February 15, 2020

பரம்பொருள்-பதிவு-132


            பரம்பொருள்-பதிவு-132

தர்மர் :
“அப்படி சொல்லாதீர்கள்
பரந்தாமா ! “

“பாலகனான அரவானை
களப்பலி கொடுக்காமல்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெறுவதற்கு
வேறு ஏதேனும்
உபாயம் இருக்கிறதா  
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகவே கேட்டேன் ? “

கிருஷ்ணன் :
“நீங்கள் என்னைப் பற்றி
முழுமையாக தெரிந்து
வைத்துக் கொண்டு
இருப்பீர்கள் என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலியாகக்
கொடுப்பதற்கு ஒப்புதல்
அளித்து இருப்பீர்கள்  ;
ஆனால் நீங்கள்
என்னைப்பற்றி முழுமையாக
தெரிந்து வைத்துக் கொள்ளாத
காரணத்தினால் தான்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலியாகக்
கொடுப்பதற்கு ஒப்புதல்
அளிக்கவில்லை “

தர்மர் :
“பரந்தாமா உங்களைப் பற்றி
எங்களுக்கு எதுவும் தெரியாது
என்று சொல்லாதீர்கள் “

"பரந்தாமா நீங்கள்
எங்களை ஒரு விஷயத்தை
செய்யச் சொன்னால் - அது
எங்களுடைய நன்மைக்காகத்
தான் இருக்கும் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

" நீங்கள் இந்த உலகத்திற்காக
ஒரு செயலைச் செய்தால்  
அந்த செயல் இந்த
உலகத்தின் நன்மைக்காகத்
தான் இருக்கும் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் ஒரு செயலை
முயற்சி எடுத்து செய்தால்  
அந்த செயல் தோல்வியில்
முடியாது என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் ஒரு செயலை
வெற்றிகரமாக முடிக்க
வேண்டும் என்று முடிவு
எடுத்து செயலில் இறங்கி
விட்டால் - அந்த செயலில்
உங்களை எதிர்த்தவர்கள்
அனைவரும் தோல்வியையே
தழுவார்கள் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் எந்த ஒரு
தேவையற்ற விஷயத்தையும்
பேச மாட்டீர்கள் என்பதும் ;
எந்த ஒரு தேவையற்ற
செயலையும் செய்ய
மாட்டீர்கள் என்பதும் ;
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் பேசும் பேச்சில்
மட்டுமல்ல - நீங்கள்
செய்யக்கூடிய ஒவ்வொரு
செயலிலும் ஆயிரம்
அர்த்தங்கள் இருக்கும் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் இல்லாமல்
செய்யப்படும் - எந்த ஒரு
செயலும் சுமூகமாக
முடியாமல் பிரச்சினையில்
தான் முடியும் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் யார் பக்கம்
இருக்கிறீர்களோ - அவர்கள்
வெற்றியைத் தவிர வேறு
எதையும் சுவைக்க
மாட்டார்கள் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"யாருக்கு வெற்றியை
அளிக்க வேண்டும்  ;
யாருக்கு தோல்வியை
அளிக்க வேண்டும் ;
என்பதை நிர்ணயிக்கக்கூடிய
மிகப்பெரும் சக்தியாக
நீங்கள் இருக்கிறீர்கள் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"உங்களை நம்பி
வந்தவர்களை - எந்த
காலத்திலும் கைவிடாமல்
அவர்களுக்காக எதையும்
செய்யத் துணிவீர்கள் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"அதனால் தான் சொல்கிறேன்
பரமாத்மா - உங்களைப் பற்றி
எங்களுக்கு எதுவும் தெரியாது
என்று சொல்லாதீர்கள்
உங்களைப் பற்றி எங்களுக்கு
நன்றாகவே தெரியும் ! "

கிருஷ்ணன் :
"தெரிந்து என்ன பயன்
நான் சொன்னவைகளுக்குத்
தான் நீங்கள் ஒப்புதல்
அளிக்கவில்லையே ”

தர்மர் :
"அரவான் பாலகன் என்ற
காரணத்தினால் தான்
நான் ஒப்புதல்
அளிக்கவில்லை - ஆனால்
நீங்கள் பேசியவைகளில்
உள்ள உண்மைகளைத்
தெரிந்து கொண்டேன் ;
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலி
கொடுக்காவிட்டால்
பாண்டவர்களால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற
முடியாது என்பதையும்
தெரிந்து கொண்டேன் ; "

"அதனால் நான்
சம்மதிக்கிறேன் "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று துரியோதனன்
அரவானைக் களப்பலியாகக்
கேட்டு வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானைக் களப்பலி
கொடுக்க சம்மதிக்கிறேன் "


----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 15-02-2020
//////////////////////////////////////////