June 23, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-30



              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-30

இயேசுவே
விபச்சாரத்தில் ஈடுபட்ட
இந்த பெண்
கையும் களவுமாக
பிடிபட்டாள் என்று
மக்கள் ஒரு பெண்ணை
பிடித்து வந்தனர்.

இப்படிப்பட்டவர்களை
கல்லால் எறிந்து
கொல்ல வேண்டும்
என்பது மோசஸ்
நமக்கு கொடுத்த சட்டம்
நீர் இது பற்றி
என்ன சொல்ல வருகிறீர்
என்றார்கள் மக்கள்

மோசஸ் கூறியது
நியாயமல்ல
கல்லால் அடித்துக்
கொல்லக் கூடாது என்று
இயேசு கிறிஸ்து
சொன்னார் என்றால்
நீங்கள் மோசஸ்
உருவாக்கி வைத்த
சட்டதிட்டங்களை
அழிக்கப் பார்க்கிறீர்
நீங்கள் மோசஸை
எதிர்க்கவும்,
எங்கள் மதத்தை
குலைக்கவும்
களங்கப்படுத்தவும்
பார்க்கிறீர்கள்
என்று இயேசுவை
குற்றம் சுமத்தி விடலாம்

மோசஸ் சொல்லியுள்ளபடி
கல்லால் அடித்து
அந்த பெண்ணை
கொல்லாம் என்று
இயேசு கிறிஸ்து
சொன்னார் என்றால்
அன்பு, கருணை என்று
நீங்கள் சொன்னதெல்லாம்
சுத்த பொய்
நீங்கள் சொன்ன
அன்பு எங்கே போயிற்று
கருணை எங்கே போயிற்று
இயேசு
சொன்னதெல்லாம் பொய்
அன்பு, கருணை
என்று நம்மை
நடித்து ஏமாற்றியிருக்கிறார்
அவருக்கு உயிரின் மேல்
அக்கறை இல்லை
என்று அவரை
குற்றம் சுமத்தி விடலாம்

இயேசு கிறிஸ்து
எந்த பதில் சொன்னாலும்
அவரை குற்றம்
சுமத்தி விடலாம்
என்று ஒரு கூட்டம்
இயேசுவின் பதிலுக்காக
காத்துக் கொண்டிருந்தது

ஒருவர் கோபப்பட்டு
இருக்கும் போது
கோபப்பட்டவருடைய
கண்ணை
நேருக்கு நேராக
பார்க்க கூடாது
நேருக்கு நேராக பார்த்தால்
கோபப்பட்டவருக்கு
மேலும் கோபம்
ஏற்பட வாய்ப்பு உள்ளது

எனவே தான் இயேசு
கோபப்பட்டு நின்று
கொண்டிருந்த
மக்களை நேருக்கு
நேராக பார்க்காமல்
தரையில்
ஏதோ ஒன்றை
எழுதிக் கொண்டு
இருந்தார்

இயேசு தலையை
நிமிர்த்தி
மக்களைப் பார்த்து
“””””””உங்களில் பாவம்
செய்யாதவன் முதலில்
அவள் மேல் கல்
எறியட்டும்”””””””
என்று கூறி விட்டு
மீண்டும் தரையில்
எழுதத் தொடங்கினார்

இரண்டு பதில்களில்
எந்த பதில் சொன்னாலும்
இயேசுவை
குற்றவாளியாக்கி விடலாம்
என்று நினைத்த
ஒரு கூட்டம்
இயேசுவின் பதிலைக்
கேட்டு அமைதியானது

இயேசு
மோசஸ் சொல்லிச் சென்ற
சட்டதிட்டங்களுக்கு
எதிராக எதையும்
கூறவில்லை
அதேபோல்
இயேசு போதித்து வந்த
அன்பு, கருணைக்கு
பாதிப்பு வரும் வண்ணமும்
எதுவும் சொல்லவில்லை

எக்காலத்துக்கும் பொருந்தும்
ஒரு வாக்கியத்தை
அருமையாக சொன்னார்
இயேசு கிறிஸ்து
உங்களில் பாவம்
செய்யாதவன் முதலில்
அவள் மேல் கல்
எறியட்டும் என்று

வயதானவர்கள்
முதலில் கல்லை
தரையில் எறிந்து விட்டு
அந்த கூட்டத்தை
விட்டு வெளியேனார்கள்
நீண்ட காலம் வாழ்ந்ததால்
அவர்கள் அதிக அளவில்
பாபம் செய்து இருப்பார்கள்
எனவே அவர்கள் முதலில்
வெளியேறினார்கள்,

அடுத்து
இளவயது நிரம்பியவர்கள்
வெளியேறினார்கள்
குறைந்த காலமே
வாழ்ந்திருக்கிறார்கள்
எனவே குறைந்த அளவே
பாவம் செய்திருப்பார்கள்

இயேசு கிறிஸ்துவை
பொறியில் மாட்டி
வைக்க நினைத்தவர்கள்
அவர்களாகவே பொறியில்
மாட்டிக் கொண்டார்கள்

நாம் பிறரை
குற்றம் சுமத்துவதற்கு முன்
நம் குற்றத்தை நாம்
பார்க்க வேண்டும்
என்ற நீதியும்
பாவத்தைப் பற்றியும்
இந்த நிகழ்வில்
சொல்லப்படுகிறது

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////