Showing posts with label Giordano Bruno. Show all posts
Showing posts with label Giordano Bruno. Show all posts

April 02, 2019

7-ஜியார்டானோ புருனோ உருவான கதை(சுபம்)


7-ஜியார்டானோ புருனோ உருவான கதை(சுபம்)

அன்பிற்கினியவர்களே,

அவனன்றி ஒரு
அணுவும் அசையாது
கடவுள் தூணிலும் இருக்கிறான்
துரும்பிலும் இருக்கிறான் என்ற
உண்மையை உணர்ந்த
பெரியோர்கள் - மனிதர்கள்
இறைவனுடன் இணைப்பை
ஏற்படுத்திக் கொண்டு
தங்களுடைய தேவையை
பூர்த்தி செய்து கொள்வதற்கு
இணைப்புப் பாலமாக
இருந்திருக்கின்றனர்

அந்தக் காலக்கட்டத்தில்
மனிதர்களுக்கும், கடவுளுக்கும்
இடையில் உண்மையை
உணர்ந்தவர்கள் இணைப்புப்
பாலமாக இருந்து வந்துள்ளனர்
ஆனால் நாளடைவில்
உண்மையை உணர்ந்தவர்கள்
இல்லாத காரணத்தினால்
பொருளாதாரத் தலைவர்கள்
மனிதர்களுக்கும், கடவுளுக்கும்
இணைப்புப் பாலமாக
இருந்து வருகின்றனர்.

பொருளாதாரத் தலைவர்கள்
தங்கள் பதவியை தக்க
வைத்துக் கொள்வதற்காகவும்
அதிகாரத்தை நிலை
நிறுத்துவதற்காகவும்
மதப்பற்று உள்ளவர்களையும்
அரசியல் தலைவர்களையும்
தங்களுக்கு துணையாக
வைத்துக் கொண்டு
மனிதர்களுக்கும் கடவுளுக்கும்
இணைப்புப் பாலமாக
இருந்து வருகின்றனர்

உண்மையை உணர்ந்தவர்கள்
மதத்திற்கு இணைப்புப் பாலமாக
இருந்த சமயங்களில் மதமானது
மதத் தன்மை உடையதாக
இருந்தது - உண்மையை
உணராதவர்கள் மதத்திற்கு
தலைவர்களாக ஆன பிறகு
மதங்கள் மதப்பற்று
மிக்கதாகவும்- மனிதர்கள்
மதத் தன்மை அற்றவர்களாகவும்
மாறி விட்டனர்

பட்டினத்தார் அந்தக்
காலத்திலேயே கோடி கணக்கில்
பெறுமானமுள்ள சொத்துக்கள்
அனைத்தையும் துறந்து விட்டு
உண்மையை உணர்ந்து
மனிதர்களுக்கும் கடவுளுக்கும்
இணைப்புப் பாலமாக இருந்தார்
அவ்வாறே புத்தரும் தன்னுடைய
ராஜ்ஜியத்தையே துறந்து
விட்டு சென்று உண்மையை
உணர்ந்து மனிதர்களுக்கும்
கடவுளுக்கும் இணைப்புப்
பாலமாக இருந்தார்

அன்று மனிதர்களுக்கும்
கடவுளுக்கும் இணைப்புப்
பாலமாக இருந்தவர்கள்
அனைத்தையும் துறந்து விட்டு
ஒன்றும் இல்லாதவர்களாக
இருந்தார்கள் - ஆனால் இன்றோ
மனிதர்களுக்கும் கடவுளுக்கும்
இணைப்புப் பாலமாக
இருப்பவர்கள் என்று தங்களை
சொல்லிக் கொள்பவர்கள்
அதாவது மதகுருமார்கள்
மதத்தலைவர்கள்
மதக் கருத்துக்களை
மக்களிடையே கொண்டு
செல்பவர்கள் - மனிதர்களுக்கும்
கடவுளுக்கும் இடையில்
இணைப்பை ஏற்படுத்துகிறேன்
என்று சொல்லிக் கொண்டு
திரியும் அனைவரும் கோடியில்
திளைக்கும் பணக்காரர்கள்

அன்று இணைப்புப் பாலமாக
இருந்தவர்கள்
ஒன்றுமில்லாதவர்களாக
இருந்தனர்- ஆனால் இன்றோ
இணைப்புப் பாலமாக இருப்பவர்கள்
கோடீஸ்வர்களாக இருக்கிறார்கள்
நான் கடவுள் அருளால்
நிரப்பப் பட்டவன்
கடவுளின் பெருமையை
மக்களிடம் சொல்ல கடவுள்
என்னை தேர்ந்தெடுத்தார்
கடவுளுக்காகவே என்
வாழ்க்கையை நான்
அர்ப்பணித்து இருக்கிறேன்
என்று மயக்கும்
வார்த்தைகளை பேசும்
இவர்களைக் கவனித்தால்
இவர்கள் அனைவரும்
பணக்காரர்களாகத் தான்
இருப்பார்கள்
கோடியில் குளித்திருப்பார்கள்
பணத்தில் மிதந்திருப்பார்கள்
நாணயங்களில் களித்திருப்பார்கள்
யாரும் ஏழையாக
இருக்க மாட்டார்கள்

உண்மையை உணராமல்
மனிதர்களுக்கும் கடவுளுக்கும்
இணைப்புப்பாலமாக
இருப்பவர்கள்- மக்கள்
அனைவரும் ஒன்றும்
தெரியாதவர்களாக
இருக்கும் வரையில் தான்
அவர்களை ஏமாற்றி
பணம் சம்பாதிக்க முடியும்
என்ற காரணத்திற்காக
மனிதர்களை அடிமைப்படுத்தும்
முயற்சிகளை செய்து
கொண்டிருக்கின்றனர்
என்ற உண்மையை
ஜியார்டானோ புருனோ
உணர்ந்த காரணத்தினால்
கிறிஸ்தவ மதம்
மனிதனை கடவுளுடன்
இணைக்கும் இணைப்புப்
பாலமாக இருப்பதாக
தன்னை காட்டிக் கொண்டு
மனிதர்களை அடிமைப்படுத்தும்
வேலையை செய்து
கொண்டிருக்கிறது
அந்த செயலை நிறுத்த
வேண்டும் என்ற சொன்ன
காரணத்திற்காக ஜியார்டானோ
புருனோ சிறையில்
அடைத்து சித்திரதை
செய்யப்பட்டார் - மன்னிப்பு
கேட்டால் விட்டு விடுகிறோம்
என்று சொல்லியும்
ஜியார்டானோ புருனோ
மன்னிப்பு கேட்கவில்லை
அதனால் அவரை உயிரோடு
எரித்து கொன்று விட்டனர்

கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்ட
காரணத்திற்காக ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்டாலும்
ஜியார்டானோ புருனோவின்
புகழ் பல நூற்றாண்டுகள்
கடந்து இன்றும் இருப்பது
போலவே – இந்த உலகம்
உள்ளளவும் இருக்கும்
என்பது மட்டும் உண்மை

------சுபம்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
//////////////////////////////////////////

ஜியார்டானோ
புருனோவை
மன்னிப்பு கேட்டால்
உயிரோடு
விட்டு விடுகிறோம்
என்று சொல்லியும்
உயிரைப் பற்றிக்
கவலைப்படாமல்
தான் சொன்ன கருத்து
சரிதான் எதற்காக
நான் மன்னிப்பு
கேட்க வேண்டும்
மன்னிப்பு கேட்க
மாட்டேன் என்று
ஜியார்டானோ புருனோ
சொன்ன காட்சி
  
//////////////////////////////////




April 01, 2019

6-ஜியார்டானோ புருனோ உருவான கதை


          6-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
திணை விதைத்தவன்
திணை அறுப்பான்
அதாவது,
நாம் எந்த செயலைச்
செற்கிறோமோ அந்த
செயலுக்குரிய விளைவு
தான் கிடைக்கும்
புண்ணியம் தரக்கூடிய
செயலைச் செய்தால்
இன்பமும்
பாவத்தை தரக்கூடிய
செயலைச் செய்தால்
துன்பமும் கிடைக்கும்
என்பதே இதற்குப் பொருள்

ஒவ்வொரு செயலுக்கும்
விளைவு உண்டு - ஒரு
செயலைச் செய்து விட்டு
அதன் விளைவிலிருந்து
யாரும் தப்பிக்க முடியாது
நாம் எந்த செயலைச்
செய்கிறோமோ - அந்த
செயலுக்குரிய விளைவை 
நாம் அனுபவித்தே ஆக
வேண்டும்

புண்ணியத்தைத் தரக்கூடிய
செயலைச் செய்தால்
இன்பமும் ;  - பாவத்தைத்
தரக்கூடிய செயலைச் செய்தால்
துன்பமும் ; கிடைக்கும்  
நாம் அனுபவிக்கும்
அனைத்து நல்லவைகளும்
கெட்டவைகளும் - நாம்
செய்த புண்ணியச் செயலையும்,
பாவச் செயலையும்
சார்ந்தே இருக்கும்

எந்தச் செயலாக இருந்தாலும்
சரி ஒரு செயலைச் செய்து
விட்டு அதன் விளைவிலிருந்து
யாரும் தப்பிக்க முடியாது,.
ஆனால் அதிலிருந்து தங்களை
காத்துக் கொள்வதற்காக - மூன்று
விதமான முறைகளை
மக்கள் கையாள்கின்றனர்

ஒன்று  :பிராயச்சித்தம்
இரண்டு :மேல்பதிவு
மூன்று :அடியோடு அழித்தல்

பிராயச்சித்தம்
என்பது செய்த பாவத்தின்
துன்பம் தன்னை பாதிக்காமல்
இருப்பதற்காக பலவிதமான
நல்ல காரியங்கள் செய்வது 
அதாவது அன்னதானம் செய்வது
ஏழைப் பெண்களுக்கு
திருமணம் செய்வது போன்ற
செயல்களைக் குறிக்கும்

இந்த செயல் துன்பதைக்
குறைக்க மட்டுமே செய்யும்
நமக்கு ஏற்படக்கூடிய
துன்பம் முழுவதையும்
நீக்காது

எனவே பிராயச்சித்தத்தை
நாம் துன்பத்தை நீக்குதற்கு
பயன்படுத்த முடியாது
குறைப்பதற்கு மட்டுமே
பயன்படுத்த முடியும்

மேல்பதிவு
என்பது செய்த பாவத்தின்
துன்பம் நம்மை பாதிக்காமல்
இருப்பதற்காக தொடர்ந்து
புண்ணியம் தரும் செயல்களை
மட்டுமே செய்து கொண்டிருப்பது

தொடர்ந்து நாம் புண்ணியத்தை
தரக்கூடிய செயல்களை மட்டுமே
செய்து கொண்டிருந்தால்
பாவத்தின் விளைவால் எழுந்த
துன்பம் மிகப்பெரிய அளவில்
பாதிப்பை ஏற்படுத்தாது

ஆனால் நல்ல செயல்களைத்
தொடர்ந்து நம்மால் செய்து
கொண்டிருக்க முடியாது.
ஆதலால் துன்பத்தை நீக்க
நாம் மேல்பதிவைப்
பயன்படுத்த முடியாது
துன்பத்தை குறைப்பதற்கு
மட்டுமே பயன்படுத்த
முடியும்

அடியோடு அழித்தல்
என்பது துன்பத்திற்கு
காரணமான பாவத்தை
முற்றிலாக அழித்து விடுவது

பாவத்தினால் ஏற்படக்கூடிய
துன்பத்தை எப்படி குறைப்பது
அதன் தாக்கத்திலிருந்து எப்படி
தப்பித்துக் கொள்வது என்று
சிந்திப்பதை விட அந்த
துன்பத்திற்கு காரணமான
பாவத்தை அழித்து
விட்டால் நல்லது என்று
யோசித்து அதை பாவத்தை
அழிப்பதற்காக தவங்கள்
செய்து அந்த பாவத்தை
முற்றிலும் அழித்தனர்

பாவத்தை முற்றிலுமாக
அழிப்பதற்கு அனைவராலும்
முடியவில்லை என்ற
காரணத்தினால் மக்களால்
இதை பயன்படுத்த
முடியவில்லை

அடியோடு அழித்தல் என்பதை
சாதாரண மனிதர்களால்
செய்யமுடியாது -ஆனால்
பிராயச்சித்தம் மேல்பதிவு
ஆகியவற்றை சாதாரண
மனிதர்களால் செய்ய முடியும்

பிராயச்சித்தம் மேல்பதிவு
இரண்டும் பாவத்தால்
எழும் துன்பங்களின்
தாக்கத்தை குறைக்கத்
தான் முடியுமே தவிர
துன்பத்தை முற்றிலுமாக
நீக்க முடியாது

இதிலிருந்து ஒன்றை நாம்
தெரிந்து கொள்ளலாம்
பிராயச்சித்தம் மேல்பதிவு
ஆகியவற்றைப்
பயன்படுத்தினாலும் செய்த
செயலுக்குரிய விளைவிலிருந்து
யாரும் தப்ப முடியாது
என்பதை நாம்
தெரிந்து கொள்ளலாம்

ஜியார்டானோ புருனோவை
சிறையில் சித்திரவதை செய்து
கொண்டிருந்த போது அவர்
சிறு வயதில் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்ட ஒரு பெண்ணை
துன்பப் படுத்திய நிகழ்வை
நினைத்துக் கொண்டார்,
அவர் செய்த அந்த
பாவத்தின் செயலுக்கு
இப்போது விளைவானது
துன்பமாக வந்திருக்கிறது
அதாவது கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்ட காரணத்திற்காக
தான் தற்போது
துன்பப்படுத்தப் படுவதை
நினைத்துக் கொணடார்

செய்த வினை
செய்தவனை சும்மா விடாது
செய்த பாவத்திலிருந்து
யாரும் தப்ப முடியாது
என்பதையும்
ஊழ்வினை உறுத்து
வந்து ஊட்டும் என்பதையும்
தெரிந்து கொண்டார்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
//////////////////////////////////////////

ஜியார்டானோ புருனோ
சிறையில் சித்திரவதை
செய்யப்பட்டுக்
கொண்டிருந்தபோது
தான் சிறிய வயதில்
செய்த பாவத்தின்
விளைவு தற்போது
துன்பமாக வந்து
தன்னை சித்திரவதை
செய்து கொண்டிருக்கிறது
என்பதை உணர்ந்து
கொண்ட காட்சி

/////////////////////////////



March 31, 2019

5-ஜியார்டானோ புருனோ உருவான கதை

            5-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

“போராளிகள்
தோற்பதில்லை
போராட்டங்கள் தான்
தோற்று இருக்கின்றன”
என்ற வரலாற்று உண்மை
ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கைக்கு மிகத்
தெளிவாக பொருந்தும்

உலகில் எந்த ஒரு
இடத்திலும்
மக்களுக்கு எதிரான
வன்முறைகள் கட்டவிழ்த்து
விடப்பட்டாலோ
மக்களை இழிவாக
நினைத்து நடைமுறைக்கு
ஒவ்வாத செயல்கள்
அரங்கேற்றப் பட்டாலோ
மக்களை
அடிமைப்படுத்துவதற்குத்
தேவையான சதித்திட்டங்கள்
தீட்டப்பட்டாலோ
அங்கெல்லாம்
அநியாயங்களை தட்டிக்
கேட்பதற்கு உண்மையான
ஒரு போராளி அந்த
இடத்தில் உருவாகுகிறான்

மக்களை அடிமைப்படுத்த
நினைப்பவர்களுக்கு
எதிராக - அந்த போராளி
பல்வேறு விதமான
போராட்டங்களை
முன்னிறுத்தி
நடத்துகிறான் - ஆனால்
பல போராட்ங்கள்
வெற்றி பெறாமல்
தோற்று விடுகின்றன

அந்த போராளி
சொல்லும் கருத்துக்கள்
உண்மையானவைகளைத்
தன்னுள் கொண்டவைகளாக
இருக்கின்றன - என்று
மக்கள் அவர்
பின்னால் அணிவகுத்து
நிற்கின்றனர்
அவரை முழுவதுமாக
நம்பி அவர் பின்னால்
மக்கள் செல்லத்
தயாராகி விட்டனர்

என்பதை உணர்ந்த
மக்களை அடிமைப்படுத்த
நினைக்கும் ஆதிக்க
வர்க்கம்- இந்த போராளி
உயிரோடு இருந்தால்
நமக்கு ஆபத்து என்று
பயந்து பல்வேறு
குற்றச்சாட்டுக்களை
அவர் மேல் சுமத்தி
சிறையில் அடைத்து
சித்திரவதை செய்து
கொன்று விடுகிறது

மக்களுக்காக உண்மையாக
உழைக்கும் போராளிகளை
யாரும் விலை குடுத்து
வாங்க முடியாது
அதனால் அத்தகைய
போராளிகளை
கொன்று விடுகிறார்கள்

அந்தப் போராளியைக்
கொன்றாலும் - அவர்
சொல்லிச் சென்ற
கருத்துக்கள்  - அவர்
விட்டுச் சென்ற
செயல்கள் - அவர்
நடத்திய போராட்டங்கள்
ஆகியவற்றை மக்கள்
கொண்டு செல்வர்
மீண்டும் போராட்டங்களை
நடத்தத் துணிவர்

பல நூற்றாண்டுகள்
கடந்து அவரை நினைத்து
அவருடைய கருத்தைப்
பின்பற்றும் மக்கள்
அவரை நினைத்து
போற்றுவர்
அவர் முன்னெடுத்துச்
சென்ற போராட்டங்களை
நடத்த முற்படுவர்

மக்களை அடிமைப்படுத்த
நினைப்பவர்களை எதிர்த்து
போராட்டம் நடத்திய
போராளியின் போரட்டம்
வெற்றி பெறவில்லை
என்றாலும் அவர்
கொல்லப்பட்ட பிறகும்
மக்கள் அவருடைய
கருத்தை பின்பற்றி
நடந்து அவர் பின்னால்
நடக்கிறார்கள் என்றால்
அந்த போராளி
தோற்காமல்
மக்கள் மனதில்
என்றும் இருந்து
கொண்டு இருக்கிறார்
என்று பொருள்

அதைப் போல் தான்
ஜியார்டானோ புருனோ
என்ற போராளி மக்களை
அடிமைப்படுத்துவதற்கு
தேவையான முயற்சிகளை
செய்து கொண்டிருக்கும்
கிறிஸ்தவ மதம்
தன் முயற்சிகளை
நிறுத்த வேண்டும்

கிறிஸ்தவ மதம்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
சர்ச்சுகள்
பைபிள்
ஆகியவற்றில் சீர்திருத்தம்
கொண்டு வர வேண்டும
என்று போராடியதால்
கிறிஸ்தவ மதத்தினரால்
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார்

அவர் நடத்திய
போராட்டங்கள்
தோல்வியுற்றாலும்
அவர் பல நூற்றாண்டுகள்
கடந்தும் இன்னும் மக்கள்
மனதில் இருக்கிறார்

ஆம் ஜியார்டானோ
புருனோ என்ற போராளி
தோற்கவில்லை
அவர் நடத்திய போரட்டம்
மட்டுமே தோற்றது
என்பதை உணரும்போது
ஜியார்டானோ புருனோ
என்ற போராளியின்
போராட்ட வாழ்க்கை
நமக்கு புரிய
ஆரம்பிக்கும்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
//////////////////////////////////////////

கிறிஸ்தவ மதத்தில்
சீர்திருத்தம் செய்ய
வேண்டும் என்று
ஜியார்டானோ புருனோ
என்ற போராளி
நடத்திய போராட்டம்
வெற்றி பெறவில்லை
என்றாலும்
ஜியார்டானோ புருனோ
என்ற போராளி
தோற்கவில்லை
என்பதற்கு அவரை
சிறையில் வைத்து
சித்திரவதை செய்து
மன்னிப்பு கேட்கச்
சொல்லியும் அவர்
மன்னிப்பு கேட்காமல்
இருந்ததே சாட்சி
என்பதை இந்த
வீடியோவின் மூலம்
தெரிந்து கொள்ளலாம்
/////////////////////////////////