May 18, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-4


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-4

கடவுளைப் பற்றி
பேசுபவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று  : ஆத்திகர்
இரண்டு : நாத்திகர்

ஆத்திகர் என்றால்
கடவுள் உண்டு என்று
சொல்பவர்
நாத்திகர் என்றால்
கடவுள் இல்லை
என்று சொல்பவர்
என்று இச்சமுதாயத்தால்
காலம் காலமாக
சொல்லப்பட்டு வருகிறது.

கடவுள் என்பவர் யார் ?
அவர் எங்கிருக்கிறார் ?
அவரை அடையக்கூடிய
பொருள் எது ?
என்று கண்டறிந்து
அதை பயன்படுத்தி
கடவுளை உணர்ந்தவர்
ஆத்திகர் எனப்படுவர்

கடவுள் என்பவர் யார் ?
அவர் எங்கிருக்கிறார் ?
அவரை அடையக்கூடிய
பொருள் எது ?
என்று கண்டறியாமல்
அதை பயன்படுத்தாமல்
கடவுளை உணராமல்
இருப்பவர்
நாத்திகர் எனப்படுவர்

சுருக்கமாகச் சொன்னால்
ஆத்திகர் என்றால்
கடவுளை உணர்ந்தவர்கள்
நாத்திகர் என்றால்
கடவுளை உணராதவர்கள்
என்று தான் பொருள்
கொள்ள வேண்டும்

இவை இரண்டையும்
தவிர்த்து
புதியதாக பகுத்தறிவாதி
என்ற சொல்
தற்போது
பயன்படுத்தப்பட்டு
வருகிறது.

பகுத்தறிவாதி
என்றால் பெரும்பாலும்
இரண்டு நிலைகளைத்
தன்னுள்
கொண்டுள்ளவர்களாக
கருதப்படுகிறது

ஒன்று  :கடவுள் இல்லை
         என்று சொல்பவர்கள்

இரண்டு :மூடப்
         பழக்கவழக்கங்களை
         எதிர்ப்பவர்கள்


என்று சொல்லப்படுகிறது

உண்மையில்
பகுத்தறிவாதிகள்
என்றால்
பகுத்து அறிபவர்கள்
பகுத்தறிவாதிகள்
எனப்படுவர்

ஒரு கல்லை
எடுத்துக் கொண்டால்
அந்த கல்
பஞ்ச பூதங்களால்
ஆனது
பஞ்ச பூதங்கள்
இருப்பு நிலையும்
இயக்க நிலையும்
இணைந்து உருவானது
இயக்க நிலையை
கழித்து விட்டால்
இருக்கும் நிலையான
இருப்பு நிலையே
மூல நிலை
இந்த மூல நிலையே
ஆதியும், அந்தமும்
கொண்ட நிலையாகும்

உலகில் உள்ள
அனைத்து
பொருள்களுக்கும்
ஆதி அந்தமாக
இருப்பது
இருப்பு நிலையே
என்பதை
யார் அறிந்து
கொண்டிருக்கிறாரோ
அவரே பகுத்தறிவாதி

அதாவது பகுத்தறிவாதி
என்றால்
ஒரு பொருளின்
ஆதி அந்தம்
தெரிந்தவர்கள்
பகுத்தறிவாதிகள்
எனப்படுவர்

பகுத்தறிவாதி
என்பவர்
ஆத்திகர்
என்ற நிலையிலேயே
வந்து விடுவதால்
தனியாக
பகுத்தறிவாதி என்ற
பெயர் தேவையில்லை
என்ற காரணத்தினால்
தான்
நம் முன்னோர்கள்
கடவுளைப் பற்றி
பேசுபவர்களை
ஆத்திகர்
நாத்திகர்
என்ற இரண்டு
நிலைகளிலேயே
பிரித்து வைத்தனர்
என்பதை உணரும் போது
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்
என்பது
போற்றுதலுக்குரியது

-------- இன்னும் வரும்
///////////////////////////////////////////