February 10, 2012

இயேசு கிறிஸ்து-உரோமரிஷி-ஆமென்றே-பதிவு-8




          இயேசு கிறிஸ்து-உரோமரிஷி-பதிவு-8
      
                               “”பதிவு எட்டை விரித்துச் சொல்ல
                                                              ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
ஜீவனைப் பற்றி விளக்கும் பொழுது , இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

வசனம்-1:
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக் கொண்டாலும் , தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?”
                                                                           மாற்கு - 8 : 36

பொய் கதைகள் பல பேசி ,
பித்தலாட்டங்கள் பல செய்து ,
ஏமாற்றும் வித்தை பல செயல்படுத்தி ,
ஊர்  ஊராகத் திரிந்து அலைந்து ,
நல்வழியில் முடிந்தால் நல்வழியிலும் ,
தீய வழியில் தவறு செய்து மாட்டாவிட்டால் தீய வழியிலும் ,
பொருள் பல சம்பாதித்து ,
இன்பம் துய்க்க இடங்கள் பல வாங்கி  ,
மகிழ்ச்சி களிக்க வீடுகள் பல கட்டி ,
புகழில் திளைக்க பதவிகள் பல பெற்று வாழ்ந்தாலும் ,
இந்த உலகத்தையெல்லாம் தன் காலடியில் கொண்டு வந்து ஆண்டாலும் ,
உலக மக்களை தனக்கு அடிமையாகக் கொண்டாலும் ,
        
                                                    ஓன்றிலிருந்து ஒன்று ,
                                                   ஓன்றுடன் கலக்க ஒன்று ,
                                                   ஓன்றைப் பெற ஒன்று ,
                                                   ஓன்றை அறிய ஒன்று ,
                                                    ஓன்று உயர ஒன்று ,
                                                    ஓன்று இணைய ஒன்று ,
                                                    ஓன்று துளிர்க்க ஒன்று,
                                                    ஒன்று பிரிய ஒன்று,
                                                    ஒன்று முடிய ஒன்று ,
                                                    ஒன்றில் ஒன்று ,
                                                    ஒன்றாக ஒன்று ,
என்பதில் தெளிவு பெற்று ,
நடக்கப் போவதை உணரும் வழி இது தான் என்பதை ,

                               ஒன்றில் உணர்ந்து ,
                               இரண்டில் பழகி ,
                               மூன்றில் தெளிந்து ,
                                நாலும் அறிந்து ,
                                 ஐம்பூதம் சாரம் உணர்ந்து ,
                                அறுசுவை புரிந்து ,
                                ஏழுநிலை கடந்து ,
                                 எண்திசை பார்த்து ,
                                 ஒன்பதை ஆட்சி செய்து ,
                                பத்தில் பக்குவம் முடிந்து ,

                                                                      உணர்வற்ற நிலையை
                                                                      உணர்வில் கலந்து ,
                                                                      தெளிவின் சாரத்தை
                                                                      உண்மையில் புரிந்து ,
                                                                      பொய் - உண்மை முகமூடிட்டு 
                                                                       அலைவதை தெளிந்து ,

                                 சூதின் தன்மை ,
                                மாயையின் மருட்சி ,
                                நிலையற்றதின் நிகழ்வு ,
                               முகவரியற்ற வாழ்க்கை அறிந்து ,

                                                                நடந்ததை தெளிவுப்படுத்தி ,
                                                                நடக்க வேண்டியதை ,
                                                               ஞாபகத்தில் வைத்து ,
                                                                 உண்மை அரியணை ஏற
                                                                உயிரைத் தர வேண்டும்
                                                                என்பதை உணர்ந்து ,


                         சரித்திரத்தின் ரத்த நாளங்களுக்கு
                         தன் இரத்தத்தை
                        அளித்து ,
                         சுவாசக் காற்றை இழந்த
                         பூகோளத்திற்கு
                         சுவாசத்தை தந்து ,
                        முழுமையின் நிலை அறிந்து
                        அமைதி பெற்று ,
                        பிரபஞ்சத்தின் உயிர்த்துடிப்பாய்
                       பிரம்ம ரகசியமாய்
                        இருக்கும் ,

ஜீவனை சூட்சும ரகசியங்களை தன்னுள் கொண்ட ,
ஜீவனின் மதிப்பு உணராமல் ,
அதனை நஷ்டப் படுத்தினால் ,
நஷ்டப்படுத்துவதால் மனிதனுக்கு ஒரு லாபமும் இல்லை .

ஜீவனின் சக்தி குறைய ,
ஜீவனின் அழுத்தம் குறைய ,
மனிதனுக்கு மரணம் தான் உண்டாகும் .
இறந்த பிறகு நாம் ஒன்றையும் கொண்டு செல்ல முடியாது .
ஜீவனை நஷ்டப் படுத்துவதால் மனிதனுக்கு மரணம் தான் உண்டாகும், ஒரு லாபமும் உண்டாகாது .
ஜீவனை நஷ்டப் படுத்துவதால் ஒரு லாபமும் கிடைக்காது என்கிறார்  இயேசு .


வசனம்-2:
மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?”
                                                                                         மாற்கு - 8 : 37

ஜீவனுக்கு ஈடாத இந்த உலகத்தில் எதையும் ஒப்பிட்டுக் காட்ட முடியாது ,
ஜீவனுக்கு ஈடானது இந்த உலகத்தில் எதுவும் இல்லை ,
ஜீவன் இந்த உடலை விட்டு வெளியேறிய பிறகு பிணம் என்று பெயர்  பெறும்.

மனிதன் ஜீவனை இழந்து , மரணித்த பிறகு , மீண்டும் ஜீவனை உயிர்ப்பிக்க முடியாது .
எனவே தான் இயேசு ஜீவனுக்கு ஈடாக மனிதன் எதைக் கொடுப்பான் .

இந்த உலகத்தை எல்லாம் ,
தான் சம்பாதித்ததை எல்லாம் ,
தன்னுடையதை எல்லாம் கொடுத்தாலும் ,
அவன் மீண்டும் உயிர்  பெற முடியாது .

ஜீவனை நஷ்டப் படாமல் இருக்க வழி என்ன?
வைத்துக் கொள்வதற்கு வழி என்ன?
ஜீவனை நஷ்டப் படாமல் வைத்துக் கொள்வதற்கான ரகசியங்கள் எவை என்பதை உணர்ந்து ,
ஜீவனை நஷ்டப் படாமல் வைத்துக் கொள்வதால் பலன் என்ன?
என்பதை உணர்ந்து தெளிந்து ,
அறிவு விளக்கம் பெற வேண்டும் என்கிறார்  இயேசு .

ஜீவனை நஷ்டப் படுத்தினால் ,
செத்த பிணத்தை ,
சாகும் பிணங்கள் ,
துhக்கிக் கொண்டு செல்லும் நிலை தான் ஏற்படும் என்கிறார்  இயேசு .



உரோமரிஷி:
             “””“ஆமென்றே இருபத்தோ ராயிரத்தோ
                                       டறுநுhறு சுவாசமல்லோ ஒருநாளைக்குப்
                   போமென்று போனதனால் நாள்குறைந்து
                                      போச்சுதுபோ காவிட்டால் போவதில்லை”””””
                                                          - உரோமரிஷி- உரோமரிஷி ஞானம்
காற்றை உள்ளே இழுத்து ,
வெளியே விடுவதை சுவாசம் என்கிறோம் .
இது உட்சுவாசம் , வெளி சுவாசம் என இரு வகைப்படும் .

இந்த சுவாசமானது ஒரு நாளைக்கு 21, 600 முறை நடக்கிறது .
இந்த உடம்பில் உட்சென்று இயல்பாகத் தங்குவது 14, 400 சுவாசமாகும் .
வீணாகச் செலவாகும் சுவாசம் 7, 200 ஆகும் .
இதன் விளைவால் வாழ்நாள் குறைந்து ,விரைவில் மரணம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளது .
எனவே , வீணாகச் செலவாகும் பிராணணை உடலில் சேமிக்க என்ன வழி என்று கண்டறிய வேண்டும் .

அவ்வாறு கண்டறிந்து வீணாகச் செலவாகும் ,
சுவாசத்தை வெளியே விடாமல் ,
உடலிலேயே அடக்கி விட்டால் ,
மரணம் என்பது ஏற்படாது.
மரணம் என்பது ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இல்லை என்கிறார்  உரோமரிஷி .

வீணாகச் செல்லும் பிராணணை உடலில் நிறுத்தக் கூடிய ரகசியத்தை அறிந்து கொண்டால் ,
எவ்வாறு நிறுத்த வேண்டும் ,
அவ்வாறு நிறுத்துவதால் என்ன பலன் ,
பிராணணை உள்ளே நிறுத்துவதன் மூலம் ,
கிடைக்கும் சக்தி என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .
அவ்வாறு உணர்ந்து கொண்டால் மரணமற்று வாழலாம் .

உள்ளிழுக்கும் பிராணனுடன் , அபானனும் கலக்கிறது .
பிராணன் என்பது உயிர்க்காற்று ,
அபானன் என்பது மலக்காற்று ,
உள்ளே இழுக்கப்பட்ட பிராணன் என்னும் உயிர்க்காற்றை ,
மூலாதாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் அபானன் என்னும் மலக் காற்றோடு கலக்கின்றது .
கலக்கப்பட்ட இரண்டும் ஆற்றல் மிகு வளியாகிக் குண்டலினி என்னும் பாம்பை மூலாதாரத்தில் விழிக்கச் செய்து ,

மூலாதாரம் , சுவாதிஷ்டானம் , மணிப்பூரகம் , அநாகதம் , விசுக்தி ,ஆக்கினை என்னும் ஆறு ஆதாரங்களைக் கடந்து,
ஆறு ஆதாரங்களுக்குரிய சக்தியை வெளிப்படச் செய்து ,
ஆறு ஆதாரங்களை விழிக்கச் செய்து ,
பிரம்மரந்திரத்தில் அதாவது சகஸ்ராரத்தில் நுழைகிறது ;
சகஸ்ராரத்தில் உள்ள சிவனுடன் கலக்கிறது ;
இதனால் பிறப்பு , இறப்பற்ற நிலையை மனிதன் அடைகிறான் .
மரணம் அற்ற நிலையை அடைகிறான் .
மரணமில்லாப் பெருவாழ்வை அடைகிறான் .
பிறப்பு , இறப்பு என்ற சூழலில் இருந்து விடுபடுகிறான் .

மரணம் இன்றி வாழ வேண்டுமானால் ,
சுவாசத்தை வீணாக்காமல் ,
சுவாசத்தை வீணாக்காமல் இருப்பதற்கு உரிய ரகசியத்தை உணர்ந்து ,
வீணாக்காத சுவாசத்தை வைத்துக் கொண்டு ,
எவ்வாறு மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வது ,
என்பதைப் பற்றிய ரகசியங்களைத் தெரிந்து , அதனைப் பின்பற்றி அதன் வழி நடந்தால் ,
அந்த வழி முறைகளைப் பின் பற்றினால் மரணமில்லாப் பெருவாழ்வு
பெற்று வாழலாம் என்கிறார்  உரோமரிஷி .



இயேசு கிறிஸ்து - உரோமரிஷி:
இயேசு , எல்லாம் அடைந்தாலும் , ஜீவனை நஷ்டப் படுத்தினால் , ஜீவனை நஷ்டப் படுத்துவதால் ஒரு பயனும் இல்லை என்கிறார் .
அவ்வாறே,
உரோமரிஷி ஜீவனை நஷ்டப் படுத்தினால் ஒரு பயனும் இல்லை ,
ஜீவனை நஷ்டப் படுத்தாமல் சேமித்து வைப்பதால் மரணமில்லாப் பெரு வாழ்வு பெற்று வாழலாம் என்கிறார் .

                               “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                     போற்றினேன் பதிவுஎட்டு ந்தான்முற்றே “”