October 30, 2019

பரம்பொருள்-பதிவு-78


              பரம்பொருள்-பதிவு-78

“தன்னுடைய கறவைப்
பசுக்கள் கள்வர்களால்
களவாடப்பட்டு சென்று
விட்டதே என்ற
வேதனையின் காரணமாக
கோபாவேசத்துடன் பேசி
தற்போது கண்ணீர் சிந்தி
அழுது கொண்டிருக்கும்
அந்தணனைக்
கண்டான் அர்ஜுனன் ;
சோகமே வடிவமாய்
நின்று கொண்டிருந்த
அந்தணனைக்
கண்டான் அர்ஜுனன் ;
இழப்பின் வேதனையை
முடிந்த அளவு
வார்த்தைகளால்
சொல்லி விட்டு
சொல்லமுடியாத
வேதனையை
தன்னுடைய கண்ணீரின்
மூலம் வெளிப்படுத்திக்
கொண்டு நின்று
கொண்டிருந்த
அந்தணனைக்
கண்டான் அர்ஜுனன்;”

" அந்தணனுக்கு யார்
தீங்கிழைத்தார்களோ
அவர்களுக்கு நான்
சரியான வகையில்
தண்டனை வழங்கவில்லை
என்றால் நான் நீதி
தவறியவன் ஆவேன் ;
அந்தணனுடைய
கறவைப் பசுக்களை
நான் மீட்டு வரவில்லை
என்றால் தர்மருடைய
ஆட்சிக்கு நான் களங்கம்
விளைவித்தவனாவேன் ;
என் கடமையிலிருந்து
விலகியவன் ஆவேன் ;
நீங்கமுடியாத
களங்கத்தை அரசுக்கு
செய்தவனாவேன் ;
அறத்தை மறந்தவன்
ஆவேன் ;
தர்மர் ஆட்சிக்கு
கெட்ட பெயரை
உண்டாக்கியவன் ஆவேன்,;
கழிக்க முடியாத
பாவத்தை
செய்தவன் ஆவேன்,;
குடிமக்களைக் காக்கத்
தவறி விட்டார்
தர்மர் என்ற
அவப்பெயரை
தர்மருக்கு ஏற்படுத்தி
தீர்க்க முடியாத
குற்றத்தைச்
செய்தவனாவேன் ;
இதனால் ஏற்படக்கூடிய
பாவத்தை எத்தனை
பிறவி எடுத்தாலும்
கழிக்க முடியாத
பாவியாவேன்;"

"அந்தணனிடமிருந்து
கள்வர்களால் களவாடி
செல்லப்பட்ட கறவைப்
பசுக்களை மீட்டு
வரவில்லை என்றால்
தர்மர் தன்
குடிமக்களைக் காக்கத்
தவறி விட்டார்
என்ற செய்தியும் ;
அர்ஜுனன் அந்தணனுடைய
கறவைப் பசுக்களை
மீட்டு வரவில்லை
என்ற செய்தியும் ;
நாடு முழுவதும் பரவும் ;
அப்படி நாடு முழுவதும்
பரவினால் தர்மருடைய
ஆட்சிக்கும் ;
பஞ்ச பாண்டவர்களுக்கும்
நீக்க முடியாத
அவப்பெயர் ஏற்படும்,;"

"தர்மரும் திரௌபதியும்
தனித்திருக்கும்
ஆயுத சாலைக்குள்
நுழைந்தால்
விதியை மீறிய
குற்றத்திற்காக
12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம் போக
வேண்டியதிருக்கும் ;
என்ற விதிக்கு
பயந்து நான்
என்னுடைய தனிப்பட்ட
நலன்களை மட்டுமே
கருத்தில் கொண்டு
சுயநலத்துடன்
செயல்பட்டால் ;
என் மேல்
முழுவதும்
நம்பிக்கை வைத்து
என் மீது அளவற்ற
பாசத்துடன் இருக்கும்
என்னுடைய
அண்ணன் தர்மர்
அவர்களுடைய
ஆட்சிக்கு மிகப்பெரிய
துரோகம்
செய்தவனாவேன் "

"தர்மர் ஆட்சிக்கு
கெட்ட பெயர் எதுவும்
ஏற்படாமல் இருக்க
வேண்டும் என்றால்
நான் ஆயுத சாலைக்குள்
நுழைந்து கண்டிப்பாக
ஆயுதங்களை
எடுத்துத் தான்
வர வேண்டும் ;
கள்வர்களை தண்டித்து
கறவைப் பசுக்களை
மீட்டுத் தான்
வர வேண்டும் ;"

"சுயநலத்தை விட
பொது நலன்
தான் முக்கியம் ;
என் நலத்தை விட
மக்கள் நலன் தான்
முக்கியம் ;
என்னை விட
தர்மர் ஆட்சிக்கு
கெட்ட பெயர்
ஏற்படாமல்
இருப்பது தான்
முக்கியம் ; - என்று
பல்வேறு விதமாக
யோசனை செய்தான்
அர்ஜுனன் “

"இறுதியில்
தர்மரும், திரௌபதியும்
தனித்திருக்கும்
ஆயுத சாலைக்குள்
நுழைந்து
ஆயுதத்தை
எடுத்து வந்து
கள்வர்களிடமிருந்து
அந்தணனுடைய
கறவைப் பசுக்களை
மீட்டு வருவது என்றும் ;
இதனால் விதியை
மீறிய குற்றத்திற்காக
தான் 12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம் செல்லவும்
தயார் என்றும் ;
முடிவெடுத்தான்
அர்ஜுனன்"

"தர்மரும், திரௌபதியும்
தனித்திருக்கும்
ஆயுதசாலைக்குள்
நுழைந்து ஆயுதங்களை
எடுத்து வருவதற்காக
ஆயுத சாலையின்
கதவுகளைத்
திறந்து உள்ளே
சென்றான் அர்ஜுனன்".

“அந்த அறைக்குள்………………….?”

-----------இன்னும் வரும்

------------K.பாலகங்காதரன்
-----------30-10-2019
//////////////////////////////////////////

October 29, 2019

ஒன்றாமை ஒன்றியார்--திருக்குறள்


அன்பிற்கினியவர்களே!

“ஒன்றாமை ஒன்றியார்
கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது”
----------திருக்குறள்

"ஆழ்துளைக் கிணற்றுக்குள்
ஒரு குழந்தை
விழுந்து விடுகிறது ;
இந்த செய்தி நாட்டிலுள்ள
மக்கள் அனைவருக்கும்
தெரிந்து விடுகிறது ;
நாட்டை ஆளும்
அரசியல்வாதிகள் அந்த
இடத்திற்கு செல்ல
வேண்டிய கட்டாயத்திற்கு
உள்ளாக்கப் படுகின்றனர்;  
குழந்தை விழுந்த ஆழ்துளைக்
கிணறு இருக்கும் இடத்திற்கு
ஓடோடிச் செல்கின்றனர் ;
அங்கிருக்கும் நிலையைக்
கவனிக்கின்றனர்- குழந்தையைக்
காப்பாற்றுவதற்காக
அனைத்து முயற்சிகளையும்
மேற்கொள்கின்றனர்."

"அதாவது ஆழ்துளைக்
கிணற்றில் குழந்தை
விழுந்ததற்கு முக்கியமான
காரணம் ஆழ்துளைக்
கிணறுகளை மூடாமல்
குழந்தை விழுவதற்கு
காரணமாக இருந்த
அரசியல்வாதிகள் என்ற
விஷயத்தை மக்கள்
உணர்ந்து கோபம் கொண்டு
அரசியல்வாதிகளுக்கு எதிராக
மக்கள் திரும்பி விடக்கூடாது
என்ற காரணத்திற்காக
குழந்தையைக் காப்பாற்றும்
முயற்சியில் ஈடுபட்டு
அரசியல்வாதிகள் தாங்கள்
செய்த தப்பை மறைத்து
விடுகின்றனர்; மக்களும்
அரசியல்வாதிகள் செய்த
தப்பை மறந்து விடுகின்றனர்
இதன் மூலம் அரசியல்வாதிகள்
தங்களுடைய தப்பை
மறைத்து விடுகின்றனர்"..

"அரசியல்வாதிகள் குழந்தையைக்
காப்பாற்ற விஞ்ஞானத்தை
பயன்படுத்த வேண்டும் என்று
முடிவு செய்கின்றனர் ;
விஞ்ஞானத்தை வைத்து
பிழைப்பு நடத்திக்
கொணடிருக்கும் பொருளாதாரத்
தலைவர்கள் மூலமாக
விஞ்ஞானக் கருவிகளைப்
பயன்படுத்தி குழந்தையைக்
காப்பாற்றத் தேவையான
அனைத்து முயற்சிகளையும்
செய்கின்றனர் - ஆனால்
பொருளாதாரத் தலைவர்களாலும்
குழந்தையைக் காப்பாற்ற
முடியவில்லை என்ற நிலை
வரும்போது மக்களை
நோக்கி குழந்தை பிழைக்க
வேண்டும் என்று கடவுளை
நோக்கி பிரார்த்தனை
செய்யுங்கள் என்று
சொல்கின்றனர், இந்து மதம்,
கிறிஸ்தவ மதம்,
இஸ்லாமிய மதம், புத்த மதம்,
ஜைன மதம் என்று
அனைத்து மதத்தை
சார்ந்தவர்களும் மதவேறுபாடு
மறந்து தொடர்ந்து
பிரார்த்தனை செய்கின்றனர். "

"விஞ்ஞானம் தோற்றால்
மக்கள் யாரும் விஞ்ஞானத்தை
மதிக்க மாட்டார்கள் ;
விஞ்ஞானத்தை நம்ப மாட்டார்கள்.
விஞ்ஞானம் தோற்று விட்டது
என்று சொன்னால்
விஞ்ஞானத்திற்கு அசிங்கம்
என்று உணர்ந்து விஞ்ஞானத்தின்
தோல்வியை மக்கள் புரிந்து
கொள்ள கொள்ளக்கூடாது
என்ற காரணத்திற்காக
கடவுளை நோக்கி
குழந்தைக்காக பிரார்த்தனை
செய்யச் சொல்கின்றனர்.
மக்களும் விஞ்ஞானத்தின்
தோல்வியை உணராமல்
கடவுளை நோக்கி பிரார்த்தனை
செய்கின்றனர். இதன் மூலம்
விஞ்ஞானம் தன்னுடைய
தோல்வியை
மறைத்து விடுகிறது."
               
"இந்த நிலையில் இரண்டொரு
நாள்களில் குழந்தை
இறந்து விடுகிறது. "

"தங்கள் மதம் தான்
உண்மையான மதம்,
தங்களுடைய மதத்தின்
கடவுள் தான் உண்மையான
கடவுள், தங்களுடைய
மதத்தின் புனித நூல்
தான் உண்மையான
புனிதநூல் தங்களுடைய
கடவுள் தான் மக்களுடைய
பாவங்களை மீட்டெடுக்க
வந்த கடவுள்.என்று
சொல்லித் திரிந்து
கொண்டிருந்த அனைத்து
மதத்தைச் சேர்ந்தவர்களும்
குழந்தை இறந்த பிறகு
எதுவும் பேசாமல் அமைதியாக
இருந்து விடுகின்றனர்.
ஏதாவது ஒரு மதத்தைச்
சேர்ந்த கடவுள் அந்த
குழந்தையைக் காப்பாற்றி
இருக்க வேண்டும். எந்த
மதத்தைச் சேர்ந்த
கடவுளும் குழந்தையைக்
காப்பாற்றவில்லை.
அப்படி என்றால்
எந்த மதமும் உண்மையான
மதம் இல்லையா எந்த
கடவுளும் சக்தி வாய்ந்த
கடவுள் இல்லையா
கடவுள் இருக்கிறாரா
இல்லையா என்று  
மக்களில் யாருமே
கேள்விகள் கேட்கவில்லை
இதன் மூலம் மதவாதிகள்
மதத்தின் பெயரைச் சொல்லியும்
கடவுளின் பெயரைச் சொல்லியும்
பக்தியின் பெயரால் மக்களை
ஏமாற்றி  வருவதை
மறைத்து விடுகின்றனர்,”

“அரசியல் தலைவர்கள்,
பொருளாதாரத் தலைவர்கள்,
மதத் தலைவர்கள் இந்த
மூன்று பேரும் ஒன்றாகச்
சேர்நது தவறு செய்திருந்தாலும்
தங்களுடைய தவறை
அழகாக மறைத்து விடுகின்றனர்.
ஆனால் பாதிப்பு மக்களுக்கு
ஏற்பட்டு விடுகிறது,.
இதனை உணராத மக்கள்
ஒருவருக்கொருவர் குறை
சொல்லிக் கொண்டு
குற்றம் சொல்லிக் கொண்டு
சண்டையிட்டுக்
கொண்டிருக்கின்றனர்.
பெற்றோர்கள் தங்கள்
குழந்தை பத்திரமாக
பார்த்துக் கொள்ள வேண்டும்
என்கின்றனர் ஒருசாரார்.
வீட்டிற்குள் உட்கார்ந்து
கொண்ட சமோசா
சாப்பிட்டுக் கொண்டு கருத்து
சொல்வதை விட்டு விட்டு
களத்தில் இறங்கி வேலை
செய்ய வேண்டும் என்கின்றனர்
மற்றொரு சாரார் ஆக
மொத்தம் அரசியல் தலைவர்கள்
பொருளாதாரத் தலைவர்கள்
மதத் தலைவர்கள் ஆகிய
மூன்று பேரும் தங்கள்
மேல் எந்த தப்பும்
ஏற்படாதவாறு
தப்பித்துக் கொள்கின்றனர்,.

"உலக வரலாற்றை எடுத்துக்
கொண்டால் அந்தக் காலம்
முதல் இந்தக் காலம்
வரை எந்த ஒரு போரை
எடுத்துக் கொண்டாலும் ;
எந்த ஒரு நிகழ்வை
எடுத்துக் கொண்டாலும் ;
அரசியல் தலைவர்கள் ;
பொருளாதாரத் தலைவர்கள்;
மதத் தலைவர்கள்; -இந்த
மூவர் தான் இருப்பார்கள் ;
ஆனால் இவர்கள் அனைவரும்
தாங்கள் செய்த தப்பிலிருந்து
தப்பித்துக் கொண்டு மக்கள்
தங்களை நல்லவர்களாக
நம்பும்படி செய்து விடுவார்கள்;
இவர்கள் தான் இந்த
உலகம் முழுவதையும்
தங்களுக்கு கீழே அடிமையாக
வைத்திருப்பவர்கள் – ஆனால்
இதைப் பற்றி எதுவும்
தெரியாமல் மக்கள்
ஒருவருக்கொருவர் தங்களுக்குள்
சண்டையிட்டு அடித்துக் கொண்டு
செத்துக் கொண்டிருக்கிறார்கள்; "
  
"இதனைத் தான் திருவள்ளுவர்
நெருக்கமாக இருப்பவர்களே
உட்பகைவர்களாக இருந்தால்
ஒருவன் அழிவிலிருந்து
எப்போதும் தப்ப முடியாது
என்று 
“ஒன்றாமை ஒன்றியார்
கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல்
அரிது” 
என்ற திருக்குறளின்
மூலம் விளக்குகிறார்”


---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்
---------29-10-2019
//////////////////////////////////////////////

October 28, 2019

பரம்பொருள்-பதிவு-77


                 பரம்பொருள்-பதிவு-77

அந்தணன் :
"என்னுடைய கறவைப்
பசுக்களை இடையன்
ஒருவன் பொறுப்பில்
ஒப்படைத்து மேய்ச்சலுக்கு
அனுப்பி வைத்தேன்,
சில கள்வர்கள் அவனுடைய
உடலில் பல்வேறு காயங்கள்
ஏற்படும்படி அடித்துப் போட்டு
விட்டு பசுக்களை ஓட்டி
சென்று விட்டனர் "

"மக்கள் குறைவின்றி வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் ;
எங்களுடைய ஆட்சியில்
நீதி நிலைபெற்று இருக்கிறது ;
இல்லாமை என்பதே
எங்கள் நாட்டில் இல்லை ;.
ஏழ்மை என்றால் என்ன
என்றே யாருக்கும் தெரியாது ;
பிறரை ஏமாற்றி வயிறு
வளர்க்கும் வஞ்சக நெஞ்சம்
கொண்டோர் தர்மர்
ஆட்சி செய்யும்
நாட்டில் இல்லை.;
திருடர்களும்
கொள்ளையர்களும்
பிறரை துன்புறுத்தி
இன்பம் காண்பவர்களும்
எங்கள் நாட்டில் இல்லை ;
எல்லா செல்வங்களும்
நிறைந்த வளம் மிகுந்த
நாடாக எங்கள்
நாடு இருக்கிறது ;
இல்லாதது என்று எதுவும்
இல்லை என்று
சொல்லத்தக்க வகையில்
வளத்திற்கு குறைவில்லாமல்
எங்கள் நாடு இருக்கிறது ;
மக்கள் அமைதியாகவும்
ஒருவொருக்கொருவர்
நட்புடனும் இருக்கின்றனர்
என்று சொல்லி
ஆட்சி செய்கின்றீர்கள்,
மக்களும் அவ்வாறே
நினைத்து நம்பிக்
கொண்டு இருக்கின்றனர் "

"ஆனால் இப்போது
நடந்தது என்ன ?
இடையனை அடித்துப்
போட்டு விட்டு என்
கறவைப் பசுக்களை
திருடிச் சென்ற அநியாயம்
தர்மர் ஆட்சியில்
நடைபெற்று இருக்கிறது  ;"

"கொள்ளையர்கள்
பெருகி விட்டனரா ? (அல்லது)
ஏழ்மை உருவாகி
விட்டதா ? (அல்லது)
நாட்டில் மக்கள்
தங்கள் பாதுகாப்பை
இழந்து விட்டார்களா ?(அல்லது)
மக்கள் பாதுகாப்பு அற்று
வாழும் சூழ்நிலை
உருவாகி விட்டதா ? (அல்லது)
அன்பு இறந்து விட்டதா ?
(அல்லது)
கருணை செத்து விட்டதா ?
(அல்லது)
கொடியவர்கள் உருவாகி
விட்டார்களா ? (அல்லது)
ஆட்சி செய்யும் தகுதியை
தர்மர் இழந்து விட்டாரா ?
(அல்லது)
தர்மர் தங்கள் மக்களை
பாதுகாக்க வேண்டும்
என்ற கடமையை
மறந்து விட்டாரா ?"

"மேய்ச்சலுக்கு அனுப்பி
வைத்த இடையனை
அடித்து காயப்படுத்தியதற்கும் ;
என்னுடைய கறவைப்
பசுக்களை கள்வர்கள்
களவாடி சென்றதற்கும் '
தர்மர் பதில்
சொல்ல வேண்டும் ;
இந்திரப் பிரஸ்தத்தை
ஆட்சி செய்யும் தர்மர்
எனக்கு இழைக்கப்பட்ட
அநீதிக்கு பதில்
சொல்ல வேண்டும் ;
எனக்கு நீதி வேண்டும் ;
எனக்கு நீதி வேண்டும் ;
எனக்கு நீதி வேண்டும் ;"

அர்ஜுனன் :
"தர்மருடைய ஆட்சியில்
யாருக்கும் அநீதி என்பது
இழைக்கப்பட்டதே இல்லை ;
இதனால் தர்மர் ஆட்சியில்
நீதி என்பது நிலை
பெற்று இருக்கிறது ; "
அந்தணனே அநீதி
என்பது தங்களுக்கு
இழைக்கப்பட்டிருக்கிறது
என்று நீங்கள்
கருதுவீர்களேயானால்
அநீதியை அழித்து
நீதியை நிலைநாட்ட
வேண்டியது என்னுடைய
பொறுப்பு - அதனால்
அந்தணனே சற்று
அமைதியாக இருக்கவும் ;
கோபத்தை விடுத்து
சற்று சாந்தம் கொள்ளவும் ;
தங்களுக்கு இழைக்கப்பட்ட
அநீதிக்கு தக்க நீதி
கண்டிப்பாக கிடைக்கும் ;"

"இடையனுக்கு
இழைக்கப்பட்ட அநீதிக்கும் ;
தங்களுடைய
கறவைப் பசுக்கள்
கள்வர்களால் களவாடி
செல்லப்பட்டதற்கும் ;
தக்க தண்டனை
கண்டிப்பாக கிடைக்கும் ;
நானே நேரில் செல்கிறேன் ;
இந்த பிரச்சினையை
தீர்க்க அர்ஜுனனாகிய
நானே நேரில் செல்கிறேன்  ;
கள்வர்களுக்கு தக்க
தண்டனை வழங்கி
கறவைப் பசுக்களை
மீட்டு வருகிறேன் ;
இது சத்தியம் !!!
தாங்கள் அமைதியாக
தங்கள் இல்லம் சென்று
அமைதியாக
ஓய்வு எடுங்கள் நான்
இப்போதே கிளம்புகிறேன் ;
 கறவைப் பசுக்களை
மீட்டு வருகிறேன் ; "

----------என்று சொல்லி விட்டு
ஆயுத சாலையில்
வைத்திருந்த தன்னுடைய
ஆயுதங்களை எடுக்க
ஆயுத சாலைக்கு
சென்றான் அர்ஜுனன்"

"அப்போது தான்
அர்ஜுனனுக்கு ஒரு விஷயம்
நினைவுக்கு வந்தது  ;
ஆயுத சாலையை
பார்வையிட தர்மர்
சென்றிருக்கிறார் என்பதும் ;
அவரைத் தொடர்ந்து
திரௌபதியும்
ஆயுத சாலைக்கு சென்று
இருக்கிறார் என்பதும் ;
ஆயுத சாலையில்
தர்மரும் திரௌபதியும்
தனிமையில்
இருக்கிறார்கள் என்பதும் ;
அர்ஜுனனுடைய
நினைவுக்கு வந்தது."

"திரௌபதியும்
திரௌபதியுடன் குடும்பம்
நடத்திக் கொண்டிருக்கும்
பஞ்ச பாண்டவர்களில்
ஒருவரும் தனித்து
ஒரு அறையில்
இருக்கும் போது
பஞ்ச பாண்டவர்களில்
மற்றவர்கள் அந்த
அறைக்குள்
நுழையக்கூடாது ;
அவ்வாறு நுழைந்தால்
அது குற்றச்
செயலாகக் கருதப்படும்;
அந்த குற்றச் செயலுக்கு
தண்டனையாக குற்றம்
இழைத்தவர் 12 மாதங்கள்
வனத்தில் பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும் ;"

-------என்ற விதி
அர்ஜுனனுக்கு
நினைவுக்கு வந்தது ;
என்ன செய்வது என்று
தெரியாமல் தன்னுடைய
ஆயுதங்களை எப்படி எடுப்பது
என்று தெரியாமல் அர்ஜுனன்
மனக்குழப்பத்துடன்
ஆயுத சாலையின் வெளியே
நின்று கொண்டிருந்தான் ;"

"விதி தன்னுடைய
ஆட்டத்தை ஆட துவங்கி
விட்டதை உணர்ந்து
கொண்டான் அர்ஜுனன் "


--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 28-10-2019
//////////////////////////////////////////