February 20, 2020

பரம்பொருள்-பதிவு-135


           பரம்பொருள்-பதிவு-135

கிருஷ்ணன் :
" உலூபி
அரவானின் தந்தை
மற்றும் அரவானுடன்
இரத்த சம்பந்தம்
கொண்டவர்கள்
அனைவரிடமும்
ஒப்புதல் பெற்று விட்டு
வந்து உன்னை
சந்திக்கிறேன் என்று
சொன்னேன் அல்லவா ?
சொன்னபடியே
அனைவரிடமும் ஒப்புதல்
பெற்று விட்டேன் ;
ஒப்புதல் அளித்த
அனைவரும் இங்கேயே
இருக்கின்ற காரணத்தினால்
தான் நான் உன்னை
இங்கே அழைத்து
வரச் சொன்னேன் "

"நீ ! ஏதேனும் அவர்களிடம்
கேட்க விரும்பினால்
கேட்டுக் கொள்ளலாம் "

"நீ ! ஒப்புதல் அளித்தால்
மட்டுமே பாண்டவர்கள்
சார்பாக அரவானைக்
களப்பலி கொடுக்க முடியும்
என்பதை உனக்கு ஞாபகப்
படுத்த விரும்புகிறேன் ; "

உலூபி :
(உலூபி தர்மரைப்
பார்த்து பேசுகிறாள்)

"தர்மராஜா தர்மத்தைக்
கடைபிடித்து தர்மத்தின்
வழி நடப்பவர்கள் நீங்கள் ;
தர்மத்தைக் காப்பாற்ற
முயற்சி செய்யாமல்
எப்படி அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க சம்மதித்தீர்கள் "

தர்மர் :
"தர்மத்தை காப்பாற்ற
வேண்டும் என்ற
காரணத்திற்காகத் தான்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுக்க சம்மதித்தேன் "

"தர்மத்திற்கும் அதர்மத்திற்கும்
இடையே நடைபெறும்
போரில் தர்மம் வெற்றி
பெற்றாக வேண்டும் ;
தர்மம் அழிந்து அதர்மம்
நிலைபெற்று விடக்கூடாது
என்பதற்காகத் தான்
அரவானைக் களப்பலியாகக்
கொடுக்க சம்மதித்தேன்"

“நாங்கள் போரிட்டு
வெற்றி பெற்று
அதன் மூலம் தர்மத்தை
நிலை நாட்டுவதற்கு
முயற்சிகள் செய்து
கொண்டிருந்தோம் ;
ஆனால் துரியோதனன்
போரிட்டு வெற்றி பெற
முயற்சி செய்யாமல்
களப்பலி கொடுத்து
வெற்றி பெற்று அதன்
மூலம் அதர்மத்தை
நிலைநாட்டுவதற்கு
முயற்சிகள் செய்து
கொண்டிருந்தான் ;”

"அதர்மத்தை நிலை
நாட்டுவதற்காக துரியோதனன்
களப்பலியாக தேர்ந்தெடுத்தது
அரவானைத் தான் "

"அரவானைக்
களப்பலியிலிருந்து
காப்பாற்ற முடியாது
என்பதை நாங்கள்
தெரிந்து கொண்ட
காரணத்தினால் தான் - நான்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாக
கொடுக்க சம்மதித்தேன் "

"தர்மம் அழிந்து
விடக்கூடாது என்பதற்காகத்
தான் சம்மதித்தேன் "

"அதர்மம் அழிய வேண்டும்
என்ற காரணத்திற்காகத்
தான் சம்மதித்தேன் "

"வருங்காலத்தில் மக்கள்
துன்பம் நீங்கி மகிழ்ச்சியுடன்
வாழ வேண்டும் என்ற
காரணத்திற்காகத்தான்
சம்மதித்தேன் "

"நான் என்னுடைய நாட்டை
திரும்பப் பெற வேண்டும்
என்பதற்காகவோ - நான்
அரசனாக வேண்டும்
என்பதற்காகவோ ;
நாட்டை ஆள வேண்டும்
என்பதற்காகவோ ;
சுயநலத்துடன் அரவானைக்
களப்பலியாகக் கொடுக்க
சம்மதிக்கவில்லை ;
பொது நலத்தைக்
கருத்தில் கொண்டு தான்
அரவானைக் களப்பலியாகக்
கொடுக்க சம்மதித்தேன்"

"தர்மத்திற்கும்
அதர்மத்திற்கும் இடையே
உள்ள வேறுபாட்டையும் ;
சுய நலத்திற்கும்
பொது நலத்திற்கும் உள்ள
வேறுபாட்டையும் ;
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
உள்ள வேறுபாட்டையும் ;
நீ தெரிந்து கொண்டால்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலி
கொடுப்பதற்கு நான்
ஒப்புதல் கொடுத்தது
என்னுடைய
சுயநலத்திற்காக இல்லை
என்பதையும் ;
தர்மத்தை நிலை
நாட்டுவதற்காகத் தான்
நான் பொது நலத்துடன்
செயல்பட்டேன்
என்பதையும் உன்னால்
தெரிந்து கொள்ள முடியும் ; "

"அரவானைக் களப்பலி
கொடுப்பதற்கு நான்
ஒப்புதல் அளித்தது
சுயநலத்தைக் கொண்டதாக
இருந்திருந்தால் நான்
செய்ததை நீ தவறு
என்று சொல்லலாம் ;
ஆனால் நான் இதை
சுயநலத்துடன்
செய்யவில்லை
பொது நலத்திற்காகத்
தான் செய்தேன்
என்பதை நீ
உணர்ந்து கொண்டால்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலி
கொடுப்பதற்கு நான்
ஒப்புதல் அளித்தது
சரியானது தான் என்பதை
நீ உணர்ந்து கொள்வாய் ; "

உலூபி :
(உலூபி எந்தவிதமான
பதிலும் சொல்லாமல்
அமைதியாக இருந்தாள்
எதுவும் பேசாமல்
அமைதியாக இருந்த
உலூபி பீமனிடம்
சென்றாள்)

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 20-02-2020
//////////////////////////////////////////