July 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-119


                ஜபம்-பதிவு-611
          (அறிய வேண்டியவை-119)

(என்று
துரியோதனன்
சொல்லி
முடித்த போது
அதிக
வாசனையுள்ள
மலர்கள்
துரியோதனன் மேல்
விழுந்தது
கந்தவர்கள்
மிக இனிமையான
நான்கு
விதமான
வாத்தியங்களை
முழக்கினார்கள்
அப்சரஸ்களும்
துரியோதனனுடைய
கீர்த்தியை
பாடல்களாக
பாடினார்கள்
சித்தர்களும்
நல்லது
நல்லது
என்ற
வாக்குகளை
வெளியிட்டார்கள்‘
வாசனை
நிரம்பிய
காற்றானது
அமைதியாக
வீசியது
எல்லா
திசைகளும்
ஒளி விட்டு
பிரகாசித்தது
ஆகாயம்
வைடூரியம்
போல்
விளங்கியது

பாண்டவர்கள்
துரியோதனனுடைய
புகழையும்
துரியோதனனுக்கு
கிடைத்த
மரியாதையையும்
கண்டு
வெட்கித்
தலை
குனிந்தார்கள் )

அறியவேண்டிய
உண்மை
“ஒரு தவறைச்
செய்து விட்டு
அதன்
விளைவிலிருந்து
யாரும்
தப்ப
முடியாது
பாவச்
செயலைச்
செய்து விட்டு
செய்த
பாவத்திற்குரிய
விளைவை
அனுபவிக்க
வேண்டும்”

“மைத்ரேய
முனிவரை
அவமதிக்கும் 
செயலை
துரியோதனன்
செய்ததால்
துரியோதனா
உன்னுடைய
தொடை
உடைக்கப்பட்டு தான்
நீ சாவாய்
என்று
மைத்ரேய
முனிவர்
சாபம்
கொடுத்தார்”

“துரியோதனன்
செய்த பாவம்
மைத்ரேய
முனிவரை
அவமானப்
படுத்தியது
செய்த
பாவத்திற்கான
விளைவு
தொடை
உடைபட்டு சாக
வேண்டும்
என்பது
முதலாவதாக
பீமன்
துரியோதனனுடைய
தொடையை
உடைப்பதாக
சபதம்
எடுத்தான்
இரண்டாவதாக
துரியோதனனுடைய
தாயார்
காந்தாரி
தன்னுடைய
சக்தியை
துரியோதனனுடைய
தொடையில்
செலுத்த
முடியவில்லை
துரியோதனனுடைய
தொடை
அவனுடைய
உடலில்
பலவீனமாக
பகுதியாக
ஆனது”

“அதனைத்
தொடர்ந்து
கதாயுதத்தால்
பீமன்
துரியோதனனுடைய
தொடையை
உடைத்தான்”

“துரியோதனன்
செய்த
பாவம்
மைத்ரேய
முனிவரை
அவமானப்
படுத்தியது
செய்த
பாவத்திற்கான
விளைவு தொடை
உடைபட்டு சாக
வேண்டும்
என்பது
சரியாகவே
நடந்தது”

“இதிலிருந்து ஒரு
செயலைச்
செய்து
விட்டு
யாரும்
அதனுடைய
விளைவிலிருந்து
தப்ப
முடியாது
என்பதே
இக்கதையின்
மூலம்
நாம் அறிய
வேண்டிய
உண்மை
ஆகும்

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 22-07-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-118


                ஜபம்-பதிவு-610
          (அறிய வேண்டியவை-118)

“பாஞ்சாலி
கௌரவர்கள்
அவையில்
அவமானப்
படுத்தப்பட்ட போது
பாஞ்சாலியை
தவறான
வார்த்தைகளைப்
பேசியும்
தவறான
செயல்களைச்
செய்தும்
பாஞ்சாலியை நீ
அவமானப்
படுத்தியபோது
கர்ணன் அதை
தடுக்காமல்
தானும்
சேர்ந்து அந்த
அதர்மச்செயலுக்கு
துணை போனதால்
கர்ணன்
கொல்லப்பட்டான்”

“சகோதரியாக
நினைக்க
வேண்டிய
பாஞ்சாலியை
ஜயத்ரதன்
காட்டில் கவர்ந்த
அதர்மச் செயலை
புரிந்த
காரணத்தினால்
ஜயத்ரதன்
கொல்லப்பட்டான்”

“பாஞ்சாலியை
கௌரவர்கள்
அவையில்
அவமானப் படுத்தி
பாஞ்சாலியை
தகாத
வார்த்தைகளால் பேசி
அவளுடைய
ஆடையை
துச்சாதனன் கொண்டு
அவிழ்க்கச்
செய்யச்
சொன்னாயே
நீ செய்த
அதர்மச் செயல்
உன்னை
காயப்படுத்தி
உன்னை படுக்க
வைத்திருக்கிறது”

“நீ சொன்னவர்கள்
அனைவரையும்
நான்
காயப்படுத்தவில்லை
கொல்லவில்லை
அவர்கள்
செய்த
அதர்மச் செயலும்
அதர்மத்திற்கு
துணை
போன செயலும்
அவர்களை
காயப்படுத்தியது
கொன்றது”

“அதர்மத்தைச்
செய்தவர்களும்
அதர்மத்திற்கு
துணை
போனவர்களும்
அழிந்து
போவார்கள் என்பதை
கௌரவர்கள்
வரலாறு
வருங்காலத்தில்
அனைவருக்கும்
ஒரு பாடமாக
இருக்கும்”

துரியோதனன் :
“கிருஷ்ணா நானும்
முறைப்படி கல்வி
கற்றிருக்கிறேன்
முறைப்படி
அனைத்து
கலைகளிலும்
தேர்ச்சி
பெற்றிருக்கிறேன்
வித்தைகளில்
விளையாடுவதில்
வல்லவனாக
இருந்திருக்கிறேன்
நிறைய
தானங்களைச்
செய்திருக்கிறேன்
உலகம்
அனைத்தையும்
ஒரு குடையின்
கீழ் ஆட்சி
செய்திருக்கிறேன்
எல்லா
சுகங்களையும்
அனுபவித்திருக்கிறேன்
ஒரு குறையும்
இல்லாமல்
வாழ்ந்திருக்கிறேன்
வீர
சஷத்திரியனுக்குரிய
வீர மரணத்தை
அடைய
இருக்கிறேன்
தேவர்களுக்கு
உரியவைகளும்
அரசர்களால்
அடைய
முடியாதவையுமான
மனிதனுடைய
போகங்களும்
உத்தமமான
சகல
ஐசுவரியங்களும்
என்னால்
அடையப்பட்டன
என்னைவிட எவன்
சிறந்த முடிவை
அடைவான்”

“பீமன் என்னுடைய
தலையின் மேல்
காலை வைத்ததை
நான் அவமானமாகக்
கருதவில்லை
ஏன் என்றால்
இன்னும் சில
விநாடிகளில்
காக்கைகளோ
கழுகுகளோ
பருந்துகளோ
என்னுடைய
உடலைக்
கொத்தி அழிக்க
இருக்கின்றன “

“நண்பர்களோடும்
உறவினர்களோடும்
சேர்ந்து நான்
சுவர்க்கம்
செல்லப்
போகிறேன்
நீங்கள்
துயரத்துடனும்
மனவருத்துத்துடனும்
இந்த உலகத்தில்
வாழ்ந்து
கொண்டிருக்கப்
போகிறீர்கள் “

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 22-07-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-117


                ஜபம்-பதிவு-609
          (அறிய வேண்டியவை-117)

“பல பேர்
முன்னிலையில்
ஒரு பெண்ணை
யார் அவமானப்
படுத்தினாரோ
அவரும்
அவருடன் சேர்ந்து
அந்த அக்கிரமச்
செயலுக்கு துணை
போனவர்களும்
அந்த அக்கிரமச்
செயலைத்
தடுக்காமல்
இருந்தவர்களும்
அழிந்து
போவார்கள்
என்பதை - இந்த
உலகம் தெரிந்து
கொள்ள வேண்டும்
என்ற
காரணத்திற்காக
ஏற்பட்டது தான்
குருஷேத்திரப் போர்”

“எவ்வளவு பெரிய
உயர்ந்த
பதவியில்
இருந்தாலும்
அதிகப்படியான
அதிகாரத்தை
தன்னிடம்
வைத்திருந்தாலும்
யாராலும்
வீழ்த்த முடியாத
பெரிய வீரனாக
இருந்தாலும்
எவ்வளவு
வித்தைகளைக் கற்று
வைத்திருந்தாலும்
ஒரு பெண்ணை
அவமானப்படுத்தினால்
அழிந்து
போவார்கள்
என்பதை
இந்த உலகம்
தெரிந்து கொள்ள
வேண்டும் என்ற
காரணத்திற்காக
ஏற்பட்டது தான்
குருஷேத்திரப் போர்”

“வருங்காலத்தில்
இந்த உலகத்தில்
உள்ள எந்த ஒரு
பெண்ணையும்
அவமானப்படுத்த
வேண்டும்
என்ற
எண்ணமே
ஒருவருக்கும்
ஏற்படக்கூடாது
என்ற
நிலையை
இந்த
சமுதாயத்தில்
உருவாக்க
வேண்டும் என்ற
காரணத்திற்காக
ஏற்பட்டது தான்
குருஷேத்திரப் போர்”

“துரியோதனா நீ
நினைப்பதுபோல்
குருஷேத்திரப் போர்
யார் பூமியை
அரசாட்சி செய்ய
வேண்டும்
என்ற
காரணத்திற்காக
நடத்தப்பட்ட போர்
கிடையாது
குருஷேத்திரப் போர்
ஒரு பெண்ணுக்கு
ஏற்பட்ட
அவமானத்தை
துடைப்பதற்காக
நடத்தப்பட்ட போர்”

துரியோதனன் :
“அப்படி என்றால்
பிதாமகர் பீஷ்மரை
ஏன் அதர்மச்
செயல் புரிந்து
காயப்படுத்தினீர்கள்”

“குரு துரோணரை ஏன்
அதர்மச் செயல்
புரிந்து கொன்றீர்கள்”

“கர்ணனை ஏன்
அதர்மச் செயல்
புரிந்து கொன்றீர்கள்”

கிருஷ்ணன்  :
“துரியோதனா
நீ சொன்னவர்கள்
அனைவரையும்
நான்
கொல்லவில்லை
நான்
அதர்மச் செயல்
புரிந்து
கொள்ளவில்லை
அவர்கள்
செய்த
அதர்மமே
அவர்களைக்
கொன்றது”

“பாஞ்சாலி
கௌரவர்கள்
அவையில்
அவமானப்
படுத்தப்பட்ட போது
அஸ்தினாபுரத்தை
பாதுகாப்பேன்
என்று சபதம்
மேற்கொண்டிருந்ததால்
அஸ்தினாபுரத்தின்
நாற்காலியுடன்
இணைக்கப்
பட்டிருந்ததால்
பாஞ்சாலிக்கு
நடந்த
கொடுமையை
தடுக்க
முடியாமல்
அதர்மச் செயலுக்கு
துணை போன
காரணத்தினால்
பீஷ்மர்
காயப்படுத்தப் பட்டு
அம்பு படுக்கையில்
படுக்க
வைக்கப்பட்டிருக்கிறார்”

“பாஞ்சாலி
கௌரவர்கள்
அவையில்
அவமானப்
படுத்தப்பட்ட போது
தன்னுடைய மகன்
அஸ்வத்தாமன்
துரியோதனனான
உன்னுடன்
நட்பு கொண்டு
நடந்து தவறுக்கு
துணை
போனதால்
பாஞ்சாலிக்கு
நடந்த
கொடுமையை
தடுக்க
முடியாமல்
துரோணர்
அதர்மச் செயலுக்கு
துணை போன
காரணத்தினால்
துரோணர் தலை
வெட்டப் பட்டு
கொல்லப்பட்டார் “

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 22-07-2020
/////////////////////////////////