April 12, 2019

திருக்குறள்-பதிவு-135-சுபம்


                   திருக்குறள்-பதிவு-135-சுபம்

“கலிலியோ இறந்து
350 ஆண்டுகளுக்குப்
பிறகு கலிலியோவைப்
பற்றிய விசாரணை
1990-ஆம் ஆண்டு நடந்தது.
இந்த விசாரணையின்
இறுதியில்-பவுல் இரண்டாம்
ஜான் போப் 1992-ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம்
31-ம் தேதி கலிலியோவிற்கு
எதிராக நடத்தப்பட்ட
அனைத்து செயல்களுக்காகவும்
வருத்தம் தெரிவித்ததோடு
மட்டுமல்லாமல் மன்னிப்பும்
கேட்டுக்கொண்டார்”

“சூரிய மையக் கோட்பாடு
கண்டுபிடிக்கப்பட்ட
வரலாறு என்பது
பலபேர் தங்களுடைய
வாழ்க்கையை இழந்ததால்
கட்டப்பட்ட வரலாறு ;
பலபேருடைய இறப்பின் மேல்
கட்டப்பட்ட வரலாறு ;
அனைவரும் தெரிந்து
வைத்திருக்க வேண்டிய
வரலாறு ;”

"பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்ற பூமி மையக்
கோட்பாட்டை வெளியிட்டார்
டாலமி "

"டாலமி சொன்ன
பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்ற பூமி மையக் கோட்பாடு
தவறானது என்றும் ;
சூரியனை மையமாக
வைத்தே - பூமி சுற்றி
வருகிறது என்ற சூரிய
மையக் கோட்பாடே
சரியானது என்றும் ;
தனது ஆய்வுகளின் மூலம்
கணக்கீடுகளாலும்,
குறியீடுகளாலும்
வெளியிட்டார்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்"

"டாலமி சொன்ன
பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்ற பூமி மையக்
கோட்பாடு
தவறானது என்றும்
நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ்
சொன்ன சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றி வருகிறது
என்ற சூரிய
மையக் கோட்பாடே
சரியானது என்றும்
தனது தத்துவங்களின்
மூலமும்
ஆராய்ச்சிகளின் மூலமும்
வெளியிட்டார்
ஜியார்டானோ புருனோ"

"பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்று டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறானது என்றும் ;
சூரியனை மையமாக
வைத்து
பூமி சுற்றி வருகிறது
என்ற சூரிய மையக்
கோட்பாடே
சரியானது என்றும் ;
வார்த்தைகளால் மட்டும்
சொல்லாமல் தனது
தொலை நோக்கியின் மூலம்
நிரூபித்துக் காட்டினார்
கலிலியோ"

" நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் ;
ஜியார்டானோ புருனோ ;
கலிலியோ ;
ஆகியோர்
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றி
வருகிறது - என்ற சூரிய
மையக் கோட்பாட்டை
நிரூபிப்பதற்காக
தங்களுடைய உயிரையே
கொடுத்தவர்கள் "

" உலக வரலாற்றை
எடுத்துக் கொண்டால்
தான் என்றும் ;
தனது என்றும் ;
தனது குடும்பம் என்றும் ;
தனது சந்ததி என்றும் ;
சுயநலத்துடன் வாழாமல் 
சமுதாய நலன் ;
பொது மக்கள் நலன் ;
பிறர் நலன் ; ஆகியவற்றை
கருத்தில் கொண்டு
பிறருக்காகவே வாழ்ந்தவர்கள்
உண்மையை நிரூபிப்பதற்காக
தங்கள் உயிரையே
கொடுத்திருக்கின்றார்கள்
என்பது தெரியவரும் "

" பல்வேறு அறிஞர்கள் ;
பல்வேறு காலகட்டங்களில் ;
ஆராய்ச்சி செய்து ;
பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றவில்லை ;
சூரியனை மையமாக
வைத்துத் தான் பூமி
சுற்றி வருகிறது என்று
தங்கள் ஆராய்ச்சியின்
மூலமாக கண்டுபிடித்து
நிரூபித்தனர் "

" இதன் காரணமாக
இன்று நாம் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றி வருகிறது
என்ற உண்மையை
தெரிந்து கொண்டிருக்கிறோம் "

"சூரினை மையமாக வைத்து
பூமி சுற்றி
வருகிறது என்ற
சூரிய மையக் கோட்பாட்டை
புத்தகத்தில் படிக்கும்போதோ
(அல்லது)
பிறர் சொல்லக்
கேட்கும் போதோ
சூரியனை மையமாக வைத்து
பூமி சுற்றி வருகிறது
என்ற சூரிய மையக்
கோட்பாட்டை
நிரூபிப்பதற்காக
தங்கள் உயிரையே கொடுத்த
நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
ஜியார்டானோ புருனோ
கலிலியோ
ஆகியோரின் இரத்தம்
தோய்ந்த வாழ்க்கை அந்த
கோட்பாட்டின் பின்னால்
இருக்கிறது என்பதை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்"

---------- திருக்குறள் (சுபம்)

---------  இன்னும் வரும்


----------  K.பாலகங்காதரன்
---------  12-04-2019
/////////////////////////////////////////////////////