March 14, 2012

இயேசு கிறிஸ்து-காரியாசான்- கதம்நன்று-பதிவு-23

    


                  இயேசு கிறிஸ்து-காரியாசான்- கதம்நன்று-பதிவு-23

                    “”பதிவு இருபத்துமூன்றை விரித்துச் சொல்ல
                                          ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
இந்த உலகத்தில் உள்ள மக்கள் நலம் பல பெற்று , சிறப்புடன் வாழ ,
பல்வேறு கருத்துக்களை உவமைகளாக்கி ,
வசனங்களால் கூறிய இயேசு ,
ஒரு சிறப்பு மிக்க கருத்தை வசனமாக்கி கூறுகிறார் :

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் ,
அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
                                                                        --------மத்தேயு -5:39

என்ற சிறப்பு மிக்க வசனத்தைக் கூறிய இயேசு,
தான் கூறியவற்றை தானே தன்
வாழ்க்கையில் எவ்வாறு கடைபிடித்தார் ;
எத்தகைய நிலையில் கடைபிடித்தார்  ;
எத்தகைய வழி முறைகளை பின்பற்றி கடைபிடித்தார் ;
அந்த வசனத்திற்கு அவர்  எவ்வாறு உதாரணமாக திகழ்ந்தார் ;
தான் சொன்ன வார்த்தை படி தன் வாழ்வில் எப்படி நடந்து காட்டினார் ;
தான் ஒரு வசனத்தை சொல்லி விட்டு மக்கள்
பின்பற்றினால் பின்பற்றட்டும் , பின்பற்றா விட்டால் போகட்டும்
என்று விட்டு விடவில்லை .
தான் சொன்ன வசனத்தை தன் வாழ்நாளில் தானே கடை பிடிக்கப்
பட வேண்டிய சூழ்நிலை வரும் போது
அதை எவ்வாறு கடைபிடித்தார்  எவ்வாறு கடை பிடித்து
உதாரணமாகத் திகழ்ந்தார்  என்று பார்ப்போம் :



வசனம் - 1 :
பிரதான ஆசாரியன் இயேசுவைப் பற்றியும் ,
அவருடைய சீஷரைப் பற்றியும் விசாரித்தான்
அதற்கு இயேசு கூறியவையும் , நடந்த நிகழ்வுகளையும்
கூர்ந்து ஆராய்ந்து நோக்க வேண்டும் :

நான்  வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன் ; ஜெப
ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடி வருகிற
தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன் ;
அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.”
                                                  -------------யோவான் - 18 : 20

நான் யாருக்கும் தெரியாமல் மறைந்து கொண்டும் ,
மக்களுக்கு தெரியாமல் ஒளிந்து கொண்டும்,
நான் என் கருத்துக்களை பேசவில்லை .
மக்கள் முன் வெளிப்படையாகப் பேசினேன் ;
மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் பேசினேன் ;
நான் ஜெப ஆலயங்களிலும் ,
மக்கள் கூடி இருக்கிற இடங்களிலும் ,
என்னுடைய கருத்துக்களை
இறைவனால் எனக்கு அருளப்பட்டவைகளை ,
இறைவனால் எனக்கு வெளிப்படுத்தப் பட்டவைகளை ,
மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளுமாறு ,
மக்கள் அனைவரும் அறிந்து பின்பற்றுமாறு ,
மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில்
மக்களிடம் நான் நேரடியாகப் பேசினேன்
நான் மறைவாகவும் அந்தரங்கத்திலும்
தனியாக எதுவும் பேசவில்லை
என்றார்  இயேசு .



வசனம் - 2 :

நீர்  என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான்
சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும் ; நான்
பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார் .”
                                                                 ------யோவான்-18:21

நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியது என்ன இருக்கிறது
நான் பேசியவைகள் எவை என்றும்;
அவை எத்தகைய தன்மைகளைக் கொண்டவை என்றும் ;
எவற்றை விளக்குபவை என்றும் ;
எவற்றை சொல்ல வருபவை என்றும் ;
எந்த ரகசியங்களை சொல்ல வருகின்றன என்றும் ;
எந்த ரகசியங்களை கட்டவிழ்த்து விடுகின்றன என்றும் ;
எவற்றை அடைய நமக்கு வழிகாட்டுகின்றன என்றும் ;
எவற்றை அடைந்தால் நம் வாழ்வு நிம்மதி பெறும் என்றும் ;
பாவத்தை போக்கும் வழி எது என்றும் ;
புண்ணியத்தைச் சேர்க்கும் முறை எது என்றும் ;
என் பேச்சில் நான் சொன்னவைகளை - அதைக்
கேட்டவர்களிடத்தில் விசாரியுங்கள்
நான் பேசியவைகளை அவர்கள்
அறிந்திருக்கிறார்கள் என்றார்  இயேசு .



வசனம் - 3 :

இப்படி அவர்  சொன்ன பொழுது சமீபத்தில் நின்ற சேவகரில்
ஒருவன்; பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது
என்று , இயேசுவை ஒரு அறை அறைந்தான்
                                                            -------யோவான்-18:22

நம்மை விட உயர்ந்தவர்கள் ;
நம்மை விட பதவியில் உயர்ந்தவர்கள் ;
நம்மை விட பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் ;
நம்மை விட அதிகாரத்தில் உயர்ந்தவர்கள் ;
நம்மிடம் கேள்வி கேட்கும் போது நாம் பதில் சொல்ல
வேண்டுமே தவிர எதிர்  கேள்வி கேட்கக் கூடாது.

அப்படி எதிர்  கேள்வி கேட்டால் ஆதிக்கவாதிகளுக்கு
கோபம் வருகிறதோ இல்லையோ
அதை வெளிக்காட்டுகிறார்களோ இல்லையோ
அவருக்கு சேவை செய்கிறவர்கள்
தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி ,
தங்கள் விரக்தியை வெளிப்படுத்தி ,
தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி ,
தங்கள் மறுப்பை வெளிப்படுத்தி ,
தாங்கள் அவருடைய ஆதரவாளர்  என்று வெளிப்படுத்திக்
கொள்ளும் விதத்தில் செயல்படுவர்
அவரை மனம் குளிர வைக்கும்படி நடந்து கொள்வர் .

பிரதான ஆசாரியன் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன
இயேசுவின் நிலையைப் பார்த்து ,
பிரதான ஆசாரியன் அருகில் இருந்த சேவகரில் ஒருவன்
யாரிடம் என்ன பேசுகிறாய் அவர்  நிலை என்ன ?
அவர்  தகுதி என்ன ? அவர்  திறமை என்ன ?
அவர்  பதவி என்ன ? அவரிடமே நீ கேள்வி கேட்கிறாயா என்று
அதன் அடிப்படையில் அதன் நிகழ்வின் அடிப்படையில்
பிரதான ஆசாரியனிடத்தில் இப்படியா
பேசுவது என்று இயேசுவை ஒரு அறைந்தான் .



வசனம்-4 :
இயேசுவின் ஒரு கன்னத்தில் அறைந்து விட்டார்கள் .
இந்த இடத்தில் ; இந்த நிகழ்வில் - இயேசு
மறு கன்னத்தை காட்டி இருக்க வேண்டும் .
இயேசு எத்தகைய செயலை செய்ய வருகிறார் .
இயேசு எத்தகைய சொல்லை சொல்ல வருகிறார்
என்று இப்பொழுது பார்ப்போம் .

இயேசு அவனை நோக்கி : நான் தகாத விதமாய்ப்
பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி ; நான் தகுதியாய்ப்
பேசினேனேயாகில் என்னை ஏன் அடிக்கிறாய் என்றார் .”
                                                   --------யோவான்---18:23

இந்த இடத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும் ;
இந்த இடத்தில் ஒன்றை சிந்திக்க வேண்டும் ;
இந்த இடத்தில் ஒன்றை நினைவு கூர்தல் வேண்டும் ;
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் ;
என்று சொன்ன இயேசு ,
அவரை ஒரு சேவகன் கன்னத்தில் அறைந்தபோது ,,
அவர்  தன்னுடைய மறு கன்னத்தைக் காட்டியிருக்க வேண்டும் .

ஆனால் அவர்  தன் மறு கன்னத்தைக் காட்டாமல்
என்னை ஏன் அடிக்கிறாய் என்று கேட்கிறார் .
இந்த நிகழ்வின் அடிப்படையில் பார்த்தால் ,
இந்த நிகழ்வின் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்
என்பதை அறிந்து கொள்ள முடியும் .

நீ செய்த செயலால் சமுதாயத்திற்கோ , மற்றவருக்கோ
துன்பத்தையோ , மனக்கவலையோ கொடுத்தால்
உன் செயலால் மற்றவர்  பாதிக்கப்பட்டால் ;
உன் செயலால் சமுதாயம் பாதிக்கப் பட்டால் ;
உன் செயல் சமுதாய சட்டதிட்டங்களுக்கு மீறியதாக இருந்தால் ;
உன் செயல் சமுதாய கோட்பாடுகளை அவமதிப்பதாக இருந்தால் ;
நீ செய்த செயலுக்கு சமுதாயம் தண்டனை கொடுத்தால் ;
ஏற்றுக் கொள்ள வேண்டும் .

உன் செயலால் சமுதாயம் பாதிக்கப் படாமல்

              நன்மையை உண்டாக்குவதாக இருந்தால் ;
              நல்லவைகளை ஏற்படுத்துவதவாக இருந்தால் ;
              நல்லவைகளை செயல்படுத்துவதாக இருந்தால் ;
              நல்வவைகளை உருவாக்குவதாக இருந்தால் ;
              அறிவை தெளிவு படுத்துவதாக இருந்தால் ;
              மனதை துhய்மை படுத்துவதாக இருந்தால் l
               சிந்தனையை செதுக்குவதாக இருந்தால் ;
              அறியாமையை விலக்குவதாக இருந்தால் ;
              உண்மையை உணர்த்துவதாக இருந்தால் ;
              ஏழ்மையை நீக்குவதாக இருந்தால் ;
              வறுமையை மாற்றுவதாக இருந்தால் ;
              ஏற்றத்தை கொடுப்பதாக இருந்தால் ;
              இல்லாமையை போக்குவதாக இருந்தால் ;
              உயர்வை அளிப்பதாக இருந்தால் ;
              உண்மையை நிலை நாட்டுவதாக இருந்தால் ;
              பொய்மையை விலக்குவதாக இருந்தால் ;
              நன்மைகளை விதைப்பதாக இருந்தால் ;
              துன்பங்களை நீக்குவதாக இருந்தால் ;
              துயரங்களை ஒதுக்குவதாக இருந்தால் ;
              மாற்றத்தை கொண்டு வருவதாக இருந்தால் ;
              மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தால் ;

சமுதாயம் தண்டனை கொடுத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது .
எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும் ,
உண்மைக்காக வாதாட வேண்டும் ,

அதாவது,
எவை சரி என்று அறிந்து கொண்டு செயல்பட முடியாதவர்களிடம்
அமைதியாக பெருந்தன்மையோடு நடந்து கொள்வதை விட
அவர்கள் மேல் கோபத்தைக் காட்டுவதே நன்மை தரும்
என்பதைத் தான் இயேசு சொல்ல வருகிறார் .



காரியாசான் :

 “”””கதம்நன்று சான்றாண்மை தீது கழிய
       மதம்நன்று மாண்புஇலார்  முன்னர்  - விதம்நன்றால்
       கோய்வாயின் கீழ்உயிர்க்குஈது உற்றக் குரைத்துஎழுந்த
        நாய்வாயுள் நல்ல தசை”””””
                          --------காரியாசான்----சிறுபஞ்ச மூலம்---

ஒழுக்கம் பால் செல்லாதவர்  மீதும் ;
ஒழுக்கத்தை கடை பிடியாதவர்  மீதும் ;
ஒழுக்கநெறி வழி நில்லார்  மீதும் ;
ஒழுக்கத்தின் மாண்பை உணராதவர்  மீதும் ;
ஒழுக்கம் தவறி நடப்பவர்  மீதும் ;
ஒழுக்கவழி செல்லாதவர்  மீதும் ;
ஒழுக்கம் என்றால் என்ன என்று தெரியாதவர்  மீதும் ;
ஒழுக்கத்தின் சிறப்பை அறியாதவர்  மீதும் ;

தவறு என்று உணர்ந்தும் ,
செய்வது தவறு என்று தெரிந்தும் ,
செயல் முறையற்றது என்று அறிந்தும் ,
வார்த்தை கரை படிந்தது என்று உணர்ந்தும் ,
திருந்தும் மனப்போக்கை கொள்ளாதவர்  மீதும் ;
திருந்த மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்  மீதும் ;

திருந்தும் மனப்பான்மை இல்லாதவர் மீதும் ;
தன்னை திருத்திக் கொள்ளாதவர் மீதும் ;
திருந்தும் வழியை ஆராயாதவர்  மீதும் ;
தான் செய்வது சரி என்று வாதிடுபவர்  மீதும் ;
தன் சொல் சரியானது என்று உரைப்பவர்  மீதும் ;
தன் தவறை ஒத்துக் கொள்ளாதவர்  மீதும் ;
தவறு செய்யாதது போல நடிப்பவர்  மீதும் ;

இழி குணத்தோர் ; ஏமாற்றுவோர் ; மாசு மணம் கொண்டோர்;
போன்ற கீழ் மக்களிடம் எவ்வளவு தான் உரைத்தாலும் ,
அவர்களுக்கு உண்மை நிலை புரியாது ;
உண்மைத் தன்மை தெரியாது ;
நல்லவை எவை என்று தெரியாது ;
அல்லவை எவை என்று புரியாது ;
அத்தகையவரிடம் கோபமாக நடந்து கொள்வதே நன்மை தரும் .

பெருந்தன்மையோடு நடந்து கொண்டு அமைதியாக இருப்பது ;
பொறுமையாக இருப்பது ;
எதையும் தாங்கும் இதயத்துடன் இருப்பது ;
வலிகளை ஏற்றுக் கொண்டு இருப்பது ;
பேச்சுக்களை சகித்துக் கொண்டு இருப்பது ;
செயல்களை தாங்கிக் கொண்டு இருப்பது ;
ஏளன வார்த்தைகளை பொறுத்துக் கொண்டு இருப்பது ;
தீமையையே கொடுக்கும் .
துன்பத்தையே கொடுக்கும் .
வருத்தத்தையே கொடுக்கும் .
மனசஞ்சலத்தையே கொடுக்கும் .
கவலைகளையே கொடுக்கும் .

தீமைகள் ஒழிய ,நன்மைகள் பிறந்து செழிக்க வேண்டுமானால்
ஒழுக்கம் இல்லாத நெஞ்சரிடம்,
திருந்தும் மனப்போக்கு இல்லாத கயவரிடம்,
பெருந்தன்மையோடு நடந்து கொண்டு
கோப்படாமல் இருப்பது கூடாது.
கோபப்பட்டு அவர்கள் செய்தது தவறு என்று
சுட்டி காட்டி வன்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தீது கழிந்து நன்மை பிறக்க வேண்டுமென்றால்
தவறு செய்பவனிடம் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளாமல்
கோபப்பட்டு வன்மையாக நடந்து கொள்ள வேண்டும் .

அதாவது,
ஒழுக்கமும்,  திருந்தும் போக்கும்
இல்லாத கீழ்மக்களிடம் கோபமாக நடந்து கொள்வதே நன்மை தரும்.
அத்தகையவரிடம் பெருந்தன்மையோடு
நடந்து கொள்வது தீமையை மட்டுமே கொடுக்கும்
தீமைகள் ஒழிய அவர்கள் மீது வன்மையான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுவதே நன்மை தரும்
என்கிறார் சிறுபஞ்சமூலத்தில் காரியாசான் .

கள்ளைக் குடித்து குழறும் வாயைக் கொண்ட குடிகாரர்களுக்கு
பசி தீர்க்க உணவு கொடுக்கும் செயலை விட
நம்மைப் பார்த்து குறைத்த படியே ஓடிவரும்
கடிக்க ஓடிவரும் நாயின் வாயில் மாமிசத்தை
வீசுவது நல்லது என்கிறார் .

அறியாது செய்யும் தவறை சுட்டிக் காட்டுவதை விட
அறிந்து செய்யும் தவறை சுட்டிக் காட்ட வேண்டும்
என்பது இதற்கு பொருள்  .


கள் குடிப்பவன் தன் உடம்பை தானே கெடுத்துக் கொள்கிறான்
கள் குடித்தால் உடம்பு கெடும் ;
அவமானங்கள் ஏற்படும் ; நிம்மதி குலையும் ;
கெட்ட பெயர்  ஏற்படும் வாழ்க்கை சிதைக்கப்படும் ;
என்ற விவரங்களை அறியாமல் உணராமல்,
தான் செய்வது தவறு என்று தெரியாமல் ,
தான் செய்வது துன்பத்தை உண்டாக்கும் என்பதை உணராமல் ,
அறியாமல் செய்கிறான் என்பதை உணர்ந்து - அவர்களுக்கு
நீங்கள் செய்வது தவறு என்று எவ்வளவு தான் உரைத்தாலும் ,
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையிலும் இருக்க மாட்டார்கள்
அத்தகையவர்களுக்கு அறிவுரை சொல்வது தேவையற்றது .

“”கள் குடிப்பவனுக்கு உணவளிப்பது தேவையற்றது “”  -  என்பதற்கு
அறியாதவர்களுக்கு ,
அறிய வேண்டும் என்ற மனம் இல்லாதவர்களுக்கு ,
உண்மையை அறிய வேண்டும் என்ற மனம் இல்லாதவர்களுக்கு ,
உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற
பக்குவம் இல்லாதவர்களுக்கு,
அறிவுரை சொல்லி ஒரு பயனும் இல்லை என்று பொருள் .

அதாவது ஒருவர்  அறியாது செய்யும் செயலை
சுட்டிக் காட்டுவது தேவையற்றது என்று பொருள் .


கடிக்க வரும் நாய் தெரிந்தே வருகிறது
அதன் கோபத்தை அடக்க வேண்டுமென்றால் ,
அதன் ஆவேசத்தைக் கட்டுப் படுத்த வேண்டுமென்றால் ,
அதன் வேகத்தைக் குறைக்க வேண்டுமென்றால் ,
அதற்கு மாமிசத்தை வீச வேண்டும் .
இல்லையென்றால் அது நம்மையே பதம் பார்த்து விடும்
நாய் செய்வது தெரிந்து செய்யும் தவறு
தெரிந்து செய்யும் தவறை கட்டுப்படுத்த வேண்டும் ;
தெரிந்து செய்யும் தவறை சுட்டிக் காட்ட வேண்டும் ;
தெரிந்து செய்யும் தவறை மாற்ற முற்பட வேண்டும் ;
தெரிந்து செய்யும் தவறை உணர்த்த வேண்டும்

அதைப் போல தெரிந்தே தவறு செய்பவரிடம்
நாம் நம் கோபத்தை வெளிப்படுத்தாவிட்டால்
அது நமக்கு கேடாக முடியும் என்று பொருள் .

ஒழுக்கம் இல்லாத ,நன்னெறி தவறிய ,
திருந்தும்  மனப்பான்மை இல்லாதவரிடம் ,
பெருந்தன்மையோடு நடந்து கொள்ளாமல்
கோபமாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார்
சிறுபஞ்ச மூலத்தில் காரியாசான் .



இயேசு கிறிஸ்து - காரியாசான் :

இயேசு , எவை சரி என்று அறிந்து கொண்டு
செயல்பட முடியாதவர்களிடம்
அமைதியாக பெருந்தன்மையோடு நடந்து கொள்வதை விட
அவர்கள் மேல் கோபத்தைக் காட்டுவதே நன்மை தரும் என்கிறார் .

அவ்வாறே ,
காரியாசானும் , ஒழுக்கம் எவை என்று தெரியாதவரிடம்
அவர்கள் முன்னால் மென்மையாக நடந்து கொள்வதை விட
கோபமாக நடந்து கொள்வதே நன்மை தரும் என்கிறார்.

                             
                                 “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                            போற்றினேன் பதிவுஇருபத்துமூன்று  ந்தான்முற்றே “”