October 31, 2018

திருக்குறள்-பதிவு-43


                     திருக்குறள்-பதிவு-43

இத்தாலி நாட்டிலுள்ள
பைசா நகரத்தில்
கி.பி.1564-ஆம் ஆண்டு
பிப்ரவரி 15-ம் நாள்
வின்சென்சோ கலிலி
என்பவருக்கும்
குயுலியோ அம்மன்னடி
என்பவருக்கும்
ஆறு பிள்ளைகளில்
மூத்த மகனாகப் பிறந்து
விஞ்ஞான உலகில்
புரட்சியை ஏற்படுத்திய
அந்த விஞ்ஞானி தான்
கலிலியோ கலிலீ,
(Galileo Galilei)

அதிகமாக
சிந்திக்கும் திறனும்,
ஆழமாக யோசிக்கும்
தன்மையும்,
இளமையில் இயல்பாகவே
பெற்றிருந்தார் கலிலியோ
கலிலியோ
17 வது வயதை
அடைந்த போது
பிசா பல்கலைக் கழகத்தில்
(University of Pisa)
சேர்ந்தார்
கணிதத்தையும்,
இயற்பிலையும்
கற்றார்
அந்த பல்கலைக்
கழகத்தில் அதிகமான
கேள்விகளைக்
கேட்ட மாணவர்களில்
முதல் மாணவனாக
இருந்தவர் கலிலியோ

மாணவர்களுக்கு
கற்பிக்கப்பட்ட அறிவியல்
கோட்பாடுகளை
மற்ற மாணவர்கள்
எந்தவிதமான
கேள்விகளையும்
கேட்காமல்
அப்படியே ஏற்றுக்
கொண்டு மறுப்பு
ஏதும் சொல்லாமல்
கல்வியை
கற்றுக் கொண்டு
வந்த சூழலில்
கலிலியோ மட்டும்
அறிவியல் கோட்பாடுகளுக்கான
ஆதாரங்களைக் கேட்பார்
ஆதாரங்கள் இல்லாத
அறிவியல் கோட்பாடுகளை
ஏற்றுக் கொள்ள மறுப்பார்

கலிலியோவிற்கு
கற்பிக்கப்பட்ட அறிவியல்
கோட்பாடுகளில் ஒன்றான
அரிஸ்டாட்டிலின் விதி
வெவ்வேறு
எடையுடைய இரண்டு
பொருட்களை
உயரத்திலிருந்து
கீழே போட்டால்
அதிக எடையுடைய
பொருள் முதலிலும்
லேசான பொருள்
பின்னரும் தரையில்
விழும் என்று
கற்பிக்கப்பட்டது

அரிஸ்டாட்டில்
கூறியிருந்த இந்த
விதியை
கலிலியோ ஏற்றுக்
கொள்ளவில்லை
ஒருவர் சொன்ன
விஞ்ஞான கருத்து
உண்மை என்று நம்பி
நாம் அப்படியே
ஏற்றுக் கொள்ளக்
கூடாது
விஞ்ஞானக் கருத்துக்களை
நாம் ஏற்றுக் கொள்ள
வேண்டுமானால்
அந்த விஞ்ஞானக்
கருத்துக்கள்
அறிவியல்பூர்வமாக
நிரூபிக்கப்பட்டிருக்க
வேண்டும் என்று
கூறிய கலிலியோ
அரிஸ்டாட்டில்
கூறிய இந்த விதியை
ஏற்றுக் கொள்ளவில்லை
இதனால் ஆசிரியர்களின்
கடுமையான கோபத்திற்கு
ஆளாகக்கூடிய நிலை
கலிலியோவிற்கு ஏற்பட்டது.

பட்டம் பெற்ற
கலிலியோ
தன்னுடைய 25-ம் வயதில்
அதே பல்கலைக்கழகத்தில்
கணித ஆசிரியராக
சேர்ந்தார்

படிக்கும் காலத்தில்
தவறான விதி
என்று கலிலியோவால்
நம்பப்பட்ட
அரிஸ்டாட்டிலின் விதியை
ஆசிரியராக மாறிய
கலிலியோ
தவறு என்று
சோதனை மூலம்
நிரூபிக்க முயன்றார்

அதற்காக நிறைய
மக்களை அழைத்து
பைசா நகரத்தின்
சாய்ந்த கோபுரத்தின்
தரையில் நிற்க
வைத்து விட்டு
பிசாவின் சாய்ந்த
கோபுரத்தின் மீது
ஏறி நின்று மேலிருந்து
வெவ்வேறு
எடையுள்ள இரண்டு
குண்டுகளை
ஒரே சமயத்தில்
கீழே விழ விட்டு
அவை இரண்டும்
ஒரே சமயத்தில்
பூமியில் வந்து
விழுவதை
தனது சோதனை மூலம்
நிரூபித்துக் காட்டி
அரிஸ்டாட்டில்
சொன்ன விதியை
தவறு என்று
நிரூபித்தார்

அறிவியல் கருத்துக்கள்
தத்துவ ரீதியாக
சொல்லப்பட்டு வந்த
நிலையில்
முதன் முதலாக
சோதனையின் மூலம்
செயல்முறை விளக்கங்கள்
மூலம் அறிவியல்
கருத்துக்களை
வெளியிட்ட பெருமை
கலிலியோவையேச் சாரும்

இந்த நிகழ்ச்சியைத்
தொடர்ந்து
கலிலியோவால்
பிசா பல்கலைக்
கழகத்தில் பணியாற்ற
முடியவில்லை
University of Padua
பல்கலைக் கழகத்தில்
ஆசிரியராகச் சேர்ந்தார்

அரிஸ்டாட்டிலின்
ஒரு சிறிய விதியை
தவறு என்று
நிரூபிக்கவே கலிலியோ
கஷ்டப்பட வேண்டி
இருந்தது
அப்படி இருக்கையில்
உலகம் முழுவதும்
பல ஆண்டுகளாக
மக்களால் சரி
என்று ஏற்றுக்
கொள்ளப்பட்டு
பின்பற்றப்பட்டு வந்த
ஒரு முக்கியமான
விதியை தவறு என்று
நிரூபிப்பதற்கும்,
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
கருத்தை சொல்லி
அதை நிரூபிப்பதற்கும்,
கலிலியோ அதிக
கஷ்டங்களை அனுபவிக்க
வேண்டி இருந்தது
கலிலியோ பட்ட
கஷ்டங்கள் என்ன
என்பதைப் பற்றி
இனி பார்ப்போம்

---------  இன்னும் வரும்
---------  31-10-2018
///////////////////////////////////////////////////////////