August 31, 2019

பரம்பொருள்-பதிவு-59


                 பரம்பொருள்-பதிவு-59

“நீர், நீராவி, அனல்,
அணு மற்றும் காற்று
போன்றவைகளின்
மூலமாக உற்பத்தி
செய்யப்படும் மின்சாரம்
என்ற சக்தியானது
மக்களின் பயன்பாட்டிற்காக
வழங்கப்படுகிறது.  

“மக்களின் பயன்பாட்டிற்காக
வழங்கப்பட்ட மின்சாரத்தை
மக்கள் மின்விளக்கைப்
பயன்படுத்தும் போது
மின்னாற்றலை
ஒளியாற்றலாகவும் ;
மின்விசிறியைப்
பயன்படுத்தும் போது
மின்னாற்றலை
இயக்க ஆற்றலாகவும் ;
மாற்றி மின்சாரத்தை
தங்கள் தேவைக்கேற்ப
பல்வேறு விதமாக
பயன்படுத்தி வருகின்றனர் ;”.

“பல்வேறு முறைகளின்
மூலமாக உற்பத்தி
செய்யப்படும் மின்சாரத்தை
சேமித்து வைத்து
தேவைப்படும் காலத்தில் ;
தேவைப்படும் சமயத்தில் ;
தேவைப்படும் சூழ்நிலையில்;
மின்சாரத்தைப் பயன்
படுத்த முடியாது ;
ஏனென்றால் மின்சாரத்தை
சேமித்து வைத்து
பயன்படுத்த முடியாது.;
மின்சாரம் உற்பத்தி
செய்யப்படும் போதே
மின்சாரத்தை
பயன்படுத்த வேண்டும் ;”.

“நிலவிற்கு மனிதனை
அனுப்பியது விஞ்ஞானம்
என்றும்; இந்த உலகத்தை
காப்பாற்றிக் கொண்டு
வருவது விஞ்ஞானம்
என்றும்; பெருமையாக
பேசிக் கொண்டு
திரியும் விஞ்ஞானத்திற்கு
மின்சாரம் என்ற ஒரு
சாதாரண சக்தியையே
எப்படி சேமித்து
வைப்பது எப்படி என்று
தெரியவில்லை “

“ஆமாம் மின்சாரம்
என்னும் ஒரு சாதாரண
சக்தியை சேமித்து வைக்கும்
முறையை இதுவரை
விஞ்ஞானம் கண்டு
பிடிக்கவில்லை என்பது
எத்தனை பேருக்கு தெரியும் “

“இந்த பிரபஞ்சம்
முழுவதும் நிறைந்து
இருக்கக்கூடிய கடவுள்
சக்தியை கிரகித்து ;
இந்துமதக் கோயிலுக்குள்
செலுத்தி ; உற்பத்தி
செய்யப்பட்ட
கடவுள் சக்தியை ;
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட இடத்தில்
குவித்து சேமித்து வைத்து
தேவைப்படும் காலத்தில்;
தேவைப்படும் சமயத்தில்;
தேவைப்படும் சூழ்நிலையில்;
குவித்து வைக்கப்பட்டு
சேமித்து வைக்கப்பட்ட
கடவுள் சக்தியில் இருந்து
மக்கள் தங்களுக்கு
தேவைப்படும்
கடவுள் சக்தியை
எடுத்துக் கொண்டு
தங்களுடைய தேவையை
பூர்த்தி செய்து கொள்ளும்
வகையில்
கடவுள் சக்தியானது
கோயிலில் குவித்து சேமித்து
வைக்கப்பட்டு இருக்கிறது “

“எத்தனை நூற்றாண்டுகள்
கடந்தாலும் அந்த
கடவுள் சக்தியானது
இந்துமதக் கோயில்களில்
அப்படியே இருக்கும்
வகையில் இந்துமதக்
கோயில்களை கட்டி
வைத்தனர் இந்திய
நாட்டில் வாழ்ந்த
நம்முடைய முன்னோர்கள் “

“மின்சாரம் என்ற ஒரு
சாதாரண சக்தியையே
சேமித்து வைக்க
விஞ்ஞானத்திற்கு
தெரியவில்லை - ஆனால்
இந்த பிரபஞ்சம் முழுவதும்
நிறைந்து இருக்கக் கூடிய
கடவுள் சக்தியை
கிரகித்து கோயிலுக்குள்
செலுத்தி குவித்து வைத்து
மெய்ஞ்ஞானத்தின் மூலம்
சேமித்து வைத்தனர்
இந்திய நாட்டில் வாழ்ந்த
நம்முடைய முன்னோர்கள்.”

“பல்வேறு விதமான
உயர்ந்த கண்டுபிடிப்புகள்
அனைத்தும் விஞ்ஞானத்தின்
மூலம் தான் கண்டுபிடிக்கப்
பட்டது என்று பெருமை
பேசிக் கொண்டு
மின்சாரம் என்ற ஒரு
சாதாரண சக்தியையே
குவித்து வைத்து சேமித்து
வைக்கத் தெரியாத
விஞ்ஞானத்தை புகழ்ந்து
பேசும் மேல்நாட்டினர்
அறிவாளிகளா
அல்லது
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
கடவுள் சக்தியை ஒரு
குறிப்பிட்ட இடத்தில்
குவித்து வைத்து
அனைவரும் பயன்படுத்தும்
வகையில் மெய்ஞ்ஞானத்தின்
மூலம் சேமித்து
செயல்களைச் செய்து
வைத்த இந்திய
நாட்டில் வாழ்ந்த
நம்முடைய முன்னோர்கள்
அறிவாளிகளா என்பதை
சிந்தித்துப் பார்த்தால்
உண்மை விளங்கும்”

“இதிலிருந்து ஒரு
குறிப்பிட்ட இடத்தில்
கடவுள் சக்தியை
குவித்து வைத்து
சேமிப்பது என்பது
எவ்வளவு பெரிய செயல்
என்பதை அனைவரும்
உணர்ந்து கொள்ள வேண்டும்”

" இந்து மதக்கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட இடத்தில்
குவித்து வைத்து
சேமிக்கப்படும்
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
எப்படி குவித்து
வைக்கப்படுகிறது
என்று தெரியுமா………………………..?"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 31-08-2019
//////////////////////////////////////////////////////////