January 23, 2020

பரம்பொருள்-பதிவு-117


            பரம்பொருள்-பதிவு-117

தர்மர் :
“அர்ஜுனா !
கிருஷ்ணன் தான்
எங்களை
வார்த்தைகளால்
கொன்றான் - என்றால்
நீயும் ஏன் எங்களை
வார்த்தைகளால்
கொல்கிறாய் ? “

“உன்னைப்பற்றி
நாங்கள் சொல்லி - நீ
தெரிந்து கொள்ள
வேண்டிய
அவசியமே இல்லை ;  
உன்னைப் பற்றி
உனக்கே
நன்றாகத் தெரியும் ;
உன்னைப் பற்றி
உனக்கு மட்டுமல்ல
இந்த உலகத்திற்கே
நன்றாகத் தெரியும் ; “

“குருஷேத்திரப் போரின்
மையப்புள்ளியே நீ தான் ;
குருஷேத்திரப் போரே
உன்னை மையமாக
வைத்துத்தான்
இயங்கப் போகிறது ; - நீ
இல்லாமல்
பாண்டவப் படைகள்
குருஷேத்திரப் போரில்
கலந்து கொள்வதால்
எந்தவிதமான நன்மையும்
ஏற்படப் போவதில்லை ;”

“கௌரவப் படைகளை
தடுத்து நிறுத்தி
போர் செய்யும்
தகுதி உனக்கு
மட்டுமே இருக்கிறது  ;”

“கெளரவப் படையில்
உள்ள பீஷ்மர்
துரோணாச்சாரியார்
மற்றும் அந்த அணிக்காக
போர் செய்யும்
சிறந்த வீரர்களையும்
எதிர்க்கும் சக்தி உனக்கு
மட்டுமே இருக்கிறது ;”

“உன்னையோ அல்லது
கிருஷ்ணனையோ
களப்பலி கொடுத்து
பெறப்படும் வெற்றியை
வைத்துத் தான்  
நாங்கள் நாட்டை ஆள
வேண்டும் என்றால்
அப்படி ஒரு நாடு
எங்களுக்குத்
தேவையேயில்லை  ;
நாங்கள் காட்டிற்கே
சென்று விடுகிறோம் ; “

கிருஷ்ணன் :
“நீங்கள் ஏன் காட்டிற்கு
செல்ல வேண்டும் ;
எந்தவித பாவத்திற்கும்
அஞ்சாமல்
அக்கிரமத்தையும் ;
அநியாயத்தையும் ;
அதர்மத்தையும் ;
தொடர்ந்து தங்கள்
வாழ்க்கையில் செய்து
கொண்டிருப்பவர்கள்
நாட்டில் வாழ்ந்து
கொண்டிருக்கும் போது
தர்மத்தை கடைபிடித்து
வாழும் நீங்கள்
ஏன் காட்டிற்கு
செல்ல வேண்டும் ?”

“அதர்மத்திற்கு பயந்து
தர்மத்தை கடைபிடிக்கும்
நீங்கள் காட்டிற்கு
சென்று விட்டால்
உங்களைப் பார்த்து
இந்த உலகத்தில்
தர்மத்தை கடைபிடித்து
வாழும் மற்றவர்களும்
தர்மத்தை கடைபிடித்து
வாழவே அஞ்சுவார்கள் ;”

“அதர்மத்திற்கு பயந்து
தர்மத்தை கடைபிடிக்கும்
நீங்கள் காட்டிற்கு
சென்று விட்டால்
வருங்காலத்தில் - இந்த
உலகத்தில் தர்மத்தை
கடைபிடிப்பவர்கள்
யாருமே இருக்க
மாட்டார்கள் ;”

“அதர்மத்திற்கு பயந்து
தர்மத்தை கடைபிடிக்கும்
நீங்கள் காட்டிற்கு
சென்று விட்டால்
வருங்காலம்
உங்களைப் பார்த்து
குறை சொல்லாதா?”

பீமன் :
“ஆனால் காலம்
எங்களுக்கு சாதகமாக
இல்லையே கிருஷ்ணா? “

“எங்களுக்கு
எதிர்ப்பாகத் தானே
செயல்பட்டுக்
கொண்டு இருக்கிறது”

கிருஷ்ணன்  :
“காலம் எப்போதும்
எந்த காலத்திலும்
யாருக்கும்
எதிராக இருந்ததில்லை ;”

“காலத்தை தனக்கு
சாதகமாக பயன்படுத்திக்
கொள்ளத் தெரிந்தவர்கள்
மட்டுமே - இந்த
உலகத்தில் வெற்றி
பெற்றிருக்கிறார்கள் ;”

“காலத்தை
தனக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொள்ளத்
தெரியாதவர்கள் - தான்
இந்த உலகத்தில்
தோல்வி அடைந்து
இருக்கிறார்கள் ; “

“அதர்மத்தை நிலை
நாட்டுவதற்கு
கௌரவர்கள்
அரவானை வைத்து
மனித விளையாட்டை
விளையாடி விட்டார்கள் ;”

“தர்மத்தை நிலை
நாட்டுவதற்கு
காலத்தை நமக்கு
சாதகமாக பயன்படுத்திக்
கொள்வதற்காக
காலத்தை வைத்து - இனி
நாம் விளையாட
வேண்டியது தான் ;”

பீமன்  :
“என்னது காலத்தை
வைத்து விளையாட்டா?”

கிருஷ்ணன்  :
“ஆமாம் பீமா ஆமாம் “

“காலத்தை வைத்து  
நான் எப்படி
விளையாடப் போகிறேன்
என்பதை மட்டும்  
பொறுத்திருந்து பார் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------23-01-2020
//////////////////////////////////////////