November 30, 2018

வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்






                            வாழ்த்து மடல்


தலைமை ஆசிரியர்
பணிக்கான
ஆணையைப் பெற்று,  
தலைமை ஆசிரியர்
பணியில்
30-11-2018-ஆம் தேதி
வெள்ளிக் கிழமை
பணியில் சேர்ந்த
என்னுடைய
இரண்டாவது
அண்ணன்
திரு,K.தர்மேந்திரராஜ்
அவர்களை
வாழ்த்துகிறேன் !

சுட்டெரிக்கும்
சூரியனின்
சுடர் நெருப்பில்
உதித்து வந்த
உயர்வுகளின் தலைவனே !

சுழன்றடிக்கும்
சூறாவளிக்
காற்றைக்
கடந்து வந்த
காவியத்தின் நாயகனே !

கல்லாதவருக்கும்
இல்லாதவருக்கும்
கல்விக் கண் திறந்த
அருட்பெருஞ்
ஜோதியில் பூத்த
அறிவுக் கடலே !

உறவுகளின்
உன்னத அன்பில்
உயிர்த்திருக்கும்
அன்பில் விளைந்திருக்கும்
அருள் நிதியே !

அறிவை
அறிவால் அறிந்து ;
அறிவை பயன்படுத்தும்
வழி அறிந்து ;
அறிவாய்
நின்றவர்களையும்
வீழ்த்தும்
உபாயம் அறிந்து ;
போட்டியாளர்களை
போட்டித்
தேர்வில் வீழ்த்தி ;
போட்டித்
தேர்வில் கிடைத்த
வெற்றி மாலையையும்
புகழ் மாலையையும்
அணிந்து ;
அன்பாய் ,
அறிவாய் ,
எளிமையாய் ,
ஆசிரியப்
பணியில் சேர்ந்து ;

மாணவர்கள்
உயர்வு ஒன்றையே
கருத்தில் கொண்டு
அதற்காக உழைத்து ,
உணவு அருந்தாமல்
கண் உறக்கம்
கொள்ளாமல் ,
ஆசிரியப்
பணிக்கென்று
தனியாக ஒரு
நேரத்தை ஒதுக்காமல் ,
பள்ளி ;
மாணவர்கள் ;
பாடம் ; - என்ற
மூன்றை மட்டுமே
வாழ்க்கையின்
தாரக மந்திரமாகக்
கொண்டு
உழைத்தால்
இப்படித் தான்
உழைக்க வேண்டும்
என்று
உழைப்பிற்கு
உதாரணமாக இருந்து ,
ஆசிரியராக இருந்தால்
இப்படித் தான்
இருக்க வேண்டும்
என்று
பெரியோர்களால்
பாராட்டப்பட்டு ,
சிறந்த ஆசிரியராக
பணியில்
சிறப்பிடம் பெற்று ,

காலம் தன்
கணக்கை முடிக்க
கபட நாடகம்
நடத்தினாலும் ,
விதி தன்
முடிவுரையை தீட்ட
எழுதுகோலை எடுத்து
எழுத துடித்தாலும் ,
வரலாற்றை மாற்றி
புதிய வரலாறு
படைத்து
புதிய வார்ப்பாய் ;
புனித மனிதனாய் ;
உயிர்த்தெழுந்து , 

தலைமை ஆசிரியராக
பதவி ஏற்றிருக்கும்
தங்களுக்கு
கடவுள் அருள்
மட்டுமல்ல
கடவுள் துணையும்
என்றும் உண்டு
என்று வாழ்த்தும் !

அன்பு தம்பி
K.பாலகங்காதரன்

தம்பியின் மனைவி
P.பிரதீபா பாலகங்காதரன்

அன்பு அம்மா
K.சொர்ணம்


////////////////////////////////////////////////







November 29, 2018

திருக்குறள்- பதிவு-60


                      திருக்குறள்- பதிவு-60

பிறரை ஏமாற்றுவதை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று:
பிறருக்கு தெரிந்து
பிறரை ஏமாற்றுவது

இரண்டு:
பிறருக்கு தெரியாமல்
பிறரை ஏமாற்றுவது

பிறருக்கு தெரிந்து
பிறரை ஏமாற்றுவது
என்பது சிறிது காலம்
தான் நீடிக்கும் - ஆனால்,
பிறருக்கு தெரியாமல்
பிறரை ஏமாற்றுவது
என்பது 
காலம் காலமாக
நீடித்துக் கொண்டிருக்கும்

முதல் பெண்ணின்
மகள் வீட்டை
விட்டு வெளியேறி
தான் காதலித்த
பையனை திருமணம்
செய்து கொண்டார்
இதைக் கேள்வி பட்ட
இரண்டாவது பெண்
முதல் பெண்ணிடம்
உங்கள் மகள்
வீட்டை விட்டு போய்
காதலித்த பையனை
திருமணம் செய்து
கொண்டதாக
கேள்வி பட்டேன்
வருத்தமாக இருக்கிறது
என்று சொல்கிறார்
அதற்கு முதல் பெண்
அப்படி எல்லாம்
ஒன்றும் இல்லை
என்னுடைய மகள்
அவளுடைய
மாமாவினுடைய
வீட்டிற்கு சென்று
இருக்கிறாள்
என்கிறாள் இது தான்
பிறருக்கு தெரிந்து
பிறரை ஏமாற்றுவது

இந்தியன் என்ற
படத்தையும்
அந்நியன் என்ற
படத்தையும்
எடுத்துக் கொண்டால்
இரண்டு படங்களும்
ஒரே கருத்தைத் தான்
சொல்ல வருவது
தெரியும் அதாவது
“தப்பு செய்தால்
கொலை செய்ய
வேண்டும்
தப்பு செய்பவர்களை
கொலை செய்வதில்
தப்பில்லை”
என்ற கருத்தை
சொல்ல வரும் படம்

இந்தியன் படத்தை
எடுத்துக் கொள்வோம்
அதில் இரண்டு கமல்
முதல் கமல்
வேலை செய்வார்
காதல் செய்வார்
இரண்டாவது கமல்
தப்பு செய்பவர்களை
கொலை செய்வார்

இந்தியன் படத்தில்
இருவர் செய்த செயலை
அந்நியன் படத்தில்
மூன்று பேர்கள்
பிரித்து செய்வார்கள்
அதாவது
ஒருவர் மூன்று
நிலைகளில் பிரிந்து
செயலைச் செய்வார்
முதல் நிலையில்
இருக்கும் விக்ரம்
வேலை செய்வார்
காதல் செய்வார்
இரண்டாவது நிலையில்
இருக்கும் விக்ரம்
காதல் செய்வார்
மூன்றாவது நிலையில்
இருக்கும் விக்ரம்
தப்பு செய்பவர்களை
கொலை செய்வார்


இந்தியன் படத்தில்
இருவர் செய்த செயலை
அந்நியன் படத்தில்
மூன்று நிலைகளில்
மூன்று நபர்கள்
பிரித்து செய்வார்கள்


இந்தியன் படத்தில்
கொலை செய்தவர்
யார் என்று
கண்டு பிடிக்க ஒரு
கும்பல் சுற்றிக்
கொண்டு அலையும்

அந்நியன் படத்தில்
கொலை செய்தவர்
யார் என்று
கண்டுபிடிக்க ஒரு
கும்பல் சுற்றிக்
கொண்டு அலையும்

இந்தியன் படத்தில்
முதல் கமல் மறைந்து
இரண்டாவது கமல்
தப்பு செய்தால்
கொலை செய்வேன்
என்பார்
கொலை செய்த
கமல் தப்பியது
போல் காட்டப்படும்

அந்நியன் படத்தில்
முதல் விக்ரம்
மற்றும் இரண்டாம்
விக்ரம் மறைந்து
மூன்றாவது விக்ரம்
தப்பு செய்தால்
கொலை செய்வேன்
என்பார்
கொலை செய்த
விக்ரம் தப்பியது
போல் காட்டப்படும்

இரண்டு படங்களும்
ஒரே ஒரு கருத்தைத்
தான் சொன்னது
“தப்பு செய்தால்
கொலை செய்ய
வேண்டும்
தப்பு செய்பவர்களை
கொலை செய்வதில்
தப்பில்லை”

இந்த இரண்டு
படங்களிலும்
சொல்லப்பட்ட கருத்து
ஒன்று என்றாலும்
பிரம்மாண்டம்
என்ற பெயரில்
கோடிக்கணக்கான
பணத்தை செலவழித்து
பெரிய நடிகர்கள்
சிறந்த தொழில்நுட்ப
வல்லுநர்கள்
ஆகியோரை வைத்து
ஒரு டைரக்டர்
அவர் படத்தை
அவரே காப்பி அடித்து
எடுத்த படத்தை
மக்களை பார்க்க
வைத்து இருக்கிறார்
இது தான்
பிறருக்கு தெரியாமல்
பிறரை ஏமாற்றுவது

பிறருக்கு தெரியாமல்
பிறரை ஏமாற்றுபவர்கள்
தான்
அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
இந்த உலகத்தை
ஆண்டு வந்திருக்கிறார்கள்

அவர்கள் தான் நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
கியார்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
சொன்ன கருத்து தவறு
என்று சொன்னார்கள்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  28-11-2018
///////////////////////////////////////////////////////////


November 27, 2018

திருக்குறள்-பதிவு-59


                      திருக்குறள்-பதிவு-59

பூமியை மையமாக
வைத்து சூரியன் சுற்றுகிறது
என்று பைபிளில்
சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாட்டைச்    
சொல்லி கிறிஸ்தவ
மடாதிபதிகளின் நேரடி
கோபத்திற்கு ஆளாகி
பல்வேறு பட்ட
துன்பங்களுக்கு
உள்ளாக்கப் பட்டவர்களில்
முக்கியமாக மூன்று
பேரைக் குறிப்பிடலாம்.

சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாட்டை
போலந்து மேதை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் (1473 – 1543)
என்பவர் சொல்லிச்
சென்ற பிறகு அவருக்குப்
பின்னால் வந்த
இத்தாலிய மேதை
கலிலியோ (1564 – 1642)
மட்டும் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று சொல்லவில்லை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் என்ற
விஞ்ஞானிக்கும்
கலிலியோ என்ற
விஞ்ஞானிக்கும்
இடையில் வந்த
ஒரு விஞ்ஞானி
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்ற கோட்பாட்டை
சொல்லி உள்ளார்.

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் என்ற
விஞ்ஞானிக்கும்
கலிலியோ என்ற
விஞ்ஞானிக்கும் இடையில்
ஒரு விஞ்ஞானியின்
மறக்கப்பட்ட வரலாறு
ஒன்று இருக்கிறது
என்று சொல்லலாம்
(அல்லது)
மறக்கடிக்கப்பட்ட
வரலாறு ஒன்று
இருக்கிறது என்று
சொல்லலாம்
(அல்லது)
மறைந்து கொண்டிருக்கும்
வரலாறு ஒன்று
இருக்கிறது என்று
சொல்லலாம்
(அல்லது)
நினைவூட்டத் தவறிய
வரலாறு ஒன்று
இருக்கிறது என்று
சொல்லலாம்

ஆமாம்
இந்த உலகத்தால்
மறக்கடிக்கப் பட்ட
மாபெரும் வரலாற்றுக்குச்
சொந்தக்காரர்;
ஒரு மாபெரும்
விஞ்ஞானி என்ற
போற்றுதலுக்குரியவர்;
தன்னுடைய உயிரைப்
பற்றி கவலைப்படாமல்
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கருத்து
சரியானது என்று
சொன்னவர் ;
அதன் விளைவாக
கிறிஸ்தவ மடாதிபதிகள்
கிறிஸ்தவ மதவாதிகள்
ஆகியோரின்
கோபத்திற்கு ஆளானவர் ;

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் என்ற
விஞ்ஞானிக்கும்
கலிலியோ என்ற
விஞ்ஞானிக்கும்
இடையில் வந்தவர்
அவர் தான்
இத்தாலிய மேதை
கியோர்டானோ புருனோ
(1548 – 1600)

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று பைபிளில்
உள்ள கருத்திற்கு
எதிராக கருத்து
சொன்ன காரணத்திற்காக
கிறிஸ்தவ மடாதிபதிகளால்
அவமானப்படுத்தப்பட்டு
மன்னிப்பு கேட்க
வைக்கப்பட்டு
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் இறந்தார்

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று பைபிளில்
உள்ள கருத்திற்கு
எதிராக கருத்து
சொன்ன காரணத்திற்காக
கியோர்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்டார்

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று பைபிளில்
உள்ள கருத்திற்கு
எதிராக கருத்து
சொன்ன காரணத்திற்காக
கலிலியோ
வீட்டுக் காவலில்
வைத்து கொல்லப்பட்டார்

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று பைபிளில்
உள்ள கருத்திற்கு
எதிராக கருத்து
சொன்ன காரணத்திற்காக
மூன்று மாபெரும்
விஞ்ஞானிகள்
கொடுமைப்படுத்தப்பட்டு
இறந்தனர்

நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
அவமானப் படுத்தப்பட்டு
மன்னிப்பு கேட்க
வைக்கப்பட்டார் என்றால்
அவர் எதற்காக
மன்னிப்பு கேட்டார்
என்பதையும் ,
கியோர்டானோ புருனோ
உயிருடன் எரித்து
கொல்லப்பட்டார் என்றால்
அவர் எதற்காக உயிருடன்
கொளுத்தப்பட்டார்
என்பதையும்
கலிலியோ
வீட்டுக் காவலில்
வைத்து கொல்லப்பட்டார்
என்றால் அவர் எதற்காக
கொல்லப்பட்டார்
என்பதையும்
நாம் தெரிந்து கொண்டால்
தான் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது என்ற
கருத்தை நிரூபிக்க
விஞ்ஞானிகள் எவ்வளவு
கஷ்டங்களை அனுபவித்தார்கள்
என்பது நமக்கு தெரியும்

---------  இன்னும் வரும்
---------  27-11-2018
///////////////////////////////////////////////////////////