December 31, 2019

புத்தாண்டு வாழ்த்துக்கள்- 01-01-2020


புத்தாண்டு வாழ்த்துக்கள்-
01-01-2020 !

அன்பிற்கினியவர்களே !

“உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும் “
     -----------வள்ளலார்

“மனதில் ஒன்றை வைத்துக்
கொண்டு வெளியே வேறொன்று
பேசுபவரிடம் உறவு
வைத்துக் கொள்ளக் கூடாது
என்பது தான் இந்த
பாடலுக்கு பொதுவாக
சொல்லப்படும் கருத்து”

“மனதில் ஒன்றை வைத்துக்
கொண்டு வெளியே
வேறொன்றை
பேசுபவர்களிடம் உறவு
வைத்துக் கொள்ளக்கூடாது ;
என்றால் நம்முடைய
நண்பர்கள் ; உறவினர்கள் ;
சுற்றத்தார்கள் ; நம்முடன்
வேலை செய்பவர்கள் என்று
இந்த உலகத்தில் உள்ள
யாருடனும் நம்மால் உறவு
வைத்துக் கொள்ள முடியாது ;
இந்த உலகத்தில் உள்ள
ஒவ்வொருவரும்
தனித்தனியாக இருக்க
வேண்டிய சூழ்நிலை
தான் ஏற்படும் ;

 “அப்படி என்றால் இந்த
பாடல் என்ன அர்த்தம்
சொல்கிறது என்று பார்ப்போம் ; “

“ஒரு பணக்கார குடும்பத்தில்
கணவன் ; மனைவி ;
மூன்று பெண் பிள்ளைகள்  
இருந்தார்கள் – இந்த மூன்று
பெண் பிள்ளைகளுமே
வசதியாக வளர்ந்தவர்கள் ;
அழகால் வசீகரிப்பவர்கள் ;
படிப்பில் சிறந்தவர்கள் ;
அறிவில் உயர்ந்தவர்கள் ;
பணத்தில் குளிப்பவர்கள் ;
மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் ;
என்று சொல்லத்தக்க
வகையில் வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ;

“பன்னீரில் குளித்து
சந்தனத்தில் நீந்தி
களிப்படையும் பங்களா
வாசியின் சாளரங்களுக்குள்
மட்டும் எட்டிப்
பார்ப்பதல்ல காதல் ;
அது பணம் படைத்த
பங்களாவுக்கும் வரும்
காசில்லாத குடிசைக்கும்
வரும் என்பதை உணர்த்தும்
வகையில் பணம் படைத்தவர்
பெற்றெடுத்த மூன்று
பெண்களில் முதல் பெண்
பணமில்லாத ஏழை
ஒருவனை காதலித்தாள் ;

“காதல் என்ற ஒன்று
கருத்தினில் நுழைந்து
விட்டால் சுற்றம் தெரியாது ;
உறவுகளின் உதவிக்கரம்  
தெரியாது ; பெற்றோர்களின்
அன்பு தெரியாது ;
நட்பின் நாகரிகம் தெரியாது ;
என்பதற்கேற்ப அவர்கள்
காதல் செய்தனர் ;”

“மறைவாக செய்யப்பட்டு
வந்த காதல் வெளிப்பட்டு
விட்ட போது குடும்பத்தில்
சூறாவளி அடித்தது ;
துயர மேகங்கள் கண்ணீரை
அருவியாக பொழிந்தது ;
கோபக்கனலில் இதயங்கள்
அனைத்தும் எரிந்தது ;
குடும்பம் துடிப்பில்லாத படகு
போல் நிம்மதியிழந்தது ;
மனம் என்ன செய்வது
என்று தெரியாமல் தள்ளாடியது ;
குடும்பத்தில் உள்ள அனைத்து
மனங்களும் அடுத்து என்ன
நடக்கப்போகிறது என்று
தெரியாமல் அல்லாடியது ;
முதல் பெண்ணிற்கும்
பெற்றோர்களுக்கும்
சகோதரிகளுக்கும் இடையே
கருத்து வேற்றுமைகள்
உச்சத்தில் இருந்தது
சண்டைகள்
உக்கிரத்தை அடைந்தது ;

“பல்வேறு நிலைகளில்
பேச்சுவார்த்தைகள்
நடத்தப்பட்டது ; பல்வேறு
நிலைகளில் அறிவுரைகள்
வழ்ங்கப்பட்டது ; சில
சமயங்களில் கண்டிப்பும்
செய்யப்பட்டது ; முடிவில்
பெண் காதலை மறந்து
விடுகிறேன் பெற்றோர்கள்
சொல்லும் பையனை
திருமணம் செய்து
கொள்கிறேன் என்று
சொன்னதின் அடிப்படையில்
பெற்றோர்கள் கல்யாண
ஏற்பட்டை செய்த போது
கல்யாணத்தன்று அந்தப்
பெண் காதல் செய்த
பையனுடன் ஓடி அந்தப்
பையனை திருமணமும்
செய்து கொண்டாள் ;”

“அந்த பெற்றோர்கள்
அவமானத்தில் தலை
குனிந்தனர்; தன் பெண்
தங்களை ஏமாற்றி விட்டதாக
அழுது புலம்பினர் ; பையனை
இகழ்ந்தனர் ; கவலை அவர்கள்
இதயத்தை சூழ்ந்தது ; இருள்
அவர்கள் வாழ்க்கையை
சூழ்ந்தது ; மானம் காற்றில்
பறந்ததால் அவமானம்
குடும்பத்தை சூழ்ந்தது ;

“இந்தக் கதையில் தவறு
செய்தவர்கள் யார்
அந்த பெண்ணா அல்லது
பெற்றோர்களா என்ற
கேள்விக்கு பதிலை யோசித்தால்
பெரும்பாலானவர்கள்
அந்தப் பெண் என்று
தான் சொல்வார்கள் ;
நடந்த தவறுக்கு அந்த
பெண் காரணமல்ல
பெற்றோர்கள் தான் காரணம்”

“தனது மகள் மனதில்
நினைத்ததை அப்படியே
வெளியில் சொல்லி விட்டாள் ;
என்று தனது மகளின்
வார்த்தைகளை நம்பி
தனது மகளுடன் கலந்து
ஆலோசித்து தனது மகளுக்கு
திருமணம் செய்ய முயற்சி
செய்த காரணத்தினால்
பெற்றோர்கள் கஷ்டத்தையும்
அவமானத்தையும் சந்திக்க
வேண்டி இருந்தது ;”

“தனது மகள் மனதில்
ஒன்று வைத்து வெளியில்
வேறொன்று பேசியிருக்கிறாள் ;
என்பதை பெற்றோர்கள்
புரிந்து கொண்டிருந்தால்
தனது மகளுடன் கலந்து
ஆலோசிக்காமல் எந்தவிதமான
முடிவையும் எடுக்காமல் கல்யாண
ஏற்பாட்டை பண்ணாமல்
இருந்திருப்பார்கள் ;இதனால்
அவர்கள் கஷ்டப்படுவதும்
அவமானப்படுவதும்
தவிர்க்கப்பட்டிருக்கும் ;”

“உறவு கலவாமை
வேண்டும் என்றால்
உறவு கொள்ளக்கூடாது
என்று பொருள் அல்ல “

“உறவு கலவாமை
வேண்டும் என்றால்
கலந்து ஆலோசித்து
எந்தவிதமான முடிவையும்
எடுக்கக்கூடாது என்று பொருள் ;

“உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும் என்றால்
மனதில் ஒன்று வைத்து
வெளியே வேறொன்று
பேசுபவரிடம் உறவு வைத்துக்
கொள்ளக் கூடாது என்று
பொருள் அல்ல “

“உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும் என்றால்
மனதில் ஒன்று வைத்து
வெளியே வேறொன்று
பேசுபவரிடம் கலந்து
ஆலோசித்து எந்தவிதமான
முடிவையும் எடுக்கக்
கூடாது என்று பொருள் “

“அதாவது மனதில் ஒன்று
வைத்து வெளியே வெளியே
வேறொன்று பேசுபவரிடம்
கலந்து ஆலோசித்து எந்தவிதமான
முடிவையும் எடுக்கக்கூடாது ;
அப்படி எடுத்தால் கஷ்டத்தையும்
அவமானத்தையும் நாம்
சந்திக்க நேரிடும்
என்பதைத் தான் வள்ளலார்

உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும்

என்ற பாடலின் மூலம்
தெளிவாக்குகிறார் ! “

“உயர்ந்தோர் சொல்லிச் சென்ற
வார்த்தைகளின் உண்மையான
அர்த்தத்தைத் தெரிந்து கொண்டால்
வாழ்க்கை துன்பங்கள் இன்றி
இன்ப மயமானதாக இருக்கும்
என்பதை உணர்ந்து
புத்தாண்டை கொண்டாடுவோம் “

01-01-2020
புத்தாண்டு வாழ்த்துக்கள்!”

----------என்றும் அன்புடன்

----------K.பாலகங்காதரன்
----------01-01-2020
/////////////////////////////////////////////////