January 31, 2020

பரம்பொருள்-பதிவு-120


                பரம்பொருள்-பதிவு-120

அரவான் :
"நான் ஏற்கனவே
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு
களப்பலியாவதாக
வாக்கு
கொடுத்திருக்கிறேன் !"

"அப்படி இருக்கும்
போது நான் எப்படி
பாண்டவர்களுக்காக
களப்பலி
ஆக முடியும்?"

"பாண்டவர்களுக்காக
நான் களப்பலியானால்
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
செய்து கொடுத்த
வாக்கை மீறியவன்
ஆக மாட்டேனா ?"

கிருஷ்ணன் :
"பாண்டவர்களுக்காக
களப்பலியாக வேண்டும்
என்று தான் - நான்
உன்னை கேட்டேனே தவிர
துரியோதனனுக்காக
களப்பலியாக வேண்டாம்
என்று - நான் உன்னை
கேட்கவேயில்லையே?"

அரவான் :
"நீங்கள் சொல்வது
எனக்குப் புரியவில்லை?"

கிருஷ்ணன்  :
"வருகின்ற அமாவாசை
தினத்தன்று தானே
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக
வாக்கு கொடுத்திருக்கிறாய் "

அரவான் :
"ஆமாம்"

கிருஷ்ணன்  :
"வருகின்ற  அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகு "

அரவான் :
"அது எப்படி சாத்தியம்?"

கிருஷ்ணன்  :
"யோசித்துப் பார்த்தால்
எல்லாமே சாத்தியம் தான்"

"சாத்தியமாகாதது என்று
எதுவுமே - இந்த
உலகத்தில் இல்லை"

"ஒரு விஷயத்திற்காக
ஒரு நாள் குறித்து
அந்த நாளை
ஒருவர் பயன்படுத்திக்
கொள்வதற்காக
ஒரு வாய்ப்பு கொடுத்து
அந்த வாய்ப்பைப்
பெற்றவர்
அந்த  வாய்ப்பைப்
பயன்படுத்திக்
கொள்வதற்காக
வரவில்லையென்றால்
வாய்ப்பு
கொடுக்கப்பட்டவருக்கு
அடுத்து யார் இருக்கிறாரோ
அவருக்கு
அந்த வாய்ப்பை
வழங்குவது தானே
உலக நடைமுறை ;

அந்த உலக
நடைமுறையின்
படியே தான்
நான் கேட்கிறேன் ;
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாக கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறேன்
என்று வாக்கு கொடு
அது போதும்."

அரவான் :
“நான் வாக்கு
கொடுப்பதினால் - எனக்கு
எந்தவிதமான நன்மைகளும்
ஏற்படப் போவதாகத்
தெரியவில்லையே ?”

“வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
களப்பலியாக என்னைக்
கேட்டு வரவில்லை
என்றால் தானே
பாண்டவர்களுக்காக-நான்
களப்பலியாக முடியும் ;
எனக்கு வருங்காலத்தில்
நல்ல பெயர் கிடைக்கும் ”

“ஆனால், பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
களப்பலியாக என்னைக்
கேட்டு வந்து விட்டால்
அவருக்கு தானே - நான்
களப்பலியாக முடியும் ;
அப்படி என்றால்
வருங்காலத்தில் எனக்கு
கெட்ட பெயர்
தானே ஏற்படும் ;”

“பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
களப்பலியாகாமல்
தடுப்பதற்கு நீங்கள்
எந்தவிதமான உபாயமும்
சொல்லவே இல்லையே?”
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
களப்பலியாவது
தடுக்கப்படவில்லையே !”

கிருஷ்ணன்  :
“அரவான் ஒன்றை
நன்றாக ஞாபகம்
வைத்துக் கொள் ;
இந்த உலகத்தில்
நடக்கக் கூடியவைகள்
எவற்றையும் தடுத்து
நிறுத்த முடியாது ;
மாற்றி அமைக்கத்
தான் முடியும் ;”

“துரியோதனனுக்காக-நீ
களப்பலியாவதை
தடுத்து நிறுத்த-நான்
முயற்சி செய்யவில்லை ;
துரியோதனனுக்காக
செய்யவிருக்கும்
உன்னுடைய களப்பலியை
பாண்டவர்களுக்கு
மாற்றி அமைக்கத் தான்
நான் முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன் ;”

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

------------31-01-2020
//////////////////////////////////////////


January 27, 2020

பரம்பொருள்-பதிவு-119


              பரம்பொருள்-பதிவு-119

அரவான்  :
“நாட்டை ஆளும்
மன்னரின் மகனும்  ;
உறவு முறையில்
எனக்கு பெரிய
தந்தையுமாகிய
துரியோதனன்
அவர்கள் என்னை
நாடி வந்து
கைகளை ஏந்தி
யாசகமாக
என்னுடைய உயிரை
களப்பலியாகக் கொடு
என்று கேட்கும் போது
நான் எப்படி
கொடுக்காமல்
இருக்க முடியும் ? “

கிருஷ்ணன் :
“யாசகம்
அளிப்பதற்கு முன்
யாசகம் கேட்பவர்
யார் என்பதையும் ;
யாசகமாக
அளிக்கப் போவது
எது என்பதையும் ;
யாசகம் அளிப்பதால்
ஏற்படக்கூடிய
பிரச்சினைகள் எவைகள்
என்பதையும் ;
யோசித்துப்
பார்த்திருந்திருக்க
வேண்டாமா ?”

அரவான்  :
“யாசகம் அளிப்பவர்
இவைகள்
எவற்றையும் பார்க்கக்
கூடாது என்ற விதி
தான் உங்களுக்குத்
தெரியுமே பரந்தாமா ? “

கிருஷ்ணன் :
“சில விதிகளை எல்லா
சந்தர்ப்பங்களிலும்
ஒரே மாதிரியாக
பயன்படுத்த முடியாது  ;
சில விதிகளை
சந்தர்ப்பத்திற்கு
ஏற்றவாறு மாற்றி
பயன்படுத்தித் தான்
ஆக வேண்டும் ;
அப்படி மாற்றி
பயன்படுத்தவில்லை
என்றால் விரும்பத்தகாத
விளைவுகள் தான்
ஏற்படும் ; “

அரவான் :
“பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
களப்பலியாகிறேன்
என்று வாக்கு
கொடுத்திருக்கிறேன்  ;
நான் செய்யப்
போகும் இந்த
செயலினால் தான்
விரும்பத்தகாத
விளைவுகள் ஏற்படும்
என்கிறீர்களா பரந்தாமா ! “

கிருஷ்ணன்  :
“ஆமாம் அரவான் !
ஆமாம் “

“துரியோதனனுக்காக
நீ களப்பலி ஆனாய்
என்றால் எத்தகைய
விரும்பத்தாத
விளைவுகள் ஏற்படும்
என்பதை - நீ
யோசித்துப் பார்த்து
இருக்கிறாயா ? “

அரவான்  :
“எத்தகைய
விரும்பத்தகாத
விளைவுகள்
ஏற்படும் என்கிறீர்கள் “

கிருஷ்ணன் :
“துரியோதனனுக்காக நீ
களப்பலியாகி
துரியோதனன்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்று
விட்டான் என்றால் ….?

“தர்மம் அழிந்து
அதர்மம் தழைத்து
ஓங்கும் !

“இன்பம் அழிந்து
துன்பமே
மேலோங்கி நிற்கும் !

“வருங்காலத்தில்
இந்த உலகத்தில்
நல்லவர்கள்
வாழ்வதற்கு
இடமே இல்லாமல்
போய் விடும் !”

“துரியோதனனுக்காக
அரவான் களப்பலியாகி
துரியோதனன்
வெற்றி பெற்ற
காரணத்தினால் தான்  ;
தாங்கள் அனைவரும்
இத்தகைய துன்ப
நிலைக்கு தள்ளப்பட்டு
அவதிப்பட்டுக்
கொண்டிருக்கிறோம் ;”

“தாங்கள் அடைந்து
இருக்கும் இத்தகைய
ஒரு இழிநிலைக்கு
அரவான் தான் காரணம்.  ;’

“அரவான் மட்டும்
துரியோதனனுக்காக
களப்பலியாகா விட்டால்
தங்களுக்கு இத்தகைய
ஒரு இழிநிலை
ஏற்பட்டு இருக்காது  

“என்று இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும் உன்னை
வசைபாடக் கூடிய
விரும்பத்தகாத
விளைவுகள்
தான் ஏற்படும் “

அரவான் :
“இந்தகைய
விரும்பத்தாத
விளைவுகள்
ஏற்படாமல் இருக்க
வேண்டுமானால் - நான்
என்ன செய்ய
வேண்டும் என்கிறீர்கள்”

கிருஷ்ணன் :
“களப்பலியாகப் போகும்
உன்னுடைய
உயர்ந்த செயலால்
விரும்பத்தகாத
விளைவுகள்
ஏற்படாமல் இருக்க
வேண்டுமானால்…….?”

"""நீ……………………..?

பாண்டவர்களுக்காக

களப்பலியாக

வேண்டும்"""""

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------27-01-2020
//////////////////////////////////////////


January 24, 2020

பரம்பொருள்-பதிவு-118


           பரம்பொருள்-பதிவு-118

(கிருஷ்ணன்
அரவானை சந்திக்க
அவன் மாளிகைக்கு
செல்கிறார் - அரவான்
கிருஷ்ணனை
வரவேற்று அவர்
பாதங்களில்
விழுகிறான்)

அரவான் :
“என்னை
ஆசிர்வதியுங்கள்
பரந்தாமா !”

கிருஷ்ணன் :
“இந்த உலகம்
உள்ளளவும் உன்
புகழ் நிலைத்து
நிற்கட்டும் அரவான்!”

அரவான் :
“ஏன் ? நீடூழி
வாழ்க என்று வாழ்த்த
மாட்டீர்களா பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
“நான் ஏன் அவ்வாறு
வாழ்த்தவில்லை என்பது
உனக்கே தெரியும் “

“அது மட்டுமல்ல
வாழ்த்துவது என்பது
சாதாரணமான விஷயம்
என்று நினைத்து
விட்டாயா அரவான் ?”

“வாழ்த்தும் போது
யாரை வாழ்த்துகிறோம்  ;
எதற்காக
வாழ்த்துகிறோம் ;
என்ன காரணத்திற்காக
வாழ்த்துகிறோம் ;
என்பது முக்கியம் “

“எல்லோராலும்
உண்மையாக
வாழ்த்த முடியாது  ;
அப்படியே ஒரு
சிலர் உண்மையான
மனதுடன் வாழ்த்தினாலும்
வாழ்த்துபவர்களுடைய
வாழ்த்துக்கள் அனைத்தும்
பலிக்கும் என்று
சொல்லி விட முடியாது ;” 

“கோடியில் ஒருவர்
வாழ்த்தும் வாழ்த்தே
பலிக்கும் என்பதை
நினைவில் கொள்
அரவான் !“

அரவான் :
“கோடியில் ஒருவரான
நீங்கள் வாழ்த்தினால்
அது நடக்குமே !
அப்படி இருக்கும்
போது நீங்கள் ஏன்
என்னை நீடுழி வாழ்க
என்று வாழ்த்தக்கூடாது?”

கிருஷ்ணன் :
“அரவான் !
என்ன நடக்கப் போகிறது
என்பது உனக்குத் தெரியும் “

“அப்படி இருக்கும் போது
நடக்க முடியாததை
நடக்க வையுங்கள்
என்று ஏன்
என்னிடம் கேட்கிறாய் ?”

அரவான் :
“நான் இதுவரை
வாழ்ந்த காலத்தில்
பெரியதாக
சாதனைகள் எதுவும்
செய்ததாக எனக்கு
தெரியவில்லை ;
இனி வாழப்போகும்
கொஞ்ச காலத்திலும்
என்னால் பெரியதாக
சாதனைகள் படைக்க
முடியுமா என்று
தெரியவில்லை. ;”

“அப்படி இருக்கும்
போது எனக்கு புகழ்
எப்படி உண்டாகும் ?
அப்படியே புகழ்
கிடைத்தாலும்  
அந்தப் புகழ்
இந்த உலகம்
உள்ளளவும் எப்படி
நிலைத்து நிற்கும் ?
அதற்கு நீண்ட ஆயுள்
தேவையல்லவா ?
அதற்காக நான்
நீண்ட காலம் வாழ
வேண்டும் அல்லவா ? ;”.

கிருஷ்ணன் :
“அரவான்
எவ்வளவு காலம்
வாழ்கிறோம் என்பது
முக்கியமில்லை ;
வாழ்ந்த காலத்தில்
மக்கள் மனதில்
இடம் பெற்று
நீங்காத புகழை
பெறுவதற்காக
எத்தகைய உயர்ந்த
செயல்களைச் செய்தோம்
என்பது தான் முக்கியம் ;
இவ்வாறு பெறப்படும்
புகழே உலகம் உள்ளளவும்
நிலைத்து நிற்கும் ;
என்பதை உணர்ந்து
கொள் அரவான் ;”

அரவான் :
“நான் தான் எந்த
ஒரு உயர்ந்த
செயலையும்
செய்யவில்லையே !”

கிருஷ்ணன் :
“நீ ! தான் யாருமே
செய்ய முடியாத
மிகப்பெரிய உயர்ந்த
செயலை செய்ய
போகிறாயே  ?”

அரவான் :
“பெரிய தந்தை
துரியோதனனுக்காக
நான் களப்பலி
ஆகப்போவதைத் தான்
உயர்ந்த செயல்
என்று சொல்கிறீர்களா?”

கிருஷ்ணன் :
“ நீ ! களப்பலி
ஆகப்போவதைத் தான்
நான் உயர்ந்த
செயல் என்றேன் ;
துரியோதனனுக்காக
களப்பலியாவதை
நான் உயர்ந்த
செயல் என்று
சொல்லவே இல்லையே “

“துரியோதனன் எதிரி
என்று தெரிந்தும்
துரியோதனனுக்காக
எப்படி களப்பலியாவதற்கு
சம்மதித்தாய் அரவான் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------24-01-2020
//////////////////////////////////////////