May 05, 2012

இயேசு கிறிஸ்து-கடுவெளிச்சித்தர்-நந்தவன-பதிவு-38





        இயேசு கிறிஸ்து-கடுவெளிச்சித்தர்-நந்தவன-பதிவு-38

           “”பதிவு முப்பத்தியெட்டை விரித்துச் சொல்ல
                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல் , சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம் ; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
                                                                -------மத்தேயு - 10:28

ஆத்மா என்றால் என்ன
சரீரம் என்றால் என்ன

ஆத்மாவிற்கும் , சரீரத்திற்கும் உள்ள தொடர்பு என்ன
ஆத்மாவிற்கும் , சரீரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன

ஆத்மாவின் ஆதி-அந்தம் என்ன
சரீரத்தின் ஆதி-அந்தம் என்ன

ஆத்மாவின் இருப்புக்கும் , சரீரத்தின் இருப்புக்கும் 
உள்ள மாறுபாடு என்ன
ஆத்மாவின் இயக்கத்திற்கும் , சரீரத்தின் இயக்கத்திற்கும்
உள்ள வேறுபாடு என்ன
ஆத்மாவிற்கும் - பேரின்பத்திற்கும் ,
சரீரத்திற்கும் - சிற்றின்பத்திற்கும் உள்ள தொடர்பு என்ன

பேரின்பத்தின் வாயிலும் , சிற்றின்பத்தின் வாயிலும்
ஒன்றா அல்லது வேறு வேறா - என்பதை
யார்  ஒருவர்  உணர்ந்து கொண்டு
அறிவில் தெளிவு பெறுகிறாரோ அவரால் மட்டுமே
ஆத்மாவிற்கும் , சரீரத்திற்கும் உள்ள ஒற்றுமை
வேற்றுமைகளை தெரிந்து கொள்ள முடியும்

ஆத்துமாவைக் கொல்லுதல் , சரீரத்தைக் கொல்லுதல்
ஆத்துமாவைக் கொல்லாதிருத்தல் , சரீரத்தைக் கொல்லாதிருத்தல்
என்ற இரு வேறுபட்ட நிலைகளை
மாறுபட்ட தன்மைகளை இயேசு விளக்குகிறார்.

கனவுக் கடலில் மிதந்து கொண்டு ,
கற்பனை வாழ்வில் வாழ்ந்து கொண்டு ,
இன்பத்தின் வேர்களை தேடிக் கொண்டு ,
இனிமைகளின் வரவை நாடிக் கொண்டு ,
அலைந்து திரியும் மனிதர்கள்
கனவு போதையில் காலம் கழிப்பவர்கள் ;
கற்பனை கோட்டையில் அரியணை ஏறுபவர்கள் ;
விதியின் வருடலில் சிந்தனையைத் தொலைத்தவர்கள் ;
மதியின் இறத்தலில் அறிவை விற்றவர்கள் ;
மடமையின் தழுவலில் மூழ்கிப் போனவர்கள் ;

வாழ்க்கை என்பது கவலைகளை எரித்து
இன்ப நிலாவில் கீதம் இசைப்பது - என்று
கற்பனையில் காலத்தை தள்ளுபவர்கள்;

தான் வாழ
தன் பெயர்  வாழ
தன் குடும்பம் வாழ
தன் சந்ததி வாழ
செல்வத்தை பூட்டி வைத்தவர்கள் ;

இன்பத்தின் நுகர்வுகளை
தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று
துன்பத்தின் வடுக்களை மற்றவர்களுக்கு
பரிசாக கொடுத்தவர்கள் ;

அடிமை வர்க்கம் இருக்கும் வரைதான்
ஆளும் வர்க்கம் அரசாள முடியும் என்று உணர்ந்து
அடிமைகளை சங்கிலியால் பிணைத்து
உலவ விட்டவர்கள் ;

பசித்தவன் வயிற்றில் ஏறி மிதித்து பதவி
சுகம் காண்பவர்கள் ;

தகாத செயல்கள் பல செய்து தன்
சரீரத்தை வளர்க்க
சரீரத்தை அழகுபடுத்த
சரீரத் தேவையை நிறைவேற்ற
சரீர ஆசையைப் பூர்த்தி செய்ய
சிற்றின்பத் தேடலில்
சிந்தனையைக் கழற்றி வைத்து விட்டு
சுகபோகத்தில் இருக்க ஆசைப்படுபவர்கள் ;

மாளப் போகும் சரீரத்திற்காக ,
அழியும் சரீரத்திற்காக  ,
ஓடி ஓடி ஓடி அலைகின்றனர் ;
நாடி நாடி நாடி ஓடுகின்றனர் ;
தேடி தேடி தேடி வாடுகின்றனர் ;
வாடி வாடி வாடி மாய்கின்றனர் ;

தன் சரீரத் தேவையை நிறைவேற்ற
தன் சரீரத்தை காக்க ஓடுபவர்கள்
சரீரத்தைக் கொல்லுபவர்கள்
இவர்கள் ஆத்துமாவைக் கொல்லும் வழி தெரியாமல்
சரீரத்தை மாத்திரம் கொல்பவர்கள்.

        சிற்றின்பத் தேடலில் ,
         மாயையின் தன்மையில் ,
        ஒழுங்கின்மையின் அரவணைப்பில் ,
         எக்காளத்தின் இறுமாப்பில் ,
இருந்து கொண்டு
         பாவத்தின் கண்காணிப்பில் ,
         கொடுமைகளின் தழுவலில் ,
         தீயவைகளின் கண்சிமிட்டலில் ,
சரீரத்தை வளர்ப்பவர்கள்
இறுதியில் மரணமடைவார்கள் .

இவர்கள் சரீரத்தை மாத்திரம் கொல்பவர்கள்
இவர்களுக்கு பயப்பட வேண்டாம் .
சரீரத்தை மாத்திரம் கொல்பவர்களுக்கு
ஆண்டவனைப் பற்றி அறிவு இருக்காது .
ஆண்டவன் ஆசி இருக்காது ;
ஆண்டவன் அருள் இருக்காது ;
ஆண்டவனைப் பற்றிய புரிதல் இருக்காது ;
ஆண்டவனைப் பற்றிய தேடுதல் இருக்காது ;
ஆண்டவனைப் பற்றிய விளக்கம் இருக்காது ;
ஆண்டவனைப் பற்றிய உணர்வு இருக்காது ;
ஆண்டவனை தேட வேண்டும் என்ற ஆவல் இருக்காது ;
ஆண்டவனுடன் இணைய வேண்டும் என்ற ஆசை இருக்காது ;

ஆத்துமாவைக் கொல்லுதல் என்றால் ,
ஆத்துமாவில் பதிந்துள்ள பாவங்களை கழித்தல் என்று பொருள் .

ஆத்மாவில் பதிந்துள்ள
   அறுவெறுக்கத்தக்க எண்ணங்கள் ,
   அழுக்குத்தனமான சிந்தனைகள் ,
   தீயவைகளை உண்டாக்கும் செயல்கள் ,
   பிறரை துன்புறுத்தும் நினைவுகள் ,
   பிறரை அடிமைப்படுத்தும் மனதுகள் ,
   எண்ணம் ,சொல் , செயலால்
விளைவிக்கப்பட்ட, உண்டாக்கப்பட்ட
இவற்றின் விளைவால் உண்டான பாவப்பதிவுகள் ,
ஆத்மாவில் பதிந்துள்ள இத்தகைய பாவங்களைக்
கழித்தலே ஆத்மாவைக் கொல்லுதல் என்று பொருள்.

ஆத்மாவில் பதிந்துள்ள பாவங்களைக்
கழிக்க வேண்டுமென்றால் ,
ஆண்டவரை உணர வேண்டும் ;
ஆண்டவரை அறிய வேண்டும் ;
ஆண்டவருடன் இணைய வேண்டும் ;
ஆண்டவர்  அருள் வேண்டும் ;
ஆண்டவர்  ஆசி வேண்டும் ;

ஆண்டவர்  பார்வை நம் மேல் விழவேண்டுமென்றால் ,
ஆண்டவர்  குழந்தையாக நாம் மாற வேண்டுமென்றால் ,
ஆண்டவர்  நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் ,
ஆண்டவர்  மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டுமென்றால் ,
ஆண்டவர்  நம்மை ஏற்றுக் கொள்ளும்
செயல்களைச் செய்ய வேண்டும்.
ஆண்டவர்  சித்தத்தின் படி நடக்க வேண்டும் .

தீயவைகளை விடுத்து
நல்லவைகளைச் செய்து - நாம்
துhய்மை நிலை அடைவதன் மூலம்
ஆண்டவரின் அன்புக்கு பாத்திரமாவோம்
ஆண்டவரின் கருணைக்குள் பிரவேசிப்போம்
ஆண்டவருடன் ஒன்றாக இணைவோம்
அவ்வாறு நாம் ஒன்றாக இணைவதன் மூலம்
ஆண்டவருடன் இணைவதன் மூலம்
ஆண்டவர்  நம்மை ஏற்றுக் கொள்வதன் மூலம்
நம்முடைய பாவங்கள் கழிக்கப் படுகின்றன
நம்முடைய பாவங்கள் எரிக்கப் படுகின்றன .

ஆண்டவருடன் நாம் கலப்பதன் மூலம்
ஆண்டவர்  நம்மை ஏற்றுக் கொள்வதன் மூலம்
ஆத்மா துhய்மையடைகிறது

ஆத்மாவைக் கொல்ல வல்லவர்கள் என்றால்
ஆத்மாவில் பதிந்துள்ள பாவங்களை
ஆண்டவருடன் இணைப்பதன் மூலம்
ஆத்மாவை துhய்மைப்படுத்துபவர்கள் ,
பாவங்களை நீக்குபவர்கள் என்று பொருள் .

அத்தகைய தன்மை பெற்றவர்கள்
ஆண்டவரின் அருளைப் பெற்றவர்கள்
ஆத்மாவைக் கொல்லும் வல்லமை பெற்றவர்களால் மட்டுமே
ஆத்மாவைக் கொல்லும் திறமை உடையவர்களால் மட்டுமே
சரீரத்தையும் கொல்லமுடியும் .

சரீரத்தைக் கொல்பவர்கள் என்றால்
சரீரத்திற்கு இயல்பாக ஏற்படக் கூடிய மரணத்தைக்
கொல்பவர்கள் என்று பொருள் .

ஆத்மாவைக் கொல்ல வல்லவர்களால் மட்டுமே
சரீரத்தைக் கொல்ல முடியும் .

ஆத்மாவைக் கொல்ல முடியாதவர்களால்
சரீரத்தைக் கொல்ல முடியாது .

சரீரத்தைக் கொல்ல வேண்டும் என்றால்
முதலில் ஆத்மாவைக் கொல்லும் வழி
தெரிந்திருக்க வேண்டும் .

ஆத்மாவைக் கொல்ல முடியாதவர்களால்
சரீரத்தைக் கொல்ல முடியாது .

சரீரத்தை மாத்திரம் கொல்லுபவர்கள் என்றால்
சரீரத்திற்கு இயல்பாக ஏற்படக் கூடிய
மரணத்திற்கான செயல்களைச் செய்பவர்கள்
என்று பொருள் .

வாழ்க்கைத் தேவைகளான
சிற்றின்பத் தேவைகளை செய்து
பாவப் பதிவில் வீழ்ந்து
இறப்பவர்கள் சரீரத்தை மாத்திரம் கொல்லுபவர்கள் .

சரீரத்தை மாத்திரம் கொல்பவர்களுக்கு
பயப்பட வேண்டாம் என்கிறார்  இயேசு .
அவர்கள் ஆண்டவனின் அருளைப் பெற்றவர்கள் அல்ல

ஆத்மாவையும் சரீரத்தையும் கொல்பவர்களுக்கு
பயப்படுங்கள் என்கிறார்  இயேசு
ஏனென்றால் அவர்கள் ஆண்டவன்
அருளைப் பெற்றவர்கள்

பெறற்கரிய இந்த மனிதப் பிறப்பை
ஆண்டவர்  அளித்த இந்த மனிதப் பிறப்பை
சரீரத்தை மாத்திரம் கொல்லும் செயலைச் செய்து
இந்த உலகத்தில் மரணிக்காமல்
ஆத்மாவையும் , சரீரத்தையும் கொல்ல வல்லவர்களாய் மாறி
உயர்ந்த நிலை அடைய வேண்டும் என்கிறார்  இயேசு .



கடுவெளிச் சித்தர்:

“””நந்த வனத்திலோ ராண்டி - அவன்
              நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
  கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
              கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி””””
       ----கடுவெளிச் சித்தர்---பெரியஞானக் கோவை-----


கவிதைகளை தீட்டுபவன் கற்பனைகளைப் படைக்கிறான்
ஓவியங்களை தீட்டுபவன் அழகினைப் படைக்கிறான்
சிற்பங்களைச் செதுக்குபவன் கலைகளைப் படைக்கிறான்

பலரால் பலவகைகளில்
பல்வேறு காரணங்களுக்காக
பல்வேறு நிலைகளில்
பல்வேறு வகையானவற்றை
பல்வேறு சிந்தனையில்
பல்வேறு கற்பனையில் 
பல்வேறு காலங்களில்
பல்வேறு நிகழ்வுகளில்
பல்வேறு வகைகளுக்குண்டானவைகளை
விளக்குவதற்காக
வெளிப்படுத்துவதற்காக
படைக்கப் படும் படைப்புகள்
பல இருந்தாலும்
படைக்கும் படைப்பாளிகள் பலர்  இருந்தாலும்
குயவனை மட்டும் கடவுளுடன் ஒப்பிடுகிறார் கடுவெளிச் சித்தர் .

குயவன் மட்பாண்டம் செய்பவன்
பாண்டங்களை உருவாக்குபவன் , படைப்பவன் .

சக்கரத்தை சுழலவிட்டு
பாண்டங்களை படைக்கிறான் .
பாண்டம் என்றால் பாத்திரம் என்று பொருள் .

சக்கரம் சுழலாமல் இருக்கும் போது
குயவன் பாண்டங்களைப் படைப்பதில்லை.

குயவன் சக்கரத்தை சுழலவிட்டு
சுழலும் போது மட்டும்
பாண்டத்தைப் படைக்கிறான் .
சக்கரத்தின் சுழற்சி நின்ற பிறகு
சக்கரம் இயக்க மற்று இருக்கும் போது
குயவன் பாண்டங்களை உருவாக்குவதில்லை
பாண்டங்களை  படைப்பதில்லை .

அதைப்போல ,
கடவுள் இந்த பிரபஞ்சத்தை
இந்த பரந்த உலகத்தை
இந்த உயிர்களை
காலச் சக்கரம் சுழலும் போது
இயக்க நிலையில் காலம் இயங்கும் போது
காலம் இயக்க நிலையில் இருக்கும் போது
காலம் என்ற ஒன்று இருக்கும் போது

மட்டும் உயிர்களை பிரபஞ்சத்தை படைக்கிறான் .
கடவுளால் பிரபஞ்சம் படைக்கப்படுகிறது.
பரிணாமம் அடைகிறது .

இயக்கமற்ற நிலையில் இருப்பு நிலையில்
கடவுள் இயக்க மற்று இருக்கும் போது
கடவுள் மௌனமாக அமைதியாக இருக்கும் போது
உயிர்கள் , பிரபஞ்சம், உலகம் படைக்கப்படுவதில்லை .
இயக்க நிலைக்கு வரும்போது மட்டும்
பிரபஞ்சம் படைக்கப் படுகிறது .

இருப்பு நிலை , இயக்க நிலையாக மாறாத போது
படைப்புகள் நிகழ்வதில்லை.
படைப்புகள் படைக்கப் படுவதில்லை.

குயவனுடைய சக்கரம்
இயக்கநிலையில் இருக்கும் போது மட்டும்
பாண்டங்கள் படைக்கப்பட்டும்.
சக்கரம் இயக்கமற்று இருக்கும் போது எவ்வாறு
பாண்டங்கள் படைக்கப் படுவதில்லையோ ?
அவ்வாறே கடவுளும்,
காலச் சக்கரத்தின் இயக்கத்தில்
படைப்புகளை நிகழ்த்துகிறார்.

காலச் சக்கரம் இயங்காத நிலையில்
படைப்புகளை நிறுத்தி விடுகிறார்.
அதனால் தான் கடவுள் குயவனோடு ஒப்பிடப் படுகிறார்.

ஆண்டி என்றால் உயிர்  என்று பொருள் .
தோண்டி என்றால் உடல் என்று பொருள் .
நந்தவனம் என்றால் இந்த பிரபஞ்சம் உலகம் என்று பொருள் .

அழகிய நறுமணங்கள் பலவற்றை தன்னுள் கொண்ட ,
அழகுகள் தவழ்ந்து இன்பங்கள் பலவற்றை தன்னுள் கொண்ட ,
இனிமைத் தன்மைகள் பலவற்றை தன்னுள் கொண்ட ,
இந்த அழகிய உலகத்தில் உள்ள உயிர்
அதாவது ஆத்மா என்றும் அழியாதது , நித்தியமானது .

இந்த உலகத்தில் இந்த பிரபஞ்சத்தில்
இயக்க நிலை கொண்ட
இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில்
உள்ள ஒரு உயிர்  கடவுளை வேண்டி
நான் இந்த உலகத்தில் பிறக்க வேண்டும் என்று
கடவுளிடம் வேண்டுகோள் வைத்து
தன்னை இந்த உலகத்தில் பிறக்க வைக்க வேண்டும் என்று
சில புத்தகத்தில் இருக்கிறது .

கடவுளை வேண்டி என்றால்,
        மாறாத இயக்க ஒழுங்குப் படி ,
        அறநெறிப் படி ,
        கர்ம வினை ஒழுக்கப்படி ,
       பாவ-புண்ணிய கருத்துப்படி ,
       அறம் வழுவா நியதிப்படி ,
       தர்மத்தின் நிகழ்வுப்படி ,
இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும்
கடவுளின் இயக்க ஒழுங்குப்படி
உயிரானது கர்மவினையைத்
தீர்ப்பதற்காக இந்த அவனியில்
பிறக்கிறது என்று பொருள் .

உலகில் பிறக்கும் எல்லா உயிர்களும்
கர்ம வினையைத் தீர்ப்பதற்காகவும்
பாவ-புண்ணியங்களை அனுபவிப்பதற்காகவும்
தானே பிறக்கின்றன ஒழிய
வாழ்க்கையை வாழ்வதற்காகவும்
இன்புடன் சுகித்து வாழவும் பிறப்பதில்லை.

உயிரானது தன்னுடைய
கர்மவினைகளைத் தீர்ப்பதற்காக
பாவ-புண்ணிய கணக்குகளுக்கேற்ப,
கருமைய பதிவுகளுக்கேற்ப,

இந்த உலகத்தில் நாலாறு மாதம்
அதாவது 4 மாதம் ,6 மாதம் ஆக மொத்தம் 10 மாதம்
இந்த உலகத்தில் உடல் கொண்டு பிறக்கிறது .
இந்த உலகத்தில் மனிதனாகப் பிறக்கிறது.

பிறப்பிலேயே மிகப் பெரிய
அரிய பிறப்பு மனிதப் பிறப்பு
அத்தகைய மனிதனாகப் பிறந்த மனிதன்
ஏன் பிறந்தோம்
எதற்காகப் பிறந்தோம்
எந்த காரணத்திற்காக பிறந்தோம்
எந்த கடமையை நிறைவேற்றப் பிறந்தோம்
எந்த கடனை தீர்க்கப் பிறந்தோம் என்பதை உணராமல்,
தெரிந்து கொள்ள ஆசைப்படாமல்,
அறிந்து கொள்ள விருப்பப்படாமல்,
புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல்,

காலத்தை வீணாக்கி ,
கடமையைத் தொலைத்து ,
சிந்தனையை பழுதாக்கி ,
வீணேகாலத்தை ஓட்டுகின்றனர் ;

          அறிவை வீணாக்குகின்றனர் ;
         ஆசையை வளர்க்கின்றனர் ;
         இன்பத்தை நாடுகின்றனர் ;
         உவகையைத் தேடுகின்றனர் ;
        ஊழ்வினையில் மாட்டுகின்றனர் ;
        எண்ணத்தை பாழாக்குகின்றனர் ;
         ஏற்றத்தை நாடுகின்றனர் ;
        ஐயத்தில் சிக்குகின்றனர் ;
       ஒருமையில் வாழ்கின்றனர் ;
       ஓசையில் களிக்கின்றனர் ;
       ஓளஷதத்தில் மூழ்குகின்றனர் ;

       உண்மையை மறக்கின்றனர் ;
       பொய்மையில் சிரிக்கின்றனர் ;
      அன்பை அழிக்கின்றனர் ;
      கருணையை எரிக்கின்றனர் ;
      இரக்கத்தை புதைக்கின்றனர் ;
      பண்பை மறக்கின்றனர் ;
      பகுத்தறிவை இழக்கின்றனர் ;
     சிந்திப்பதை துறக்கின்றனர் ;
     மடமையில் குளிக்கின்றனர் ;
     சினத்தில் சிலிர்க்கின்றனர் ;
    புகழில் தவிக்கின்றனர் ;
     பதவியில் களிக்கின்றனர் ;
    மமதையில் தள்ளாடுகின்றனர் ;

வந்த வேலை மறந்து
எதற்காக வந்தோம் என்று அறியாமல்
கர்மவினைகளைத் தொலைக்காமல் ,
பாவ - புண்ணியங்களை எரிக்காமல் ,
பிறப்பு - இறப்பை அறுக்காமல் ,
உண்மை உணராமல் புத்தி தெளியாமல் ,

சிற்றின்பத்தில் மூழ்கி
சிந்தை தடுமாறி
கிடைத்ததற்குரிய பெரிய பிறப்பாம்
இந்த மனிதப் பிறப்பை வைத்து
எல்லாம் வல்ல ஆண்டவரை உணர்ந்து
ஆண்டவரை அறிந்து
ஆண்டவருடன் இணைந்து
இரண்டறக் கலந்து
பக்தனாகி ,சித்தனாகி ,ஞானியாகி முக்தியாகும்
நிலை அடையாமல் ,

பிறப்ப - இறப்பு சூழலில் மாட்டிக் கொண்டு
சிற்றின்பச் சகதியில் சிக்கிக் கொண்டு
இந்த உலகத்தில் பிறந்து
வாழ்ந்து மடிந்து விடுகிறான்  
என்கிறார்  கடுவெளிச் சித்தர்.



இயேசு கிறிஸ்து - கடுவெளிச் சித்தர் :
இயேசு ,
மனிதப் பிறவியை வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்ய
செய்யப்படும் செயல்களால் விளைந்த பாவப் பதிவுகளால்
உண்டாகும் மரணித்தலை உண்டாக்கும் சரீரத்தை கொல்பவர்களாய்
இல்லாமல் உயர்வான நிலையை அடைய முயற்சி
செய்து உயர்வான நிலையை அடைய வேண்டும் என்கிறார்.


அவ்வாறே,
கடுவெளிச் சித்தரும் ,
மனிதப் பிறவியை , வாழ்க்கைத் தேவையை,
பூர்த்தி செய்ய செய்யப்படும் செயல்களால் விளையும்
பாவப் பதிவுகளால் உண்டாகும் மரணித்தலுக்கு உட்பட்டு
மனிதப் பிறவியை இழப்பதன் மூலம் மரணமில்லாப் பெருவாழ்வை
அடைய முயற்சிக்காமல் உயர்வான நிலை அடைய முயலாமல்
என்ற நினைப்பில்லாமல் இறக்கிறான் என்கிறார்.


        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                       போற்றினேன் பதிவுமுப்பத்துஎட்டு  ந்தான்முற்றே “”