August 05, 2020

அறிய வேண்டியவை-பதிவு-144

ஜபம்-பதிவு-636

(அறிய வேண்டியவை-144)

 

“அரக்கு

மாளிகை

சம்பவத்தில்

சாட்சியாக

இருந்த

ஒரே

ஒருவனான

புரோசனனையும்

அழித்து

விட்டேன்

இனி

பயப்பட

வேண்டிய

அவசியம்

இல்லை”

 

“மருமகனே

துரியோதனா

ஒன்றே

ஒன்றை

மட்டும்

நன்றாக

ஞாபகம்

வைத்துக்

கொள்”

 

“கடன்

விரோதி

நெருப்பு

மூன்றையும்

மிச்சம்

வைக்கக்

கூடாது

அப்படி

மிச்சம்

வைத்தால்

அந்த

மூன்றும்

வளர்ந்து

நம்மையே

அழித்து

விடும்”

 

(இச்செயலைக்

கண்ட

துரியோதனனும்

கர்ணனும்

மிகுந்த

ஆச்சரியப்பட்டனர்

சகுனியின்

செயலைக்

கண்டு

மிகுந்த

ஆச்சரியப்பட்டனர்”

 

“ஒரு

திட்டத்தை

தீட்டும்

போதும்

தீட்டிய

திட்டத்தை

செயல்

படுத்தும்

போதும்

எவ்வளவு

ஆழமாக

யோசிக்க

வேண்டுமோ

அவ்வளவு

ஆழமாக

யோசிப்பதில்

வல்லவராக

இருக்கும்

சகுனி

அந்த

திட்டத்தில்

ஏதேனும்

தவறு

நடந்து

அந்த

செயலைச்

செய்தது

நாம்

தான்

என்று

தெரிந்து

நாம்

மாட்டிக்

கொள்ளக்

கூடிய

சூழ்நிலை

ஏற்பட்டால்

அதை

சரி

செய்து

மாட்டிக்

கொள்ளாமல்

இருப்பதற்கு

தேவையான

விஷயங்களைச்

செய்வதில்

வல்லவராகவும்

இருக்கின்ற

சகுனியைக்

கண்டு

துரியோதனனும்

கர்ணனும்

வியந்தனர்”

 

அறிய வேண்டியவை

“இந்த

நிகழ்வின்

மூலம்

நாம்

அறிய

வேண்டிய

உண்மை

என்னவென்றால்

நமக்கு

பிடிக்காதவருக்கு

எதிராக

ஒரு

செயலைச்

செய்வதற்காக

நாம்

ஒரு

திட்டத்தை

தீட்டி

அதை

செயல்படுத்தும்

போது

அதில்

தவறு

நடந்து

நாம்

தான்

செய்தோம்

என்பது

தெரிந்து

நாம்

மாட்டிக்

கொள்ளக்கூடிய

சூழ்நிலை

ஏற்பட்டால்

அதை

சரி

செய்து

நாம்

மாட்டிக்

கொள்ளாமல்

இருப்பதற்கு

தேவையான

விஷயங்களைச்

செய்ய

வேண்டும்

என்பதைத்

தான்

இந்த

நிகழ்வு

நமக்கு

விளக்குகிறது”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


அறிய வேண்டியவை-பதிவு-143

ஜபம்-பதிவு-635

(அறிய வேண்டியவை-143)

 

புரோசனன் :

“ஏற்றுக்

கொள்கிறேன்”

 

சகுனி :

“யார்

அங்கே”

 

(பணிப்பெண்

வருகிறாள்)

 

சகுனி :

“பால்

கொண்டு வா”

 

(பணிப்பெண் ஒரு

பாத்திரத்தில்

பாலைக்

கொண்டு

வந்து

வைக்கிறாள்

சகுனி அதில்

விஷத்தைக்

கலக்குகிறான்)

 

சகுனி :

“புரோசனா

எனக்கு மிகவும்

பிடித்தமானவனே

என்னுடைய

விசுவாசியாய்

இருப்பவனே

என்னுடைய

நம்பிக்கைக்கு

உரியவனாய்

இருப்பவனே

காந்தாரத்தின்

உளவுப்படை

தலைவனே

உன்னுடைய

சேவையை

மனதில்

கொண்டு தான்

அதிக அளவு

மரண

வேதனையை

அளிக்கும்

படியான

மரணத்தை

உனக்குத்

தராமல்

வலியில்லாத

எளிமையான

மரணத்தை

உனக்கு

அளிக்கிறேன்”

 

“இல்லை

என்றால்

நீ செய்த

தவறுக்கு

உன்னுடைய

மரணம்

யாரும்

நினைத்து கூட

பார்க்க

முடியாத

அளவிற்கு

பயங்கரமானதாக

இருக்கும்”

 

“இந்த

பாலைக்

குடித்து

உன்னுடைய

வாழ்வை

முடித்துக் கொள்

இந்த உலகத்தை

விட்டு சென்று

இளைப்பாறு”

 

(புரோசனன்

மறுப்பேதும்

சொல்லாமல்

கிண்ணத்தில்

இருந்த பாலைக்

குடிக்கிறான்

சிறிது நேரத்தில்

இறக்கிறான்)

 

(இக் காட்சியைக்

கண்ட

கர்ணனும்

துரியோதனனும்

அமைதியாக

நின்று

கொண்டிருந்தனர்

சகுனி

துரியோதனன்

அருகில்

சென்று

பேசுகிறான்)

 

சகுனி :

“நாம்

எப்போது

ஒரு சதித்

திட்டத்தை

தீட்டி

அதை

எதிரிகளுக்கு

எதிராக

செயல்

படுத்துகிறோமோ

அந்த

சதித்திட்டத்தை

எதிரிகளுக்கு

எதிராக

திட்டமிட்டு

செயல்படுத்தியது

நாம் தான்

என்று

தெரியக்கூடிய

சூழ்நிலை

ஏற்பட்டால்

அத்திட்டம்

யார்

மூலமாக

வெளிப்பட்டால்

நாம்

எல்லோரும்

மாட்டிக்

கொள்வோமோ

அந்த நபரை

உயிரோடு

விடக்கூடாது

அழித்து

விட வேண்டும்

அப்போது

தான்

நாம்

மாட்டாமல்

இருப்போம்”

 

“அழிக்க

வேண்டியவைகளை

அழிக்க

வேண்டிய

தருணத்தில்

அழிக்கவில்லை

என்றால் 

நாம்

அழிந்து

விடுவோம்

அதனால்

அழிக்க

வேண்டியவனான

புரோசனனை

அழிக்க

வேண்டிய

தருணத்தில்

விஷம்

கொடுத்து

அழித்தேன்”

 

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


அறிய வேண்டியவை-பதிவு-142

ஜபம்-பதிவு-634

(அறிய வேண்டியவை-142)

 

சகுனி :

“ஆமாம் உலகம்

அப்படித் தான்

சொல்கிறது

பாண்டவர்கள்

உயிரோடு

இருக்கிறார்கள்

என்று

ஆனால் நீ

சொல்கிறாய்

பாண்டவர்கள்

இறந்து

விட்டார்கள்

என்று”

 

புரோசனன் :

“பாண்டவர்கள்

இறந்து விட்டார்கள்

பாண்டவர்கள்

உயிரோடு

இருப்பதற்கு

வாய்ப்பே

கிடையாது

பாண்டவர்கள்

உயிரோடு

இருக்கிறார்கள்

என்றால்

எங்கோ

தவறு நடந்து 

விட்டிருக்கிறது

என்று பொருள்”

 

சகுனி :

“உன்னையும்

அறியாமல்

தவறு நடந்து

இருக்கிறதா

அல்லது

உன்னை அறிந்து

யாரிடமாவது

காட்டிக்

கொடுத்தாயா”

 

புரோசனன் :

“அரக்கு மாளிகை

சம்பவத்தில்

எனக்குத்

தெரியாமல்

எங்கோ தவறு

தான் நடந்து

இருக்கிறது

துரோகம் செய்ய

வேண்டும் என்ற

எண்ணமோ

காட்டிக் கொடுக்க

வேண்டும் என்ற

எண்ணமோ

எனக்கு

எப்போதும்

ஏற்பட்டதே

இல்லை”

 

சகுனி :

“நான் உன்னை

செய்யச் சொன்ன

விஷயம் எவ்வளவு

முக்கியத்துவம்

வாய்ந்தது

என்பது உனக்குத்

தெரியும் அல்லவா?”

 

“விஷயம் வெளியே

தெரிந்தால் எங்கள்

அனைவருக்கும்

ஆபத்து என்பது

உனக்குத் தெரியும்

அல்லவா”

 

“அரக்கு மாளிகை

சம்பவத்தில் தவறு

நடந்தாலோ

 

அல்லது

 

அரக்கு மாளிகை

சம்பவத்திற்கு

நாங்கள் தான்

காரணம் என்று

நீ என்னை

காட்டிக்

கொடுத்தாலோ

மாட்டிக் கொள்வது

நாங்கள் தான்

என்று உனக்குத்

தெரியும் அல்லவா?”

 

“அப்படி

தெரிந்திருந்தும்

ஏன் இப்படி

நடந்து

கொண்டாய்”

 

“உன்னுடைய

கவனக்

குறைவினால்

தவறு

நடந்திருந்தாலோ

அல்லது

தீட்டிய திட்டத்தை

யாருக்கேனும்

காட்டிக்

கொடுத்திருந்தாலோ

மாட்டிக் கொள்வது

நாங்கள் தான்

என்ற நிலை

இருக்கும் போது

இரண்டிற்கும்

தண்டனை என்பது

ஒன்று தானே”

 

“என்ன தண்டனை

என்பது உனக்குத்

தான் தெரியுமே

புரோசனா”

 

புரோசனன் :

“மரணம் தான்

தண்டனை”

 

சகுனி :

“மரண

தண்டனையைத்

தான் நான்

இப்போது

உனக்கு அளிக்கப்

போகிறேன்”

 

புரோசனன் :

“நடந்து விட்ட

தவறுக்கு எனக்கு

மன்னிப்பு

கிடையாதா?”

 

சகுனி :

“தவறு என்று

எடுத்துக்

கொண்டால்

மன்னிக்கக்

கூடிய தவறு

மன்னிக்க முடியாத

தவறு என்று

இரண்டு தவறுகள்

இருக்கிறது”

 

“இந்த உலகத்தில்

பெரும்பாலோர்

செய்யும் தவறு

மன்னிக்கக்கூடிய

தவறாக

இருக்கின்ற

காரணத்தினால்

மன்னித்து

விடலாம்

ஆனால் நீயோ

மன்னிக்க

முடியாத

தவறை

செய்திருக்கிறாய்

அதனால்

உனக்கு

மன்னிப்பு என்பதே

கிடையாது”

 

“மரணத்தை

சந்திக்க

தயாராக இரு

புரோசனா

மரணம் உன்னை

நெருங்கிக்

கொண்டிருக்கிறது “

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////