November 10, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-காலத்தினாற்-பதிவு-56

 

         இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-காலத்தினாற்-பதிவு-56  

 

               “”பதிவு ஐம்பத்துஆறை விரித்துச் சொல்ல      

                                  ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்

 

இயேசு கிறிஸ்து :

ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர்  இருந்தார்கள்.”

                                                ------லுhக்கா - 15 : 11

அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி : தகப்பனே ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தான்.”

                                                ------லுhக்கா - 15 : 12

சில நாளைக்குப்பின்பு ,இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு ,துhரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய் ,அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி ,தன் ஆஸ்தியை அழித்துப் போட்டான்.”

                                                ------லுhக்கா - 15 : 13

எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு ,அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று . அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி ,“

                                                ------லுhக்கா - 15 : 14

அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான் .”

                                                ------லுhக்கா - 15 : 15

அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான் ,ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.”

                                                ------லுhக்கா - 15 : 16

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது அவன் : என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன் .”

                                                ------லுhக்கா - 15 : 17

நான் எழுந்து ,என் தகப்பனிடத்திற்குப் போய் : தகப்பனே , பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.”

                                                ------லுhக்கா - 15 : 18

இனிமேல் உம்முடைய குமாரன் என்ற சொல்லப்படுவாதற்கு நான் பாத்திரனல்ல ,உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் என்று சொல்லி ;“

                                                ------லுhக்கா - 15 : 19

எழுந்து புறப்பட்டு ,தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் துhரத்தில் வரும்போதே ,அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு ,மனதுருகி ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ,அவனை முத்தஞ்செய்தான்.”

                                                ------லுhக்கா - 15 : 20

குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே ,பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன் ,இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.”

                                                ------லுhக்கா - 15 : 21

அப்பொழுது தகப்பன் தன் ஊழியக் காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து ,இவனுக்கு உடுத்தி ,இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.”

                                                ------லுhக்கா - 15 : 22

கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து சந்தோஷமாயிருப்போம் .”

                                                ------லுhக்கா - 15 : 23

என் குமாரனாகிய இவன் மரித்தான்,திரும்பவும் உயிர்த்தான் ;காணாமற் போனான் ,திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள் .”

                                                ------லுhக்கா - 15 : 24

அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான் . அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது ,கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;

                                                ------லுhக்கா - 15 : 25

ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து : இதென்ன என்று விசாரித்தான்.”

                                                ------லுhக்கா - 15 : 26

அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுந்த கன்றை அடிப்பித்தார்  என்றான்.”

                                                ------லுhக்கா - 15 : 27

அப்பொழுது அவன் கோபமடைந்து ,உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து ,அவனை வருந்தியழைத்தான்.”

                                                ------லுhக்கா - 15 : 28

அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக : இதோ இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து ,ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும் ,என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.”

                                               ------லுhக்கா - 15 : 29

வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.”

                                                ------லுhக்கா - 15 : 30

அதற்குத் தகப்பன் : மகனே ,நீ எப்போதும் என்னோடிருக்கிறாய் எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.”

                                                ------லுhக்கா - 15 : 31

உன் சகோதரனாகிய இவனோ மரித்தான் ,திரும்பவும் உயிர்த்தான்; காணாமற் போனான் ,திரும்பவும் காணப்பட்டான் ;ஆனபடியினாலே ,நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.”

                                                ------லுhக்கா - 15 : 32

 

வெளிப்படுத்துவதில் இரண்டு நிலைகள் உள்ளன :

ஒன்று                : இருப்பதை இருப்பது போல் வெளிப்படுத்துதல் .

மற்றொன்று : இல்லாததை இருப்பது போல் வெளிப்படுத்துதல் .

 

இருப்பதை இருப்பது போல் வெளிப்படுத்துதல்

என்பது உண்மையான நிலை.

இல்லாததை இருப்பது போல் வெளிப்படுத்துதல்

என்பது பொய்யான நிலை .

 

தன் வாழ்வை உண்மையாக நடத்துபவர் ;

உண்மையை தன் வாழ்வில் பின்பற்றுபவர் ;

சமுதாயத்தில் உண்மையாக நடந்து கொள்பவர் ;

குடும்பத்தாருடன் உண்மையைப் பகிர்ந்து கொள்பவர் ;

சுற்றத்தாருடன் உண்மையுடன் நட்புறவை வளர்த்துக் கொள்பவர் ;

உறவினரிடம் உண்மையுடன் உறவு கொள்பவர் ;

தன்னிடம் உள்ளவைகளை உண்மையாக வெளிப்படுத்தி

உண்மையாக நடந்து கொள்பவர் ;

தன்னிடம் இருப்பதை இருப்பது போல் வெளிப்படுத்த

மட்டுமே முயற்சி செய்வார் ;

தன்னிடம் இல்லாததை இருப்பது போல் வெளிப்படுத்த

முயற்சி செய்ய மாட்டார் ;

 

இத்தகைய நேர்மையான குணம் கொண்டவர் ;

தன்னைப் பற்றி அறிந்தவராக இருப்பார் ;

தன் நிலையை உணர்ந்தவராக இருப்பார் ;

எதையும் சமாளிக்கும் திறன் உடையவராக இருப்பார் ;

போராடி வெற்றி பெறும் போர்க்குணம் கொண்டவராக இருப்பார் ;

எதையும் கண்டு கலங்காத நெஞ்சம் உடையவராக இருப்பார் ;

எந்தவித சோதனைகள் வந்தாலும் சோதனைகளை மாய்த்து

சாதனை படைக்கும் வலிமை உடையவராக இருப்பார் ;

ஏச்சுக்களையும் , பேச்சுக்களையும், அவமானங்களையும்,

ஊதி தள்ளி விட்டு செல்லும்

இதயம் உடையவராக இருப்பார் ;

 

உண்மையாக நடந்து கொள்பவர்  ,எதற்கும் கவலைப் படமாட்டார் ;

இருப்பதை இருப்பது போல் வெளிப்படுத்துபவர் ;

யாருக்கும் எதற்கும் எக்காலத்திற்கும் பயப்படமாட்டார் ;

ஏனென்றால் , தன்னிடம் உள்ளதை

தனக்கு பிடித்தமானவைகளை சமுதாயம்

ஏற்றுக்கொள்கிறதோ - இல்லையோ

புகழ்கிறதோ - இகழ்கிறதோ

பாராட்டுகிறதோ - ஏளனம் செய்கிறதோ

எதைப் பற்றியும் கவலைப் படாமல் தனக்கு சரி என்று படும்

உண்மை நிலைகளை உண்மையாக வெளிப்படுத்தி

உண்மை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதால்,

மற்றவர்கள் புகழ்ச்சிக்காக ,

மற்றவர்கள் பாராட்டுதலுக்காக ,

போலியாக வாழ்க்கையை வாழாமல்

உண்மையாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதால் ,

இருப்பதை இருப்பது போல் வெளிப்படுத்துபவர்

எதற்கும் கவலைப்பட மாட்டார் .

 

இல்லாததை இருப்பது போல் காட்டி வாழ்ந்து கொண்டிருப்பவர்

எப்பொழுதும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்  ;

தன்னைப் பற்றி அறிய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார் ;

சுயமரியாதையை தக்க வைக்க போராடிக் கொண்டிருப்பார் ;

தன் பெயரை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருப்பார் ;

தன் நிலையை நிலை நிறுத்த யோசித்துக் கொண்டிருப்பார் ;

பொய்யான வாழ்க்கையை வாழ்பவர்  

தனக்காக வாழாமல் ,தனது இன்பத்திற்காக வாழாமல் ,

மற்றவர்  தன்னைப் பற்றி தவறான வார்த்தை சொல்லி விடுவார்களோ

தவறான கருத்தை கொண்டு விடுவார்களோ

தன்னைப் பற்றி தவறான நினைவை உற்பத்தி செய்து விடுவார்களோ

என்று தனக்காக வாழாமல் பொய் முகமூடி இட்டுக் கொண்டு

சமுதாயத்தின் பார்வைக்காக பயந்து வாழ்வார்கள் .

 

இருப்பதை இருப்பது போல் வெளிப்படுத்தி உண்மையாக வாழ்பவர்

சமுதாயத்தின் பார்வைக்காக இல்லாமல் தனக்காக வாழ்வார் .

இல்லாததை இருப்பது போல் வெளிப்படுத்துபவர்

உண்மையாக வாழாமல் பொய் என்னும் மூகமுடி அணிந்து கொண்டு

தன் இன்பத்திற்காக வெளிப்படையாக வாழாமல்

சமுதாயத்தின் பார்வைக்காக பயந்து வாழ்வார்.

 

இருப்பதை இருப்பது போல் வெளிப்படுத்துபவருக்கு

திறமை தைரியம் சாதுர்யம் ,தொலைநோக்கு பார்வை தேவை .

இல்லாததை இருப்பது போல் வெளிப்படுத்துபவருக்கு

இவையெல்லாம் தேவையில்லை,

ஆளுக்கு தகுந்த படி போலியாக நடிக்க தெரிந்தால் மட்டும் போதும் .

 

எழுத்துத் திறன் படைத்த படைப்பாளி ஒருவர்

தான் படைக்கும் படைப்புகள் தன் சுய அறிவினாலும் ,

ஜீவ ஊற்றாய் ஓடிக் கொண்டிருக்கும் தன் சிந்தனையின் ஊற்றினாலும் ,

படைக்கும் தன்னுடைய படைப்புகளில்

தன்னைப் பற்றிய உண்மை விவரங்களை

போலியாக இல்லாமல் உண்மையாக குறிப்பிட்டிருப்பார் .

 

தன் படைப்புக்கு எழும் விமர்சனங்களையும் ,தாக்குதல்களையும்,

கேள்விக் கணைகளையும் ,அச்சுறுத்தல்களையும் ,கேலிகளையும்,

கிண்டல்களையும் ,தாங்கிச் செயல் புரியும்

ஆற்றல் கொண்டவரால் மட்டுமே

தன்னுடைய படைப்புகளில்

தன்னை வெளிப்படுத்திக் கொண்டு படைக்க முடியும் .

உண்மையான தகுதி படைத்தவரால் மட்டுமே

தன்னிடம் இருப்பதை இருப்பது போல் வெளிப்படுத்துபவரால் மட்டுமே

சமுதாயத்தின் பார்வைக்காக பயப்படாமல் ,

சமுதாயத்தின் கைதட்டலுக்கு மயங்காமல் ,

தன்னிடம் உண்மையாக உள்ளதை உண்மையாக வெளிப்படுத்துவார்.

இருப்பதை இருப்பது போல் வெளிப்படுத்துபவர்  எதற்கும் கலங்கமாட்டார்.

 

இல்லாததை இருப்பது போல் வெளிப்படுத்துபவர்

தன்னைப் பற்றிய உண்மை நிலை அறியாதவர்.

தனக்கு தெரியாததை சமுதாயம் பாராட்ட வேண்டும் ; புகழ வேண்டும்;

என்று வாழ்த்தொலிக்காகவும் , கைத்தட்டலுக்காகவும் ஏங்கி

மற்றவர்  எழுத்துக்களைத் திருடி

பிறர்  கற்பனையை களவாடி

தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ,

கேள்விக் கணைகளில் மாட்டிக் கொண்டு

சின்னா பின்னாமாகாமல் இருப்பதற்காக ,

எழுதப்பட்ட எழுத்துக்களுக்கு விளக்கம் சொல்லத் தெரியாமல்

விழி பிதுங்கி நிற்கக் கூடாது என்பதற்காக ,

குறைகள் சுட்டிக் காட்டப்படும் போது

பிழைகள் எடுத்துக் காட்டப் படும் போது

தவறுகள் விளக்கிக் காட்டப் படும் போது

அவைகளுக்கு விளக்கம் சொல்லத் தெரியாமல்

தடுமாறக் கூடாது என்பதற்காக ,

போலி முகமூடி போட்டுக் கொண்டு

பொய்யான பெயர்  பொறித்துக் கொண்டு

பொய்யான உருவம் தரித்துக்  கொண்டு

பொய்யான வாழ்வை நடத்துபவர்

தன்னிடம் உள்ளதை அறியாமல் அறியாமையில் தள்ளாடுபவர்.

 

தன்னிடம் உள்ள உண்மையான திறமை உணர்ந்து கொள்ளாமல் ,

தன்னிடம் எந்த திறமை இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல் ,

தன்னிடம் உள்ள சுயம் எது என்று விளங்காமல் ,

மற்றவர் கற்பனையை திருடி பொய்யான பெயர் கொண்டு

உலா வருபவர்  நீண்ட நாட்கள்  தன் காலத்தை ஓட்ட முடியாது .

 

இல்லாததை இருப்பது போல் வெளிப்படுத்துபவர்

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தான் இருக்க முடியும் .

எல்லையைத் தாண்டி அவர்களால் செல்ல முடியாது

 

தன்னிடம் என்ன உள்ளதோ அதை உணர்ந்து

அதை வெளிப்படுத்தி உயர முயற்சிக்க வேண்டும் .

தன்னிடம் இல்லாத ஒன்றை வெளிப்படுத்தி

உயர முயற்சி செய்யக் கூடாது .

 

தன்னிடம் உள்ள ஒன்றை பயன்படுத்தி செயல்படுபவன் உயர்வான்

தன்னிடம் இல்லாத ஒன்றை வெளிப்படுத்தி செயல்படுபவன் தாழ்வான் .

 

தன்னிடம் உள்ள ஒன்றை உணர்ந்து

இருப்பதை இருப்பது போல் வெளிப்படுத்தி

செயல்படுபவன் வாழ்வில் உயர்வான் .

தன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பது போல் வெளிப்படுத்தி

செயல்படுபவன் வாழ்வில் தாழ்வடைவான் .

 

ஒரு தகப்பனுக்குரிய இரண்டு பிள்ளைகளில் இளைய மகன்

தந்தையின் ஆஸ்தியில் தனக்கு உரிய பாகத்தை

பிரித்து தருமாறு கேட்க தந்தை ஆஸ்தியை பிரித்து பங்கிட்டுக் கொடுத்தார் .

 

தான் அறிவுத் திறமை பெற்றவனாகவும் ,

சாதுர்யங்கள் பல உடையவனாகவும் ,

சிந்தனைகளில் உயர்நிலை பெற்றவனாகவும் ,

தன்னை நினைத்துக் கொண்டு ,

தன்னிடம் இல்லாததை இருப்பது போல் உருவகப் படுத்திக் கொண்டு,

கற்பனை பல செய்து கொண்டு ,

தனியாகச் சென்று வாழலாம் சுகபோகத்தில் திளைக்கலாம் என்று

ஆஸ்தியை பிரித்து எடுத்துச் சென்ற இளைய மகன்

துh தேசத்துக்கு புறப்பட்டுப் போய் அங்கே தவறான வழிகளைப்

பின்பற்றி தவறான வாழ்க்கை நடத்தி

தவறான முறைகளைப் பின்பற்றி

தவறுகள் பல செய்து

தன்னுடைய ஆஸ்தியை அழித்து விட்டான் .

 

எல்லாவற்றையும் இழந்த நிலையில்

அந்த தேசத்திலே கொடிய பஞ்சம் தாக்குண்ட சமயத்தில்

ஒரு குடியானவனிடம் சென்று ஒட்டிக் கொண்டான் .

குடியானவனால் வயலில் பன்றி மேய்க்க அனுப்பப்பட்டபோது

பசியின் தாக்குதலினால் பன்றியின் தவிட்டை தின்று

தன் பசியை ஆற்ற நினைத்த போது

அது அவனுக்கு கிடைக்க வில்லை.

 

தன்னுடைய இழிவான நிலையை எண்ணி பார்த்து

தன்னுடைய கையாலாகாத தனத்தை உணர்ந்து பார்த்து

மனம் தெளிவு பெற்றான்.

என் தந்தையுடன் நான் இருந்திருந்தால்

அவர்  வழிகாட்டுதலின் பேரில் நான் நடந்து கொண்டிருந்தால்

இத்தகைய ஒரு இழிவான நிலை எனக்கு ஏற்பட்டிருக்காது.

தன்னிடம் இல்லாததை இருப்பது போல் நினைத்து வாழ்பவர்

அதாவது தன்னிடம் வாழ்வதற்கான திறமை இல்லை

என்பதை உணராமல் வாழ்பவர்

வாழ்க்கை இப்படித் தான் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டான்.

 

தன்னிடம் வேலை செய்யும் கூலிக்காரர்  

எத்தனையோ பேருக்கு சாப்பாடு போட்டு பசியாற்றுபவர் என் தந்தை

ஆனால் நான் இங்கு பசியாற உணவில்லாமல் தவிக்கிறேன்

பசியின் தாக்கத்தால் சாகிறேன் .

 

என் தந்தையிடம் சென்று

உங்கள் மனம் வருத்தப்படும் படியும்,

உங்கள் சிந்தை கலங்கும் படியும்,

உங்கள் இதயம் வலிக்கும் படியும்,

உங்கள் கண்கள் கண்ணீர்  விடும் படியும்,

செய்யக் கூடாத செயலையும்

தவறான வாழ்க்கையையும் வாழ்ந்து விட்டேன்

பாவங்கள் பல புரிந்து விட்டேன்

குற்றங்கள் பல செய்து விட்டேன்

உம்முடைய மகன் என்று சொல்லக் கூடிய

தகுதி கூட எனக்கு இல்லை.

உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக

என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுவேன்

என்று சொல்லி எழுந்து புறப்பட்டு தன்

தகப்பனிடத்திற்கு வந்தான்.

 

தொலைவில் வரும் தன் மகனைக் கண்டு தகப்பன் அவன் அருகே ஓடி

அவனைக் கட்டிப் பிடித்து உச்சி மோந்து உள்ளம் மகிழ்ந்தான் .

மகன் தந்தையை நோக்கி ,உமக்கு எதிராக பாவஞ் செய்தேன்.

உம்முடைய குமாரன் என்று சொல்வதற்கும்,

உம்முடைய குமாரன் என்று சொல்லி வாழ்வதற்கும் ,

எனக்கு தகுதியில்லை என்றான்.

 

தந்தை தன் ஊழியக்காரர்களை அழைத்து அவர்களை நோக்கி,

நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தை கொண்டு வாருங்கள் ;

அதை இவனுக்கு போடுங்கள் ;

கைகளுக்கு மோதிரத்தை போடுங்கள் ;

கால்களுக்கு பாதரட்சைகளைப் போடுங்கள் ;

கொழுத்த கன்றை கொண்டு வந்து அடியுங்கள்;

உணவை சுவையுற சமையுங்கள் ;

இவன் பசியாற உணவை படையுங்கள் ;

நான் புசித்து சந்தோஷமாயிருப்போம்.

 

என் இளையமகனான இவன் தன் தவறுகளை உணர்ந்து

புதிய பிறப்பு எடுத்திருக்கிறான்

காணாமல் போனவன் கிடைத்து விட்டான்.

தன்னிடம் இல்லாததை இருப்பது போல் நினைத்து

வாழ்வை நடத்த நினைத்தவன் ,

தன்னிடம் இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு

நடத்த முடியாது என்று உணர்ந்து விட்டான்

என்று மகிழ்ச்சி கொண்டான்

சந்தோஷம் அடைந்தான்.

 

வயலில் இருந்த அவனுடைய மூத்த மகன் வீட்டிற்கு

அருகே வரும் போது நடக்கும் நிகழ்வுகளையும் ,கீதவாத்தியத்தையும்,

நடனக் களிப்பையும் கண்டு ஊழியக்காரனை அழைத்து

ஏன் இந்த ஆர்ப்பாட்டம் எதற்கு இந்த செயல்கள்

என்ன காரணத்திற்காக இவைகள் நடைபெறுகின்றன என்றான் .

 

அதற்கு அவன் திரும்பிவந்த உம்முடைய இளைய சகோதரனுக்காக,

உம் தந்தையிடம் இளைய சகோதரன் இணைந்ததற்காக  ,

இத்தகைய விருந்துகளும் ,உபசரிப்புகளும் ,

வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்றான்

 

இதனைக் கேட்ட மூத்த மகன் கவலைப்பட்டு,

 மனம் வேதனைப்பட்டு கோபப்பட்டு ,

வீட்டின் உள் செல்லாமல் வெளியே இருந்தான்.

தகப்பன் வெளியே வந்து மூத்த மகனை உள்ளே அழைத்த போது

அதற்கு மறுமொழியாக இத்தனை காலம்

நான் உன்னுடன் இருந்தேன் ;

உங்களுக்காக வேலை செய்தேன் ;

நீங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றினேன் ;

உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்தேன் ;

உங்கள் ஆசைகளை நிறைவேற்றினேன் ;

அப்படியிருந்தும் நீர்  என்னைப் பாராட்டியோ ,

என் நிலையைப் பாராட்டியோ ,

என் சேவையில் மனம் மகிழ்ச்சி அடைந்தோ ,

என் மேல் கொண்ட பிரியத்தாலோ ,

நான் என் நண்பர்களோடு சந்தோஷமாயிருக்கும் வகையில்

நீர்  ஒரு முறை கூட ,ஒரு ஆட்டுக் குட்டியைக் கூடக் கொடுக்கவில்லை.

 

ஆனால் உம்மை விரோதித்து வெளியே சென்ற

உம்முடைய ஆஸ்தியை தனக்காக , தன் சுயநலத்திற்காக ,

தன் தேவைக்காக , பிரித்துச் சென்ற ஆஸ்தியை ,

தீய வழிகளில் செலவிட்ட ஆஸ்தியை  ,

வேசிகளிடத்தில் அழித்து விட்ட ஆஸ்தியை ,

உம்முடைய இளைய குமாரனுக்காக கொழுத்த கன்றை

அடிக்க ஆணை இட்டு இருக்கிறீர் .

 இது சரியா? இது முறையா?

என்றான் மூத்த மகன்.

 

அதற்கு தகப்பன் மகனே நீ

தன்னிடம் இருப்பதை இருப்பது போல் பயன்படுத்துபவன்

வாழ்வான் என்பதை உணர்ந்து ,

உனக்குரிய செயல்களைச் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறாய் ;

என்னுடன் இருக்கிறாய் ;

நீ என்னுடன் இருக்கும் போது என்னுடையதெல்லாம்

உன்னுடையதாயிருக்கிறது ,

என்னிடம் உள்ள சகலவிதமான ஆஸ்தியை பயன்படுத்தும்

உரிமை உனக்கு இருக்கிறது .

 

ஆனால் உன் இளைய சகோதரன் தன்னிடம் இல்லாததை

இருப்பது போல் நினைத்து வாழ்வை நடத்தியதால்

வாழ்வை நடத்த முடியாது என்று உணர்ந்து கொண்டான் .

காணாமல் போனான் - கிடைத்து விட்டான் ,

அறியாமையினால் மரித்தான் - புத்தி தெளிந்ததினால் உயிர்த்தான் ,

அவன் மனம் திருந்தியதையும் ,

அனுபவ அறிவு பெற்றதையும் ,

சிந்தனை தெளிவு அடைந்ததையும் ,

கண்டு நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றார்  தந்தை.

 

தன்னிடம் இல்லாததை இருப்பது போல் நினைத்து

வாழ்வை நடத்துபவர்  தாழ்நிலை அடைவார் .

தன்னிடம் இருப்பதை இருப்பது போல் பயன்படுத்தி

வாழ்வை நடத்துபவர்  உயர்நிலை அடைவார்  என்கிறார்  இயேசு .

 

 

திருவள்ளுவர் :

    “”“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

         ஞாலத்தின் மாணப் பெரிது”””

                      ----திருவள்ளுவர்----திருக்குறள்-----

 
ஒருவர்  தன் மனதில் உள்ளதை

இருப்பதை இருப்பது போல வெளிப்படுத்துகிறாரா?

இல்லாததை இருப்பது போல வெளிப்படுத்துகிறாரா?

என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுமானால்

அவர்  வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பங்களை

அவர்  எதிர்கொள்ளும் நிலையினை ,முறையினை

வைத்து தெரிந்து கொள்ளலாம்.

வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பங்களை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம் :

ஒன்று               : சாதாரண சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பத்தை

                                     எதிர்கொள்வது

மற்றொன்று : இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பத்தை                

                                     எதிர்கொள்வது

 

சாதாரண சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பம் என்பது

திருமணம் , திருவிழாக்கள் போன்றவற்றைக் குறிப்பது ஆகும்.

இதில் கலந்து கொள்ளலாம் - கலந்து கொள்ளாமல் போகலாம்.

பங்கேற்கலாம் - பங்கேற்காமல் தவிர்க்கலாம் .

இதன் மூலம் இன்பத்தை பெறலாம் - இன்பத்தை பெறாமல் போகலாம்.

இது இன்பங்கள் பரிமாறப் படும் நிலை ;

உறவுகள் மேம்படும் நிலை ; நட்புகள் போற்றப்படும் நிலை;

 

சாதாரண சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பத்தை

ஒருவன் பயன்படுத்தும் போது

இருப்பது இருப்பது போல் வெளிப்படும் அல்லது

இல்லாதது இருப்பது போல் வெளிப்படும்.

ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பத்தை

ஒருவன் பயன்படுத்தும் போது

இருப்பது இருப்பது போல் தான் வெளிப்படும்

இல்லாதது இருப்பது போல் வெளிப்படாது.

 

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பத்தை

அனைவராலும் பயன்படுத்த முடியாது.

அனைவரும் பயன்படுத்தும் வகையில் ,

அனைவரும் உபயோகிக்கும் வகையில்,

இக்கட்டான சூழ்நிலை வெளிப்படாது.

சாதாரண சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பம்

எளிதாக பயன்படுத்தும் வகையிலும் ;
 
காலம் ஒத்துழைக்கும் வகையிலும்;

பெரும்பாலானவர்களால் பயன் படுத்தும் வகையிலும் வெளிப்படும்.

 

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பம்

ஒருவரை பண்படுத்தும்; சிந்தனையை சீர்படுத்தும்;

அறிவை தெளிவு படுத்தும் ;ஆற்றலை மேம்படுத்தும்;

வாழ்வை வளப்படுத்தும்;

 

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பத்தை

சிந்தித்து , சீர்துhக்கி செயல்படுத்த முடியுமா என்று யோசித்து

நடைமுறைப் படுத்த செயல்களை வகுப்பவன்

தொலைநோக்கு பார்வை ,தீர்க்கமான சிந்தனை,

திடமான முடிவு ,நிலையான அறிவு,

கொண்டு இயங்க முடியும் .

 

சாதாரண சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பத்தை

யார்  வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் தான் இருக்கும் .

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பமானது

மனதை குழப்பும் வகையிலும் ,

சிந்தனையை தடுமாற வைக்கும் வகையிலும் ,

முடிவு எடுக்க முடியாத வகையிலும் ,

இருதலைக் கொள்ளி எறும்பு போல

உள்ளத்தை வாட்டும் வகையிலும்  ,

பெரும்பாலும் தன்னைக் காப்பாற்றுவதா ?

மற்றவருக்கு உதவுவதா ? என்ற இரு வேறுபட்ட

நிலைகளைக் கொண்டதாகவும் இருக்கும் .

 

ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட

தாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலையில் ,

தன் குடும்பத்தில் குழப்ப நிலை இருந்தால் ,

மனைவி ,குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருந்தால் ,

வேலை நிமித்தம் இடர்ப்பாடுகள் இருந்தால் ,

காலம் சரிவர ஒத்துழைக்க மறுத்தால் ,

சொல்ல முடியாத காரணங்கள்

மனதை அழுத்திக் கொண்டு இருந்தால் ,

தாயை வந்து கவனிக்க முடியாத நிலை இருந்தால் ,

தாயை கவனிப்பதா? குடும்பத்தை கவனிப்பதா? என்ற

இருவேறுபட்ட நிலையில் மனம் அலை பாயும் , உள்ளம் தடுமாறும்.

 

இதுதான் இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பம்

தன்னை பெற்று , வளர்த்து, காத்து ,வழிநடத்தி ,

துன்பத்தை தான் பெற்று , இன்பத்தை குழந்தைகளுக்கு அளித்து ,

அவர்கள் நோயில் வாடியபோது தன் உடலை வாட்டி

நோயின் தாக்கம் உடலை பாதிக்கா வண்ணம்

அவர்களுக்கு பணிவிடை செய்து,

பிறர்  அவர்களை பாராட்டி வாழ்த்து மழை பொழியும் போது

தான் பெற்ற வெற்றி போல மகிழ்ந்து,

தான் சாப்பிடாவிட்டாலும் குழந்தைகளுக்கு சாப்பாட்டை அளித்து

தான் பட்டினியாக இருந்து அவர்கள் பசியைப் போக்கி,

அவர்கள் பெற்ற வெற்றியை அணு அணுவாக ரசித்து,

கள்ளமில்லா உள்ளத்துடன் ,களங்கமில்லா நெஞ்சத்துடன்,

அன்பு கொண்ட மனதுடன் ,கருணை கொண்ட பார்வையுடன்,

இரக்கம் கொண்ட வார்த்தையுடன்,

ஆளாக்கிய தாய்க்கு நாம் சேவை செய்ய சந்தர்ப்பம் வரும்போது,

அதை பயன் படுத்திக் கொள்ள முடியாமல்

இக்கட்டான சூழ்நிலையில் அந்த சந்தர்ப்பம் வெளிப்படும் போது

தாயை கவனிப்பதா ? வீட்டில் உள்ள தனது குடும்பத்தில் நிலவும்

குழப்பங்களை குறைகளை நீக்குவதா ?என்ற நிலையில்

மனம் இருதலைக் கொள்ளி எறும்பு போல மனம் தடுமாறும்.

 

இந்த நிலையில் எடுக்கப்படும் முடிவு

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பத்தை

பயன்படுத்தலாமா? வேண்டாமா ?என்று எடுக்கப்படும் முடிவு

மிக முக்கிய முடிவாகும்.

இந்த முடிவு அனைவரும் எதிர்ப்பார்க்கும் முடிவு,

அனைவரும் உற்று நோக்கும் முடிவு.

 

அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதைப் பொறுத்து

அவர்  நிலை தெரியும் ; அவர் மனம் புரியும் ;

அவர்  மனதில் மறைத்து வைத்தது

தெள்ளத் தெளிவாக வெளிப்படும்.

இப்படிப்பட்ட ,ஒரு இக்கட்டான சூழ்நிலையில்

ஒருவன் எடுக்கும் முடிவே,

தாயைக் கவனிப்பதா? தன் குடும்பத்தைக் கவனிப்பதா?

என்ற நிலையில் எடுக்கும் முடிவே - அவர்

எத்தகைய மனநிலையை கொண்டவராக இருக்கிறார் ;

எத்தகைய எண்ணங்களை மனதில் வைத்து இருக்கிறார் ;

எத்தகைய சிந்தனைகளை உள்ளத்தில்

புதைத்து வைத்து இருக்கிறார்;

எத்தகைய தன்மைகளை உள்ளவராக இருக்கிறார் ;

என்பதை இந்த சமுதாயம் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும் .

 

தன்னைப் பற்றிய உயர்வான எண்ணங்களை

இந்த சமுதாயம் பெற்றிருக்கும் வகையில் ,

தன் செயல்களை வகுத்து,  அதன் படி நடந்து வந்தாலும் ,

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பத்திற்கு ,

அவர் எடுக்கும் முடிவு அவர்
 
உண்மை நிலையை காட்டி கொடுத்து விடும் .

 

தாயைக் கவனிப்பதா ?தன் குடும்பத்தை கவனிப்பதா ?என்ற

இக்கட்டான சூழ்நிலையில் தவிப்பவனை பார்த்து இச்சமுதாயம்

இரண்டு விதமான கருத்துக்களை அவன் மீது வீசுகிறது :

ஒரு பிரிவினர் : அவர் குடும்ப சூழ்நிலை சரியில்லை

                பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கிடையில்

                அவர்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்

                                          அவர் எப்படி தாயைக் கவனிப்பார்  என்றும் ,

மற்றொரு பிரிவினர்: எப்பேர்ப்பட்ட சூழ்நிலை இருந்தால் என்ன

                    உயிரே போகும் நிலை கூட இருந்தால் என்ன

                   தாயை விட மற்ற சூழ்நிலை முக்கியமா என்றும்,

 

இருவேறுபட்ட நிலைகளில் நின்று கொண்டு

சமுதாயமானது இக்கட்டான சூழ்நிலையில்

தடுமாறுபவரைப் பார்த்து பேசும்.

 

சிலர்  அவர்  தாயைப் பார்க்க வருவது சரி என்பார்கள்

சிலர்  அவர்  தாயைப் பார்க்க வருவது சரி இல்லை என்பார்கள் .

சிலர்  அவர்  தாயைப் பார்க்க வருவதை ஆதரிப்பார்கள்

சிலர்  அவர்  தாயைப் பார்க்க வருவதை ஆதரிக்க மாட்டார்கள் .

 

சமுதாயத்தின் பார்வைக்கும் , சமுதாயத்தின் வார்த்தைக்கும் ,

உள்ளாகாமல் இருக்க வேண்டுமானால்  ,

நிலையான முடிவு ,

தொலைநோக்கு பார்வையுடன் எடுக்கும் தீர்க்கமான முடிவு ,

யாரையும் பாதிக்காத விதத்தில் எடுக்கப்படும் முடிவு ,

மனிதநேயம் கொண்டோர்  ஏற்கும் முடிவு ,

அன்புள்ளம் கொண்டோர்  அங்கீகரிக்கும் முடிவு ,

கருணை உள்ளம் கொண்டோர்  ஆதரிக்கும் முடிவு ,

இரக்க நெஞ்சம் கொண்டோர்  பாராட்டும் முடிவு ,

சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் முடிவு ,

எடுக்க வேண்டும் .

 

தவறான முடிவு இப்பொழுது சரியாக இருக்கலாம்

எதிர் காலத்தில் அந்த முடிவே தவறாக இருக்கலாம் .

கைம்மாறு செய்வதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை

தவற விட்ட முடிவாகவும் இருக்கலாம் .

முடிவுகள் என்பது அவரவர்  எண்ணத்தைப் பொறுத்தும் ,

அவரவர் நிலையைப் பொறுத்தும் ,

சுற்றுப்புற சூழ்நிலையைப் பொறுத்தும் ,

நண்பர்களின் நட்புறவைப் பொறுத்தும் ,

உறவுகளின் கருத்தைப் பொறுத்தும் மாறுபடும் .

 

முடிவுகள் எடுப்பது அவரவர்  சுய விருப்பத்தைப் பொறுத்தது

அவரவர் சுதந்திரத்தைப் பொறுத்தது .

இதைத் தான் செய்ய வேண்டும் இதைச் செய்யக் கூடாது

என்று வலியுறுத்தி சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

இதைச் செய்தால் நல்லது , இதைச் செய்தால் கெட்டது

இதைச் செய்தால் உலகம் உன்னை வாழ்த்தும்

இதைச் செய்தால் உலகம் உன்னை துhற்றும்

இதைச் செய்தால் சமுதாயம் உன்னை வணங்கும்

இதைச் செய்தால் சமுதாயம் உன்னை வெறுக்கும்

என்று மட்டுமே சொல்ல முடியும் .

முடிவெடுக்கும் அதிகாரம் அவரவர்  சுயத்தைப் பொறுத்தது.

அதில் யாரும் தலையிட முடியாது வழிமட்டுமே காட்ட முடியும்.

அதில் பயணிப்பதும் பயணிக்காமல் இருப்பதும்

அவரவர்  நிலையைப் பொறுத்தது .

 

இருந்தாலும் ஆபத்தான கட்டத்தில் ,

தனியாக விடப்பட்ட நிலையில்  ,

வலியின் உக்கிரம் தாக்கிய நிலையில் ,

மரண வேதனையில் தவிக்கும்

சமுதாயத்தின் கொடூரமான வார்த்தைகளினாலும்

சாஸ்திரத்தின் தாக்குதல்களினாலும்

சம்பிரதாயத்தின் நடை முறைகளினாலும் பாதிக்கப்பட்டு

மன வேதனையில் கவலையின் உந்துதலில் ,

கண்ணீரின் தழுவலில் , துன்பத்தின் சிகரத்தில்,

சோகத்தின் உச்சத்தில் இருக்கும் போது

தாய்க்கு அறுவை சிகிச்சை செய்து

அன்பாக ஆதரவாக கூட உதவியாக இருந்து

ஆதரவான வார்த்தைகளைப் பேசி

அவருடைய வலிக்கு ஆதரவாக,  கவலைக்கு உதவியாக இருந்து,

ஒரு மகன் அல்லது மகள் உதவி செய்வது என்பது

மிகப்பெரிய செயல் என எதிர்பார்க்கிறது இந்த சமுதாயம்.

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் இந்த சந்தர்ப்பத்தை

தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு

தனக்கு உள்ள குறைகளை தள்ளி வைத்து விட்டு

தாய்க்கு ஆதரவாக செயல்படுவது காலத்தினால் செய்த செயல்.

காலத்தினால் செய்த நன்றி!

 

அப்பொழுது அந்த நேரத்தில் அந்த செயல்

தாய் நமக்கு செய்த செயலுக்கு ஈடாக இல்லை என்றாலும்,

தாய் நமக்கு செய்த செயலுக்கு நாம் செய்த செயல்

சிறியதாக இருந்தாலும் - அதனை

சீர்துhக்கி பார்த்தால் , சூழ்நிலையை ஆராய்ந்து பார்த்தால் ,

சந்தர்ப்பத்தை உற்று நோக்கி  பார்த்தால்

செய்த செயல் மிகப் பெரியதாகும்.

 

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்பட்ட இந்த சந்தர்ப்பத்தை

பயன் படுத்திய செயல் இந்த உலகத்தை விடப் பெரியது.

இந்த உலகத்தை இச்செயலுடன் ஒப்பிட முடியாது.

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி

தன்னுள் உள்ளதை, தன் அன்பை ,தன் கருணையை ,தன் இரக்கத்தை,

வெளிப்படுத்தியவன் உயர்வடைகிறான்.

அதனைப் பயன்படுத்தாதவன் தாழ்நிலை அடைகிறான்.

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பம்

குழப்பத்தின் சாயல் தழுவிய நிலை

இதில் எடுக்கப்படும் முடிவே முக்கியமாது.

 

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பத்தை

பயன்படுத்தி செய்யும் உதவி சிறிதாக இருந்தாலும்

சீர்துhக்கி பார்த்தால் உலகத்தை விடப் பெரியதாகும்.

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பத்தை

பயன்படுத்தி உதவி செய்தவன் உயர்வடைவான்

உதவி செய்யாதவன் தாழ்நிலை அடைவான்.

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும்

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி

உதவி செய்தவன் செயல் சிறிதாக இருந்தாலும்

அதன் தன்மையை ஆராய்ந்து பார்த்தால்

அது உலகை விடப் பெரியதாகும்

என்கிறார்  திருவள்ளுவர்.

 

 
இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர் :

இயேசு,

தன்னிடம் இருப்பதை இருப்பது போல் பயன்படுத்தி

வாழ்வை நடத்துபவர்  உயர் நிலை அடைவார்.

தன்னிடம் இல்லாததை இருப்பது போல் நினைத்து

வாழ்வை நடத்துபவர்  தாழ்நிலை அடைவார்  என்கிறார் .

 

 

அவ்வாறே,

திருவள்ளுவரும்,

இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் சந்தர்ப்பத்தை எதிர்கொண்டு

தன்னிடம் இருப்பதை இருப்பது போல் வெளிப்படுத்தி

உதவி செய்தவன் வாழ்வில் உயர்வடைவதோடு

அவன் செய்த செயலின் தன்மையை ஆராய்ந்து பார்த்தால்

அது கடலை விடப்பெரியதாகும் என்கிறார்.

 

                      “”” போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்

                                                போற்றினேன் பதிவுஐம்பத்துஆறு ந்தான்முற்றே “”