May 10, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்- பதிவு-16-சுபம்


           ஔவையார்-நான்கு கோடி பாடல்- பதிவு-16-சுபம்

நிறைய நபர்கள்
போட்டியாக இருந்து
கோடிக்கணக்கில் பணம்
தருகிறோம் என்று
சொல்லியும்
அவைகளை மனதில்
கொள்ளாமல்
பணத்திற்கு ஆசைப்படாமல்
கொடுத்த வாக்கு
தவறாமல்
உதவி செய்தவருக்கு
உதவி செய்யும்
நம்முடைய
அந்த செயல்
கோடி ரூபாய் மதிப்பு பெறும்
அல்லது
கோடி பொன் மதிப்பு பெறும்
என்று நினைக்க
வேண்டாம்

இது நான்காம் செயல்
இது நான்காம் கோடி
பெறும் செயல்
இது செய்ய வேண்டும்
என்று ஔவையார்
சொன்ன செயல்
இது கோடி ரூபாய்
பெறும் செயல்
அல்லது
இது கோடி பொன்
பெறும் செயல்
என்று
நினைக்க வேண்டாம்
இது கோடி  புண்ணியம்
பெறும் செயல்

முதல் மூன்று செயல்களும்
கோடி மதிப்பிலான பணமோ
அல்லது
கோடி மதிப்பிலான பொன்னோ
பெறக்கூடிய செயல் ஆகும்

ஆனால்
நான்காவது செயல் மட்டும
கோடி புண்ணியம் பெறும்
செயல்

நாம் ஒருவருக்கு
நல்லது செய்வதாக
வாக்கு கொடுத்து
வாக்கு தவறாமல்
நாம் சொன்னதை
செய்வது என்பது
கோடி புண்ணியம்
கொண்டதாகும்

வாழ்வில்
எத்தனை செயல்கள்
செய்தாலும்
எல்லா செயல்களையும்
விட உயர்வான செயல்
வாக்கு தவறாமை ஆகும்

அதனால் தான்
மற்ற செயல்களான
மூன்று செயல்களையும்
கோடி பணத்திற்கோ
அல்லது
கோடி பொன்னிற்கோ
ஒப்பிட்ட
ஔவையார்
நாக்கோடாமையை
அதாவது
வாக்கு தவறாமையை மட்டும்
கோடி புண்ணியத்திற்கு
ஒப்பிட்டு சொல்கிறார்.

இது தான்
நான்கு கோடி பாடல்
இந்த பாடலை
நன்கு உற்று பார்த்தால்
நான்கு கோடியும்
ஒன்றுடன்
ஒன்று தொடர்பு
கொண்டிருப்பது தெரியும்

முதல் கோடி
வரவேற்பையும்
இரண்டாவது கோடி
உபசரிப்பையும்
மூன்றாவது கோடி
உறவு முறையையும்
நான்காவது கோடி
உறுதி மொழியையும்
குறிக்கும்

முதல் மூன்று கோடியும்
செயலைக் குறிக்கும்
நான்காவது கோடி
சொல்லைக் குறிக்கும்
அதாவது
வாக்கு தவறாமையைக்
குறிக்கும்

ஒவையார் தன்னுடைய
நான்கு கோடி பாடலில்
முதல் செயலையும்
இரண்டாம் செயலையும்
செய்ய வேண்டாம்
என்றும்
மூன்றாம் செயலையும்
நான்காம் செயலையும்
செய்ய வேண்டும்
என்று ஔவையார்
சொல்கிறார்
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்

--------- சுபம்
///////////////////////////////////////////////////