November 30, 2018

வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்






                            வாழ்த்து மடல்


தலைமை ஆசிரியர்
பணிக்கான
ஆணையைப் பெற்று,  
தலைமை ஆசிரியர்
பணியில்
30-11-2018-ஆம் தேதி
வெள்ளிக் கிழமை
பணியில் சேர்ந்த
என்னுடைய
இரண்டாவது
அண்ணன்
திரு,K.தர்மேந்திரராஜ்
அவர்களை
வாழ்த்துகிறேன் !

சுட்டெரிக்கும்
சூரியனின்
சுடர் நெருப்பில்
உதித்து வந்த
உயர்வுகளின் தலைவனே !

சுழன்றடிக்கும்
சூறாவளிக்
காற்றைக்
கடந்து வந்த
காவியத்தின் நாயகனே !

கல்லாதவருக்கும்
இல்லாதவருக்கும்
கல்விக் கண் திறந்த
அருட்பெருஞ்
ஜோதியில் பூத்த
அறிவுக் கடலே !

உறவுகளின்
உன்னத அன்பில்
உயிர்த்திருக்கும்
அன்பில் விளைந்திருக்கும்
அருள் நிதியே !

அறிவை
அறிவால் அறிந்து ;
அறிவை பயன்படுத்தும்
வழி அறிந்து ;
அறிவாய்
நின்றவர்களையும்
வீழ்த்தும்
உபாயம் அறிந்து ;
போட்டியாளர்களை
போட்டித்
தேர்வில் வீழ்த்தி ;
போட்டித்
தேர்வில் கிடைத்த
வெற்றி மாலையையும்
புகழ் மாலையையும்
அணிந்து ;
அன்பாய் ,
அறிவாய் ,
எளிமையாய் ,
ஆசிரியப்
பணியில் சேர்ந்து ;

மாணவர்கள்
உயர்வு ஒன்றையே
கருத்தில் கொண்டு
அதற்காக உழைத்து ,
உணவு அருந்தாமல்
கண் உறக்கம்
கொள்ளாமல் ,
ஆசிரியப்
பணிக்கென்று
தனியாக ஒரு
நேரத்தை ஒதுக்காமல் ,
பள்ளி ;
மாணவர்கள் ;
பாடம் ; - என்ற
மூன்றை மட்டுமே
வாழ்க்கையின்
தாரக மந்திரமாகக்
கொண்டு
உழைத்தால்
இப்படித் தான்
உழைக்க வேண்டும்
என்று
உழைப்பிற்கு
உதாரணமாக இருந்து ,
ஆசிரியராக இருந்தால்
இப்படித் தான்
இருக்க வேண்டும்
என்று
பெரியோர்களால்
பாராட்டப்பட்டு ,
சிறந்த ஆசிரியராக
பணியில்
சிறப்பிடம் பெற்று ,

காலம் தன்
கணக்கை முடிக்க
கபட நாடகம்
நடத்தினாலும் ,
விதி தன்
முடிவுரையை தீட்ட
எழுதுகோலை எடுத்து
எழுத துடித்தாலும் ,
வரலாற்றை மாற்றி
புதிய வரலாறு
படைத்து
புதிய வார்ப்பாய் ;
புனித மனிதனாய் ;
உயிர்த்தெழுந்து , 

தலைமை ஆசிரியராக
பதவி ஏற்றிருக்கும்
தங்களுக்கு
கடவுள் அருள்
மட்டுமல்ல
கடவுள் துணையும்
என்றும் உண்டு
என்று வாழ்த்தும் !

அன்பு தம்பி
K.பாலகங்காதரன்

தம்பியின் மனைவி
P.பிரதீபா பாலகங்காதரன்

அன்பு அம்மா
K.சொர்ணம்


////////////////////////////////////////////////