December 31, 2019

புத்தாண்டு வாழ்த்துக்கள்- 01-01-2020


புத்தாண்டு வாழ்த்துக்கள்-
01-01-2020 !

அன்பிற்கினியவர்களே !

“உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும் “
     -----------வள்ளலார்

“மனதில் ஒன்றை வைத்துக்
கொண்டு வெளியே வேறொன்று
பேசுபவரிடம் உறவு
வைத்துக் கொள்ளக் கூடாது
என்பது தான் இந்த
பாடலுக்கு பொதுவாக
சொல்லப்படும் கருத்து”

“மனதில் ஒன்றை வைத்துக்
கொண்டு வெளியே
வேறொன்றை
பேசுபவர்களிடம் உறவு
வைத்துக் கொள்ளக்கூடாது ;
என்றால் நம்முடைய
நண்பர்கள் ; உறவினர்கள் ;
சுற்றத்தார்கள் ; நம்முடன்
வேலை செய்பவர்கள் என்று
இந்த உலகத்தில் உள்ள
யாருடனும் நம்மால் உறவு
வைத்துக் கொள்ள முடியாது ;
இந்த உலகத்தில் உள்ள
ஒவ்வொருவரும்
தனித்தனியாக இருக்க
வேண்டிய சூழ்நிலை
தான் ஏற்படும் ;

 “அப்படி என்றால் இந்த
பாடல் என்ன அர்த்தம்
சொல்கிறது என்று பார்ப்போம் ; “

“ஒரு பணக்கார குடும்பத்தில்
கணவன் ; மனைவி ;
மூன்று பெண் பிள்ளைகள்  
இருந்தார்கள் – இந்த மூன்று
பெண் பிள்ளைகளுமே
வசதியாக வளர்ந்தவர்கள் ;
அழகால் வசீகரிப்பவர்கள் ;
படிப்பில் சிறந்தவர்கள் ;
அறிவில் உயர்ந்தவர்கள் ;
பணத்தில் குளிப்பவர்கள் ;
மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் ;
என்று சொல்லத்தக்க
வகையில் வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ;

“பன்னீரில் குளித்து
சந்தனத்தில் நீந்தி
களிப்படையும் பங்களா
வாசியின் சாளரங்களுக்குள்
மட்டும் எட்டிப்
பார்ப்பதல்ல காதல் ;
அது பணம் படைத்த
பங்களாவுக்கும் வரும்
காசில்லாத குடிசைக்கும்
வரும் என்பதை உணர்த்தும்
வகையில் பணம் படைத்தவர்
பெற்றெடுத்த மூன்று
பெண்களில் முதல் பெண்
பணமில்லாத ஏழை
ஒருவனை காதலித்தாள் ;

“காதல் என்ற ஒன்று
கருத்தினில் நுழைந்து
விட்டால் சுற்றம் தெரியாது ;
உறவுகளின் உதவிக்கரம்  
தெரியாது ; பெற்றோர்களின்
அன்பு தெரியாது ;
நட்பின் நாகரிகம் தெரியாது ;
என்பதற்கேற்ப அவர்கள்
காதல் செய்தனர் ;”

“மறைவாக செய்யப்பட்டு
வந்த காதல் வெளிப்பட்டு
விட்ட போது குடும்பத்தில்
சூறாவளி அடித்தது ;
துயர மேகங்கள் கண்ணீரை
அருவியாக பொழிந்தது ;
கோபக்கனலில் இதயங்கள்
அனைத்தும் எரிந்தது ;
குடும்பம் துடிப்பில்லாத படகு
போல் நிம்மதியிழந்தது ;
மனம் என்ன செய்வது
என்று தெரியாமல் தள்ளாடியது ;
குடும்பத்தில் உள்ள அனைத்து
மனங்களும் அடுத்து என்ன
நடக்கப்போகிறது என்று
தெரியாமல் அல்லாடியது ;
முதல் பெண்ணிற்கும்
பெற்றோர்களுக்கும்
சகோதரிகளுக்கும் இடையே
கருத்து வேற்றுமைகள்
உச்சத்தில் இருந்தது
சண்டைகள்
உக்கிரத்தை அடைந்தது ;

“பல்வேறு நிலைகளில்
பேச்சுவார்த்தைகள்
நடத்தப்பட்டது ; பல்வேறு
நிலைகளில் அறிவுரைகள்
வழ்ங்கப்பட்டது ; சில
சமயங்களில் கண்டிப்பும்
செய்யப்பட்டது ; முடிவில்
பெண் காதலை மறந்து
விடுகிறேன் பெற்றோர்கள்
சொல்லும் பையனை
திருமணம் செய்து
கொள்கிறேன் என்று
சொன்னதின் அடிப்படையில்
பெற்றோர்கள் கல்யாண
ஏற்பட்டை செய்த போது
கல்யாணத்தன்று அந்தப்
பெண் காதல் செய்த
பையனுடன் ஓடி அந்தப்
பையனை திருமணமும்
செய்து கொண்டாள் ;”

“அந்த பெற்றோர்கள்
அவமானத்தில் தலை
குனிந்தனர்; தன் பெண்
தங்களை ஏமாற்றி விட்டதாக
அழுது புலம்பினர் ; பையனை
இகழ்ந்தனர் ; கவலை அவர்கள்
இதயத்தை சூழ்ந்தது ; இருள்
அவர்கள் வாழ்க்கையை
சூழ்ந்தது ; மானம் காற்றில்
பறந்ததால் அவமானம்
குடும்பத்தை சூழ்ந்தது ;

“இந்தக் கதையில் தவறு
செய்தவர்கள் யார்
அந்த பெண்ணா அல்லது
பெற்றோர்களா என்ற
கேள்விக்கு பதிலை யோசித்தால்
பெரும்பாலானவர்கள்
அந்தப் பெண் என்று
தான் சொல்வார்கள் ;
நடந்த தவறுக்கு அந்த
பெண் காரணமல்ல
பெற்றோர்கள் தான் காரணம்”

“தனது மகள் மனதில்
நினைத்ததை அப்படியே
வெளியில் சொல்லி விட்டாள் ;
என்று தனது மகளின்
வார்த்தைகளை நம்பி
தனது மகளுடன் கலந்து
ஆலோசித்து தனது மகளுக்கு
திருமணம் செய்ய முயற்சி
செய்த காரணத்தினால்
பெற்றோர்கள் கஷ்டத்தையும்
அவமானத்தையும் சந்திக்க
வேண்டி இருந்தது ;”

“தனது மகள் மனதில்
ஒன்று வைத்து வெளியில்
வேறொன்று பேசியிருக்கிறாள் ;
என்பதை பெற்றோர்கள்
புரிந்து கொண்டிருந்தால்
தனது மகளுடன் கலந்து
ஆலோசிக்காமல் எந்தவிதமான
முடிவையும் எடுக்காமல் கல்யாண
ஏற்பாட்டை பண்ணாமல்
இருந்திருப்பார்கள் ;இதனால்
அவர்கள் கஷ்டப்படுவதும்
அவமானப்படுவதும்
தவிர்க்கப்பட்டிருக்கும் ;”

“உறவு கலவாமை
வேண்டும் என்றால்
உறவு கொள்ளக்கூடாது
என்று பொருள் அல்ல “

“உறவு கலவாமை
வேண்டும் என்றால்
கலந்து ஆலோசித்து
எந்தவிதமான முடிவையும்
எடுக்கக்கூடாது என்று பொருள் ;

“உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும் என்றால்
மனதில் ஒன்று வைத்து
வெளியே வேறொன்று
பேசுபவரிடம் உறவு வைத்துக்
கொள்ளக் கூடாது என்று
பொருள் அல்ல “

“உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும் என்றால்
மனதில் ஒன்று வைத்து
வெளியே வேறொன்று
பேசுபவரிடம் கலந்து
ஆலோசித்து எந்தவிதமான
முடிவையும் எடுக்கக்
கூடாது என்று பொருள் “

“அதாவது மனதில் ஒன்று
வைத்து வெளியே வெளியே
வேறொன்று பேசுபவரிடம்
கலந்து ஆலோசித்து எந்தவிதமான
முடிவையும் எடுக்கக்கூடாது ;
அப்படி எடுத்தால் கஷ்டத்தையும்
அவமானத்தையும் நாம்
சந்திக்க நேரிடும்
என்பதைத் தான் வள்ளலார்

உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும்

என்ற பாடலின் மூலம்
தெளிவாக்குகிறார் ! “

“உயர்ந்தோர் சொல்லிச் சென்ற
வார்த்தைகளின் உண்மையான
அர்த்தத்தைத் தெரிந்து கொண்டால்
வாழ்க்கை துன்பங்கள் இன்றி
இன்ப மயமானதாக இருக்கும்
என்பதை உணர்ந்து
புத்தாண்டை கொண்டாடுவோம் “

01-01-2020
புத்தாண்டு வாழ்த்துக்கள்!”

----------என்றும் அன்புடன்

----------K.பாலகங்காதரன்
----------01-01-2020
/////////////////////////////////////////////////

December 30, 2019

பரம்பொருள்-ஜபம்-107


            பரம்பொருள்-ஜபம்-107

கிருஷ்ணன் :
"களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடையவர்கள்
யார் என்பதையும் ?
அவர்களுடைய பெயர்கள்
என்ன என்பதையும் ?
நானே உனக்குச்
சொல்கிறேன் பீமா ! "

பீமன் :
"சொல் கிருஷ்ணா சொல்
யார்? என்று சொல்
கிருஷ்ணா சொல் "

கிருஷ்ணன் :
"களப்பலியாக
கொடுப்பதற்கு உரிய தகுதி
படைத்தவர்கள் - இந்த
ஈரேழுலோகத்திலும்
மொத்தமே மூன்று பேர்கள்
மட்டுமே உள்ளனர் பீமா ! "

பீமன் :
"மொத்தமே மூன்று
பேர்கள் மட்டுமே
உள்ளனரா கிருஷ்ணா?"

கிருஷ்ணன் :
"ஆமாம் பீமா !
ஆமாம்"

பீமன் :
"யார் அந்த மூன்று
பேர்கள் கிருஷ்ணா"

கிருஷ்ணன் :
"ஒன்று அர்ஜுனன்
இரண்டாவது அரவான்"

பீமன் :
மூன்றாவது யார்
கிருஷ்ணா ?"

கிருஷ்ணன் :
"வேறு யார்
நானே தான் பீமா !
களப்பலி கொடுப்பதற்கு
தகுதி உடைய மூவரில்
நானும் ஒருவன் என்பதை
நினைவில் கொள் பீமா! "

பீமன் :
"கிருஷ்ணா!  உன்னையுமா
களப்பலியாக
கொடுப்பதற்கு உரிய
பட்டியலில் சேர்த்து
இருக்கிறார்கள் - என்ன
கொடுமை இது கிருஷ்ணா?"

கிருஷ்ணன் :
"ஏன் என்னை
சேர்க்கக் கூடாதா பீமா!"

"நீ நினைப்பது போல்
களப்பலியாக யாரை
வேண்டுமானாலும் ;
விருப்பப்படுபவர்களை
எல்லாம் தேர்ந்தெடுத்து
களப்பலி கொடுத்து
விட முடியாது ; "

"களப்பலி
கொடுப்பதற்கென்றே
வரையறுக்கப்பட்ட
விதிமுறைகள் இருக்கின்றன ;
அதற்கென்று சில
தகுதிகள் இருக்கின்றன;
அத்தகைய தகுதிகளைக்
கொண்டவர்கள் யார்
இருக்கிறார்கள்
என்பதைக் கண்டறிந்து
அத்தகையவர்களை
மட்டுமே கண்டு பிடித்து
களப்பலி கொடுத்தால்
மட்டுமே போரில்
வெற்றி பெற முடியும் "

பீமன் :
"எத்தகைய தகுதிகளைப்
பெற்றிருக்க வேண்டும்
கிருஷ்ணா ! "

கிருஷ்ணன் :
"32 லட்சணங்கள்
கொண்டவராக
இருக்க வேண்டும் :
எதிர்ரோமம் படைத்தவராக
இருக்க வேண்டும் ;
இந்த இரண்டு
விதிகளையும் பூர்த்தி
செய்பவர்கள் – நான் ;
அர்ஜுனன் ; அரவான் ;
ஆகிய மூன்று பேர்கள்
மட்டுமே! - ஆகவே
தான் களப்பலியாக
கொடுக்கக்கூடியவர்கள்
பட்டியலில் எங்கள்
மூன்று பெயரையும்
சேர்த்து இருக்கிறார்கள் ;"

"களப்பலி கொடுப்பதற்கு
ஏற்ற நாள்
எந்த நாள் என்பதையும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு தகுதி
உடையவர்கள் யார்
என்பதையும் ;
சகாதேவன்
குறித்துக் கொடுத்து 
துரியோதனன் அதை
தெரிந்து கொண்டு
சென்று விட்டான் ; "

"களப்பலி கொடுப்பதற்கு
ஏற்ற நாளில்
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதியுடையவரை 
துரியோதனன்
களப்பலியாக கொடுத்து
விட்டான் என்றால் ;
துரியோதனனை
யாராலும் வெற்றி
கொள்ளவே முடியாது ;
துரியோதனனை எதிர்த்து
யார் போரிட்டாலும்
அவர்கள் அனைவரும்
தோல்வியையே தழுவுவர்
என்பது உண்மை ; "

"தர்மா இனி நாம்
போர் செய்வதால் ஒரு
பயனும் இல்லை "

"இப்போதே போரின் முடிவு
தெரிந்து விட்டது - ஆமாம்
துரியோதனன் தான் போரில்
வெற்றி பெறப்போகிறான்
என்பது தெரிந்து விட்டது"

"ஆகவே பாண்டவர்களாகிய
நீங்கள் தோற்பது என்பது
உறுதியாகி விட்டது"

"இனிமேல் போர் செய்ய
வேண்டிய அவசியமே இல்லை ;
வெற்றி என்பது
ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்டு
விட்ட பிறகு - நாம்
போர் செய்வதால்
ஒரு பயனும் இல்லை."

"ஆகவே நீங்கள் அனைவரும்
போர் செய்யாமல்
மீண்டும் காட்டுக்கே
செல்வதே மேல்
போர் செய்து
ஏன் தோல்வியை
தழுவப் போகிறீர்கள் ".

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 30-12-2019
//////////////////////////////////////////


December 28, 2019

பரம்பொருள்-பதிவு-106


             பரம்பொருள்-பதிவு-106

“சகாதேவன் அறையை
விட்டு வெளியே
வருகிறான் - அங்கே
பாண்டவர்கள், குந்தி,
கிருஷ்ணன் ஆகியோர்
இருக்கின்றனர்”

“பீமன் கோபத்துடன்
சகாதேவனிடம்
கேட்கிறான் ”

பீமன் :
“சகாதேவா !
துரியோதனன்
எதற்காக வந்தான் ;
என்ன காரணத்திற்காக
வந்தான் ; - எந்த
தப்பான நோக்கத்தை
நிறைவேற்றிக்
கொள்ள வேண்டும்
என்பதற்காக  உன்னைத்
தேடி வந்தான் ;
எந்த சதித்திட்டத்தைத்
தீட்டிக் கொண்டு - அதை
செயல்படுத்துவதற்காக
உன்னைத் தனிமையில்
சந்திக்க வந்தான் ;

சகாதேவன் :
“சோதிடம் பார்க்க
வந்தார் அண்ணா ! “

பீமன் :
“சோதிடம் பார்க்க
வந்தானா ?
சோதிடத்தில் எதைப்
பற்றிக் கேட்க
வந்திருந்தான் ?
அவன் கேட்ட
கேள்விகளுக்கு எல்லாம்
பதில் சொல்லி விட்டாயா ?
அப்படி சொல்லி விட்டாய்
என்றால் என்ன
பதில் சொன்னாய் ? “

சகாதேவன் :
“சோதிடம் பார்க்க வந்தவர்
எதிரியாக இருந்தாலும்
அவர் கேட்கும்
கேள்விகளுக்கு பதில்
சொல்ல வேண்டும் என்பதும் ;
ஒருவருக்கு பார்த்து
சொன்ன சோதிடத்தின்
பலனை வேறு யாருக்கும்
சொல்லக்கூடாது என்பதும்
சோதிட விதி அண்ணா ! “

“துரியோதனன் அண்ணா
என்னிடம் என்ன
கேட்டார் என்பதையும்  ;
எதைப்பற்றி கேட்டார்
என்பதையும் ;
தயவு செய்து
என்னிடம் கேட்காதீர்கள் ;
சோதிட சாஸ்திரத்தின்படி
என்னால் பதில்
சொல்ல முடியாது ;
என்னை மன்னியுங்கள்
அண்ணா ! “

கிருஷ்ணன் :
“பீமா ! துரியோதனன்
என்ன கேட்க வந்திருப்பான்
என்பதைப் பற்றி நான்
உனக்கு சொல்கிறேன் “

“பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும் போர்
நடக்கப் போவது என்பது
உறுதியாகி விட்ட நிலையில்
போரில் வெற்றி பெறுவதற்கு
களப்பலி எந்த நாளில்
கொடுக்க வேண்டும்
என்பதையும் ;
களப்பலியாக யாரை
கொடுக்க வேண்டும்
என்பதையும் ;
கேட்க வந்திருப்பான் “

“அது தானே சகாதேவா!
அதற்கு நீ பதில்
சொல்லவில்லை அல்லவா?”

சகாதேவன் :
(சகாதேவன் பதில்
எதுவும் சொல்லாமல்
அமைதியாக இருந்தான்)

பீமன் :
“அப்படி என்றால்
களப்பலி கொடுப்பதற்கு
உரிய நாள் எது
என்பதையும் ;
களப்பலியாக
யாரை கொடுக்க
வேண்டும் என்பதையும்  ;
குறித்துக் கொடுத்து
விட்டாயா ? சகாதேவா !
வாயைத் திறந்து
பேசு சகாதேவா “

சகாதேவன் :
(சகாதேவன் பதில்
எதுவும் சொல்லமல்
அமைதியாக இருந்தான் )

கிருஷ்ணன் :
“பீமா சகாதேவன் மேல்
கோபப்படுவதால்
ஒரு பயனும் இல்லை”

“சகாதேவன் எந்த நாளை
குறித்துக் கொடுத்திருப்பான்
வருகின்ற அமாவாசை
நல்ல நாள் என்று
குறித்துக் கொடுத்திருப்பான்.”

“அது மட்டுமல்ல பீமா !
சகாதேவன் களப்பலியாக
கொடுப்பதற்கு உரிய
ஆளையும் குறித்துக்
கொடுத்திருப்பான். ?”

பீமன் :
“களப்பலியாக கொடுப்பதற்கு
தகுந்த ஆளையுமா
குறித்துக் கொடுத்திருப்பான்”

கிருஷ்ணன் :
“ஆமாம் பீமா! ஆமாம் “

பீமன் :
“சகாதேவா!
களப்பலியாக கொடுப்பதற்கு
உரிய ஆளையும்
குறித்து கொடுத்தாயா
யார் பெயரை
குறித்துக் கொடுத்தாய்
யார் அவர்கள் சகாதேவா!”

கிருஷ்ணன் :
பீமா ! மீண்டும் மீண்டும்
சகாதேவனைக் கேள்விகள்
கேட்டு அவனைத்
தொல்லைப் படுத்தாதே !
அவனைக் கேட்டால்
நான் என் கடமையைச்
செய்தேன் என்பான் ;
தர்மரின் தம்பி அல்லவா
அதனால் சோதிடத்தின்
தர்மத்தை காத்திருக்கிறான் ;
தர்மத்திலிருந்து
வழுவாமல் தர்மத்தின் படி
நடந்திருக்கிறான் ; “

பீமன் :
“இப்போது என்ன
செய்வது கிருஷ்ணா
அவர்கள் யார் என்று
எப்படி தெரிந்து
கொள்வது கிருஷ்ணா ! “

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 28-12-2019
//////////////////////////////////////////