April 10, 2020

பரம்பொருள்-பதிவு-186


                ஜபம்-பதிவு-434
              (பரம்பொருள்-186)

“நான் எப்போது
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க
சம்மதித்தேனோ
அப்போதே
அரவானை
இந்த உலகத்திற்கு
அர்ப்பணித்து
விட்டேன் “

“நான் எப்போது
அரவானை
இந்த உலகத்திற்கு
அர்ப்பணித்தேனோ
அப்போதே
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்கக் கூடிய
மிகப்பெரிய பொறுப்பு
இந்த உலகத்திற்கு
வந்து விட்டது “

"அரவானை
களப்பலி
கொடுப்பதற்கு
ஒப்புதல்
அளித்ததோடு
என்னுடைய
கடமை
முடிந்து விட்டது “

“இந்த உலகம்
தான் தனக்கு
கொடுக்கப்பட்டிருக்கும்
பொறுப்பை உணர்ந்து
செயல் பட வேண்டும் “

“இந்த உலகம் தான்
தனக்கு வழங்கப்பட்ட
கடமையை உணர்ந்து
கடமையை
முடிக்க வேண்டும் “

“எனக்கு அளிக்கப்பட்ட
கடமையை நான்
சரியாக முடித்து
விட்டேன் “

“நான் என்றுமே
என்னுடைய
கடமையிலிருந்து
தவறியதே இல்லை “

“இப்போதும்
அவ்வாறு தான்
நான் என்னுடைய
கடமையிலிருந்து
தவறவேயில்லை “

“பெற்ற குழந்தையை
எந்தத் தாயும்
கழுத்தை நெறிக்கும்
செயலைச்
செய்ய மாட்டாள் “

“அதைப்போலத்
தான் நானும்
பெற்ற தந்தையான
என்னால்
எப்படி பெற்ற
மகனின் தலையை
வெட்ட முடியும் “

“ஒரு தாய்க்கு
இருக்கும்
தாய்ப்பாசம் தானே
பெற்ற தந்தையான
எனக்கும் இருக்கும் “

“பெற்ற தந்தையான
எனக்கு எப்படி
பெற்ற மகனின்
மேல் பாசம்
இல்லாமல் இருக்கும் “

“பெற்ற மகனின்
மேல் அளவுக்கதிகமாக
பாசம் வைத்திருக்கும்
ஒரு தந்தையால்
எப்படி பெற்ற
மகனின் தலையை
வாளால்
வெட்ட முடியும் “

“ஒரு தாயால்
பெற்ற குழந்தையின்
கழுத்தை எப்படி
நெறிக்க முடியாதோ
அப்படியே என்னால்
பெற்ற மகனான
அரவானுடைய
கழுத்தை
என்னால் வாளால்
வெட்ட முடியாது “

“அரவானுடைய
தலையை வெட்டி
களப்பலி
கொடுக்கக்கூடிய
மிகப்பெரிய
பொறுப்பு இந்த
உலகத்திற்குத்
தான் இருக்கிறது “

“அரவானுடைய
தலையை
வெட்டுவதற்குரிய
பொறுப்பை
இந்த உலகத்தில்
உள்ள யாருக்கு
வேண்டுமானாலும்
அளியுங்கள் “

“அவர்கள் அந்த
பொறுப்பை
நிறைவேற்றட்டும் “

“என்னை விட்டு
விடுங்கள் “

“அரவானுடைய
தலையை
வெட்டச் சொல்லி
தயவு செய்து என்னை
கட்டாயப்படுத்தாதீர்கள் “

“என்னால்
அரவானுடைய
தலையை
வெட்ட முடியாது “

(என்று அர்ஜுனன்
அமைதியாக
நின்று விட்டான்)

கிருஷ்ணன்  :
“நகுலா அடுத்து
நீ தான் “

“நீ இப்போது என்ன
சொல்லப் போகிறாய்
என்று பார்ப்போம் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 10-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-185


               ஜபம்-பதிவு-433
             (பரம்பொருள்-185)

கிருஷ்ணன்  :
“வேறு என்ன
வேணும் அர்ஜுனா ! “

“தன்னுடைய
தலையை
வெட்டுவதற்கு
அரவானே ஒப்புதல்
அளித்து விட்டான் “

“தன்னுடைய
தலையை
வெட்டச் சொல்லி
உன்னுடைய மகனே
உனக்கு ஒப்புதல்
அளித்து விட்டான் “

“இதை விட
உனக்கு என்ன
வேணும் அர்ஜுனா “

“இதற்கு மேல்
உனக்கு
என்ன தயக்கம்
அர்ஜுனா “

“வாளை எடு
அரவானின்
தலையை
வெட்டுவதற்கு
வாளை எடு “

(அர்ஜுனன் வாளை
எடுக்காமல்
தயங்கியபடியே
நின்று
கொண்டிருந்தான்
அர்ஜுனன் வாளை
எடுக்கவேயில்லை)

கிருஷ்ணன் :
“”என்ன ஆனது
அர்ஜுனா
என்ன தயக்கம்
என்ன யோசித்துக்
கொண்டிருக்கிறாய்
ஏன் வாளை
எடுக்க மாட்டேன்
என்கிறாய்
வாளை எடு அர்ஜுனா
வாளை எடு”

(அர்ஜுனன் வாளை
எடுக்கவில்லை)

அர்ஜுனன்  :
“என்னால் வெட்ட
முடியாது “

“அரவானின்
தலையை என்னால்
வெட்ட முடியாது “

கிருஷ்ணன் :
“ஏன் வெட்ட
முடியாது “

“எதற்காக
வெட்ட முடியாது “

“என்ன
காரணத்திற்காக
வெட்ட முடியாது “

அர்ஜுனன் :
“அரவானின்
தலையை என்னால்
வெட்ட முடியாது
என்பதற்கு - ஒரே
ஒரு காரணம்
தான் இருக்கிறது “

கிருஷ்ணன்  :
“அது என்ன காரணம் “

அர்ஜுனன்  :
“அரவான் என்னுடைய
மகன் என்பது தான்
அந்த காரணமே “

கிருஷ்ணன்  :
“உன்னுடைய மகனை
களப்பலியாகக்
கொடுக்க நீ தானே
ஒப்புதல் அளித்தாய்  ;
அப்போது ஒப்புதல்
அளித்து விட்டு
இப்போது வந்து
ஏன் அரவானின்
தலையை
வெட்ட மாட்டேன்
என்று சொல்கிறாய் ;
நீ சொல்வதில்
ஏதேனும் நியாயம்
இருக்கிறதா ?”

அர்ஜுனன்  :
“நியாயம் இருப்பதால்
தான் சொல்கிறேன்
அரவானின் தலையை
நான் வெட்ட
மாட்டேன் என்று “

கிருஷ்ணன்  :
“அப்படி என்ன
நியாயத்தை
வைத்திருக்கிறாய் “

அர்ஜுனன்  :
“அனைவரும் ஏற்றுக்
கொள்ளக்கூடிய
நியாயத்தைத் தான்
நான் வைத்திருக்கிறேன் “

“அன்றொரு நாள்
அப்போது அரவானைக்
களப்பலியாகக் கொடுக்க
நான் சம்மதித்தது
உண்மை தான் ;
அதைப்போல இன்று
இப்போது அரவானின்
தலையை வெட்ட
மாட்டேன் என்று
நான் சொல்வதும்
உண்மை தான் ;”

“உண்மையைத் தான்
நான் சொன்னேன்  ;
உண்மையைத் தவிர
நான் வேறு எதுவும்
சொல்லவில்லை ;”

“இந்த உலகத்தின்
நன்மைக்காக நான்
என்னுடைய மகன்
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க சம்மதித்தது
உண்மைதான் ; “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 10-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-184


               ஜபம்-பதிவு-432
             (பரம்பொருள்-184)

கிருஷ்ணன் :
“அரவானுடைய
தலையை வெட்டி
களப்பலி கொடுங்கள்
என்ற முக்கியமான
செயலை ஒப்படைத்து
அதை செய்யுங்கள்
என்று சொல்லியும்
கொடுக்கப்பட்ட
களப்பலி என்ற
செயலின்
முக்கியத்துவத்தை
உணர்ந்தும்
உணராதது போல்
நடித்துக் கொண்டு
உன்னுடன்
பிறந்தவர்கள்
தங்களுக்கு
அளிக்கப்பட்ட
பொறுப்பை தட்டிக்
கழித்து விட்டார்கள்  

“ அவர்களை குறை
சொல்லி ஒரு பயனும்
ஏற்படப் போவதில்லை “

“அவர்கள் செய்ய
முடியாத செயலுக்கு
பல்வேறு காரணங்களை
வைத்திருக்கிறார்கள் “

“நீயும் அவர்களைப்
போல் செய்ய முடியாது
என்று சொல்லி விட்டு
செய்ய முடியாது
என்பதற்கான காரணங்களை
வைத்திருக்க மாட்டாய்
என்று நம்புகிறேன் “

“நான் சொல்லும்
செயலை நீ செய்து
முடிப்பாய் என்பதற்காக
காத்திருக்கிறேன் “

“நீயும் என்ன
சொல்லப் போகிறாய்
என்று எனக்குத்
தெரியவில்லை “

“ஆனால் ஒன்று
மட்டும் நிச்சயம்
அர்ஜுனா ! இந்த
உலகத்தில் யாருமே
செய்ய முடியாத
மிகப்பெரிய செயலை
செய்வதற்குரிய
வாய்ப்பை காலம்
உனக்கு ஏற்படுத்திக்
கொடுத்திருக்கிறது “

“நடைபெற வேண்டிய
விஷயம் நல்லபடியாக
நடப்பதற்கு இந்த
உலகமே நீ
செய்யப்போகும்
உன்னுடைய இந்த
செயலுக்காகக்
காத்துக் கொண்டிருக்கிறது “

“ஆமாம் !
அரவானுடைய தலையை
வெட்டுவதற்குரிய
மிகப்பெரிய பொறுப்பு
தற்போது உன்னிடமே
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது

“இந்த உலகத்தில்
யாருக்குமே கிடைக்காத
மிகப்பெரிய பாக்கியம்
உனக்கு கிடைத்திருக்கிறது “

“அரவானுடைய தலையை
யார் வெட்டினாலும்
அது செய்தியாகத்
தான் இருந்திருக்கும்  ;
ஆனால் அரவானுடைய
தலையை நீ
வெட்டினால் அது
சரித்திரமாக இனி
இருக்கும் “

“நீ ! அரவானுடைய
தலையை வெட்டினால்
இது வரை
இந்த உலகத்தில்
யாரும் செய்யாத
செயலைச் செய்தவனாவாய்
இருப்பாய் “

“தந்தையே !
தன் மகனுடைய
தலையை வெட்டி
காளிதேவிக்கு படைத்த
சிறப்புக்கு உரியவனாவாய்
இருப்பாய் “

“உலகத்தின் நன்மைக்காக
மிகப்பெரிய செயலைச்
செய்தவனாய் இருப்பாய் “

“வாளை எடு அர்ஜுனா
வாளை எடு !
அரவானுடைய தலையை
வெட்டுவதற்காக
வாளை எடு ! “

“வாளை எடு அர்ஜுனா
வாளை எடு ! “

அரவான் :
“தந்தையே தாங்கள்
என் தலையை
வெட்டுவது நான்
செய்த பாக்கியம் “

“தந்தையே மகனுடைய
தலையை வெட்டுவது
யாருக்கு கிடைக்கும் ;
எனக்கு அந்த பாக்கியம்
கிடைத்து இருக்கிறது ; “

“யாருக்கும் கிடைக்காத
மிகப்பெரிய
பாக்கியம் எனக்குக்
கிடைத்திருக்கிறது “

“தாங்கள் என்னுடைய
தலையை வெட்டினால்
நான் மகிழ்வேன் “

“தந்தையே என்னுடைய
தலையை வெட்டுங்கள் “

(என்று தன்னுடைய
தலையை வெட்டுவதற்கு
வசதியாக தன்னுடைய
தலையை காட்டிக்
கொண்டு முட்டி
போட்டுக் கொண்டு
இருந்தான் அரவான் )

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 10-04-2020
//////////////////////////////////////////