July 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-110


           ஜபம்-பதிவு-602
      (அறிய வேண்டியவை-110)

“தகுதியற்ற
உன்னை
என்னுடைய சீடன்
என்று
சொல்வதற்கு
எனக்கு
வெட்கமாக
இருக்கிறது
என்னுடைய
சீடன் என்று
சொல்வதற்கு
தகுதியற்றவன் நீ “

“பீமா நீ
என்னுடைய
சீடனாக இருக்கவே
தகுதியற்றவன்
கதாயுத
சண்டையின்
விதிகளைப்
பின்பற்றி
தர்மத்தின்படி
சண்டையிட்ட
துரியோதனனே
என்னுடைய
உண்மையான
சீடன்
துரியோதனனே
என்னுடைய
சீடனாக
இருக்க
தகுதி
வாய்ந்தவன்”

“துரியோதனனே
என்னுடைய
சீடன்
என்று
சொல்லவே
நான் பெருமைப்
படுகிறேன்
பீமா உன்னை
என்னுடைய
சீடன்
என்று
சொல்லவே
நான்
வெட்கப்படுகிறேன்”

“உன்னுடைய
குருமார்கள்
அனைவரும் தலை
குனியும் படியான
ஒரு தவறான
காரியத்தைச்
செய்து
இருக்கிறாய்
பீமா”

“என்னிடம்
கலையைப்
பயின்று விட்டு
எப்படி இப்படி
ஒரு தவறான
காரியத்தைச்
செய்வதற்கு
உனக்கு
மனது வந்தது”

“நீ செய்த
தவறுக்கு
உன்னைக்
கொல்லாமல்
விட மாட்டேன்
உன்னைக்
கொன்று
உன்னுடைய
இரத்தத்தால்
நீ செய்த
தவறுக்கு
பிராயச்சித்தம்
செய்யப்
போகிறேன் “

“பீமா உனக்கு
என் கையால்
தான் சாவு
உன்னுடைய
சாவை
யாராலும்
தடுத்து
நிறுத்த
முடியாது
உன்னுடைய
ஆயுதத்தை
எடுத்துக் கொள்
முடிந்தால்
உன்னுடைய
சாவைத்
தடுத்துக் கொள்”

(என்று
பலராமர்
தன்னுடைய
கலப்பையை
எடுத்துக்
கொண்டு
பீமனை
கொல்வதற்காக
பீமனை நோக்கி
ஓடினார் இச்
செயலைக் கண்ட
கிருஷ்ணன்
ஓடி வந்து
பலராமரைத்
தடுத்தார்)

கிருஷ்ணன் :
“அண்ணா
நில்லுங்கள்
பீமன்
தவறு செய்து
விட்டான்
தவறு செய்து
விட்டான் என்று
சொல்கிறீர்களே
பீமன்  
தவறு எதுவும்
செய்யவில்லை
தவறு
செய்தவனுக்கு
தவறு
செய்தததற்கான
தண்டனையைத்
தான் வழங்கி
இருக்கிறான் “

பலராமர் :
“பீமன் தவறு
செய்யவில்லை
என்கிறாயா
கிருஷ்ணா”

கிருஷ்ணன் :
“ஆமாம்
அண்ணா
பீமன் தவறு
செய்யவில்லை “

பலராமர் :
“எதை
வைத்து
இப்படி
சொல்கிறாய் “

கிருஷ்ணன் :
“பீமன் தவறு
செய்யவில்லை
தவறு
செய்தவனுக்குரிய
தண்டனையைத் தான்
அளித்திருக்கிறான்
செய்த
செயலுக்குரிய
விளைவானது
பீமன் மூலமாக
வெளிப்பட்டு
இருக்கிறது”

பலராமர் :
“என்ன சொல்கிறாய்
கிருஷ்ணா”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 22-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment