May 17, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-3


                 நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-3

அந்தக் காலத்தில்
ஆண்கள்
பொருள் தேடி
வேலை விஷயமாக
வெளி இடங்களுக்கு
சென்று விடுவர்

பெண்கள் காட்டிற்கு சென்று
மரம் வெட்டுவது,
வயலில் இறங்கி
சேற்றில் நாற்று நடுவது,
களை பறிப்பது
போன்ற வேலைகளை
செய்து வந்தனர்

பெண்கள் சேற்றில்
இறங்கி வேலை
செய்வதாலும்
காட்டில் மரம்
வெட்டுவதாலும்
பெண்களின்
கைகளில் உள்ள
நகக்கண்களில்
கால்களில் உள்ள
நகக் கண்களில்
கிருமிகளின்
தொற்று ஏற்பட வாய்ப்பு
அதிகம் இருந்தது.

இதனால் விரல்களில்
நகச்சுத்தி ஏற்பட
வாய்ப்பு இருந்தது
இதனை தவிர்ப்பதற்காகவும்
நோய்த் தொற்றிலிருந்து
பெண்களை
காப்பாற்றுவதற்காகவும்
கண்டு பிடிக்கப்பட்டு
பயன்படுத்தப்பட்டது
தான் மருதாணி

மருததாணியை செடியிலிருந்து
நேரடியாக பறித்து
அரைத்து கை விரல்களில்
உள்ள நகக்கண்களில்
தொப்பி போல்
அழுத்தி வைத்து விடுவர்
கையைச் சுற்றி
சில இடங்களில்
மருதாணியை பூசி விடுவர்

அதைப்போல்
கால்களிலும்
நகக்கண்களில்
கால் பாதங்களில்
மருதாணி போட்டு விடுவர்
கால் விரல்களில்
தொப்பி போல்
மருதாணியை
போட்டு விடுவர்
கால் பாதங்களில்
சுற்றி மருதாணி
பூசி விடுவர்

கை, கால்களில்
பூசப்பட்ட மருதாணியானது
காய்ந்தவுடன்
மருதாணியை எடுத்து
கையை, காலை
கழுவி விட வேண்டும்
மருதாணியில்
உள்ள சாறு சிறந்த
கிருமி நாசினியாகும்
மருதாணியின் சாறு
நகக்கண்களில்
உள்ள கிருமிகளைக்
கொன்று நோய்த்
தொற்று ஏற்படாமல்
நம்மை பாதுகாத்து விடும்

மருதாணியை பூசுவதால்
கைவிரல்களில்
உள்ள நகக் கண்களில்
கால் விரல்களில்
உள்ள நகக் கண்களில்
உள்ள கிருமிகள்
அழிந்து விடுகின்றன
அதைப்போல் கால்களில்
பூசப்பட்ட மருதாணியால்
கால் பாதங்களில்
பித்த வெடிப்பு
போன்றவை ஏற்படாமல்
இருக்கும்

மருதாணி
போடும் முறையில்
மிகப்பெரிய
மருத்துவ முறையை
மறைத்து வைத்திருந்தனர்
நம் முன்னோர்கள்

நகச்சுத்தி எனப்படும்
நோய் விரல்களில்
வராமல் தடுக்கும்
இயல்புடையது மருதாணி
மேலும் மருதாணி
குளிர்ச்சியை
ஏற்படுத்தும் தன்மையை
உடையது
அதுமட்டுமின்றி
பல்வேறு விதமான
மருத்துவ குணங்களை
தன்னுள் கொண்டது
மருதாணி

ஆனால் தற்போது
இத்தகைய
மருதாணியை பூசாமல்
கெமிக்கலில் செய்யப்பட்ட
மருதாணியை
பயன்படுத்தி
உடல் நலத்திற்கு
கேடுகளை விளைவித்துக்
கொள்கின்றனர் மக்கள்.


ஆரோக்கியத்திற்காக
பூசப்பட்ட
மருதாணி இன்று
அழகுக்காக பூசப்படுகிறது

மருதாணியில் உள்ள
மருத்துவத்தின்
மகிமையை
புரிந்து கொண்டு
அதை
பயன்படுத்தச் சொன்ன
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////