May 09, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு- 15


               
          ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு- 15

நாம் நல்ல நிலைமைக்கு
வந்து விடுகிறோம்
நமக்கு உதவி செய்தவரை
மறந்து விடுகிறோம்
அவரை பார்த்து
பல மாதங்கள்
பல வருடங்கள்
கழிந்து விட்டன
காலம் ஓடி விட்டது

பல வருடங்கள் கழித்து
ஒரு நாள் நமக்கு
உதவி செய்தவர்
நம்மை சந்திக்க
வருகிறார்
அவர் நம்மை சந்தித்து
ஒரு உதவி கேட்கிறார்

பிஸ்னஸ் கொஞ்சம்
நஷ்டத்தில் ஓடுகிறது
நான் கஷ்டப்படுகிறேன்
கொஞ்சம் கடன்
ஆகிவிட்டது
கடனை அடைக்க
முடியவில்லை
குடும்பத்தை ஓட்டுவது
கஷ்டமாக இருக்கிறது
பல்வேறு நெருக்கடிக்கிடையில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

எனக்கு
ஒரு காண்டிராக்ட்
கிடைத்தால்
நன்றாக இருக்கும்
அதை அனுமதி அளிப்பது
நீங்கள் தான் என்று
கேள்வி பட்டேன்
அதனால் நானே
நேரில் வந்தேன்
எனக்கு அந்த
காண்டிராக்ட்
உங்கள் முயற்சியால்
கிடைத்தால்
நான் சந்தோஷப்படுவேன்

கஷ்டத்தில் இருந்து
கொஞ்சம் விடுபடுவேன்
கடனை அடைத்து
விடுவேன்
குடும்பம் கொஞ்சம்
மகிழ்ச்சியாக இருக்கும்
நீங்கள் எனக்கு
உதவி செய்வீர்கள்
என்று வந்தேன்
நீங்கள் எனக்கு
அந்த காண்டிராக்டை
வாங்கித் தருவீர்களா
என்று கேட்கிறார்.

ஆனால் அந்த
காண்டிராக்டை பெறுவதில்
பயங்கரமான போட்டி
நிலவுகிறது
கோடிக்கணக்கில்
பணம் தருகிறோம்
எங்களுக்கு
அந்த காண்டிராக்டை
கொடுங்கள் என்று
நிறைய பேர்
நம்மை கேட்கிறார்கள்

நாம் வாழ வழி
இல்லாமல்
இக்கட்டான சூழ்நிலையில்
இருந்தபோது
நமக்கு உதவி
செய்தவருடைய
உதவியை
நினைத்துப் பார்த்து
கோடிக்கணக்கில்
பல்வேறு நபர்கள்
கொடுக்க
முன்வந்த நிலையிலும்
அதனை ஏற்றுக்கொள்ளாமல்
நமக்கு உதவி
செய்தவருக்கு
நாம் அந்த
காண்டிராக்ட்
கிடைப்பதற்கான
முயற்சிகள் செய்து
அவருக்கு
அந்த காண்டிராக்டை
கொடுக்கிறோம்

நீங்கள் செய்த
உதவியை நான்
மறக்க மாட்டேன்
உயிர் உள்ளவரை
நினைப்பேன்
என்று வாய் அளவில்
மட்டும் சொல்லாமல்
நமக்கு உதவி
செய்தவருக்கு
உதவி செய்வதற்கான
வாய்ப்பு வந்தபோது
நாம் உதவி செய்கிறோம்

இக்கட்டான சூழ்நிலையில்
நாம் இருக்கும் போது
நமக்கு உதவி
செய்தவர்களுடைய
உதவியை நாம்
என்றும் மறக்கக் கூடாது
அவர்களுக்கு நாம்
கொடுத்த வாக்குறுதியை
நாம் நினைவில் கொண்டு
அவர்களுக்கு நாம்
உதவி செய்யும்
காலம் வரும்போது
கண்டிப்பாக
உதவி செய்ய வேண்டும்
என்பதை நாம்
நினைவில் கொள்ள
வேண்டும்.

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////