August 31, 2018

திருக்குறள்-பதிவு--12


                     திருக்குறள்-பதிவு--12

“””””பிறப்பென்னும் பேதைமை
நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது
அறிவு””””

உலகம் முழுவதும்
கடவுளை வணங்குபவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : கடவுளை அறிந்து
        வணங்குபவர்கள்

இரண்டு:: கடவுளை உணர்ந்து
         வணங்குபவர்கள்

கடவுள் என்பவர்
இப்படித்தான் இருப்பார்
இந்த முறைகளைப்
பயன்படுத்தித்தான் கடவுளை
வணங்க வேண்டும் என்று
பிறர் சொல்லியவைகளை
அப்படியே மனதில்
ஏற்றுக் கொண்டு
கடவுளை வணங்குபவர்களை
கடவுளை அறிந்து
வணங்குபவர்கள் எனலாம்

கடவுள் எங்கு இருக்கிறார்
அவரை அடையக்கூடிய
வழி எது
அவரை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது
என்பதை உணர்ந்து
அதை பயன்படுத்தி
கடவுளை வணங்குபவர்கள்
கடவுளை உணர்ந்து
வணங்குபவர்கள் எனலாம்

கடவுளை அறிந்து
வணங்குபவர்களை
மூன்று நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : சிறிய வயதில்
        ஒரு மதத்தில்
        வணங்கிய கடவுளை
        பெரிய வயதிலும்
        அதே மதத்தில்
        அதே கடவுளை    
        வணங்குவது

இரண்டு : சிறிய வயதில்
         ஒரு மதத்தில்
         வணங்கிய கடவுளுக்கு
         பதில் பெரிய வயதில்
         அதே மதத்தில்
         வேறு கடவுளை
         வணங்குவது

மூன்று : சிறிய வயதில்
        ஒரு மதத்தில்
        ஒரு கடவுளை
        வணங்கி விட்டு
        பெரிய வயதில்
        வேறு மதத்தில்
        வேறு கடவுளை
        வணங்குவது

சிறிய வயதில்
ஒரு கடவுளை
வணங்கிய குழந்தை
பெரிய வயது ஆனபிறகு
தான் சிறிய வயது முதல்
வணங்கிய கடவுள்
தனக்கு எல்லாவிதமான
கஷ்டங்களை நீக்காவிட்டாலும்
என்னுடைய முக்கியமான
சந்தோஷங்களை நிறைவேற்றி
இருக்கிறது என்பதை
நினைவில் கொண்டு
சிறிய வயதில்
ஒரு மதத்தில்
வணங்கிய கடவுளை
பெரிய வயதிலும்
அதே மதத்தில்
அதே கடவுளை       
வணங்குவது

சிறிய வயதில்
நான் வணங்கிய
கடவுள் எனக்கு எதுவும்
செய்யவில்லை
எனவே நான் வேறு
ஒரு கடவுளை
வணங்கப் போகிறேன் என்று
சிறிய வயதில் ஒரு
மதத்தில் வணங்கிய
கடவுளுக்கு பதில்
பெரிய வயதில்
அதே மதத்தில்
வேறு கடவுளை
வணங்குவது

சிறிய வயதில் நான்
வணங்கிய கடவுள்
எனக்கு எதுவும்
வழங்கவில்லை
என் மதத்தில் உள்ள
கடவுள் மேல் எனக்கு
நம்பிக்கை இல்லை
எனவே, நான் வேறு ஒரு
மதத்தில் வேறு ஒரு
கடவுளை வணங்கப்
போகிறேன் என்று
சிறிய வயதில்
ஒரு மதத்தில்
ஒரு கடவுளை
வணங்கி விட்டு
பெரிய வயதில்
வேறு மதத்தில்
வேறு கடவுளை
வணங்குவது

இந்த மூன்று
நிலைகளைப் பின்பற்றி
எந்த நிலையில்
கடவுளை வணங்கினாலும்
இன்பமும், துன்பமும்
மாறி மாறி வந்து
கொண்டே தான் இருக்கும்

எங்கள் மதத்தில் உள்ள
கடவுளை வணங்கினால்
இன்பம் மட்டுமே ஏற்படும்
துன்பம் என்பது
ஏற்படவே ஏற்படாது
என்று எந்த மதமும்
எந்த ஒரு கடவுளையும்
சுட்டிக் காட்ட முடியாது

ஒரே மதத்திற்குள்
ஒரு கடவுளை விட்டு
அதே மதத்திற்குள்
வேறு கடவுளை
வணங்கும் போது
நன்மை செய்யும் கடவுள்,
ஒரு மதத்திலிருந்து
வேறு மதத்திற்கு
சென்று கடவுளை
வணங்கும் போது
நன்மை செய்யும் கடவுள்
ஏன் வாழ்க்கை முழுவதும்
நன்மை செய்வதில்லை
என்பதை உணர்ந்து
கொண்டால் நாம்
கடவுளை அறிந்து
வணங்குகிறோம்
உணர்ந்து வணங்குவதில்லை
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்

ஏனென்றால்
கடவுளை அறிந்து
வணங்குபவர்களுக்கு
இன்பம் துன்பம் என்ற
இரண்டும் உண்டு
கடவுளை உணர்ந்து
வணங்குபவர்களுக்கு
இன்பம், துன்பம் என்ற
இரண்டு மட்டுமல்ல
பிறவி என்பதும் கிடையாது
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டும்

கடவுள் எங்கு இருக்கிறார்
அவரை அடையக்கூடிய
வழி எது
அவரை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது
என்பதை உணர்ந்து
கடவுளை உணர்ந்து
வணங்குபவருக்கு
இன்பம், துன்பம் என்ற
இரண்டு மட்டுமல்ல
பிறவியும் ஏற்படாது
என்பதைத் தான்

“””””பிறப்பென்னும் பேதைமை
நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது
அறிவு””””

என்ற திருக்குறளின்
மூலம் தெரிவிக்கிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  31-08-2018
///////////////////////////////////////////////////


திருக்குறள்-பதிவு-11


                         திருக்குறள்-பதிவு-11

 “”””இடிப்பாரை இல்லாத
ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங்
கெடும்””””

அதிகாரத்தில் இருப்பவர்கள்
தவறு செய்யும் போது
அதைப்பற்றி
கருத்து சொல்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : அதிகாரத்தில்
        இருப்பவர்கள்
        தவறு செய்யும்
        போது
        அதிகாரத்திற்கு
        பயந்து தவறை
        சரி என்று
        சொல்பவர்கள்

இரண்டு : அதிகாரத்தில்
          இருப்பவர்கள்
          தவறு செய்யும்
          போது
          அதிகாரத்திற்கு
          பயப்படாமல்
          தவறை தவறு
          என்று
          சொல்பவர்கள்

ஒரு அலுவலகத்தில் உள்ள
ஒரு உயரதிகாரி
ஒரு திட்டத்தை
தானே தீட்டி
அதை செயல்படுத்த
வேண்டும்
என்று முடிவு செய்து
தங்கள் பணியாளர்களை
அழைத்து
கருத்து கேட்கிறார்.

ஒரு தவறான திட்டத்தை
உயரதிகாரி
கொண்டு வருகிறார்
இந்த தவறான
திட்டத்தால்
பல்வேறு விதமான
கஷ்டங்கள்
பணியாளர்களுக்கு
பணிச்சுமை
வேலைப்பளு
மன அழுத்தம் ஆகியவை
ஏற்பட வாய்ப்பு
உள்ளது என்பது
அனைவருக்கும்
தெரிந்து விடுகிறது

இருப்பினும்,
உயரதிகாரியை
பகைத்துக் கொண்டால்
தங்கள் வேலைக்கு
பாதிப்பு ஏற்படும்
என்பதை
கருத்தில் கொண்டு
உயரதிகாரி தவறு
செய்யும் போது
அந்த தவறை
சுட்டிக் காட்டாமல்
உயரதிகாரி செய்யும்
தவறான செயலை
சரியான செயல் என்று
தலை ஆட்டுபவர்களை,
அதிகாரத்தில் இருப்பவர்கள்
தவறு செய்யும் போது
அதிகாரத்திற்கு பயந்து
தவறை சரி என்று
சொல்பவர்கள் என்றும்
இத்தகையவர்களை
சுயநலமிக்கவர்கள்
என்றும் சொல்லலாம்.

உயரதிகாரி
தவறு செய்யும் போது
அதை உணர்பவர்கள்
அந்த தவறை
சுட்டிக் காட்டினால்
எந்தவிதமான விளைவுகள்
தங்களுக்கு ஏற்படும்
என்பதை உணர்ந்தாலும்
அதற்கு அஞ்சாமல்
உயரதிகாரி தவறு செய்தால்
நான் சுட்டிக் காட்டுவேன்
உண்மையை எடுத்து
உரைப்பேன் என்று
எதற்கும் அஞ்சாமல்
தவறை தவறு என்று
சுட்டிக் காட்டுபவர்களை,
அதிகாரத்தில் இருப்பவர்கள்
தவறு செய்யும் போது
அதிகாரத்திற்கு
பயப்படாமல்
தவறை தவறு என்று
சொல்பவர்கள் என்றும்
இத்தகையவர்களை
சுயநலமற்றவர்கள்
என்றும் சொல்லலாம்

அதிகாரத்தில்
இருப்பவர்கள் தவறு
செய்யும் போது
அதிகாரத்திற்கு பயந்து
தவறை சரி
என்று சொல்பவர்களை
அதாவது
சுயநலமிக்கவர்களை
மன்னன்
அருகில் வைத்துக்
கொண்டு,
அதிகாரத்தில்
இருப்பவர்கள் தவறு
செய்யும் போது
அதிகாரத்திற்கு
பயப்படாமல்
தவறை தவறு
என்று சொல்பவர்களை
அதாவது
சுயநலமற்றவர்களை
மன்னன்
அருகில் வைத்துக்
கொள்ளாமல் இருந்தால்
மன்னனை அழிக்க
அண்டை நாட்டிலிருந்து
படை எடுத்து வர
வேண்டிய அவசியமில்லை;
நாட்டை கைப்பற்ற
சதி வேலைகள்
செய்ய வேண்டிய
அவசியமில்லை;
மன்னனை
வஞ்சகத்தால் வீழ்த்த
வேண்டிய அவசியமில்லை;
துரோகத்தால் சாகடிக்க
வேண்டிய அவசியமில்லை
தவறான
திட்டங்களைத் தீட்டி
மன்னன் தன்னைத் தானே
அழித்துக் கொள்வான்
என்பதைத் தான்

“”””இடிப்பாரை இல்லாத
ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங்
கெடும்””””

என்ற திருக்குறளின்
மூலம் தெரிவிக்கிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  30-08-2018
///////////////////////////////////////////////