November 11, 2022

திறக்குறள்- பதிவு-3--கற்க கசடற

 திறக்குறள்-

பதிவு-3--கற்க

கசடற

 

ஒருவன் பல

பேருடன் போரிட

விரும்பி

பல பேர்கள்

ஒன்றாக சேர்ந்து

தன்னுடன்

போரிட வேண்டும்

என்று

போரிட அழைத்தால்

ஷத்திரிய

தர்மத்தின்படி

போரிட்டுத் தான்

ஆக வேண்டும்

 

இருந்தாலும்

அவர்கள்

அனைவரும்

அபிமன்யுவிடம்

நீ சிறியவன்

யாரேனும் உனக்கு

சமமாக இருந்தால்

அவர்களிடம்

சென்று

ஒரு ஓரமாக

நின்று கொண்டு

சண்டையிடு

 

எங்களுடன் சமமாக

நிற்பதற்குக்கூட

உனக்குத்

தகுதியில்லை

அனைவரும்

ஒன்று சேர்ந்து

உன்னுடன் போரிட

வேண்டும் என்று

போரிட அழைக்காதே

 

தவறானதை

பேசினாய்

தவறாக நடந்து

கொண்டாய்

எப்படி பெரியவர்களிடம்

பேச வேண்டும்

என்று உனக்குத்

தெரியவில்லை

எப்படி

பெரியவர்களுக்கு

மரியாதை

கொடுக்க வேண்டும்

என்பது உனக்குத்

தெரியவில்லை

இருந்தாலும்

நாங்கள்

உன்னை மன்னித்து

விடுகிறோம்

இங்கிருந்து

சென்று விடு

என்றனர்

 

அபிமன்யு அதை

காதில் வாங்கிக்

கொள்ளாமல்

அவர்கள்

அனைவரும்

ஒன்று சேர்ந்து

தன்னுடன்

போரிட வேண்டும்

என்று போரிட

அழைத்தான்

 

வேறு

வழியில்லாமல்

ஷத்திரிய தர்மத்தைக்

காப்பாற்ற

வேண்டும்

என்பதற்காக

ஆறு மகாவீரர்கள்

ஒன்றுசேர்ந்து

தனி ஆளாக

இருக்கும்

அபிமன்யுவுடன்

போரிட்டனர்

 

துரோணர் முதலிய

ஆறு மகாவீரர்கள்

ஒன்றாகப்

போரிட்டு

அபிமன்யுவைக்

கொல்லவில்லை

 

தான் என்ற

ஆணவத்துடன்

தன்னைவிட

வீரத்தில்

சிறந்தவர்கள்

யாரும் இல்லை

என்ற நினைப்பில்

அபிமன்யு

அனைவரையும்

ஒன்று சேர்ந்து

தன்னுடன்

போரிட வேண்டும்

என்று போரிட

அழைத்ததே
அபிமன்யு

கொல்லப்பட்டதற்குக்

காரணம்

 

சக்கரவி யூகத்தை

விட்டுவெளியே

வரத் தெரியாமல்

உள்ளே சென்று

தான் என்ற

ஆணவம் கொண்டு

தன்னைவிட

வீரத்தில் சிறந்தவர்

யாரும் இல்லை

என்ற நினைப்பில்

அனைவரும்

ஒன்று சேர்ந்து

தன்னுடன் போரிட

வேண்டும் என்று

போரிட அழைத்ததே

அபிமன்யு

கொல்லப்பட்டதற்குக்

காரணம்

 

ஒரு விஷயத்தை

அரை குறையாகக்

கற்றுக் கொண்டு

தான் என்ற

ஆணவத்துடன்

அந்த

விஷயத்தில்

ஈடுபட்டதே

அபிமன்யு

கொல்லப்பட்டதற்குக்

காரணம்

 

ஒருவிஷயத்தை

அரைகுறையாக

கற்றுக் கொண்டு

தான் என்ற

ஆணவத்துடன்

அந்த விஷயத்தில்

ஈடுபட்டால்

அது நமக்கு

அழிவைத்

தான் தரும்

ஒரு விஷயத்தை

முழுமையாகக்

கற்றுக் கொண்டு

தான் என்ற

ஆணவம் இல்லாமல்

அந்த

விஷயத்தில்

ஈடுபட்டால்

அது நமக்கு

வெற்றியைத்

தான் தரும்

 

என்பதைத் தான்

திருவள்ளுவர்

தன்னுடைய

 

கற்க கசடறக்

கற்பவை

கற்றபின்

நிற்க

அதற்குத்தக

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவுபடுத்துகிறார்

 

-------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

----10-11-2022

----வியாழக்கிழமை

 

/////////////////////////////////////////

 

திறக்குறள்- பதிவு-2-கற்க கசடற

 திறக்குறள்-

பதிவு-2-கற்க

கசடற

 

கண் முன்னே

நடந்து கொண்டிருக்கும்

விஷயத்தை

தடுக்க முடியாமல்

என்ன செய்வது

என்று தெரியாமல்

அனைவரும்

அபிமன்யுவைப்

பின் தொடர்ந்து

சென்றனர்

 

அபிமன்யு

சக்கர வியூகத்தை

உடைத்து உள்ளே

சென்றவுடன்

சக்கர வியூகம்

மூடிக் கொண்டது

 

அது மட்டுமல்லாமல்

ஜயத்ரதன்

பாண்டவப் படையில்

உள்ளவர்கள் யாரும்

அபிமன்யுவைப்

பின் தொடர்ந்து

செல்ல முடியாமல்

தடுத்து

நிறுத்தி விட்டான்

 

அர்ஜுனனைத்

தவிர்த்து மற்ற

பாண்டவர்களை

ஒரு நாள் மட்டும்

போரில் தடுத்து

நிறுத்தும் வரத்தை

சிவனிடம்

இருந்து

ஜயத்ரன்

பெற்றிருந்தான்

 

இந்த சந்தர்ப்பத்தை

தனக்கு சாதகமாக

பயன் படுத்திக்

கொண்ட

ஜயத்ரதன்

சிவனிடமிருந்து

பெற்ற வரத்தைப்

பயன்படுத்தி

அர்ஜுனனைத்

தவிர்த்து

மற்ற பாண்டவர்களை

மட்டுமில்லாமல்

பாண்டவப் படையின்

தலைமைத் தளபதி,

திருஷ்டத்யும்னன்

சாத்யகி

சிகண்டி

விராடன்

துருபதன்

திரௌபதியின்

புதல்வர்கள்

பாண்டவப்

படையினர் என்று

ஒருவர் விடாமல்

தனி ஒரு

ஆளாக

தனித்து நின்று

தன்னுடைய

வீரத்தாலும்

அறிவாலும்

தான்பெற்ற

கல்வியாலும்

தன்னிடமிருந்த

அஸ்திரத்தாலும்

அனைவரையும்

அன்று ஒருநாள்

முழுவதும்

சக்கரவியூகத்திற்குள்

செல்ல விடாமல்

தடுத்து

நிறுத்தினான்

 

சக்கர வியூகத்தில்

அபிமன்யு மாட்டிக்

கொண்ட போதும்

சும்மா இருக்காமல்

தான் என்ற

ஆணவத்துடன்

தன்னை விட

வீரத்தில் சிறந்தவர்

யாரும் இல்லை

என்ற மமதையில்

துரியோதனன்

துச்சாதனன்

கர்ணன்

அஸ்வத்தாமன்

துரோணர்

கிருபர்

என்று அனைவரும்

தன்னுடன் ஒன்று

சேர்ந்து போரிட

வேண்டும் என்று

போரிட

அழைத்தான்

 

போரின் நியதிப்படி

ஒருவன் ஒருவனுடன்

நேருக்கு நேர்

நின்று போரிட

வேண்டும்

அல்லது

பலபேர்கள்

ஒன்றாகச் சேர்ந்து

தன்னுடன்

போரிட வேண்டும்

என்று

தனி ஒருஆள்

அழைத்தால்

போரிட வேண்டும்

 

அபிமன்யு தனி

ஒருவனுடன்

போரிடாமல்

பலபேர்கள் ஒன்றாக

சேர்ந்து தன்னுடன்

போரிட வேண்டும்

என்று போரிட

அழைத்தான்

 

நீங்கள்

உண்மையாகவே

ஷத்திரியர்களாக

இருந்தால்

உங்களுக்கு வீரம்

என்ற ஒன்று

இருந்தால்

அனைவரும்

ஒன்றாக சேர்ந்து

என்னிடம்

சண்டையிட்டுப்

பாருங்கள்

நீங்கள் அனைவரும்

ஒன்றாக சேர்ந்து

சண்டையிட்டாலும்

என்னை உங்களால்

வெற்றி கொள்ள

முடியாது

 

ஏனென்றால்

உங்கள்

அனைவருக்கும்

வீரம் என்பதே

கிடையாது என்று

தான் என்ற

ஆணவத்துடன்

தன்னை விட

வீரத்தில் சிறந்தவர்

யாரும் இல்லை

என்ற நினைப்பில்

ஆணவமாகப்

பேசினான்

 

-------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

----10-11-2022

----வியாழக்கிழமை

 

/////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திறக்குறள்- பதிவு-1-கற்க கசடற

 திறக்குறள்-

பதிவு-1-கற்க

கசடற

 

“”கற்க கசடறக்

கற்பவை

கற்றபின்

நிற்க

அதற்குத் தக””

 

------திருக்குறள்

------391

-----திருவள்ளுவர்

 

கற்க

வேண்டியவற்றைக்

கசடறக்

கற்க வேண்டும்

கற்ற பிறகு

அதன் வழி

நிற்க வேண்டும்

என்பதே

இத் திருக்குறக்கு

பொதுவாக

சொல்லப்படும்

கருத்து

 

ஒரு விஷயத்தை

அரை குறையாகக்

கற்றுக் கொண்டு

தான் என்ற

ஆணவத்துடன்

அந்த விஷயத்தில்

ஈடுபட்டால்

அது அழிவைத்

தான் தரும்

ஒரு விஷயத்தை

முழுமையாகக்

கற்றுக் கொண்டு

தான் என்ற

ஆணவம் இல்லாமல்

அந்த விஷயத்தில்

ஈடுபட்டால்

அது வெற்றியைத்

தான் தரும்

என்று

இத் திருக்குறளுக்கு

தெளிவாக

விளக்கம்

சொல்லலாம்

 

ஒரு விஷயத்தை

அரை குறையாகக்

கற்றுக் கொண்டு

தான் என்ற

ஆணவத்துடன்

அந்த விஷயத்தில்

ஈடுபட்டு

அழிவைத்

தேடிக் கொண்டதற்கு

மிகச் சிறந்த

உதாரணமாக

அபிமன்யுவைச்

சொல்லலாம்

 

மகாபாரதக் கதையை

எடுத்துக் கொண்டால்

18-நாள் நடந்த

குருக்ஷேத்திரப்போரில்

13-ம் நாள்போர்

ஸம்சப்தகர்களைக்

கொல்வதற்காக

அர்ஜுனன் சென்று

விட்டான்

 

கௌரவப் படையின்

தலைமைத் தளபதி

துரோணர்

சக்கர வியூகத்தை

அமைத்தார்

 

13-ம் நாள் போரில்

பாண்டவப் படையில்

உள்ளவர்களில்

யாருக்கும்

சக்கர வியூகத்தின்

உள்ளே சென்று

வெளியே வருவதற்கு

தெரியாது

 

ஆனால்

அபிமன்யுவிற்கு

மட்டும்

சக்கர வியூகத்தின்

உள்ளே

செல்ல தெரியும்

வெளியே

வருவதற்குத் தெரியாது


யுதிஷ்டிரர்

பாண்டவப்

படையினரிடம்

யாருக்கு

சக்கர வியூகத்திற்கு

உள்ளே சென்று

வெளியே வரத்

தெரியும்

என்று கேட்டார்

 

அபிமன்யு

யுதிஷ்டிரர் முன்பு

வந்து நின்று

கொண்டு சொன்னான்

 

எனக்கு உள்ளே

செல்லத் தெரியும்

வெளியே

வரத் தெரியாது

இருந்தாலும்

நான்

சக்கர வியூகத்தை

உடைத்து

உள்ளே செல்கிறேன்

நீங்கள் அனைவரும்

என்னைப்

பின் தொடர்ந்து

வாருங்கள்

என்றான்

 

யுதிஷ்டிரர்

உட்பட யாரும்

அபிமன்யு சொன்னதை

ஏற்றுக்

கொள்ளவில்லை

 

அபிமன்யு

விடாப்பிடியாக

நான் செல்கிறேன்

நீங்கள் அனைவரும்

என்னைப் பின்

தொடர்ந்து

வாருங்கள்

என்று

சொல்லிவிட்டு

யாருடைய

பதிலையும்

எதிர்பார்க்காமல்

யாருடைய

அறிவுரையையும்

கேட்காமல்

யாரையும்

மதிக்காமல்

சக்கர வியூகத்தை

உடைத்து உள்ளே

செல்ல

ஆரம்பித்து விட்டான்

 

-------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

----10-11-2022

----வியாழக்கிழமை

 

/////////////////////////////////////////