September 30, 2021

பதிவு-7-நிலைமக்கள்- திருக்குறள்-

 பதிவு-7-நிலைமக்கள்-

திருக்குறள்-

 

இரட்டை

வாக்குரிமையின்

நிகழ்வை

அம்பேத்கர்

தனி

ஒருவராக

நின்று

 

பொறுமை,

 

நிதானம்,

 

தொலைநோக்கு

பார்வை,

 

அனைத்தையும்

சமாளிக்கும்

திறன்,

 

அனைவரையும்

கட்டுப்படுத்தும்

திறமை

 

ஆகியவற்றைக்

கொண்டு

கையாண்டார்.

அம்பேத்கர்

 

தலைவருக்குரிய

தனிப்பட்ட

ஐந்து

தகுதிகளைப்

பெற்று

சிறந்த

தலைவராக

அம்பேத்கர்

இருந்தார்

என்பதை

இந்த நிகழ்வின்

மூலம்

தெரிந்து

கொள்ளலாம்.

 

பல்வேறு

திறமைகள்

படைத்த

இலட்சக்கணக்கான

தொண்டர்கள்

இருந்தாலும்

அவர்களை

வழிநடத்திச்

செல்லும்

தலைவர்

தலைவருக்கென்று

உள்ள

தனிப்பட்ட

ஐந்து

தகுதிகளைப்

பெற்றவராக

இல்லை

என்றால்

இலட்சக்கணக்கான

தொண்டர்களை

வைத்துக்

கொண்டிருந்தாலும்

அந்த தலைவரால்

எந்த ஒரு

செயலிலும்

வெற்றி பெற

முடியாது

 

ஆனால்,

திறமைகள்

எதுவும்

இல்லாத

இலட்சக்கணக்கான

தொண்டர்கள்

இருந்தாலும்

அவர்களை

வழிநடத்திச்

செல்லும்

தலைவர்

தலைவருக்கென்று

உள்ள

தனிப்பட்ட

ஐந்து

தகுதிகளைப்

பெற்றவராக

இருந்தால்

திறமைகள்

இல்லாத

இலட்சக்கணக்கான

தொண்டர்களை

வைத்துக்

கொண்டிருந்தாலும்

அந்த

தலைவரால்

எந்த ஒரு

செயலிலும்

வெற்றி பெற

முடியும்

 

என்பதைத்

தான்

திருவள்ளுவர்

 

“நிலைமக்கள்

சால

உடைத்தெனினும்

தானை

தலைமக்கள்

இல்வழி இல்”

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவு

படுத்துகிறார்,

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------30-09-2021

////////////////////////////////////////////////

பதிவு-6-நிலைமக்கள்- திருக்குறள்-

 பதிவு-6-நிலைமக்கள்-

திருக்குறள்-

 

"என்னைப்

பொறுத்தவரை

அப்போது எனக்கு

ஏற்பட்ட

மிகப்பெரிய

மிகக் கொடிய

தரும சங்கடம்

வேறு எவருக்கும்

ஏற்பட்டதில்லை

என்று சொல்வது

மிகையாகாது.

எவரையும்

திக்குமுக்காட

வைக்கும்

நிலைமை அது.

இரு மாற்று

வழிகளில்

ஒன்றைத்

தேர்ந்தெடுக்க

வேண்டியவனாய்

இருந்தேன்.

பொதுவான

மனிதத்

தன்மையான

ஒருவன் என்ற

முறையில்

நிச்சய

மரணத்திலிருந்து

காந்தியைக்

காப்பாற்ற

வேண்டிய

கடமை

எனக்கிருந்தது.

தாழ்த்தப்பட்ட

மக்களுக்கு

தலைமை

அமைச்சர்

வழங்கிய

அரசியல்

உரிமைகளைக்

காப்பாற்ற

வேண்டிய

சிக்கலும்

எனக்கிருந்தது.

நான் மனிதத்

தன்மையின்

அறைகூவலை

ஏற்றுக்

காந்தியாரின்

உயிரைக்

காப்பாற்றுவதற்காக

அவருக்கு

மனநிறைவு

தரக்கூடிய

விதத்தில்

வகுப்பு

நலத் தீர்ப்பை

மாற்றியமைக்க

உடன் பட்டேன்."

 

என்பது

அம்பேத்கர் மன

வருத்தத்துடன்

வெளிப்படுத்திய

வார்த்தைகள்

 

1932-ம் ஆண்டு

செப்டம்பர் மாதம்

24-ம் தேதி

பூனா ஒப்பந்தம்

ஏற்பட்டது.

தாழ்த்தப்பட்ட

மக்கள்

சார்பாக

அம்பேத்கரும்,

சாதி இந்துக்களின்

சார்பாக

பண்டித

மதன் மோகன்

மாளவியாவும்

கையெழுத்து

இட்டார்கள்.

இராச

கோபாலாச்சாரி,

இராசேந்திரப்

பிரசாத்,

எம்.சி.ராஜா

போன்ற

தலைவர்களும்

ஒப்பந்தத்தில்

கையெழுத்து

இட்டனர்.

 

இதனைத்

தொடர்ந்து

காந்தி

சாகும் வரை

உண்ணாவிரதப்

போராட்டத்தைக்

கைவிட்டார்.

 

காந்தியின்

சாகும் வரை

உண்ணாவிரதப்

போராட்டம்

1932-ம் தேதி

செப்டம்பர் மாதம்

24-ம் தேதி

முடிவடைந்தது.

 

இரட்டை

வாக்குரிமை

என்ற வகுப்பு

நலத் தீர்ப்பு

தந்த

அழுத்தமான

உரிமைகளை

பூனா ஒப்பந்தம்

பறித்து விட்டது

என்றே

அம்பேத்கர்

கருதினார்

 

காந்தியின்

சாகும்வரை

உண்ணாவிரதப்

போராட்டம்

1932-ம் ஆண்டு

செப்டம்பர்

மாதம்

20-ம் தேதி

தொடங்கி

24-ம் தேதியுடன்

முடிவடைந்த

அந்த

நான்கு

நாட்கள்

அம்பேத்கர்

வாழ்வில்

மறக்க

முடியாத

நாட்கள்

மட்டுமல்ல,

இந்தியாவின்

வரலாற்றில்

அழிக்க

முடியாத

நாட்களும் கூட

என்று வரலாறு

பதிவு

செய்திருக்கிறது.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------30-09-2021

////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவு-5-நிலைமக்கள்- திருக்குறள்-

 பதிவு-5-நிலைமக்கள்-

திருக்குறள்-

 

காந்தியின்

உடல்நிலை மிகவும்

மோசமடைந்ததால்

காந்தியின் உயிருக்கு

ஏதேனும் நேர்ந்தால்

தன்னுடைய மக்களின்

உயிருக்கு

ஆபத்து ஏற்படும்.

தாழ்த்தப்பட்ட மக்கள்

இந்தியாவில்

வாழ முடியாத

சூழ்நிலை ஏற்படும்.

தன்னுடைய மக்கள்

தாக்கப்படுவார்கள்.

கொடுமைப்

படுத்தப் படுவார்கள்

என்று அடுத்து

நடக்கக்கூடிய

நிகழ்வுகளை நினைத்து

வருத்தப்பட்டடார்

அம்பேத்கர்.

 

காந்தியடிகளின்

உயிரைக் காப்பாற்ற

வேண்டிய கடமை

ஒரு புறம்,

தாழ்த்தப்பட்ட மக்களின்

நலனைக் காக்க

வேண்டிய பொறுப்பு

மறு புறம்

என்ன செய்வது

என்று தெரியாமல்

என்ன முடிவு

எடுக்க வேண்டும்

என்று தெரியாமல்

இருதலைக் கொள்ளி

எறும்பின் நிலைக்கு

ஆளானார் அம்பேத்கர்.

 

காந்தியின்

சாகும்வரை

உண்ணாவிரதத்தால்

அடுத்தடுத்து

நடந்த நிகழ்வுகள்

அனைத்தையும் தனி

ஒருவராக நின்று

அனைத்தையும்

சமாளித்தார்

டாக்டர்.அம்பேத்கர்.

 

தலைவருக்குரிய

அனைத்தையும்

சமாளிக்கும்

திறனானது

டாக்டர்.அம்பேத்கரிடம்

இவ்வாறு

வெளிப்பட்டது.

 

தங்களுடைய

அடிப்படை

உரிமைகளைப்

பெற்றுத் தர

அம்பேத்கர்

ஒருவரால் தான்

முடியும் என்றும் ;

தங்களை அடிமை

நிலையில் இருந்து

மீட்டு எடுத்து

சுதந்திரமாக

இந்த சமுதாயத்தில்

வாழ வைக்க

அம்பேத்கர்

ஒருவரால் தான்

முடியும் என்றும் ;

இந்தியா முழுவதும்

உள்ள அனைத்து

தாழ்த்தப்பட்ட

மக்களும் நினைத்த

காரணத்தினால்

அனைத்து

தாழ்த்தப்பட்ட

மக்களும்

அம்பேத்கரை

தாழ்த்தப்பட்ட

மக்களின் தலைவராக

ஏற்றுக் கொண்டு

அவர் இடும்

கட்டளைக்கு

காத்துக் கொண்டு

இருந்தனர்.

 

டாக்டர்.அம்பேத்கரின்

கட்டளையை ஏற்று

செயல்பட்டனர்.

 

தாழ்த்தப்பட்ட மக்கள்

அனைவரும்

டாக்டர்.அம்பேத்கர்

தலைமையின் கீழ்

ஒற்றுமையாக

ஒருவருக்கொருவர்

சண்டை போடாமல்

அம்பேத்கரின்

வார்த்தைக்குக்

கட்டுப்பட்டு

நடந்தனர்.

 

அம்பேத்கர்

உதிர்க்கும் வார்த்தைகள்,

செயல்படுத்தும்

செயல்கள்,

எடுக்கும் முடிவுகள்,

தங்கள் நலனுக்காகத்

தான் இருக்கும்

என்பதை உணர்ந்த

தாழ்த்தப்பட்ட மக்கள்

அம்பேத்கர்

வார்த்தைக்கு

கட்டுப்பட்டு

செயலாற்றி வந்த

தாழ்த்தப்பட்ட மக்கள்,

அடுத்து அம்பேத்கர்

என்ன சொன்னாலும்

அதை செயல்படுத்தக்

காத்துக்

கொண்டிருந்தார்கள்.

 

தலைவருக்குரிய

அனைவரையும்

கட்டுப்படுத்தும்

திறமை

டாக்டர்.அம்பேத்கரிடம்

இவ்வாறு

வெளிப்பட்டது.

 

இந்நிலையில்

காந்தியின் உயிரை

காப்பாற்ற வேண்டிய

பொறுப்பும் ;

தாழ்த்தப்பட்ட

மக்களின்

நலனைக் காக்க

வேண்டிய பொறுப்பும்  ;

அம்பேத்கருக்கு

இருந்தது.

 

காந்தியின் உயிரைக்

காப்பாற்ற வேண்டும்

என்ற

நோக்கத்துடனும்,

தாழ்த்தப்பட்ட

மக்களின்

உயிரைக் காப்பாற்ற

வேண்டும் என்ற

நோக்கத்துடனும்

இரட்டை

வாக்குரிமையைத்

திரும்பப் பெற்றார்

அம்பேத்கர்.

 

இந்த இக்கட்டான

சூழ்நிலையை

அம்பேத்கரே

கீழ்க்கண்டவாறு

தன்னுடைய

வார்த்தையின்

மூலம் சொல்கிறார்.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------30-09-2021

////////////////////////////////////////////////