June 07, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-19


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-19

இராமாயணத்தை
எடுத்துக் கொண்டால்
சீதையை மட்டும்
பத்தினியாக பார்த்த நாம்
ஒரு முக்கிய கதாபாத்திரம்
பத்தினியாக இருந்ததை
நாம் மறந்து விட்டோம்

அவள் தான் ஊர்மிளா
ஊர்மிளா ஜனகர்
மகாராஜாவின் மகள்

ஜனகர் உழுத போது
ஒரு பெட்டி கிடைத்தது
அதைத் திறந்து
பார்த்தபோது
அந்த பெட்டியில் ஒரு பெண்
குழந்தை இருந்தது
அது மகாலட்சுமி
மாதிரி இருந்தது
ஜனகர் சீதை
என்று பெயரிட்டார்.

ஆறு மாதம் கழித்து
ஜனகருக்கும் அவருடைய
மனைவி ஸுநயனிக்கும்
பிறந்தவள் தான் ஊர்மிளா

இராமர் சீதா தேவியை
திருமணம் செய்து கொண்டார்
ஜனகருடைய மகள்
ஊர்மிளாவை
இலட்சுமணர் திருமணம்
செய்து கொண்டார்
ஜனகருடைய தம்பி
குசத்துவசருடைய
மகள் மாண்டவியை பரதர்
திருமணம் செய்து கொண்டார்
மாண்டவியின் தங்கை
சுருத கீர்த்தியை
சத்ருக்னர் திருமணம்
செய்து கொண்டார்

கைகேயி இராமரை
காட்டுக்கு போக
சொன்னபோது
இராமருடன்
தானும் வருவேன்
என்று சீதை சொன்னதால்
இராமர் சீதையை
அழைத்துச் சென்றார்
அண்ணணுக்கு  
சேவை செய்ய தானும்
செல்ல வேண்டும்
என்று இலட்சுமணர்
சொன்னதால்
இலட்சுமணர் இராமருடன்
கூட சென்றார்

ஆனால்
இலட்சுமணர்
இராமருடன் கூட
சென்றபோது
மனைவி ஊர்மிளாவை
கூட்டிக் கொண்டு
செல்லவில்லை

இராமர் தன் மனைவியை
கூட்டிக் கொண்டு
சென்ற போது
இலட்சுமணரும்
தன் மனைவியை
கூட்டிக் கொண்டு
சென்றிருக்க வேண்டும்
ஆனால் அவர்
கூட்டிக் கொண்டு
செல்லவில்லை

இராமராவது சொல்லி
இருக்க வேண்டும்
ஊர்மிளாவை அழைத்து
கொண்டு வா என்று
சீதையாவது சொல்லி
இருக்க வேண்டும்
ஊர்மிளாவை அழைத்து
கொண்டு வா என்று
யாரும் சொல்லவில்லை

யாரும் சொல்லவில்லை
என்றாலும்
இலட்சுமணராவது
ஊர்மிளாவை அழைத்து
கொண்டு சென்றிருக்க வேண்டும்
ஆனால் இலட்சுமணரும்
அழைத்து செல்லவில்லை

அனைவரும் புதிதாக
திருமணம் ஆனவர்கள்
சீதையும் இளம் மனைவி
ஊர்மிளாவும் இளம் மனைவி
சீதை கணவருடன்
சென்ற போது
ஊர்மிளா மட்டும் எப்படி
கணவரை விட்டு
பிரிந்து இருப்பாள்

ஊர்மிளா மனம்
எப்படி வருத்தப்பட்டிருக்கும்
கணவரை பிரிந்து
தவித்த தவிப்பு
வருந்திய துயரம்
பட்ட கவலை
ஆகியவற்றை
வார்த்தைகளால்
சொல்ல முடியாது
கணவரை பிரிந்து
எவ்வளவு வேதனை
அனுபவித்திருப்பாள்

அதுவும் கணவரை
விட்டு பிரிந்து
பதினான்கு வருடங்கள்
தனிமையில்
அதுவும் சகல
வசதிகளுடன் கூடிய
அரண்மனையில்
எப்படி தனிமையில்
இருந்திருப்பாள்

எவ்வளவு செல்வங்கள்
இருந்தால் என்ன
எவ்வளவு பணியாட்கள்
இருந்தால் என்ன
கணவன் உடன் இல்லை
என்றால் எப்படி மனம்
உளைச்சல் அடைந்திருக்கும்

ஆனால் அவள்
கணவனை நினைத்து
பதினான்கு வருடங்கள்
தனிமையில் இருந்திருக்கிறாள்
கணவனையே நினைத்து
வருந்தியிருக்கிறாள்
பத்தினி தெய்வமாகவே
வாழ்ந்திருக்கிறாள் ஊர்மிளா

ஆனால் இவ்வளவு
பெருமை வாய்ந்த
ஊர்மிளாவை
நாம் பத்தினி என்று
பார்க்கத் தவறி விட்டோம்

ஊர்மிளாவை
நாம் பத்தினியாக
பார்க்கத் தவறியது
நம்முடைய குற்றம்
என்பதை நாம்
நினைவில் கொள்ள
வேண்டும்

----------இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////