April 14, 2018

தமிழ் புத்தாண்டு வாழ்த்து மடல்-14-04-2018


தமிழ் புத்தாண்டு வாழ்த்து மடல்-14-04-2018

ஒவ்வொரு புத்தாண்டு
பிறக்கும் போது
உலகில் உள்ள
மக்கள் அனைவரும்
இறைவனிடம் கேட்பதை
இரண்டு விஷயங்களில் பிரித்து
விடலாம்

ஒன்று : சென்ற வருடம் தான்
         கஷ்டமான வருடமாக
         இருந்தது
         இந்த வருடமாவது
         சந்தோஷமான வருடமாக
         இருக்க வேண்டும்

இரண்டு : சென்ற வருடம்
          எப்படி சந்தோஷமான
          வருடமாக இருந்ததோ
          அப்படியே இந்த வருடமும்
          சந்தோஷமாக இருக்க
          வேண்டும்

இந்த இரண்டு விஷயங்களில்
ஏதாவது ஒன்றைத் தான்
உலகில் உள்ள மக்கள்
அனைவரும்
விரும்புகின்றனர்
இறைவனிடம் கேட்கின்றனர்.

இதிலிருந்து நாம்
ஒன்றே ஒன்றைத்
தெரிந்து கொள்ளலாம்
மக்கள் அனைவரும்
விரும்புவது
கஷ்டம்,  கவலை, கண்ணீர்
இல்லாத வாழ்க்கை
வாழ வேண்டும்
என்பதைத் தான்

அதாவது சுருக்கமாக சொல்ல
வேண்டும் என்றால்
அனைவர் மனங்களிலும்
உள்ளது
ஒன்றே ஒன்று தான்
அதாவது சந்தோஷமாக இருக்க
வேண்டும் என்பது தான்

கஷ்டம், கவலை, கண்ணீர்
இல்லாத வாழ்க்கையில்
எதையும் கற்றுக் கொள்ள
முடியாது

நம் வாழ்க்கையில் கஷ்டம்
வரும் போது தான்
உண்மையான நண்பர்கள்
யார் என்று தெரிந்து
கொள்ள முடியும்

நம் வாழ்க்கையில் கவலை
வரும் போது தான்
கணவனின் அன்பும்
மனைவியின் பாசமும
தெரிந்து கொள்ள முடியும்

கண்ணீலிருந்து கண்ணீர்
சிந்தும் போது தான்
அதை துடைக்கும்
சொந்தக் காரர்களுடைய
கரம் யாருடைய கரம்
என்று தெரிந்து
கொள்ள முடியும்

கஷ்டம், கவலை, கண்ணீர்
என்பது வாழ்க்கையில்
இல்லாவிட்டால்
வாழ்க்கையில் நாம் எதையும்
கற்றுக் கொள்ளவும் முடியாது
அனுபவம் என்ற
ஒன்றையும் பெற முடியாது

கஷ்டம், கவலை, கண்ணீர்
இல்லாத வாழ்க்கை
வேண்டும்  என்று
ஒவ்வொருவரும் அவரவர்
தங்கள் இறைவனிடம்
கேட்டு அதை
இறைவன் கொடுத்து
இருந்தால்
அனைவரும் சந்தோஷமாக
அல்லவா இருந்திருக்க
வேண்டும்

அனைவரும் வேண்டும்
வேண்டுதல்களிலிருந்து
அனைவரும்
சந்தோஷமாக இல்லை
அதனால் இறைவனிடம்
தொடர்ந்து சந்தோஷமாக
இருக்க தங்களுக்கு
அருள் வழங்க வேண்டும்
என்று கேட்கிறார்கள்
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்

இறைவனிடம்
கேட்கும் போது
கஷ்டம், கவலை, கண்ணீர்
இல்லாத வாழ்க்கை வேண்டும்
என்று கேட்கக் கூடாது
வாழ்க்கையில்
கஷ்டம் வந்தால்
அதைத் தாங்கும்
சக்தியைக் கொடு என்று
தான் கேட்க வேண்டும்

அவ்வாறு கஷ்டத்தை
தாங்கக்கூடிய சக்தியை
எனக்குக் கொடு
இறைவா என
கேட்டுப் பாருங்கள்
சக்தியைத் தாங்கக்கூடிய
சக்தியைத் தருவது
மட்டுமல்ல
அந்த சக்தியைத் தாங்கும்
துணையாக இறைவன்
நம்முடனே இருப்பதை
உணர்ந்து கொள்ளலாம்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்-14-04-2018

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்