December 04, 2019

பரம்பொருள்-பதிவு-92


             பரம்பொருள்-பதிவு-92

"அதிசய நிகழ்வுகள்
பல நிகழ்ந்து
கொண்டிருக்கும் இந்த
பிரபஞ்சத்தில் - மீண்டும்
ஒரு அதிசய நிகழ்வு
நடைபெற்றது !
ஆனால், இது யாரும்
சிந்தித்துப் பார்க்க முடியாத
வித்தியாசமான நிகழ்வு !
இந்த பிரபஞ்சத்தில்
இந்த நிகழ்வு
இதற்கு முன்னர்
நடைபெற்று இருக்கிறதா ?
என்று யோசிக்க
வைக்கும் நிகழ்வு !"

"இந்த பிரபஞ்சமே
வித்தியாசமான
நிகழ்வுகளினால்
நிரம்பி இருக்கும் போது ;
இந்த நிகழ்வும் ஒரு
வித்தியாசமான
நிகழ்வு தான் !"

"நாக கன்னிகையான
உலூபியிடம்
காதல் வயப்பட்ட
மனிதப் பிறவியான
அர்ஜுனன் உலூபியின்
காதலை ஏற்றுக் கொண்டு
உலூபியின் ஆசையை
நிறைவேற்றினான்,."

"நாக கன்னிகையான
உலூபியும் ;
மனித பிறவியான
அர்ஜுனனும் ;
ஒன்றாக இணைந்தனர் "

"இந்த நிகழ்வு தான்
பிரபஞ்சத்தின்
ஒரு அதிசயிக்கத்தக்க
நிகழ்வாக நடைபெற்றுக்
கொண்டிருந்தது"

அர்ஜுனனும் உலூபியும்

" ன்பு
மழையில் நனைந்து  ,

சை
வெள்ளத்தில் நீந்தி ,

ன்பக் கடலில் மூழ்கி ,

ந்து கொண்டனர்
மகிழ்வை
ஒருவருக்கொருவர் ;”

ள்ளத்தில் பற்றி
எரிந்த காதல் தீயை ,

துகுழல் கொண்டு
அதிகரிக்கச் செய்தனர்
இருவருடைய
பிணைப்பின் மூலம் “

ண்ணத்தில்
இருந்த காதல்

ற்றம் பெற்று
காமத்தின் உச்சத்திற்கு
சென்றது “

யம் இன்றி
அனைத்து விதமான
இன்பங்களையும் ,

ன்றாக இருந்து
துய்த்தனர் ,

ரிடத்தில்
இருந்தபடியே “

ஷதமாய் இருந்தது
அவர்களுடைய பிணைப்பு
அவர்களுடைய
காதல் நோய்க்கு “

“இ தே காதலில்
தொடங்கி காமத்தில் முடிந்த
இன்ப விளையாட்டிற்கு
உதாரணமாக இருந்தது "

"எதிர்காலத்தின் முக்கிய
நிகழ்வுகள் அனைத்தும்
அர்ஜுனனை சுற்றியே
நடக்க வேண்டி
இருந்த காரணத்தினால் ;

வரலாற்றின் முக்கிய
பக்கங்கள் அனைத்தும்
அர்ஜுனனை பற்றியே
எழுத வேண்டி
இருந்த காரணத்தினால் ;

யாரும் நினைத்து
கூட பார்க்க முடியாத
முக்கியமான
சாதனைகளை அர்ஜுனன்
நிகழ்த்த வேண்டி
இருந்த காரணத்தினால் ;

பரம்பொருளே
அர்ஜுனனுக்கு சேவை
செய்ய வேண்டி
இருந்த காரணத்தினால் ;

அதர்மத்தை அழித்து
தர்மத்தை நிலை நாட்ட
வேண்டியவர்களில்
முக்கியமான
ஒருவனாக அர்ஜுனன்
இருந்த காரணத்தினால் ;

பாண்டவர்களுடைய
புகழை உலகறியச்
செய்ய வேண்டிய
கடமை அர்ஜுனனுக்கு
இருந்த காரணத்தினால் ;

எதிர்காலக் கடமைகளின்
பொருட்டு நிகழ்கால
இன்பங்களை துறக்க
வேண்டிய முக்கிய
கடமை அர்ஜுனனுக்கு
இருந்த காரணத்தினால் ;

உலூபியுடன் அர்ஜுனன்
நீண்ட நேரத்தை
செலவிட முடியவில்லை ;"

"அன்று பகலும் இரவும்
அர்ஜுனன் உலூபியுடன்
அந்த அரண்மனையில்
தங்கினான் "

"தனக்கு நிறைய
கடமைகள் இருப்பதாலும் ;
தான் செல்ல வேண்டிய
நேரம் வந்து விட்டதாலும் ;
உலூபியை விட்டு பிரிய
வேண்டிய தருணம்
வந்து விட்டதாலும் ;
தான் பிரிந்து செல்ல
அனுமதி அளிக்க வேண்டும் ;
என்று உலூபியிடம்
கேட்டான் அர்ஜுனன் "

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 04-12-2019
//////////////////////////////////////////