February 17, 2019

திருக்குறள்-பதிவு-110


                      திருக்குறள்-பதிவு-110

" சுட்டெரிக்கும் சூரியனின்
சுடர் நெருப்பில்
பூத்து வந்த
பகுத்தறிவுப் பகலவன் ;
இந்த உலகம் கண்டிராத
அறிவுலக மாமேதையான
ஜியார்டானோ புருனோவை
உயிரோடு எரித்து
கொல்லும் தண்டனையை
நிறைவேற்றுவதற்காக
17-02-1600 ஆம் ஆண்டு
சிறைக்காவலர்கள்
ஜியார்டோனோ
புருனோவின் சிறை
அறைக்குள் நுழைந்து
தரையில் உட்கார்ந்திருந்த
அவரை கைத்தாங்கலாக
தூக்கி நிறுத்தினர் "

"ஜியார்டானோ புருனோ
நெருப்பில் எரியும் போது
அவருடைய அலறல் சத்தம்
யாருக்கும் கேட்டு
விடக்கூடாது என்பதற்காக
நாக்கை தாடையுடன்
சேர்த்து ஆணி அடித்தனர் ; “

“ அவருடைய கைகள்
இரண்டையும் பின்னால்
சேர்த்து கட்டினர் ; ”

" ஜியார்டானோ
புருனோவின் வாயிலிருந்து
வழிந்த இரத்தம்
அருவி என வழிந்தோடி
அவருடைய உடையை
இரத்தத்தால் நனைத்தது "

" ஜியார்டானோ புருனோவை
உயிருடன் எரித்து
கொல்வதற்காக தேர்வு
செய்யப்பட்ட இடமான
“ கம்ப்போ டே ப்யோரி “
(Campo de’ Fiori)
என்ற ரோமனின்
புகழ்பெற்ற சதுக்கத்திற்கு
நடந்தவாறு அழைத்துச்
சென்று கொண்டிருந்தனர் "

" சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கருத்தே
சரியானது என்று
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக கருத்து
சொன்ன காரணத்திற்காக
ஜியார்டானோ புருனோவை
உயிரோடு எரித்து
கொல்வதற்காக அழைத்து
சென்று கொண்டு இருந்தனர் "

" விஞ்ஞானத்தையும் ,
கல்வியையும் சுதந்திரமாக
இருக்க விடுங்கள் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் மூலம்
அவைகளை கட்டுப்படுத்தி
விஞ்ஞானத்தையும் ;
கல்வியையும் ;
அழித்து விடாதீர்கள் என்று
சொன்ன காரணத்திற்காக
ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரித்து கொல்வதற்காக
அழைத்து சென்று
கொண்டு இருந்தனர் "

" கிறிஸ்தவ மதத்தின்
மூலம் அரசியலைக்
கைப்பற்றி ஆள்பவரைக்
கைப்பாவையாக்கி
அதிகாரத்தை பயன்படுத்தி
உலகம் முழுவதும் உள்ள
மக்களை அடிமையாக்க
முயற்சி செய்யாதீர்கள்
என்று சொன்ன
காரணத்திற்காக
ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரித்து கொல்வதற்காக
அழைத்து சென்று
கொண்டு இருந்தனர் "

" கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையிலும்
சர்ச்சுகளிலும்
அன்பும், கருணையும்
போதிக்கப்பட வேண்டும்
என்பதற்காகவும் ;
மனிதத் தன்மையை
நிலைபெறச் செய்ய
வேண்டும் என்ற
காரணத்திற்காகவும் ;
போராடிய ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரித்து கொல்வதற்காக
அழைத்து சென்று
கொண்டு இருந்தனர் “

“ அவர் நடந்து செல்லும்
பாதை முழுவதும்
இருபுறங்களிலும் மக்கள்
அனைவரும் தங்கள்
கைகளில் எரியும்
தீப்பந்தத்தை வைத்து
நின்று கொண்டிருந்தனர் “

“ ஜியார்டானோ புருனோ
ஒவ்வொரு தெருவாக
கைகள் பின்னால்
கட்டப்பட்ட நிலையில்
வாயிலிருந்து இரத்தம்
சொட்ட சொட்ட
அழைத்து செல்லப்பட்டு
கம்ப்போ டே ப்யோரி “
(Campo de’ Fiori)
என்ற ரோமனின்
புகழ்பெற்ற சதுக்கத்தின்
மையத்தில் தயார் செய்து
வைக்கப்பட்ட கம்பத்தில்
கட்டப்பட்டார் “

“அந்த இடத்தைச் சுற்றி
மக்களும் காவலர்களும்
நின்று கொண்டிருந்தனர் “


“ ஜியார்டானோ
புருனோவைச் சுற்றிலும்
விறகுச் சுள்ளிகள்
வரிசையாக அடுக்கி
வைக்கப்பட்டன 


“ விறகுச் சுள்ளியில்
நெருப்பு வைக்கப்பட்டது”

“விறகுச் சுள்ளியில்
வைக்கப்பட்ட நெருப்பானது
ஜியார்டானோ
புருனோவை அடைந்தது ;
ஜியார்டானோ புருனோவை
அடைந்த நெருப்பானது
கொஞ்சம் கொஞ்சமாக
அவரை எரிக்கத் தொடங்கியது ; “

“ உலகில் உள்ள
மக்கள் அனைவரும்
யாருக்கும் யாரும்
அடிமைகளாக இல்லாமல்
சுய அறிவைப் பெற்று ;
சுதந்திரமாக ;
சுயமரியாதையுடன் வாழ ;
வேண்டும் என்று போராடிய
ஜியார்டானோ புருனோ
கொஞ்சம் கொஞ்சமாக
நெருப்பில் எரிந்து
கொண்டிருந்தார் “

“மத வெறி ஜியார்டானோ
புருனோவை உயிருடன்
எரித்துக் கொன்று
தன்னுடைய இரத்தப்
பசியை தீர்த்துக் கொண்டது ‘

“ ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்டார் ‘

ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்ட நாள்
17-02-1600
17-02-1600
17-02-1600

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  17-02-2019
//////////////////////////////////////////////

////////////////////////////////////////////
17-02-1600
ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்ட காட்சியின்
படத் தொகுப்பு !

17-02-1600
ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்டார் !

17-02-2019
ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்ட தினம்
இன்று !
/////////////////////////////////////////////////////