February 11, 2017

1.இயேசு கிறிஸ்து-அகத்தியர்-கேளப்பா-பதிவு-(1)-79-1

            1.இயேசு கிறிஸ்து-அகத்தியர்-கேளப்பா -பதிவு-(1)-79-1

                    """"பதிவு எழுபத்துஒன்பதை விரித்துச் சொல்ல
                     ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

"இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்ட நட என்றார்."
                                --------யோவான் - 5 : 8
"உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது."
                               --------யோவான் - 5 : 9
"ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக் கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்."
                             --------யோவான் - 5 : 10
"அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாகஎன்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்."
                             --------யோவான் - 5 : 11
"அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்."
                              --------யோவான் - 5 : 12
"சொஸ்தமாக்கப்பட்டவன்  அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்."
                            --------யோவான் - 5 : 13
"அதற்குப் பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு : இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ் செய்யாதே என்றார்."
                            --------யோவான் - 5 : 14
"அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்."
                             --------யோவான் - 5 : 15
"இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள்  அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகை தேடினார்கள்."
                             --------யோவான் - 5 : 16
"இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார்நானும் கிரியைசெய்து வருகிறேன் என்றார்."
                              --------யோவான் - 5 : 17
"அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகை தேடினார்கள்."
                            --------யோவான் - 5 : 18
"அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்."
                                 --------யோவான் - 5 : 19
"பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்."
                                   --------யோவான் - 5 : 20

மனிதனின் வாழ்க்கையோடு
தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு
தொடர்ந்து வரும் பழக்கமே
வழக்கமாக இருக்கும்.
மனித வாழ்க்கையோடு
தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளாமல்
தொடர்ந்து வராமல் இருக்கும்
எந்த ஒரு பழக்கமும்
வழக்கம் இழந்து விடும்.

ஒரு பழக்கம் வழக்கமாக இருக்க
வேண்டுமென்றால்
மனிதனின் வாழ்க்கையோடு
தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு
தொடர்ந்து வர வேண்டும்.

மனித வாழ்க்கையோடு
தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளாமல்
தொடர்ந்து வராமல் இருக்கும்
எந்த ஒரு பழக்கமும்
வழக்கம் இழந்து விடும்.

பழக்கத்தை இரண்டு வகைகளில் பிரிக்கலாம்
     ஒன்று        : தேவையுள்ள பழக்கம்
    இரண்டு      : தேவையற்ற பழக்கம்

இந்த தேவையுள்ள பழக்கம் மற்றும்
தேவையற்ற பழக்கம்
தனி மனிதனைச் சார்ந்தும்,
சமுதாயத்தைச் சார்ந்தும்,
இருக்கும்.

தனிமனிதனை எடுத்துக் கொண்டால்
தேவையுள்ள பழக்கமும் இருக்கும்;
தேவையற்ற பழக்கமும் இருக்கும்;

சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும்
தேவையுள்ள பழக்கமும் இருக்கும்;
தேவையற்ற பழக்கமும் இருக்கும்;

தேவையுள்ள பழக்கம் எது என்றும்,
தேவையற்ற பழக்கம் எது என்றும்,
தெரிந்தும் , தெரியாமலும்
தனிமனிதனும் இச்சமுதாயமும்
பயன்படுத்தி வருகிறது
தங்களை அறியாமலேயே
பின்பற்றி வருகிறது.

தனி மனிதன் - தேவையற்ற பழக்கம்
தனி மனிதன்
மதுவுக்கு அடிமையானால்
பல்வேறு இன்னல்களை
தனக்கும்
தன் குடும்பத்திற்கும்,
தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும்,
தன்னை நம்பி இருப்பவர்களுக்கும்,
செய்கிறான்
அதாவது,
மது குடிக்க பணத்தை செலவு பண்ணுவது;
அதன் காரணமாக சம்பளத்தை இழப்பது;
வருமானத்தை செலவு செய்வது;
குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் செய்வது;
குடும்பத்தில் உள்ளவர்களை  நிம்மதியை
இழக்க வைப்பது;
பிறரை வருத்தப்பட வைப்பது;
பிறரை வேதனைப்பட வைப்பது;
பிறரை வசைபாடுவது;
பிறரை மனம் நோக வைப்பது;
இழப்புகளை சந்திப்பது;
கெட்ட பெயர் எடுப்பது;
குடும்பத்திற்கு கெட்ட பெயர்
வாங்கி கொடுப்பது;
குடும்பத்தின் மேல் பாசம் இல்லாமல் இருப்பது;
குடும்பத்திற்கு செய்ய வேண்டியவைகளை
செய்யாமல் விடுவது;
குடும்பத்தை விட்டு விலகி இருப்பது;
குடும்பத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது;
குடும்பத்தை துன்பத்தில் வருந்த வைப்பது;
குடும்பத்தை கண்ணீரில் அழ வைப்பது;
என்று பல்வேறு தவறுகளை செய்தாலும்
இது தவறு என்று சில சமயம் தெரிந்தாலும்,
அதை விட முடியாமல்,
பழக்கத்தை வழக்கமாகி விட்ட காரணத்தினால்
மது குடிப்பதை தொடர்ந்து செய்து
வழக்கமாக்கிக் கொண்டு
தேவையற்ற பழக்கம் என்று தெரிந்தும்
தேவையுள்ளதாக கருத்தில் கொண்டு
செயலாற்றுவதால்,
தனி மனிதன் தேவையற்ற பழக்கத்தை
வாழ்க்கையோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு
அப்பழக்கத்தை தொடர்ந்து செய்து வருவதால்
அது தனிமனித வாழ்க்கையில்
தேவையற்ற வழக்கமாகி விட்டது.
அந்த குறிப்பிட்ட தேவையற்ற பழக்கம்
தனி மனிதனின் வாழ்க்கையில் வழக்கமாகி விட்டது
தனி மனித வாழ்க்கையில்
தேவையற்ற பழக்கம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு
தொடர்ந்து செய்து வருவதால்
தேவையற்ற பழக்கம் வழக்கம் ஆகி விட்டது

தனி மனிதன் - தேவையுள்ள பழக்கம்
தனி மனிதன் வாழ்க்கையோடு தொடர்புடைய
அன்றாட பழக்கமான
பல் துலக்குவது,
மலஜலம் கழிப்பது,
குளிப்பது  - ஆகியவை
தனி மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு
தொடர்பு கொண்டதோடு மட்டுமல்லாமல்
அத்தியாவசியமான தேவையாக இருப்பதால்
தனிமனிதன் மட்டுமின்றி
சமுதாயமும் தன் அன்றாட பழக்க வழக்கங்களில்
ஒன்றாக இதை பின்பற்றி வருகிறது.

அத்தியாவசிய தேவையாக கருதப்படுபவை
எப்படி தனிமனிதன் வாழ்க்கையில்
எப்படி தவிர்க்க முடியாத ஒன்றாக
பிண்ணிப் பிணைந்து வருகிறதோ,
அந்த பழக்கவழக்கங்கள்
தனிமனிதன் மட்டுமின்றி
சமுதாய அளவிலும்
தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதால்
அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து வருகிறது.

தனிமனிதன் மற்றும் சமுதாய அளவில்
தவிர்க்க முடியாத,
அத்தியாவசியமான,
தினமும் கண்டிப்பாக
செய்தே ஆக வேண்டிய,
செய்ய வேண்டிய,
செய்தே தீர வேண்டிய,
அந்த பழக்க வழக்கங்களை
செய்யாமல் விட்டால் என்ன என்ன
உடற் உபாதைகள் ஏற்படும் என்பதை
கருத்தில் கொண்டு - மனிதன்
தன் வாழ்க்கையோடு ஒட்டி வரும்
தனி மனிதன் வாழ்க்கையில் இணைந்து வரும்
தனி மனிதன் வாழ்க்கையில் பிண்ணிப் பிணைந்து வரும்
தவிர்க்க முடியாத
இந்த அத்தியாவசிய பழக்கவழக்கங்களை
எப்படி செய்தே தீர வேண்டுமோ?
அப்படியே,
சில நல்ல பழக்கவழக்கங்களை
நம் வாழ்க்கையோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு
இன்றியமையாத , அத்தியாவசிய,
தேவையாக உள்ள சில
நல்ல பழக்கவழக்கங்களை ஏற்றுக் கொண்டு
பின்பற்றி வந்தால்
சில பழக்கங்களை
நம் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி
தொடர்ந்து செய்து வருவோமேயானால்
அந்த பழக்கம்
நம் வாழ்க்கையோடு ஒன்றி
தொடர்ந்து வந்து வழக்கமாகி விடும்.

தனி மனிதன் மற்றும் சமுதாயத்தையும்
சேர்ந்தே பார்த்தோமேயானால்
எந்த பழக்கம்
நல்ல பழக்கம் என்பதை முடிவு செய்து
எந்த பழக்கத்தை பின்பற்றினானல்
எந்த பழக்கத்தை நம் வாழ்க்கையில்
ஒன்றாக ஆக்கிக் கொண்டால்
நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து,

எந்த பழக்கத்தை நம் வாழ்க்கையில்
நம் வாழ்க்கையோடு சேர்த்துக் கொண்டால்
நம் வாழ்க்கை  இன்பமாக இருக்குமோ
என்பதை அறிந்து,
எந்த பழக்கத்தை சேர்த்துக் கொண்டால்
நம் வாழ்க்கை துன்பமின்றி சந்தோஷமாக இருக்குமோ;

எந்த பழக்கத்தை சேர்த்துக் கொண்டால்
வாழ்க்கை வளமாக இருக்குமோ;

எந்த பழக்கத்தை சேர்த்துக் கொண்டால்
வாழ்க்கை நன்றாக இருக்குமோ;

எந்த பழக்கத்தை சேர்த்துக் கொண்டால்
வாழ்க்கை செழிப்பாக இருக்குமோ;

எந்த பழக்கத்தை சேர்த்துக் கொண்டால்
வாழ்க்கை இனிமையாக இருக்குமோ;

எந்த பழக்கத்தை சேர்த்துக் கொண்டால்
வாழ்க்கை உயர்வாக இருக்குமோ;

எந்த பழக்கத்தை சேர்த்துக் கொண்டால்
வாழ்க்கை ஒளிமயமாக இருக்குமோ;

எந்த பழக்கத்தை சேர்த்துக் கொண்டால்
வாழ்க்கை துன்பமின்றி இருக்குமோ;

எந்த பழக்கத்தை சேர்த்துக் கொண்டால்
வாழ்க்கை செழிப்பாக இருக்குமோ;

அந்த பழக்கத்தை கண்டறிந்து
அதை பின்பற்றினால்,
அதை வாழ்க்கையில்
வாழ்க்கையின் அன்றாட தேவையாக மாற்றி,
வாழ்க்கையின் அன்றாட செயலாக மாற்றி,
வாழ்க்கையின் அன்றாட நிகழ்வாக மாற்றி,
தொடர்பு கொண்டு
தொடர்ந்து பின்பற்றினால்,
அந்த பழக்கம்
நம் வாழ்க்கையோடு ஒன்றி விட்டால்
அது வழக்கமாகி விடும்.

உடற்பயிற்சி என்பது சிறந்தது.
அந்த உடற்பயிற்சியை செய்வதன் மூலம்
உடல் புத்துணர்ச்சி பெறும்;
சிந்தனை தெளிவு பெறும்;
மனம் அமைதி பெறும்;
உடற்பயிற்சியில் அடங்கிய
கண் பயிற்சி,
கால் பயிற்சி,
கைப் பயிற்சி,
மூச்சுப் பயிற்சி,
ஆசனங்கடள
என பல்வேறு விதமான
உடற் பயிற்சியை
நாம் தொடர்ந்து செய்து வர வேண்டும்;
அதன் பலன்களை நுகர வேண்டும்;
அதன் பலன்களை அனுபவிக்க வேண்டும்;
நோய் வருவதற்கு முன் நம்மை
பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் உள்ள பழக்கங்கள்
பெரும்பாலும் நோய் வந்த பிறகு
தீர்க்கும் விதத்தில் உள்ளன.
நோய் வருவதற்கு முன்
தீர்ப்பதற்கு எதுவும் வழி சொல்வதில்லை
உடற்பயிற்சி மட்டுமே
நோய் வராமல் இருப்பதற்காகவும்,
நம்மை காத்துக் கொள்வதற்காகவும்,
இருக்கின்ற ஒரு வழி என்பதை
உணர்ந்து கொண்டோமேயானால்,
உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து;
உடலை நோயிலிருந்து பாதுகாத்து;
இன்பமாக வாழலாம் என்பதை அறிந்து;
அந்த உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை
வாழ்க்கையின் அத்தியாவசிய  தேவையில்
ஒன்றாக மாற்றி கடைபிடிக்க வேண்டும்.
அவ்வாறு கடைபிடித்தால்
வாழ்க்கையின் விலக்க முடியாத ஒன்றாக மாறிவிடும்;
அவ்வாறு ஒன்றாக மாறிவிட்டால்
வாழ்க்கையின் அன்றாட வழக்கமாகி விடும்;
அவ்வாறு அன்றாட வழக்கமாகி விட்டால்
வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒன்றாகி விடும்;
அவ்வாறு பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டால்
வாழ்க்கையின் அன்றாட பிரிக்க முடியாத
பழக்கம் வழக்கமாகி விடும்;
ஒரு தேவையுள்ள பழக்கம்
தனி மனிதன் வாழ்க்கையோடு
தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு
தொடர்ந்து வந்தால்
அது வழக்கமாகி விடும்.


சமுதாயம் - தேவையற்ற பழக்கம்

சமுதாயம் தேவையற்ற பழக்கத்தை
வழக்கமாக வைத்து இருக்கிறது.
தேவையற்ற பழக்கம் என்று சிலர்
விலகி இருந்தாலும்,
இச்சமுதாயம்  விலகி இருக்கும் அந்த சிலரையும்
தேவையற்ற பழக்கத்தை
தேவையுள்ள பழக்கமாக
நினைக்க வைத்து,
அந்த பழக்கத்தை பின்பற்ற வைத்து விடுகிறது.
அதனால் அந்த பழக்கமே வழக்கமாகி விடுகிறது.

லஞ்சம் பெறுபவர்களையே
நாம் பெரும்பாலும் குறை சொல்கிறோம்.
ஆனால் லஞ்சம் கொடுப்பவர்களை
நாம் பெரும்பாலும் கண்டு கொள்வதே இல்லை.
லஞ்சம் பெறுபவர்கள் தான் குற்றவாளிகள் போலவும்,
லஞ்சம் கொடுப்பவர்களை நல்லவர்கள் போலவும்,
இச்சமுதாயம் சித்தரித்து வைத்து இருக்கிறது.

பொருள் வைத்து இருக்கும் ஒருவன்
ஒரு வேலையை செய்யும் போது
எந்தவிதமான கஷ்டமும் இல்லாமல் இருக்க;
எந்தவிதமான கால தாமதமும் ஆகாமல் இருக்க;
எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் இருக்க;
எந்தவிதமான சங்கடமும் இல்லாமல் இருக்க;
எந்தவிதமான அலைச்சலும் இல்லாமல் இருக்க;
எந்தவிதமான கஷ்டமும் இல்லாமல் இருக்க;
எந்தவிதமான மனவருத்தமும் இல்லாமல் இருக்க;
எந்தவிதமான துயரமும் இல்லாமல் இருக்க;
எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் இருக்க;
எந்தவிதமான காலதாமதமும் இல்லாமல் இருக்க;
எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இருக்க;
வேலையை விரைந்து முடிப்பதற்காக
தேவையை விரைந்து முடிப்பதற்காக
செயலை விரைந்து முடிப்பதற்காக
கொடுக்கப்படுவது தான் லஞ்சம்

இருப்பவன் தன் வேலையை முடிக்க
தருவது தான் லஞ்சம்.
இருப்பவனிடம் லஞ்சம் பெறும் ஒருவர்
இல்லாதவன் ஒரு வேலையை முடிக்க வந்தால்
அவனிடமும் லஞ்சம் எதிர்பார்ப்பது தவறு.
லஞ்சம் கொடுப்பது முதலில் தவறு;
அடுத்து லஞ்சம் இருப்பவனிடம் வாங்குவது தவறு;
பிறகு லஞ்சம் இல்லாதவனிடம் கேட்பது
அதை விட மிகப் பெரிய தவறு;
மொத்தத்தில் லஞ்சம் வாங்குவதும்,
கொடுப்பதும் தவறு.

இருப்பவன் தன் வேலையை முடிக்க லஞ்சம்
கொடுத்தே பழகி விடுகிறான்;
ஒவ்வொரு முறை வரும்போது
லஞ்சம் கொடுத்தே
தன் வேலையை முடித்துக் கொள்கிறான்;
லஞ்சம் வாங்குபவன் மனதில்
ஆசையை விதைத்து,
லஞ்சம் தொடர்ந்து கொடுத்து
தன் வேலையை முடித்துக் கொள்கிறான்.
பிறருடைய பலகீனத்தை தனக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொள்கிறான்;
லஞ்சம் என்பது பொருளாக இருக்கலாம்;
அல்லது எது வேண்டுமானாலும் இருக்கலாம்;
ஒருவருடைய ஆசையை உணர்ந்து,
ஒருவருடைய தேவையை உணர்ந்து,
ஒருவருடைய எதிர்ப்பார்ப்பை உணர்ந்து,
ஒருவருடைய இயலாமையை உணர்ந்து,
ஓருவருடைய மனநிலையை உணர்ந்து,
லஞ்சம் கொடுத்து இருப்பவன்
தன் வேலையைச் சாதித்துக் கொள்கிறான்.

இருப்பவன் தன் வேலையை முடிக்க
வேலையை முடிப்பவருடைய  தேவையை உணர்ந்து,
அதை லஞ்சம் என்ற பெயரில் அளித்து,
தன்னுடைய வேலையை நிறைவேற்றிக் கொள்கிறான்.
ஒரு வேலையை முடிக்க
இருப்பவனிடம் பணம் பெற்றே பழக்கப்பட்டு போன
வேலையை முடிப்பவன்
இல்லாவதன் வரும் போதும்
அதே லஞ்சத்தை எதிர்பார்க்கிறான்.
இல்லாதவனால் தரமுடியவில்லை என்றால்
வேலையை கால தாமதம் செய்கிறான்;
வேலையை முடிக்காமல் அலைய விடுகிறான்;
வேலையை தள்ளி போடுகிறான்;
வேலையை இழுத்து அடிக்கிறான்;
இருப்பவனிடம் பெற்றுக் கொண்டவன்
இல்லாதவனிடமும் எதிர்பார்க்கிறான்
இவன் இல்லாதவவன் என்று கூட நினைக்காமல்
அவனிடம் எதிர்பார்க்கிறான்.

இல்லாதவன் வந்தாலே அவனை
ஏளனமாக பார்க்கிறான்;
இழிவாக நடத்துகிறான்;
வேலையை தள்ளி போடுகிறான்;
கிண்டல் செய்கிறான்;

இருப்பவன் தன் வேலையை முடிக்க
அவனாகவே கொடுக்கிறான்;
ஆனால் இல்லாதவன்
தன் வேலையை முடிக்க வரும்போது
அவனிடமும் லஞ்சம் எதிர்பார்க்கிறான்
வேலையை முடிப்பவன்.

இருப்பவன் தன் வேலையை முடிக்க
கொடுப்பதிலிருந்து தான் லஞ்சமே உருவாகியது
கொடுப்பவர்கள் உருவாகியதால் தான்
பெறுபவர்கள் தோன்றினார்கள்
லஞ்சம் அனைத்து துறைகளிலும் உள்ளது.

ஆனால் லஞ்சம் என்பது
பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளவர்கள் தான்
லஞ்சம் வாங்குவது போல்
அனைத்து நிலைகளிலும் சொல்லப்பட்டு வருகிறது.
பெரிய திரையில் பெரும்பாலும்
பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளவர்கள்
மட்டும் தான் லஞ்சம் பெறுவது போல் சித்தரித்து
வைத்து இருக்கிறார்கள்.
பொதுத்துறையில் உள்ளவர்கள் தான்
லஞ்சம் வாங்குகிறார்கள்;
மக்களை வாட்டுகிறார்கள்;
பணத்திற்காக அலைகிறார்கள்;
ஏழைகளை வாட்டும் விதத்தில்
லஞ்சம் கேட்கிறார்கள்;
ஏழைகள் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறார்கள்;
என்ற நிலையில்
தேவையற்ற கருத்துக்களை
மக்கள் மனதில் விதைத்து விட்டனர்.
பொதுத்துறையில் உள்ளவர்கள்
லஞ்சம் வாங்குபவர்கள் என்ற
தவறான கருத்தை
மக்கள் மனதில் ஆழமாக
நஞ்சாக விதைத்து
வைத்து விட்டனர்.

தனியார் துறையில் உள்ளவர்கள்
லஞ்சம் வாங்கவில்லையா?
பத்திரிக்கை துறையில் உள்ளவர்கள்
லஞ்சம் வாங்கவில்லையா?
பெரிய திரையில் உள்ளவர்கள்
லஞ்சம் வாங்கவில்லையா?
சிறிய திரையில் உள்ளவர்கள்
லஞ்சம் வாங்கவில்லையா?
வியாபாரத் துறையில் உள்ளவர்கள்
லஞ்சம் வாங்கவில்லையா?
ஊடகத் துறையில் உள்ளவர்கள்
லஞ்சம் வாங்கவில்லையா?
தங்கள் வேலைகளை முடிக்க
ஏதோ ஒரு வகையில் அவர்கள்
லஞ்சம் வாங்கவில்லையா?
பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களாலும்,
பல்வேறு துறைகளில் உள்ளவர்களாலும்,
பல்வேறு நிலைகளில் உள்ளவர்களாலும்,
லஞ்சம் வாங்கப்பட்டுத்தான் வருகிறது.


ஆனால் பலரை நல்லவர்களாகவும்,
ஒரு சிலரை மட்டும் கெட்டவர்கள் போலவும்,
இந்த சமுதாயம் சித்தரித்து வைத்து இருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர்த்து
அனைத்து துறைகளில் உள்ளவர்களும்
தங்கள் வேலைகளை முடிக்க,
தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள,
தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள,
தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள,
தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ள,
ஏதோ ஒன்றை லஞ்சமாக கொடுத்து
தங்கள் வேலையை முடித்து கொள்கின்றனர்.
லஞ்சம் என்பது ஏதோ ஒரு உருவத்தில்
உலா வந்து கொண்டு தான் இருக்கிறது.

அரசியல்வாதிகள் ஓட்டு வாங்க
இலவசம் என்ற பெயரில்
பொருள்கள் கொடுக்கின்றனர்.
அவர்கள் தங்கள் வேலையை முடித்துக் கொள்ள
லஞ்சம் கொடுக்கின்றனர்.
இலவசங்களை வாங்கிக் கொண்டு
ஓட்டு போடும் மக்கள்
நாங்கள் லஞ்சம் வாங்கினோம் என்று சொல்வதில்லை.
இலவசம் பெற்றோம் என்று சொல்கிறார்கள்.
லஞ்சம் இலவசம் என்ற பெயரில் இங்கே உலா வருகிறது.

வியாபாரிகள் தங்கள் பொருள்களை விற்க
பொருளுடன் இலவசமாக
வேறு பொருள்களை கொடுக்கின்றனர்;
தங்கள் பொருட்களை விற்க
அவர்கள் லஞ்சம் கொடுக்கின்றனர்.
இரண்டு சட்டை வாங்கினால்
ஒரு சட்டை இலவசம்;
இரண்டு பேண்ட் வாங்கினால்
ஒரு பேண்ட் இலவசம்;
ஐந்து பொருள் வாங்கினால்
ஒரு பொருள் இலவசம்;
தங்கள் பொருள் விற்க இலவசம் என்ற
பெயரில் லஞ்சம் தருகின்றனர்.
ஆனால் அதைப் பெறுபவர்
லஞ்சம் பெற்றோம் என்று சொல்வதில்லை.
இலவசம் என்று தான் சொல்கிறார்கள்.
இது லஞ்சம் இல்லையா.

பத்திரிக்கையாளர்கள் தங்கள் பத்திரிக்கைகள் விற்க,
பத்திரிக்கையுடன் சில பொருட்களை
இலவசமாக கொடுக்கின்றனர்.
நாளிதழ், வார இதழ், மாத இதழ் - என்று
எந்த இதழை எடுத்துக் கொண்டாலும்
தங்கள் பத்திரிக்கையின் எண்ணிக்கையை அதிகரிக்க
மக்களுக்கு இலவச இணைப்பாக
சில பொருட்களை தருகின்றனர்.
பத்திரிக்கை விற்க
அவர்களும் லஞ்சம் கொடுக்கின்றனர்.
ஆனால் நாம் அதை இவவசமாக பெற்றோம்
என்று தான் சொல்கிறோமே தவிர
லஞ்சம் பெற்றோம் என்று சொல்வதில்லை.

தேவையற்ற சில செயல்களை
முடிக்க வேண்டும் என்பதற்காக 
இலவசம் என்ற பெயரில்
லஞ்சம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அது லஞ்சம் என்று தெரியாமல் நாம்
வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.
லஞ்சம் வாங்குவது
நமக்கு பழக்கமாகி விட்ட காரணத்தினால்,
இருப்பவன் தன் வேலையை முடிக்க
லஞ்சம் கொடுக்கிறான்.
இருப்பவனிடம் வாங்கிப் பழகிய லஞ்சம்
இல்லாதவனிடமும் பெற முயற்சிக்கும் போது தான்
தவறு நடைபெறுகிறது.
லஞ்சம் வாங்கி பழக்கப்பட்டு போன நெஞ்சம்
அது வழக்கமாகி விட்டதால்,
வாழ்க்கையோடு ஒன்றி விட்டதால்,
வாழ்க்கையோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு
வாழ்க்கையில் தொடர்ந்து வருகிறது.

ஒரு தேவையற்ற பழக்கம்
சமுதாயம் முழுவதும் இருக்கிறது
வழக்கமாக இருக்கிறது;
ஆனால் அது நேரடியாக இல்லாமல்
மறைமுகமாக இருக்கிறது;
ஆனால் அது வழக்கமாகி இருக்கிறது;
என்பதை உணர்ந்து
சமுதாயம் திருந்த வேண்டும்.


சமுதாயம்- தேவையுள்ள பழக்கம்

சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும்;
சமுதாயம் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும்
சமுதாயம் நோயின்றி இருக்க வேண்டும்;
சமுதாயம் கவலையின்றி இருக்க வேண்டும்;
சமுதாயம் இன்பமாக இருக்க வேண்டும்;
சமுதாயம் அமைதியாக இருக்க வேண்டும்;
சமுதாயம் நிம்மதியாக இருக்க வேண்டும்;
சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்;
சமுதாயம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்;
சமுதாயம் அன்பாக இருக்க வேண்டும்;
சமுதாயம் பாசமாக இருக்க வேண்டும்;
சமுதாயம் இன்புற்று இருக்க வேண்டும்;
சமுதாயம் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்;
சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும்;
சமுதாயம் சந்தோஷம் நிரம்பியதாக இருக்க வேண்டும்;
சமுதாயம் தன் நிலையை உணர வேண்டும்;
சமுதாயம் தன் பண்பாட்டை அறிந்து கொள்ள வேண்டும்;
சமுதாயம் தன் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்;
சமுதாயம் உண்மை எது என்று உணர வேண்டும்;
சமுதாயம் மறைபொருளானவைகளை உணர வேண்டும்;
என்று விருப்பவட்டவர்கள்
ஆசைப்பட்டவர்கள்
அதற்கென்று சில முறைகளை ஏற்படுத்தினார்கள்.
கலாச்சாரமும், பண்பாடும்
மக்களின் வாழ்க்கையோடு இணைந்து
இருந்தால் மட்டுமே,
மக்கள் தங்கள் பாராம்பரியத்தை இழக்க முடியாது.
இல்லையென்றால்,
மக்கள் தங்கள் பாராம்பரியத்தை இழக்க வேண்டியது தான்
என்பதை உணர்ந்து,
வாழ்க்கையோடு தொடர்ந்து பின்னிப் பிணைந்து வரும் விதத்தில்
வாழ்க்கையோடு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் விதத்தில்
வாழ்க்கையோடு தொடர்ந்து செயல்படுத்தும் விதத்தில்
வாழ்க்கையோடு தொடர்ந்து பயன்படுத்தும் விதத்தில்
முக்கியமான, தேவையான, அத்தியாவசியமான செயல்களை
மக்களைச் செய்யும்படி வைத்து விட்டனர்.

சமுதாயம் தன் பாராம்பரியத்தை
காப்பாற்ற வேண்டுமானால்,
சமுதாயம் தன் அடையாளத்தை
இழக்காமல் இருக்க வேண்டுமானால்,
சமுதாயம் தன் கலாச்சாரத்தை
இழந்து விடாமல் இருக்க வேண்டுமானால்,
சமுதாயம் தன் பண்பாட்டை
இழந்து விடாமல் இருக்க வேண்டுமானால்,
தங்கள் பாராம்பரியத்தை வெளிப்படுத்தும்,
தங்கள் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்,
தங்கள் பண்பாட்டை வெளிப்படுத்தும் - செயல்களை
தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தினால் மட்டுமே
அழியாது இருக்கும் என்பதை உணர்ந்து,
அந்த செயல்களை செய்வதற்குரிய நிகழ்வுகளாக
பண்டிகைகளாகவும்,
விழாக்களாகவும் வைத்தனர்.

பண்டிகைகள் மற்றும் விழாக்கள்
ஒவ்வொரு சமுதாயமும்
தன் அடையாளத்தை இழக்காமல்
இருப்பதற்கு பயன்படுத்தும் ஒன்று என்பதை உணர்ந்து,
இச்சமுதாயம் பண்டிகைகளையும்,விழாக்களையும்
கொண்டாடும் படி வைத்து,
அதை வாழ்க்கையின் ஒரு பழக்கமாக வைத்து,
வழக்கமாகி வைத்து விட்டனர்.
நாம் அதை பயன்படுத்துகிறோம்;
பழக்கத்தை வழக்கமாக்கி இருக்கிறோம்;
எதற்காக பண்டிகைகளை கொண்டாடுகிறோம்
விழாக்களை கொண்டாடுகிறோம்
என்று தெரியாவிட்டாலும்
நாம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.

பண்டிகைளில் உள்ள மறைபொருள் விஷயங்கள்,
விழாக்களில் உள்ள சூட்சும ரகசியங்கள்,
தெரியாவிட்டாலும் பரவாயில்லை,
என்று நாம் தொடர்ந்து
அதை நம் வாழ்க்கையின்
ஒரு அங்கமாக்கி அதை பயன்படுத்தி வருகிறோம்.


சுதந்திரத்திற்காக போராடதவர்கள்,
சுதந்திரத்தை நேரில் பார்க்காதவர்கள்,
அடிமை நிலை எப்படி இருக்கும் என்று அறியாதவர்கள்,
வேற்று நாட்டான் நம்மை அடிமைப் படுத்தினால்
நம் நிலை எப்படி இருக்கும் என்று தெரியாதவர்கள்,
அடிமையாக வாழ்வது எவ்வளவு கடினம்
என்பதை உணராதவர்கள்,
சுதந்திரத்தின் பெருமையை அனைவரும்
உணர்ந்து கொள்ள வேண்டும்;
சுதந்திரத்தின் தன்மையை
தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து,
அனைவரையும் சுதந்திர தினம்
கொண்டாட சொல்கின்றனர்.

ஒன்றைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள
வேண்டுமென்றால்,
ஒன்றைப் பற்றி நாம் அறிந்து கொள்ள
வேண்டுமென்றால்,
ஒன்றின் தன்மையை நாம் புரிந்து
கொள் வேண்டுமென்றால்,
நாம் கொண்டாடுவதன் மூலமும்,
கொண்டாடப்படும் நாள் அன்று
நாம் அதைப்பற்றி பேசுவதன் மூலமும்,
நாம் அதைப்பற்றி நினைப்பதன் மூலமும்,
நாம் அதைப்பற்றி படிப்பதன் மூலமும்,
தெரிந்து கொள்ளலாம்.

சுதந்திரத்தின் பலனை அனைவரும்
அனுபவித்தால் மட்டும் போதாது.
அதை ஒவ்வொருவரும்
அதை உணர்ந்து கொள்ள வேண்டும்;
ஒவ்வொருவரும் அதை உணர்ந்து
மனம் தெளிவு பெற வேண்டும்;
சுதந்திர தாகம் சுரக்க வேண்டும்;
நாட்டுப்பற்று மேலோங்க வேண்டும்;
ஒற்றுமை பெருக வேண்டும்;
சகோதரத்துவம் தழைக்க வேண்டும்;
சாதி ஒழிய வேண்டும்;
மதம் கரைய வேண்டும்;
தேசிய ஒருமைப்பாடு பெருக வேண்டும்;
அமைதி தவழ வேண்டும்; - என்றால்
ஒவ்வொருவரும்
தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக
சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று நினைத்து,
சுதந்திர தாகத்தை ஒவ்வொருவரின்
வாழ்க்கையிலும் தொடர்ந்து பின்பற்றி வரும் வகையில்
தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு
தொடர்ந்து பின்பற்றி வரும் வகையில்
சுதந்திர தினத்தை அனைவரும்
கொண்டாட வேண்டும் என்று வைத்திருக்கின்றனர்.


ஒவ்வொரு பண்டிகையையும்,
ஒவ்வொரு விழாவையும் எடுத்து,
நாம் ஆராய்ந்து பார்த்தோமானால்,
அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதை
நாம் உணர்ந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு சமுதாயமும் தன் பராம்பரியத்தை
விட்டுக் கொடுக்காமல் இருக்க,
தங்கள் கலாச்சாரத்தை இழந்து விடாமல் இருக்க,
தங்கள் பண்பாட்டை இழந்து விடாமல் இருக்க,
உருவாக்கப்பட்டவை தான் பண்டிகைகள்,விழாக்கள்
என்பதை உணர்ந்து கொண்டோமேயானால்
விழாக்களையும், பண்டிகைகளையும்
நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி
அதை ஒரு பழக்கமாக செயல்படுத்தி
அதை தொடர்ந்து கடைபிடித்து வருவதன் மூலம்
வழக்கமாகி விடுகிறது.

தேவையுள்ள பழக்கம்
சமுதாயத்தால் கடைபிடிக்கப்பட்டு வருவதன் மூலம்
அது வழக்கமாகி விடும் என்பதை
நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆகவே பண்டிகைகள் மற்றும் விழாக்களில் உள்ள
ரகசியத்தை உணர்ந்து கொள்ளாமல்
அதை கிண்டல் கேலி செய்வதை விட்டு விட்டு
அதை அறிய முயற்சிப்போம்
அதை பின்பற்றி
நம் அன்றாட வாழ்க்கையின்
ஒரு பகுதியாக நாம் மாற்றிக் கொண்டு
கடை பிடித்து வருவோம்.



-------இதன் தொடர்ச்சி
 1.இயேசு கிறிஸ்து-அகத்தியர்-
கேளப்பா -பதிவு-(1)-79-2
----பார்க்கவும், படிக்கவும்