June 30, 2019

பரம்பொருள்-பதிவு-33


                    பரம்பொருள்-பதிவு-33

" அவனன்றி ஒரு அணுவும்
அசையாது என்ற
வாக்கிற்கேற்ப - இந்த
அண்ட சராசரங்கள்
அனைத்தையும் தன்னுடைய
ஆளுகையின் கீழ் வைத்து
காப்பாற்றி வழிநடத்திக்
கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல
அருவ நிலையில்
உள்ள பரம்பொருள்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
இருக்கிறான் என்பதை
நாம் உணர்ந்து கொள்ள
வேண்டும் என்றால்
மூன்று விஷயங்கள் நமக்கு
தெரிந்திருக்க வேண்டும் "

ஒன்று ;
" நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
இறைவன் எந்த
இடத்தில் இருக்கிறான் ? "

இரண்டு :
" இறைவனை
அடையக்கூடிய வழி எது ?"

மூன்று :
"இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது ?"

" இந்த மூன்றும் யாருக்கு
தெரிந்திருக்கிறதோ
அவரால் மட்டுமே
தன்னுடைய உடலில்
தன்னுடைய சிரசுக்குள்
இருக்கும் இறைவனை
உணர்ந்து கொள்ள முடியும் "

"இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
இருக்கிறான் என்பதை
நாம் உணர்ந்து கொள்ள
வேண்டும் என்றால் - நாம்
இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது ?
என்பதை முதலில்
தெரிந்து வைத்திருக்க
வேண்டும் "

"இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது?
என்பதை யார் ஒருவர்
தெரிந்து கொண்டு அதை
பயன்படுத்துகிறாரோ ?
அவரால் மட்டுமே
தன்னுடைய உடலில்
தன்னுடைய சிரசுக்குள்
இறைவன் எந்த
இடத்தில் இருக்கிறான்
என்பதையும் ;
இறைவனை
அடையக்கூடிய வழி எது
என்பதையும் ;
தெரிந்து கொள்ள முடியும் "

" தனக்குள் இருக்கும்
இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக் கூடியது எது
என்பதை நம்முடைய
முன்னோர்கள் ; சித்தர்கள் ;
உண்மையை உணர்ந்தவர்கள் ;
அறிவு விளக்கம் பெற்றவர்கள் ;
சமாதியில் திளைத்தவர்கள் ;
ஞானத்தை சுவைத்தவர்கள் ;
முக்தியின் வாசலைத்
தட்டியவர்கள் ;
தங்களுடைய பாடல்களில்
எழுதி வைத்து இருக்கிறார்கள் ;
பல்லாயிரக்கணக்கான
பாடல்களில் இறைவனை
அடைவதற்கு பயன்படுத்தக்
கூடியது எது ? என்பதை
எழுதி வைத்து
இருக்கிறார்கள் "

" இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது
என்பதை உணர்ந்தாலும்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
இறைவன் எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
கண்டறிவது
மிகவும் கடினம்?"

" பார்க்க முடியாத இடத்தில்
இருக்கும் ஒன்றை  ;
இதுவரை பார்த்திராத
ஒன்றை ;
எப்படி நம்மால் நினைத்து
பார்க்க முடியும்
கற்பனை செய்து கூட
பார்க்க முடியாது "

" இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது
என்பதை பலவித
சோதனைகளுக்குப் பிறகு
தெரிந்து கொண்டு
அதனைப் பயன்படுத்தி
தொடர்ந்து பயிற்சி
செய்து வருபவர்கள்
இறைவன் தன்னுடைய
உடலில் எந்த
இடத்தில் இருக்கிறான்;
இறைவனை அடையக்கூடிய
வழி எது ;என்ற
இரண்டையும் தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகவும் ;
இந்த இரண்டையும்
தெரிந்து கொண்டு
அதனைப் பயன்படுத்தி
இறைவனுடன் இரண்டறக்
கலந்து முக்தி அடைய
வேண்டும் என்ற உயர்ந்த
நோக்கத்திற்காகவும் ;
வடிவமைக்கப்பட்டது தான்
சிவலிங்கம்"

" ஆமாம் சிவலிங்கம்
என்பது இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
சுட்டிக்காட்டும் குறியீடாக
இருப்பது தான்
சிவலிங்கம் ;"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 30-06-2019
//////////////////////////////////////////////////////////


June 27, 2019

பரம்பொருள்-பதிவு-32


                      பரம்பொருள்-பதிவு-32

" இந்த உலகத்தில்
இறைவன்
அருஉருவ நிலை ;
உருவ நிலை ;
அருவ நிலை ;
என்ற மூனறு நிலைகளில்
வெளிப்பட்டு
பக்தர்களுக்கு
அருள் வழங்கிக்
கொண்டிருந்தாலும்
அன்றும்; இன்றும்; என்றும்;
இறைவன் இருப்பது
அருவநிலையில் தான் ;"

" இறைவன்
அருவநிலையில் இருக்கிறான்
என்பதையும் ;
இந்த உலகம்
முழுவதும் இறைவன்
அருவநிலையில் விளங்கி  
இந்த உலகத்தை காப்பாற்றிக்
கொண்டிருக்கிறான்
என்பதையும் ;
அருவநிலையில் உள்ள
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
அருவமாகவே மாறும்போது
பிறப்பு; இறப்பு; கிடையாது
என்பதையும் ;
இந்த உலகத்தில்
உள்ளவர்கள் அனைவரும்
உணர்ந்து கொள்ள வேண்டும்
என்ற நோக்கத்திற்காக
வடிவமைக்கப்பட்டது தான்
"சிவலிங்கம்" ; "

"உலகத்தில் உள்ள
அனைத்து இந்துமதக்
கோயில்களில் உள்ள
கடவுள் சிலைகள்
அருஉருவ நிலையில்
உள்ளவை ;
அதாவது கடவுள் சிலை
உருவத்தைக் கொண்டது ;
அதில் கடவுள்
அருவ நிலையில்
வாசம் செய்து பக்தர்களுக்கு
அருள் வழங்கிக்
கொண்டிருக்கிறான்;"

" ஆனால் சிவலிங்கத்தின்
கடவுள் சிலை
உருவமற்றது  ;
அதாவது சிவலிங்கம்
அருவ நிலையில் உள்ளது ;
அருவ நிலையில்
உள்ள சிவலிங்கத்தில்
கடவுள் அருவநிலையில்
வாசம் செய்கிறான் ;
இதனால் சிவலிங்கத்தில்
இறைவன் அருவ - அருவ
நிலையில் வெளிப்பட்டு
பக்தர்களுக்கு
அருள் வழங்கிக்
கொண்டு இருக்கிறான் "

"இது தான்
இந்து மதத்தில்
இந்துமதக் கோயில்களில்
உள்ள அனைத்து
கடவுள் சிலைகளுக்கும்
சிவலிங்கத்திற்கும்
உள்ள முக்கியமான
வேறுபாடு ஆகும் "

" அருஉருவ நிலையில்
உள்ள கடவுள் சிலைகளை
வணங்கும் போது
அருஉருவ கடவுள்
சிலையில் உள்ள
உருவம் மறைந்து
அருவத்திற்குள் நுழைந்த
பின்பு தான் அருஉருவ
கடவுள் சிலையை
வணங்குகிறவன்
அருவமாகவே மாறுகிறான் "

" ஆனால் சிவலிங்கத்தை
வணங்குகிறவன்
அருவத்திலிருந்து
நேரடியாக அருவத்திற்குள்
நுழைந்து விடுவதால்
நேரடியாகவே அருவமாக
மாறுகிறான் "

" அருவமாக இருக்கக்கூடிய
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
அருவமாகவே மாறுவதற்கு
எளிய வழி
" சிவலிங்கம் "
மட்டுமே ஆகும் "

"சிவலிங்கம் என்பது
ஒரு கடவுள் சிலை
மட்டுமல்ல ;
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தங்களுக்கு வேண்டியதை
பெற்றுக் கொண்டு
தங்களுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்வதற்காக
வடிவமைக்கப்பட்டது
மட்டுமல்ல ;
சிவலிங்கம் என்பது
மிகப்பெரிய ரகசியத்தை
வெளிப்படுத்தும் குறியீடு
மட்டுமல்ல ;
மிகப்பெரிய பிரம்ம
ரகசியத்தை தன்னுள்
கொண்டு - இந்த உலகத்தில்
உள்ள மக்கள் அனைவரும்
புரிந்து கொண்டு பின்பற்றி
உயர்வடைய வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்தில்
வடிவமைக்கப்பட்டது தான்
" சிவலிங்கம் "

" பிரம்ம ரகசியம்
பிரம்ம ரகசியம்
என்று சொல்லிக் கொண்டு
கடவுளை உணராமல்
கடவுளை உணர்ந்தவன்
போல் காட்டிக் கொண்டு
திரிபவர்கள் மத்தியில் ;

" கடவுளை அடையக்கூடிய
வழிகள் அனைத்தும்
அடைக்கப்பட்டு
வைக்கப்பட்டு
உள்ள நிலையில் ;

" சுயநலவாதிகளாலும்
வியாபாரிகளாலும்
மதவாதிகளாலும்
ஆன்மீகவாதிகளாலும்
சொற்பொழிவாளர்களாலும்
கடவுளை அடையக்கூடிய
வழிகள் சிக்கலாக்கி
வைக்கப்பட்டு உள்ள
நிலையில் "

"அருவ நிலையில் உள்ள
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
அருவத்தில் கரைந்து
அருவமாகவே மாறி
முக்தி அடையக்கூடிய
வழி வகையினை
இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும்
புரிந்து கொள்ளும் வகையிலும்
எளிமையாக அனைவரும்
காணும் வகையிலும்
சிவலிங்கம் என்னும்
கடவுள் சிற்பமாக செதுக்கி
வைத்துவிட்டு சென்ற
நம் முன்னோர்களின்
மெய்ஞ்ஞான அறிவு
போற்றுதலுக்குரியதாகும் ;"

" பல்வேறு விதமான
அதிசயிக்கத் தக்க
பிரம்ம ரகசியங்கள்
பலவற்றை தன்னுள் கொண்ட
சிவலிங்கத்தை அறிவதற்காக
சிவலிங்கமாகவே
மாறிக் கொண்டிருக்கிறோம்……..?"
சிவலிங்கமாகவே
மாறிக் கொண்டிருக்கிறோம்……..?"
சிவலிங்கமாகவே
மாறிக் கொண்டிருக்கிறோம்……..?"

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 27-06-2019
//////////////////////////////////////////////////////////

June 26, 2019

பரம்பொருள்-பதிவு-31


                   பரம்பொருள்-பதிவு-31

“ இந்த உலகம் முழுவதும்
அருஉருவ நிலை ;
உருவ நிலை ;
அருவ நிலை ;
என்று மூன்று நிலைகளில்
வெளிப்பட்டுக்
கொண்டிருக்கக்கூடிய
இறைவனுடன் தொடர்பு
கொள்பவர்கள்
யாராக இருந்தாலும்
ஒவ்வொருவரும் தாங்கள்
அடையும் ஆன்மீக
நிலைக்கேற்ப வேண்டியதை
பெற்றுக் கொள்கின்றனர்  

1.அருஉருவ நிலை

வாழ்க்கைக்குத்
தேவையானவைகள்
வேண்டும் என்று
சாதாரண நிலையில்
உள்ள மக்கள் இறைவனை
அருஉருவ நிலையில்
வணங்குகின்றனர் “

“பணம், பதவி,
புகழ், அதிகாரம்
ஆகியவையும் ;

“ இருப்பதற்கு பெரிய வீடு
உடுக்க ஆடம்பர ஆடைகள்
உண்ணுவதற்கு
விலையுயர்ந்த உணவுகள்
ஆகியவையும் ;

“ அதிகப்படியான
சம்பளம் கொண்ட வேலை,
அளப்பறிய செல்வம்
கவலையே இல்லாத வாழ்க்கை
கஷ்டமே படக்கூடாத மனசு
நோயே வரக்கூடாத உடல்
ஆகியவையும் ;

“தான், தன்னுடைய
குடும்பம் தன்னுடைய
சந்ததிகள் வாழ்வதற்கு
தேவையான பாதுகாப்புகள்
ஆகியவையும் ;

வேண்டும் என்று
நினைப்பவர்கள்
தங்கள் ஆசைகளை
பூர்த்தி செய்து கொள்ள
வேண்டும் என்று
அருஉருவ நிலையில்
உள்ள இறைவனை நோக்கி
வணங்குபவர்களுக்கு
இறைவன் அருஉருவ
வடிவில் அவர்களுக்கு
தேவையானவைகளை
அவர்களுடைய – முன்வினை ;
முயற்சி ; பயிற்சி ;
ஆகியவைகளுக்கு
ஏற்ப வழங்குகிறான் “

“இவர்களுக்கு
பிறப்பு ; இறப்பு ; உண்டு “

2.உருவ நிலை

“ வாழ்க்கைக்குத்
தேவையானவைகளைத்
தவிர்த்து அருள் வேண்டி
இறைவனை
உருவ நிலையில்
வணங்குகின்றனர் “

“அருள் வேண்டி இறைவனை
உருவ நிலையில்
வணங்கும் போது
அருஉருவ நிலையில்
உள்ள இறைவனின்
அருவம் மறைந்து
உருவம் வெளிப்படுகிறது
உருவநிலையில் உள்ள
இறைவனை அருள் வேண்டி
வணங்குகின்றனர் “

“ஆன்மீகத்தின் ஆரம்பம்
உருவ நிலையில்
ஆரம்பித்து ;
ஆன்மீகத்தின்
இறுதி யாத்திரை
உருவத்திலேயே முடிந்தால் ;
அவர்களுக்கு
பிறப்பு ; இறப்பு ; உண்டு “

“ஆனால்
ஆன்மீகத்தின் ஆரம்பம்
உருவ நிலையில்
ஆரம்பித்தாலும் ;
ஆன்மீகத்தின்
இறுதி யாத்திரை
அருவத்தில் முடிந்தால் ;
அவர்களுக்கு
பிறப்பு ; இறப்பு ; கிடையாது”

“ வாழ்க்கைக்குத்
தேவையானவைகள்
வேண்டும் என்றால்
இறைவனின் அருள்
கிடைக்காது ;
இறைவனின் அருள்
வேண்டும் என்றால்
வாழ்க்கைக்குத்
தேவையானவைகள்
கிடைக்காது ;
இரண்டில் ஏதேனும்
ஒன்று தான் கிடைக்கும் ;
இரண்டுமே கிடைக்காது ;”

3.அருவ நிலை

“முக்தி வேண்டி
இறைவனை வணங்குபவர்கள்
அருவநிலையில்
இறைவனை வணங்குகின்றனர்
அவ்வாறு வணங்கும்
போது இறைவனின்
உருவநிலை மறைந்து
அருவநிலை வெளிப்படுகிறது “

“ஆன்மீகத்தின் ஆரம்பம்
அருவ நிலையில் ஆரம்பித்து ;
ஆன்மீகத்தின்
இறுதி யாத்திரை
அருவத்தில் முடிந்தால் ;
அவர்களுக்கு
பிறப்பு ; இறப்பு ; கிடையாது “

“வாழ்க்கைக்குத்
தேவையானவைகள்
வேண்டும் என்றால்
முக்தி கிடைக்காது ;
முக்தி வேண்டும்
என்றால் வாழ்க்கைக்குத்
தேவையானவைகள்
கிடைக்காது;
இரண்டில் ஏதேனும்
ஒன்று தான் கிடைக்கும் ;
இரண்டுமே கிடைக்காது ;

“அதாவது வாழ்க்கைக்குத்
தேவையானவைகளை
தன்னுடன் வைத்துக்
கொண்டிருப்பவர்கள் ;
கர்மாவை சுமந்து
கொண்டிருப்பவர்கள் ;
கர்மாவை சுமந்து
கொண்டிருப்பவர்களுக்கு
இறைவனின் அருளும்
முக்தியும் எப்படி
கிடைக்கும் என்பதை
சற்று சிந்தித்துப்
பார்க்க வேண்டும் “

“ இந்த உலகத்தில்
இறைவன் தன்னை
அருவ நிலை ;
உருவ நிலை ;
அருஉருவ நிலையில்;
வெளிப்படுத்தினாலும்
இறைவன் அன்றும் ;
இன்றும் ;என்றும் ;இருப்பது
ஒரே நிலையில் தான் ;
இந்த ரகசியத்தை
உணர்த்துவது தான்
சிவலிங்கம் -அதன்
ரகசியம் என்ன…………………….?

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 26-06-2019
//////////////////////////////////////////////////////////