாள் ;"

" பூம்பாவையைக் கண்ட
பிரம்மா தான் படைத்த
படைப்புகளிலேயே அற்புதமான
படைப்பு பூம்பாவையின் படைப்பு
என்று பூம்பாவையைப் பார்த்து
பிரம்மாவே ஆச்சரியப்படும்
வகையில் பூம்பாவை உயிர்
பெற்று வந்தாள் ;"

"திருஞான சம்பந்தர் இறந்த
பூம்பாவையை உயிரோடு
எழுப்பிய அதிசய காட்சியைக்
கண்டு அனைவரும் பிரமித்து
நின்றார்கள் ; இறைவனின்
அருளாசியுடன்
திருஞான சம்பந்தர்
நிகழ்த்திய இந்த அற்புத
செயலைக் கண்டு தேவர்கள்
பூமாரி பொழிந்தார்கள் ;
ஹர ஹர மகாதேவா என்று
மக்கள் உணர்ச்சி மேலிட்டால்
எழுப்பிய ஒலி அந்த
இடத்தையே அதிரச் செய்தது ;

" இறந்தவர்களை
எழுப்பும் சக்தி
சிவபெருமானை வழிபடும்
சைவமதத்திற்கு கிடையாது ;
சிவபெருமானை வழிபடும்
சைவமதத்தை சார்ந்தவர்கள்
இறந்தவர்களை எழுப்பியதாக
சரித்திரம் கிடையாது ;
என்று காழ்ப்புணர்ச்சியின்
காரணமாக பேசிய பிற
மதத்தைச் சார்ந்தவர்கள் ; "

"இறந்தவர்களை எழுப்பும்
சக்தி எங்கள் மதத்திற்கே
மட்டுமே உண்டு !
இறந்தவர்களை எழுப்பும்
சக்தி படைத்தவர்கள்
எங்கள் மதத்தில்
மட்டுமே உள்ளனர் ;
இறந்தவர்களை எழுப்பும்
சக்தி படைத்தவர்கள்
வேறு எந்த மதத்திலும்
கிடையாது என்று
வீண் பெருமை பேசிக்
கொண்டு திரிந்த பிற
மதத்தைச் சேர்ந்தவர்கள் ; "

"நாங்கள் பின்பற்றும்
மதமே உண்மையான மதம் ;
நாங்கள் வணங்கும் தெய்வமே
உண்மையான தெய்வம் ;
நாங்கள் வணங்கும்
தெய்வத்தைத் தவிர உலகத்தில்
வேறு எந்த ஒரு தெய்வமும்
உண்மையான தெய்வம் இல்லை ;
என்று உண்மை அறியாமல்
பேசித் திரிந்து கொண்டிருந்த
பிற மதத்தைச் சார்ந்தவர்கள்  ;"

" எங்களுடைய தெய்வமே
மக்களுடைய பாவங்களை
ஏற்றுக் கொண்டு மக்களை
துன்பங்களிலிருந்து விடுதலை
செய்து நன்மைகளை வழங்க
வந்த தெய்வம் ;
எங்களுடைய தெய்வம்
மட்டுமே மக்களைக்
காப்பாற்றக்கூடிய ஒரே
தெய்வம் என்று பிழைப்புக்காக
பொய் பேசிக் கொண்டு
போலி நாடகம் நடத்திக்
கொண்டிருந்த பிற
மதத்தைச் சார்ந்தவர்கள் ;"

" திருஞான சம்பந்தர்
பூம்பாவையை உயிரோடு
எழுப்பிய காட்சியைக் கண்டு
மிரண்டு போய் என்ன
செய்வது என்று தெரியாமல்
ஓடிபோய் ஒளிந்து கொண்டனர்
பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் ; “

" 7 வயதுடைய
பெண்ணாக இறந்து ;
12 வயதுடைய பெண்ணாக
உயிர்ப்பெற்று ; அழகு
பதுமையாக நடந்து
வந்த பூம்பாவை
16 வயது நிரம்பிய
திருஞானசம்பந்தரின்
பொற்பாதங்களில் விழுந்து
வணங்கினாள் ;

"சிவநேசர் தனது மனைவியுடன்
திருஞான சம்பந்தரின் கால்களில்
வீழ்ந்து வணங்கினார்"

" அங்குக் கூடியிருந்த மக்கள்
அனைவரும் இறைவனின்
திருவருளை நினைத்து மண்மீது
வீழ்ந்து திருஞான சம்பந்தரை
வணங்கினார்கள் "

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 08-08-2019
//////////////////////////////////////////////////////////