December 24, 2019

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்-25-12-2019


    கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்-25-12-2019

அன்பிற்கினியவர்களே !

“நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாய் இருக்கிறேன் “

------யோவான் - 14 : 6

வழியும் :

“வழி என்றால் ஒரு
இடத்திற்கு எப்படி
செல்வது என்பதை
சுட்டிக் காட்டி
விளக்குவது
என்று பொருள் “

“ஒரு இடத்திற்கு
செல்வதற்குரிய வழி
யாருக்கு
தெரிந்திருக்கிறதோ
அவரால் மட்டுமே வழி
தெரியாதவருக்கு வழி
காட்ட முடியும் “

“ஒரு இடத்திற்கு
செல்வதற்குரிய வழி
எது என்று தெரியாமல்
இருப்பவர்கள்
வழி தெரியாதவர்களுக்கு
வழி காட்ட முடியாது “

“நான் வழியாய்
இருக்கிறேன் என்றால்
நான் வழியைக் காட்டக்
கூடியவனாய் இருக்கிறேன்
என்று பொருள் “

சத்தியமும் :
“சத்தியம் என்றால்
உண்மையானது என்றும்
அழிவில்லாதது என்றும்
என்றும் இருந்து
கொண்டிருப்பது என்றும்
பொருள் “

“இந்த உலகத்தில்
உண்மையானது என்றும்
அழிவில்லாதது என்றும்
என்றும் இருந்து
கொண்டிருப்பது என்றும்
அழைக்கப்படுவது
ஒன்றே ஒன்று தான்
அது ஆண்டவர் மட்டுமே
அதனால் தான் ஆண்டவரை
சத்தியம் என்கிறோம் “

“நான் வழியும்
சத்தியமுமாய்
இருக்கிறேன் என்றால்
நான் சத்தியமாய்
இருக்கக்கூடிய
ஆண்டவரை
காட்டக்கூடிய
வழியாய் இருக்கிறேன்
என்று பொருள் “

ஜீவனுமாய் :
“ஜீவனுமாயிருக்கிறேன்
என்றால் உயிரோடு
பிறந்து வந்திருக்கிறேன்
என்று பொருள் “

“இந்த செயலைச்
செய்வதற்காகத் தான்
தாங்கள் பிறந்து
வந்திருக்கிறோம் என்பதைத்
தெரிந்து கொண்டவர்கள்
அவர்கள் எதற்காக
பிறந்து வந்தார்களோ
அதற்குரிய செயலைச்
செய்கிறார்கள் “

“இந்தச் செயலைச்
செய்வதற்காகத் தான்
தாங்கள் பிறந்து
வந்திருக்கிறோம்
என்பதைத் தெரிந்து
கொள்ளாதவர்கள்
அவர்கள் எதற்காக
பிறந்து வந்தார்களோ
அதற்குரிய செயலைச்
செய்யாமல் தேவையற்ற
செயலைச் செய்து
கொண்டிருக்கிறார்கள் “

“இயேசு கிறிஸ்து தான்
இதற்காகத் தான் பிறந்து
வந்திருக்கிறேன் என்பதை
இந்த சமுதாயத்திற்கு
உணர்த்தினார்”

“நானே 
வழியும்
சத்தியமும்
ஜீவனுமாய்
இருக்கிறேன் என்றால்
நான் சத்தியமாய்
இருக்கக்கூடிய ஆண்டவரை
அடையக்கூடிய வழியை
காட்டுவதற்காக பிறந்து
வந்திருக்கிறேன்
என்று பொருள் “

“அதாவது

நான் எதற்கு
வழியாய்
இருக்கிறேன் என்றால்

பாவம் செய்து
பாவத்தில் வாழ்க்கையை
ஓட்டிக் கொண்டிருக்கும்
மக்களை பாவத்திலிருந்து
விடுவித்து
உண்மையானது என்றும்
அழிவில்லாதது என்றும்
என்றும் இருந்து
கொண்டிருப்பது என்றும்
அழைக்கப்படும்
சத்தியமுமாய்
இருக்கக் கூடிய
ஆண்டவரை
அடையக்கூடிய
வழியாய் இருக்கிறேன்

அதற்காகத் தான்
நான் ஜீவனுமாய்
பிறப்பெடுத்து
வந்திருக்கிறேன் என்கிறார்
இயேசு கிறிஸ்து “

“இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரையும்
பாவத்திலிருந்து
விடுவித்து ஆண்டவருடன்
இணைப்பதற்கு
பிறப்பெடுத்து வந்து
தன் இரத்தத்தால்
அன்பு விதையை
விதைத்து விட்டு சென்ற
இயேசு கிறிஸ்துவை
அவருடைய
பிறந்த நாளான
25-12-2019  - அன்று
வணங்குவோம்”

“கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்”

--------என்றும் அன்புடன்

--------K.பாலகங்காதரன்
--------25-12-2019

//////////////////////////////////////////