November 21, 2018

திருக்குறள்-பதிவு-54


                      திருக்குறள்-பதிவு-54

பைபிள் என்பது
விண்ணில் உள்ள
பிதாவைப் பற்றி
அறிந்து கொள்வதற்கான
ஒரு மதநூல்
தானே தவிர;
பைபிள் ஒன்றும்
விண்ணில் உள்ள
கோள்களைப் பற்றி
அறிந்து கொள்வதற்கான
ஒரு அறிவியல் நூல்
அல்ல; என்று சொன்ன
கலிலியோவின்
புத்தகம் மொத்தமாக
போட்டு எரிக்கப்பட்டுக்
கொண்டிருந்தது

கலிலியோவின் புத்தகத்தை
போட்டு எரிப்பதுடன்
கிறிஸ்தவ மதவாதிகளின்
கோபம் அடங்கவில்லை
எரிந்து கொண்டிருக்கும்
புத்தகத்தைச்சுற்றி
மதவாதிகள் சுற்றி வந்து
கலிலியோ ஒழிக !
சாத்தான்
கலிலியோ ஒழிக !
மதத் துரோகி
கலிலியோ ஒழிக !
என்று கோஷம்
எழுப்பினர்

சிலர் அதற்கும் மேலே
போய் கலிலியோவைக்
கொல்ல வேண்டும்;
கலிலியோவை உயிரோடு
எரிக்க வேண்டும்;
என்று கத்தி
ஆர்ப்பாட்டம் பண்ணிக்
கொண்டு இருந்தனர்

இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்
கலிலியோவிற்கு
எதிராக நாடு முழுவதும்
நடந்து கொண்டிருந்த
சமயத்தில் கலிலியோ
வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டார்.

விசாரணை
மண்டபத்தில் வைத்து
கலிலியோவை விசாரித்து
கலிலியோவை
வீட்டுக் காவலில்
வைக்க வேண்டும் என்று
தண்டனை வழங்கப் பட்டு
கலிலியோ வீட்டுக்
காவலில் வைக்கப்பட்ட
போது கலிலியோவிற்கு
வயது 69


பூமியை
மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது
என்று சொன்ன
டாலமியின் கருத்து
தவறானது என்றும்,
சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று சொன்ன
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் கருத்து
சரியானது என்றும்
நான் என்னுடைய
ஆய்வின் மூலம்
நிரூபித்து இருக்கிறேன்.

என்னுடைய கருத்து
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
இருக்கின்ற காரணத்தினால்
நான் சொன்ன கருத்து
தவறானது என்று
நீங்கள் சொல்வதை
என்னால் ஏற்றுக்
கொள்ள முடியாது

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று நான் சொன்ன
கருத்து சரிதான்
அதை என்னால்
மாற்றிக் கொள்ள
முடியாது என்று
கலிலியோ
எதற்கும் அஞ்சாமல்
போப் அவர்களின்
எச்சரிக்கைக்கும்
பயப்படாமல்
உயிரைப் பற்றி
கவலைப்படாமல்
தன்னுடைய கருத்தை
கூறிய காரணத்தினால்
விசாரணையின்
முடிவில் கலிலியோவை
மண்டியிட வைத்து
விடலாம்
என்று நினைத்த
கிறிஸ்தவ மதவாதிகள்
எண்ணம் ஈடேறவில்லை

பல்வேறு விதமான
சட்டதிட்டங்களுடன்
கடுமையான
விதிகளுடன் கலிலியோ
வீட்டுக் காவலில்
வைக்கப் பட்டார்

கலிலியோவிற்கும்
வெளி உலகத்திற்கும்
எந்தவிதத்திலும் தொடர்பு
இருக்கக் கூடாது
என்று கலிலியோவின்
வெளி உலகத்
தொடர்புகள் அனைத்தும்
துண்டிக்கப் பட்டன
வெளி உலகத்திலிருந்து
பிரிக்கப்பட்டு கலிலியோ
இந்த உலகத்திலிருந்து
தனிமைப்படுத்தப் பட்டார்

கலிலியோவிற்கு
ஆராய்ச்சி செய்வதற்கு
பல்வேறு கடுமையான
நிபந்தனைகளுடன்
அனுமதி அளிக்கப்பட்டது
அவருடைய கண்டுபிடிப்புகள்
பைபிளுக்கு எதிராக
இருக்கக் கூடாது எனவும்,
கிறிஸ்தவர்களின் மனதை
புண்படுத்தும் விதத்தில்
எந்தவிதமான கண்டுபிடிப்பும்
இருக்கக் கூடாது
எனவும் கடுமையான
நிபந்தனைகள் விதிக்கப்பட்டு
கலிலியோ ஆராய்ச்சி
செய்வதற்கு அனுமதி
அளிக்கப்பட்டது

கலிலியோ இவைகள்
எதைப் பற்றியும்
கவலைப்படாமல்
வெளி உலகத்திலிருந்து
தான் தனிமைப்
படுத்தப் பட்டிருக்கிறோம்
என்று தெரிந்தும்;
உலக தொடர்பிலிருந்து
தான் துண்டிக்கப்
பட்டிருக்கிறோம்
என்று தெரிந்தும்;
வீட்டுக் காவலில்
தனக்கு எதிராக
கடுமையான விதி
முறைகள் பின்பற்றப்
படுகின்றன
என்று தெரிந்தும்;
மோசமான சட்ட
திட்டங்கள் தனக்கு
எதிராக செயல்
படுத்தப் பட்டிருக்கிறது
என்பது தெரிந்தும்;
எவைகளைப் பற்றியும்
கவலைப்படாமல்
மண்டியிடாத
மாபெரும் விஞ்ஞானியான
கலிலியோ வீட்டுக்
காவலில் தன்னுடைய
ஆராய்ச்சிகளை தொடர்ந்து
செய்து கொண்டிருந்தார்

--------- இன்னும் வரும்
---------  21-11-2018
///////////////////////////////////////////////////////////