October 19, 2011

மௌன வித்தை ( பேசா மந்திரம் )






மௌன வித்தை (பேசா மந்திரம்)
 

மந்திரங்களில் பேசும் மந்திரம், பேசா மந்திரம் என்ற நிலைகள் உண்டு. பேசா மந்திரம் என்னவென்று தெரிந்தவர்கள் ஞானிகள் என்கின்றனர் சித்தர்கள்.

பேசா மந்திரத்தை மௌனம் என்று குறியீட்டின் மூலம் சித்தர்கள் தங்கள் பாடல்களில் குறிப்பிடுகின்றனர்.



1882 ல் வெளியிடப்பட்ட சட்டைமுனி நாயனார் முன் ஞானம், பின் ஞானம் என்ற புத்தகத்தில் சட்டைமுனி நாயனார் பின்ஞானம் என்ற பாகத்தில் பேசா மந்திரம் எனப்படும் இந்த மௌன வித்தை பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது


மௌனவித்தை யாருக்கு யார் கொடுத்தார்கள் என்பதை கீழ்க்கண்ட பாடல்கள் விளக்குகின்றன.



கிட்டினோங் கைலாய பரம்பரையினாலே கேளு மக்களாலாச்சாpயங் கொங்கணா; தான் சென்று, கிட்டினோ மென்று சொல்லியீசானத்தே கெடியான ரசமுண்டு சட்டைபோக்கிக் கிட்டினோ மீசானந் துதித்தோ மென்று கெடியாக தவசிருந்து முத்தனாகி கிட்டினோமென்று சொல்லி தசஷணாமூh;த்தி பதம் பிடித்து பணிந்திட்டாரே

தவம் பல செய்து கர்மவினைகளை கழித்து ஒன்பது வாசலை அடைத்து பத்தாவது வாசலைத் திறந்து அமுதத்தை பருகி, கயிலாயம் சென்று தசஷணாமூh;த்தி பாதம் பணிந்து, ஞானத்தை அடையக் கூடிய வழியை எனக்குக் காட்டுங்கள்என்று கொங்கணர் வேண்டினார.; 





பணிந்திட்ட கொங்கணரைப் பாh;த்து நாயன் பாருலகிற் பிறந்தவனோவிப்படி தானானாய் மணிந்திட்டச் சடம் போக்கிக் கைலாயத் தேகமானதுதான் வெகுகடின மதிகமெத்த கனிந்திட்ட கனிவாலே வீறத்தாலே கலங்காமற் சமாதியுற்று கயிலாயத்திற் றணிந்திட்ட புத்தி கொண்டுயிங்கே வந்தாய் சாதகமாயொருவரைங் கண்டிலேனே

கால்களில் வீழ்ந்த கொங்கணரைப் பார்த்து, தசஷணாமூh;த்தி மனிதர்கள் வாழக்கூடிய பூவுலகில் பிறந்து தவங்கள் பல செய்து சித்திகள் பல பெற்று எப்படி இந்த நிலையை அடைந்தாய். மனிதர்கள் இறந்தால் அவர்கள் தங்கள் உடலை உதிர்த்து விட்டு செய்த தவப் பயனால்; உயிராகத் தான் இந்த கயிலாய மலையை அடைய முடியும். அத்ததைகய நிலை பெற்றவர்கள் தான் இந்த கயிலாய மலைக்கு அதிகமாக வந்தவர்கள். ஆனால் நீ ஜீவசமாதி அடைந்த பின்பு உடலை ஜீவசமாதியில் வைத்து விட்டு உயிராக இந்த கயிலாய மலைக்கு எப்படி வந்தாய், இப்படி வந்த ஒருவரையும் நான் இதுவரை கண்டதில்லை என்று தசஷணாமூh;த்தி கூறுகிறார்.





கண்டிலேனாச்சாயங்கமா ரனேபாருங் கலந்தநற்சென்மமிவா; கைலாயமானா; ஒண்டிபே நாலதுக்கு மகத்து வந்தானென்னவுற்ற சிவ விந்து வின்னிலப்படிதானாச்சு கன்டிலேனிவரைப் போற் சித்தா;காணேன் காரணமாயிவனுக்கு தீசஷிப் பேனான் பண்டிலேன் கொங்கணரை மயங்க வேண்டாம் பரம்பரமாய் வந்து தந்த மௌணந்தானே

இது எவ்வளவு பெரிய ஆச்சரியம. இந்த ஜென்மத்திலேயே கர்மவினைகளை கழித்து கயிலாயம் வந்திருக்கிறார். கயிலாயம் வர வேண்டுமென்றால், விந்து நாதம, இரண்டு எட்டு, இடகலை பிங்கலை, ஆகியவற்றின் பொருள் தெரிய வேண்டும். மேலும் சிவனின் விந்து என்று சொல்லப் படுவது எது என்ற ரகசியமும் தெரிந்திருக்க வேண்டும். இவர் கயிலாயம் வர முக்கிய காரணம் சிவ விந்துவின் ரகசியம் தெரிந்து, அதன் வழி நடந்திருப்பதனால் தான் இவர் கயிலாயம் வர முடிந்தது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த கொங்கணரைப் போல ஒரு சித்தரை நான் கண்டதில்லை என்று அவருக்கு ஞானம் அடைவதற்கு உரிய வழியை சொல்லி தீட்சை கொடுத்தார். அந்த ரகசியம் தான் பேசா மந்திரம் எனப்படும் மௌன வித்தை எனப்படுகிறது. இந்த மௌன வித்தை சித்தர் பரம்பரை என்று சொல்லப்படும் குரு சீடன் பரம்பரையாக ஒருவர் மாறி ஒருவராக வந்து கொண்டேயிருக்கிறது.






மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன் மருவியவா காலாங்கிக்கதுவே சொன்னா் மௌனவித்தை காலாங்கி போகருக்கு சொன்னாh; மகத்தான போகருந்தானுனக்குச் சொன்னாh; மவுனவித்தை யகண்டாதியறிந்து கொள்ளு மற்றொன்று மயக்க மற்று மௌனத்தாh;க்கு, மௌனவித்தை யெய்தாக் கால்வனே ஞானி வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே

கொங்கணர் பேசா மந்திரம் எனப்படும் மௌனவித்தையை திருமூலருக்கு சொன்னார. திருமூலர் காலங்கிநாதருக்கு சொன்னார.; காலங்கி நாதர் போகருக்கு சொன்னார்; போகர் உனக்குச் சொன்னார் என்று சட்டைமுனி நாயனாரைக் குறிப்பிடுகிறார். மௌன வித்தை என்ன என்பதை கண்டு கொள்ள வேண்டும் மௌன வித்தையைக் கண்டு கொண்டால் மட்டுமே இவ்வுலக மாயையிலிருந்து தப்பிக்க முடியும். ஞான வழியைக் காட்டுகிறேன் என்று சொல்லும் ஏமாற்று வித்தைக் காரர்களிடமிருந்து விலகி இருக்க முடியும் மௌன வித்தை என்று சொல்லப் படுகிற பேசா மந்திரத்தை தெரிந்து கொண்டு, அதனை செயல் படுத்துபவனே ஞான நிலையை அடைய முடியும். அவனே ஞானி என்று அழைக்கப்படுகிறான்; அகாரம்; உகாரம்; மகாரம் என்று அழைக்கப்படுகிற மூன்றில் பேசா மந்திரம் மகாரம் என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது என்று கொங்கணர் சொல்கிறார்.

மௌன வித்தையின் சிறப்புகள் பற்றி கீழ்க்கண்ட பாடல்கள் விளக்குகின்றன:





சித்தாகுஞ் சித்தியுமாமெட்டெட்டு மாடுந் திறமாக நின்றவா;க்;கு மந்திரஞ்சித்தி பத்தாகும் வேதத்தில் மந்திரத்தைப்  பாவி பல பலெனப் பேசியவா; சேவிப்பாh; கோடி கத்தாதும் நாய் போலே கற்றியென்ன காசிக்கு மாகாது சித்தியில்லை முத்தான மௌனம் விட்டால் மௌனம் பாழாச்சு மோசமிந்த வேதமெல்லாம் பொய்யென்பாரே

மௌன வித்தை தெரிந்தவருக்கு மட்டும் தான் மந்திரங்கள் எல்லாம் சித்தியாகும் வேதங்களில் உள்ள மந்திரங்களை உச்சாடணம் செய்து கோடி முறை உரு ஏற்றினாலும், நாய் போல உலகமெல்லாம் சுற்றினாலும், காசி போன்ற புனிதமான இடங்களுக்குச் சென்றாலும் மந்திரங்கள் சித்தியாகாது. கடவுள் நிலை உணர முடியாது. மௌன வித்தை தெரியாதவருக்கு, வேதங்களில் உள்ள ரகசியங்கள் தெரியாது. வேதங்களில் உள்ள ரகசியங்கள் தெரியாத காரணத்தினால,; வேதங்களே பொய் என்பர்.






பொய்யென்று யெண்ணியெண்ணி யுலகங்கெட்டுப் போச்சப்பாவதனாலேயுக பேதமாச்சு, கையென்று யோகத்தில் மௌனமுட்ட கடுஞ்சித்தியறிவு மட்டுங் கலந்துதாக்கு, கையென்ற நிh;த்தமப்பா ஆறிற்காணுஞ் சாதகமாய் மேல்மூலந்தாண்டிக்காணும் மெய்யென்று பிடித்தாக்காலவனே யோகி விரைந்துயிதையறியா விட்டால் விருதமாடே

மௌன வித்தை தெரியாத காரணத்தினால், புராணங்கள், உபநிஷத்துக்கள் ஆகியவைகளில் உள்ள கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கடவுள் என்றால் என்ன என்றும,; கடவுளை அடையக் கூடிய வழி எது என்றும் கேட்பவர்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுக்க முடியவில்லை. அதனால் கடவுள் உண்டா இல்லையா என்ற நிலை உருவாகி, ஆத்திகர,; நாத்திகர் என்ற பிரிவு உண்டாகி உலகம் இரண்டாகி பிளவு பட்டு நிற்கிறது. மௌன வித்தையை தெரிந்து ஆறு ஆதாரங்களைக் கடந்து சென்று பிரம்மரந்திரத்தில் தன் ஜீவனை இணைப்பவனே யோகி. இதை அறியாவிட்டால் ஒன்றுக்கும் உதவாத மாட்டுக்குச் சமம் என்கிறார் சட்டைமுனி நாயனார்.






நன்றான மௌனத்திற் கடிகை சேர நல்வினையுந் தீவினையும் நாசமாகும், நன்றான மௌன மென்று நினைக்க முத்தி நல்லோ;கள் நினைப்பா;கள் மற்றோ; காணா;, நன்றான மௌனமல்லோ ஷிகள் சித்தா; நாலுதிக்குஞ் சொரூபத்தைக் கண்டா; கண்டா; நன்றான மௌனமல்லோ சாத்திரங்கள் தோறும் நலமாகக் கூப்பிடுது கண்டிலாரே

மௌன வித்தை தெரிந்தவர்கள் மட்டுமே அதை செயல்படுத்தி கர்ம வினை என்று சொல்லப் படுகிற பாவ புண்ணியங்களை கழிக்க முடியும்; பாவ புண்ணியங்களைக் கழித்தால் மட்டுமே முக்தி அடைய முடியும்; அதனால் மௌன வித்தை தெரிந்தவர்களால் மட்டும் தான் முக்தி அடைய முடியும் என்பதை உணர வேண்டும். மற்றவர்கள் எந்த வழிகளில் முயற்சி செய்தாலும் முக்தி அடைய முடியாது. மௌன வித்தை தெரிந்ததால் தான் சித்தர்கள் அனைத்திலும்; அதாவது துhணிலும், துரும்பிலும், கடவுளைக் கண்டனர். வேதங்கள்உபநிஷத்துகள் மற்றும் அனைத்து சாத்திரங்களும் கூறுவது, மறை பொருளாக விளக்குவது, குறியீடுகளாகக் குறிப்பிடுவது இந்த மௌன வித்தையைத் தான் என்பதை யாரும் அறியாமல்   இருக்கின்றனர் என்கிறார் சட்டைமுனி நாயனார்.





கண்டிலா்; மௌனத்திலனேக சித்தி காணுமப்பா சொல்கிறே நன்றாய்க் கேளு மண்டிலா்; மந்திரங்கள் செபிக்கும் போது அப்பனே மௌனமென்ற தீசைஷ கேளு ஒண்டிலாய் வாய் மூடி பேச்சு மற்று ஒரு சேரை சமைத்துண்டு ஒரு போதப்பா விண்டிலா தென்னேரஞ் செபித்தாயானால் விளங்கியதோரேழுலஷ மந்திரமுஞ் சித்தே

மௌனவித்தை தெரிந்து செய்தால் அஷ்டமா சித்தி உட்பட பல்வேறு சித்திகளும் கிடைக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். மௌனவித்தையின் சிறப்புகளை சொல்லுகிறேன் கேள் நீ மந்திரங்களைச் செபிக்கும் போது மௌன வித்தை தெரிந்தவர்களிடம மௌனவித்தை தீட்சை உனக்கு சொல்லித் தரும்படி கேள். தனியான அமர்ந்து வார்ததை எதுவும் பேசாமல் வாயை மூடி அமைதியாக மௌன வித்தையை தொடர்ந்து செய்து கொண்டே இரு. காலை, மதியம் மாலை இரவு என்று நேரம் பார்க்காமல் எந்த நேரமும் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பாயேயானால் ஏழு லட்சம் மந்திரம் மட்டுமில்லை அதற்கு மேலும் மந்திரங்கள் சித்தியாகும். மந்திரங்கள் சித்தியாக வேண்டுமென்றால் மௌன வித்தை தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்.





மௌன வித்தையை விளக்கும் ஒரு பழமொழி:

மந்திரம் கால் மதி முக்கால்  என்ற பழமொழியை சற்று யோசிப்போமேயானால் மந்திரம் எவ்வளவு தான் உரு ஏறினாலும் அதன் பலன் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

மந்திரம் சித்தியடைய வேண்டுமென்றால; நம்முடைய அறிவு கொண்டு யோசித்து மௌனவித்தையை கற்று அதனை செயல் படுத்தி பார்த்தால் மட்டுமே மந்திரம் சித்தியானதை நாம் அறிய முடியும் என்பது தான் இந்த பழமொழிக்கு அர்த்தம்.



இதனை விளக்கமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.

ஒரு மந்திரம் சித்தியாக ஒரு லட்சம் உரு ஏற்ற வேண்டும் என்று சொல்வார்கள்.

மௌன வித்தை தெரிந்தவர்களுக்கு 25 000 முறை உரு ஏற்றி விட்டு மௌன வித்தை செய்தாலே போதும. மீண்டும் அதனுடன் கூட 75000 முறை உரு ஏற்ற வேண்டிய அவசியமில்லை. 25000 முறை உரு ஏறிய உடனே மந்திரம் சித்தியானதை நாம் உணர முடியும்.


மந்திரம் கால் என்பது 25000 முறை மதி முக்கால் என்பது மௌனவித்தை.

மௌன வித்தை என்பது சித்தர்கள் கலை. அது தகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சித்தர்கள் தங்கள் பாடல்களில் மௌன வித்தையை மறைத்து வைத்திருக்கிறார்கள்.

மௌன வித்தையின் ரகசியம் தெரிந்து, அதை செய்து வருகிற ஒரு சில பேர் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்.


முயற்சி, முன்வினை, ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலமே ஒருவர் மௌனவித்தையின் ரகசியத்தை தெரிந்து கொள்; முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள.;


புழமொழிகளின் விளக்கத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பின்வரும் ஒரு பாடலின் விளக்கத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.





திருமூலர்   நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்என்கிறார்.

நாயோட்டு மந்திரம் என்றால் நான் என்னும் அகந்தையை ஓட்டும் மந்திரம். நான் என்ற அகந்தையை எந்த மந்திரமும் ஓட்டாது.

மௌன வித்தை என்ற பேசா மந்திரம் மட்டும் தான் ஓட்டும். சாதாரண மந்திரங்களால் நமனை அதாவது இறப்பை வெல்ல முடியாது.

நான் என்னும் அகந்தையை ஓட்டும் மௌன வித்தை என்னும் பேசா மந்திரம் மட்டும் தான் இறப்பை வெல்லும்.

மேளன வித்தை என்னும் பேசா மந்திரத்தை சொல்கிறவர்களுக்கு மரணம் இல்லை என்பது தான் இதன் பொருள்.




11 comments:

  1. thangalin pothu sevaiku mikka nanriyai therivithukkolgiren

    ReplyDelete
  2. அன்புள்ள பாலா ,இதனை பற்றி அறிய விரும்புகிறேன்.ப்ளீஸ் எனக்கு தனி மெயில் கூட அனுப்புங்க
    ssetex@gmail.com
    srinivasan.K

    ReplyDelete
  3. நான் விளக்கமாக ,தெளிவாக, கட்டுரைகள் பலவற்றை கூடிய விரைவில் எழுத இருக்கிறேன் .
    தாங்கள் தொடர்ந்து படித்து பயன் பெற கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி !

    ReplyDelete
  4. அன்புள்ள அய்யா,

    வணக்கம் மிக மிக எளிமையான விளக்கம் .பதிவுகள் அருமை.

    நன்றி,

    அன்புடன்,

    சசி.இராஜசேகர்

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. அன்புள்ள அய்யா,

    வணக்கம் முடிந்தால் எனக்கு மௌனவித்தை பயன்படுத்துவது எப்படி என்றும் பேசும் மந்திரம் பேசாமந்திரம் எது என்றும் அல்லது யார் உபதேசம் செய்கிரார்கள் என்று கூரினால் மிகவும் உதவியாக இறுக்கும் தயவு செய்து உதவிசெய்யுங்கள்

    நன்றி
    k.p.ravi

    ReplyDelete
  8. நான்மெளனவித்தைகற்றுதருகிறேன்8248981030

    ReplyDelete
  9. Possible to learn/upadesam Pesa manthiram. Any one can help me?
    Anbudan s.v.

    ReplyDelete